Jump to content

சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிக்கணம் வரை வெற்றியின் உச்சத்தில் இருப்பதாகவே கனவு காண்பா்


Recommended Posts

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜா பரமேஸ்வரி:-

MahindaRajapaksa3_CI.jpg

இலங்கை வரலாற்றிலேயே  நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் நிறு சதிராடிய மெத முலன மகிந்த ராஜபக்ஸ கடந்த 9 வருட ஆட்சியில் சந்திக்காத பாரிய சவாலை முதன் முறையாக சந்திக்கிறார்.  

வரலாற்றில் சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிக் கணம் வரை  தாம் வெற்றியின் உச்சத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்... தமது தோல்விகளில் இருந்து மீண்டெழுவோம் - அல்லது தப்பித்துக் கொள்வோம் என்ற மிகையான நம்பிக்கையில் இறுதி வரை தமது கோரத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டே இருப்பார்கள்...

தமக்கெதிரான நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டவும் தயங்கமாட்டார்கள்... இந்தக் கட்டத்தை கிட்த்தட்ட நெருங்கிவிட்டார் மகிந்த ராஜபக்ஸ...

இதன் முதலாவது கட்டமாக ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமைக்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை மாகொன்ன பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் கடுமையான காயத்திற்கு உட்பட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் இதுவரை எந்தத் தேர்தலும்  சந்தித்திராத கடுமையான இரத்தக்களரியை சந்திக்கப் போகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆட்சியின் கொடூரங்களில் இருந்தும் ஜே ஆர் ஜெயவர்த்தனவில் இருந்து பிரேமதாஸா வரையிலான ஐக்கியதேசியக் கட்சியின் 17 வருட ஆட்சியில் இருந்தும், ஒரு ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலில் சந்திரிக்கா வெற்றியீட்டிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறையாளர்களால் 14 பேர் கொல்லப்பட்டு பலர் கடும் காயங்களுக்கு உட்பட்டே சந்திரிக்கா ஜனாதிபதியாக வெற்றி பெற முடிந்தது.  

அதனை விடவும் இந்தத் தேர்தல் மிகக் கொடூரமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும், அடாவடித்தனங்களுடன் கூடிய மோசடி நிறைந்த தேர்தலாகவுமே அமையும் என பலரும் எதிர்பாக்கின்றனர்.

எனினும் சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான ஜனாதிபதி தேர்தலுக்கு மகிந்த ராஜபக்ஸ இடம் அளித்தால், கணனி மென்பொருள்கள் வாக்களிக்காமல் விட்டால், பொது வேட்பாளருக்கான வாக்குகள் மலசல கூடங்களுக்குள்ளும், வாக்குச் சாவடிகளின் பின்புறங்களிலும் டம்பண்ணப்படாவிட்டால், பொது வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளின் வாக்குச் சீட்டுக்களை அனுப்புவதை தடுக்காவிட்டால் மைத்திரிபால சிரிசேன 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா வெற்றியீட்டியதை போன்று வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

காரணம் 1977 முதல் 1994 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட கொடூர ஆட்சியின் பல மடங்கு கொடூரங்களை மகிந்த ராஜபக்ஸவின் 9 வருடகாலத்தில் நாட்டு மக்கள் அனுபவித்துவிட்டனர்.

