Jump to content

விடுதலைக்காய் நீரெரிந்த தீயில் நினைவெரித்து ....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10429352_10152578200659891_6289390688595

காந்தாளே..!

கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..!

நாமெல்லாம் சுமந்த

விதி தின்ற பெருங்கனவொன்றின்

அடையாளம் நீயென்று அறிவாயா..?

இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில்

நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..?

பெருங்கோடையில்

நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது

எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம்

சருகுகளைப்போல உதிர்ந்துபோயின

எங்கள் நிழலாயிருந்த மரங்கள்

ஊழிக்காலமொன்றில்

உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று

எம் மிச்சமிருந்த கண்ணீரும்..

எம்மைத்தவிர யாரறிவார்

சுடுகாடொன்றில் உயிரோடெரியும்

பிணமொன்றின் வலியை..

காந்தாளே..!

எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..!

அறிவாயா..

எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும்

வயல்களும் காடுகளும்

ஞாபகங்களின் ஞாபகங்களும்

சேர்ந்தேயழும் துயரை நீயறிவாயா...?

தூரத்தே ஒளிரும் வானத்து நட்சத்திரங்களில்

ஊர் மேலொழுகும் ஒவ்வொரு மழைத்துளியில்

புழுதியை அணிந்திருக்கும்

எம்மூர்களின் புன்னகையில்

எங்கள் நதிகளின் பாடலில்

எங்கள் வனங்களின் கவிதையில்

காற்றில் மூச்சில் கனவிலென்று

காலமள்ளிப்போனவர்களின் கதைகளே

எங்கள் வாழ்வெல்லாம்

காய்த்தும் பூத்தும் காய்ந்தும் கிடக்கின்றன..

காந்தாளே..!

எம் கண்ணீரில் பூத்தமலரே..!

அறிவாயா..

ஊரெல்லாம் நினைவெரிக்கும்

எம் கோடையை நீயறிவாயா..?

எங்களுக்கு மட்டும்

இருண்டே கிடக்கும் வானமும்

குரல்களற்று அலையும் எம் நதிகளும்

பிணங்கள் எரிந்த எங்கள் வயல்களின்

துயர்ப்புன்னகைகளும்

குருதி ஊறிய எங்கள் வீதிகளின் சுவடுகளும்

அழக்கூட வாயற்று கண்ணீரை எறிக்கும்

எங்கள் நிலவும்

இனி என்ன செய்யும்

சூரியன் அற்ற நிலத்தில்...?

காந்தாளே..!

எம் காவியங்களை ஊரெல்லாம் பாட

கண் திறந்தமலரே..!

சொல்..

எம் வனமெல்லாம் எரிகிறது..

நிலமெரிக்கா சூரியனுக்கு

இனி நாமெங்கு போவோம்..?

முப்பது வருட கண்ணீருடன்

முகிழ்ந்திருக்கும் அடையாளமே..

இரத்தமாய் சிவந்திருக்கும்

உன் இதழ்களில் இருந்து

நறுமணத்தை போல பரவுகிறது வலி

உடலெங்கும் தொற்றிக்கொள்ளும்

பெருந்துயரோடு பற்றி எரிகிறது மனம்...

எங்கள் வலிகளை வாங்கிப் பூத்த துயர மலரே..!

காந்தாளே..!

அறிவாயா..

எம் முப்பதுவருடக்கதையை

இனி ஒரு முன்னூறு சந்ததிக்கும் சொல்ல

உன்னைத்தவிர எம்மிடம்

மிச்சமாய் எதுவுமில்லையென்று

நீயறிவாயா..? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கவிதை.
 
அப்படியானால் இது? 
 
கனவாகி விட்ட தமிழரின் மகோனதப் பொற்காலத்தின் அடையாளம் அல்லவா. மனம் தளராதீர்கள் !

 

1024px-View_from_left_side_corner_of_the

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

அப்படியானால் இது?

கனவாகி விட்ட தமிழரின் மகோனதப் பொற்காலத்தின் அடையாளம் அல்லவா. மனம் தளராதீர்கள் !