குறிப்பாக நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி வளங்களை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களின் பரிவாரங்களும் முழுங்குவதோடு நாட்டின் அதிகாரத்தையும் தமது நலன்களுக்காக எவ்வளவுக்கு துஸ்பிரயோகம் செய்ய முடியுமோ அவ்வளவிற்கு துஸ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மகிந்தவுடன் நெருங்கியிருந்த, உலக நாடுகளுக்கான ராஜதந்திரிகளில் இருந்து (தயான் ஜெயத்திலக, நோனிஸ், தமரா குணநாயகம், உள்ளிட்ட பலர்) புத்திஜீவிகள், (ரஜீவ விஜயசிங்க, ஜெயந்த தனபால, சுமனசிறீ லியனகே உள்ளிட்ட பலர்) நீதித் துறை சார்ந்தவர்கள், (முன்னாள் பிரதம நீதியரசர்கள் சரத் என் சில்வா, சிராணி பண்டார நாயக்கா உள்ளிட்டவர்கள்) சட்டத்தரணிகள் சங்கம் ( இதில் 4ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகிந்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்) ஊடகவியலாளர்கள் ( விக்டர் ஐவன், சமன் வகாராட்சி, உள்ளிட்டவர்கள்) சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள், பல தொழிற்சங்கங்கள் என தெற்கின் முக்கிய சமூக அங்கங்கள் இப்போ மகிந்த அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாகி உள்ளது.

1989ஆம் 90 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஆளும் தரப்பிற்கு எதிராக தெற்கின் அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் திரண்டெழுந்தன.

இப்போ பொது அமைப்புகள் - சமூகப் பிரதிநிதிகள், ஊடகங்கள் மீது பல மடங்கு அதிகமான அழுத்தங்களை பிரயோகிக்கும் போதிலும் அவற்றையும் தாண்டி அனைவரும் ஒன்று திரண்டு மகிந்த ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான இந்த அணி திரள்வில் அவருடன் கைகோர்த்திருந்த விமல் வீரவன்சவைத் தவிர பௌத்த கடும் போக்காளர்களே அவரை விட்டு விலக தீர்மானித்திருக்கிறார்கள் என்றால் யுத்தத்தையும் புலிகளையும் வைத்து நீண்ட நாட்களுக்கு சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டின் கஜானாவை காலி செய்து குடும்ப கஜானாவை நிரப்ப  முடியாது என்பதனை 9 வருடத்திலேயே உணர வேண்டி இருக்கும் என மகிந்த நினைத்திருக்க மாட்டார்.  

அசைக்க முடியாது என இறுமாப்புக் கொண்டிருந்த கோட்டையின் வாசற் கதவை அத்துரலியே ரத்ண தேரர் முதலில் தகர்த்தார்... அந்த வழியே மகிந்தவின் அரண்களாக இருந்த மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட பலர் வெளியே வந்தனர்... மைத்திரிபால குழுவினர் அமைத்துக் கொடுத்த காப்பட் வீதியில் பலர் பயணம் செய்யக் காத்திருக்கின்றனர்... அதன் மூலம் மகிந்த ராஜபக்ஸ மேலும் அதிர்வுகளை சந்திப்பார் என கொழும்பின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்...

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிராக களமிறங்கியதையும் மைத்திரிபால சேனநாயக்கா களம் இறங்கியதைனையும் பலர் ஒப்பிட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கு இது யுயுப்பி என்கின்றனர்..

இது எதனை ஞாபகப் படுத்துகிறது என்றால் விடுதலைப் புலிகளில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் பலர் விலகிச் சென்றார்கள்... முக்கிய தளபதிகள் சிலர் தமது அணிகளின் ஊடாகவே தலமைக்கு தலையிடி கொடுத்தார்கள் அவற்றையெல்லாம் வெற்றி கொண்டது போல் கிழக்கின் தளபதி கருணா பிரிந்ததனையும் சாதாரணமாக எடுத்து அவரது பிரிவு தமக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்றார்கள்... ஆனால் அந்தப் பிளவு தான் அவ்வியக்கத்தின் பாரிய வீழ்ச்சிக்கு காரணமானது என்பதனை நடுநிலையாக சிந்திப்பவர்கள் எவரும் மறுக்க்க மாட்டார்கள்... 

இதே வேளை சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவர்... அவர் கட்சி அரசியலில் ஈடுபட்டு இருக்கவில்லை.... அவர் மீது நாட்டின் இராணுவச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்... அதனபடி அவரை சிறையிலும் அடைக்க முடிந்தது. அத்துடன் அவர் மகிந்தவை எதிர்த்த காலம் யுத்த வெற்றியின் மமதையில் மகிந்தவும் அந்த வெற்றி கொடுத் போதையில் மக்களும் இருந்த காலம்... 

ஆனால் இப்போ போதை தெளிந்து மக்கள் தம் நிலை உணரத் தலைப்படும் காலம்... தென் மாகாண, மேல் மாகாண சபைகளின் தேர்தல்களில் வாக்கு வங்கி சரியத் தொடங்கி ஊவா மாகாண சபைத் தேர்தலில் பாரிய சரிவைக் வெளிப்படுத்தியது. இதன் மூலம் மகிந்த சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியதை அனைவரும் உணரத் தொடங்கினர்.

இப்போ, மற்றைய கட்சிகளை தன்னால் பிளக்க முடியும் சின்னாபின்னமாக்கி அக்கட்சிகளின் முக்கியஸ்த்தர்களை உடைத்தெடுக்க முடியும் தனது கட்சியை எவரும் அசைத்துப் பார்க்க முடியாது என நினைத்திருந்த மகிந்தவின் மமதைக்கு பாரிய அடி விழுந்திருக்கிறது.

13 ஆண்டுகாலம் கட்சியின் செயலாளராக இருந்த, 47 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை உடைய ஒருவர் மகிந்தவையும் கட்சியையும் அசைத்திருக்கிறார்.

இதனை மகிந்தவால் ஜீரணிக்க முடியாது உள்ளது. அதனால்தான் என்னவோ ராஜினாமாக் கடிதத்தை கொண்டு சென்ற மைத்திரிபாலவை மிகவும் தரம் தாழ்ந்து அவரது தாயை இழுத்து தூசண வார்த்தைகளை மகிந்த...கொட்டித் தீர்த்திருக்கிறார். 

அதனால் தனக்கு எதிரான அரசியல் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ள மகிந்த,  யார் யார் எப்பபோது தன்னை விட்டு ஒட்டுண்ணிகள் கழண்டு செல்வது போல் ஒவ்வாருவராக கழண்டு போவார்கள் என தடுமாறிப் போய் தூக்கம் இன்றிப் புலம்புகிறார். இந்த நிலையில்  கிராம மட்டத்தில் செல்வாக்கு இழந்தவர்களும், வாக்கு வங்கி அற்றவர்களும், சமூக மட்டத்தில் வெறுக்கப்படுபவர்களுமே அவரைச் சுற்றி எஞ்சி இருக்கிறார்கள்.

நேற்று (21.11.14) அன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவரின் பிரதான அமைச்சரான ஜனக பண்டார தென்னக்கோண் இதனை தெளிவாக சொன்னார்.. 'போதைப் பொருள், எதனோல், சாராயக் கடத்தல்காரர்கள் எல்லோரையும் பாராளுமன்றிற்கு கொண்டு வந்த பெருமை மகிந்த அரசாங்கத்தையே சாரும்' இதில் இருந்து யார் மகிந்தவுடன் எஞ்சியிருப்போரில் பலர் யார் என்பது புலப்படும்.

இத்தகைய சூழலில், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைகள் என்று சொல்லப்படுகிற பொலநறுவை, அனுராதபுரம், களுத்துறை, கம்பகா, மத்திய மமாகாணம், தெற்கின் காலி மாத்தறை, உள்ளட்ட மிக முக்கிய மாகாண மாவட்டங்களின் முக்கயஸ்த்தர்கள் தாமே உண்மையான சிறீலங்கா சுதந்திரக் கட்சி என தெரிவித்து சந்திரிக்கா, மைத்திரிபால சிரிசேன பக்கம் நிற்கிறார்கள்...

உள்ளுராட்சி சபைகளின் - பிரதேச சபைகள் - நகர சபைகள் - மாகாண சபைகளின் முக்கியஸ்தர்கள் என  கட்சியின் அடிமட்டத்தினரில் பெரும்பான்மை சீறீலங்கா சுதந்திரக் கட்சியின் மீட்பர் அணியில் உள்ளனர். 