1024px-View_from_left_side_corner_of_the

அன்பு அண்ணா.. ஈழத்தில் கல்லறைகளில் இருந்து மாவீரர்களின் ஞாபமாக இருந்த அத்தனை அடையாளங்களையும் அழித்துவிட்டது சிங்களம்.. ஆயினும் எம்மண்ணோடு வேரோடி மாவீரர்களின் ஆன்மாவாக கார்த்திகைகள் தோறும் எம்மக்களின் இதயங்களோடு பேசும் காந்தாளை என்ன செய்யமுடியும்.. அந்த நினைவுகளோடு எழுதியது... நம்பிக்கைகள் மட்டுமே மூலதனமானது ஈழத்தமிழரின் வாழ்க்கை.. நன்றி அண்ணா..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் வலி சுமந்த வார்த்தைகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை கருத்தெழுத வார்த்தைகளின்றித் தவிக்கின்றேன். ஆயினும் கண்களில் மட்டும் ஓரு துளி கண்ணீர்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10435899_10152559595874891_5836280648957

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்

தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன

இடித்தழிக்கப்பட்ட

கல்லறைகளில் இருந்து

துயருடன் இடம்பெயர்ந்த

ஆன்மாக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10351463_10152580460614891_6761969126000

கேட்க செவிகளும்

பார்க்க விழிகளும்

இல்லா இவ்வுலகில்

விடுதலைக்காய்

நீரெரிந்த தீயில்

நினைவெரித்து நினைவெரித்து

நாமெரிவதை யாரறிவார்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூரத்தே ஒளிரும் வானத்து நட்சத்திரங்களில்

ஊர் மேலொழுகும் ஒவ்வொரு மழைத்துளியில்

புழுதியை அணிந்திருக்கும்

எம்மூர்களின் புன்னகையில்

எங்கள் நதிகளின் பாடலில்

எங்கள் வனங்களின் கவிதையில்

காற்றில் மூச்சில் கனவிலென்று

காலமள்ளிப்போனவர்களின் கதைகளே

 

 

'உடல் மண்ணுக்கு ...உயிர் தமிழுக்கு' என வாழ்ந்தவர்கள் அவர்கள் !

 

அவர்களின் புதை குழிகள் சிதைக்கப் பட்டாலும், அவை தாய் மண்ணுக்கே அர்ப்பணமாகின்றன!

 

அவற்றைச் சிதைதவர்கள் இங்கே தான் தோற்றுப் போகின்றார்கள் என்பதை அவர்கள் உணர நீண்ட காலங்கள் எடுக்கும்!

 

அவர்களது உணர்வுகளயும், உயிர் மூர்த்தங்களையும் அந்த மண்ணும், காற்றும், கடலலைகளும் என்றென்றும் சுமந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10610771_10152571683944891_1224375453285

விழுதுமின்றி தவிக்குமென்று

தன் ஆலமரத்திற்காய்

விம்மி அழுதிருக்குமோ

சிலுவை சுமந்த ஆணிவேர்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10401878_10152582247444891_7485774583903

இருக்கக் கூடும் பறக்க வானும் 
தேடாப்பறவையே..!
சிலுவை சுமந்து நீ பின்னிய கூட்டையும்
உன் சிறகை முறித்து விரித்த வானையும் 
இழந்தாயிற்று..
இழந்த பின் புரிந்தென்ன
இருந்தவை 
எதற்கும் இணையற்ற
எம் கூடும் வானுமென்று... :(
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10417679_10152583451379891_5212350292403

நவ 27

இன்று ஊரெங்கும் இறுகிப்படிந்திருக்கும் மெளனங்களுக்கும் சோகங்களுக்கும் இடையில் விடிந்திருக்கும் எம் காலை.. நந்தியாவெட்டையும் செம்பருத்தியும் என்றுமில்லா வனப்போடு இன்றெமக்கு மலர்ந்திருக்கும்... எல்லாவீடுகளும் நிறைந்திருக்கும் பூக்களோடும் மாலைகளோடும் காத்திருக்கும் உம் துயிலிடம் வரும் மாலைக்காய்..காற்று கண்ணீரோடு முத்தமிடும் பனைமரக்காடுகளை.. காற்றெங்கும் சோகத்தோடு ஒரு சிலிர்ப்பிருக்கும் இன்றெமக்கு.. நெடிய பனைமரங்களுக்கிடையில் இருக்கும் உம் தடங்களின் மேல் நிலவொளிரும்..பூவரசுகளோடு பேசும் வன்னியின் கரிக்குருவிகளும் புலுனிகளும் அந்த மண்ணில் யாரும் பாடமுடியாமல் இருக்கும் கவிதையை அவர்களுக்காய் பாடும்.. காடும் உறங்காமல் கண்விழித்தழுதிடும் வேரோடு உறவாடிய தம் வீரரின் நினைவுகளில்.. நிழல் விழுந்திருக்கும் எம் மணல்வீதிகளில் நீரிருப்பீர், உம் நினைவிருக்கும்.. தேசங்கள் தாண்டி மேகங்கள் உமை பாட வந்திருக்கும்.. தீபங்கள் எரிந்திடும் இம்மாலையில் கோவில்கள் அழுதிடும் குலங்காக்க வீழ்ந்த சாமிகளுக்காய்.. வனங்களும் மனங்களும் புல்லரிக்கும் உணர்விது.. கடந்துபோகமுடியாதபடி

கொதித்துக்கொண்டிருக்கிறது இந்த நாள்..தகிக்கிறது தீரா வெக்கை மனங்களில்..

வனமேகப்போயினவா வாடிக்கருகியதா நம் தெய்வங்கள்..? யாரறிவார்..? ஊர் எரிக்கிறது துயர்.. அழிவுகளாலும் பிரிவுகளாலும் அள்ளுண்ட தேசம் ஒன்றின் எஞ்சிய சந்ததியின் மொழிகளாலும் குறியீடுகளாலும் காட்டமுடியாத உணர்வுடன் கடந்துபோகிறது இன்னொரு கார்த்திகை..

மாவீரரே..!

ஜந்து பிள்ளைகளையும் நாட்டுக்காய் கொடுத்த

எதுவுமில்லையென்று விரிக்கும் கைகள் நிறைய இருக்கிறீர் நீர், அக்கண்களில் நின்றுதிரும் ஒரு துளிகண்ணீரில் இருக்கிறது கல்லறைகளில் இருந்து நீரின்று கண்திறவா இதயங்களிடம் கையேந்தும் பாடல்.. நதியின் பேரன்போடும் கடலின் பெருங்கருணையோடும் இன்னும் திறவா நம்மக்களின் இதயங்கள் திறக்க நாமெல்லாம் மனச்சாட்சியாய் எழுதுவோம்.. உங்களின் பாடலை பாடுவோம்.. தூங்குங்கள் கண்மணிகளே.. தூக்கமின்றி எத்தனை இரவுகள் எமக்காய் துவக்கோடு விழித்திருந்தீர்ப்பீர்கள்.. துக்கம் தொண்டையை அடைக்கிறது.. ஈகத்தின் கருணையில் விரிந்த உங்கள் உலகில் தூங்குங்கள் தோழர்களே...

எரிமலை நடுவில் போர் தொடுத்தோம்.. எத்தனை உயிர்களை நாம் கொடுத்தோம்..நினைவெரித்து நினைவெரித்து நீறான நதியில் மிதக்கிறது ஈழம்.. சருகுகளில் இருக்கும் இறந்தகாலத்தில் நின்றபடிதான் நிகழ்காலத்தைக்கடக்கிறோம்.. தீராத கனவுகளும் ஆறாத வலிகளும் வாழ்வின் நீளமுழுதும் வரும்சோகம் இது.. வன்னியின்

எல்லா வீட்டுப் பரணிலும் இருக்கிறது வலி பற்றிய கதைகள்.. ஈயமாய் துளைக்கும் கதைகளை தாங்கும் வலிமை செவிகளுக்கில்லையாதலால்தான் தூசிதட்ட யாரும் விரும்புவதில்லை... அந்த மக்களின் கதைகளில் ஒருகதைதான் இனி எப்போதும் பெறமுடியா ஒப்பற்ற எங்கள் தலைவனின் வீட்டின் கதையும்.. இது போதாதா எங்களில் ஒருவன் நீங்கள் என்பதற்கு..

மக்களின் மகனே..!

குன்றென நாம் நிமிர்ந்தபோது கோபுரமாய் நீயிருக்கவில்லை அத்திவாரமாய் இருந்தாய்...தமிழிருக்கும் தேசமெல்லாம் உன் சுவடுகள் சுவறி இருக்கும் அண்ணா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.