தவிரவும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் ஜேவீபீ – சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கடும் போக்குடைய பிரதான கட்சிகளும், மேல்மாகாணத்தில் வாக்கு பலத்தை கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியினரும்,  பிரதான எதிர் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் வரலாற்றில் முதன் முறையாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள்.

விமல் வீரவன்சவின் ஜே என்பி கட்சியில் இருந்தும் விமலைத் தவிர முக்கியஸ்தர்கள் எதிர் கட்சிகளின் பக்கம் செல்கின்றனர். செவி வழி வந்த செய்தி ஒன்று கூறுகிறது விமல் வீரவன்சவும் மைத்திரிபாலவுடன் கதைத்த போதும் அணி மாறுதலை அவர் அதனை நிராகரித்ததாக.

தினேஸ் குணவர்த்தனா தற்போது மௌனமாகி இருக்கிறார். அவரது நிலைப்பாடு வெளியாகவில்லை. மலையக கட்சிகள் எப்போதுமே ஐக்கியதேசியக் கட்சி சார்பு நிலை எடுப்பது உண்டு. ஏற்கனவே ஒருவர் எதிரணிக்கு பாய்ந்துள்ளார்.  

முஸ்லீம் கட்சிகள் எதிரணிக்கு சென்றால் என்ன செல்லாவிட்டால் என்ன வடக்கு கிழக்கு  உள்ளிட்ட நாட்டின் பரந்து வாழும் முஸ்லீம்கள் கோத்தாபய தலைமையிலான பொதுபல சேனாவின் புண்ணியத்தால் எதிரணி வேட்பாளருக்கே வாக்களிக்கும் நிலை காணப்படுகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறதோ இல்லையோ மகிந்த சகோதர எதிர்பலை என்றும் இல்லாதவாறு அதிகரித்திருக்கும் நிலையில் மகிந்தவுக்கு எதிராக, பேய் அல்லது  பிசாசை நிறுத்தினாலும் அதற்கு வாக்களிக்க 90 வீத தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்... கடந்த பொதுத் தேர்தலில் யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ராணுவத்தின் தளபதியாக இருந்து மகிந்தவுக்கு எதிராக சரத் பொன்சேகா களமிறங்கிய போது வடக்கு கிழக்கில்தான் அதிகளவு வாக்குகள் அவருக்கு விழுந்திருந்தன.

இந்த நிலையில் வழமையான புலிப் பூச்சாண்டி – புலம் பெயர் தமிழர்களினால் ஆபத்து, மேலைத்தேய நாடுகளின் சதி, என்ற பம்மாத்துகள் இந்தத் தேர்தலில் எடுபட வாய்ப்பில்லை. கொழும்பின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கிறார். காரணம் அதனை முன்பு கூறிய கடும் போக்காளர்கள் இப்போ மைத்திரியின் பக்கம் இருக்கிறார்கள்...

தவிரவும் முன்பு போல் அல்லமால் பிராந்திய அரசியலும் மாறியிருக்கிறது... சீனாவின் நெருக்கம் இந்தியாவைப் புறக்கணிப்பது என்பது மோடி அரசாங்கத்தை சற்று கொதி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது... 

மோடிக்கு முன்னரான காலம் சோனியா தலைமையிலான காங்கிரஸ் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு இருந்தது. இப்போ அந்த நிலை மாறியிருக்கிறது...

ஆக வரப் போகும் தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் நடைபெறுமாக இருந்தால், கணனிகள் வாக்களிக்காது இருந்தால், தேர்தல் ஆணையாளரை அலரி மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்காது இருந்தால் மகிந்த சாரம்ராச்சியம் சரிவதை எவராலும் தடுக்க முடியாது.... இவ்வளவு விடயங்களையும் மகிந்த கோத்தாபய அணி மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் முன்பு போல் ஆட்சியை இலகுவாக தக்கவைக்க முடியும் என்பது பகல் கனவே. 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113784/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.