Jump to content

விரும்பி அழைத்து சென்றால் மோடியுடன் சேர்ந்து வாழ தயார்: - யசோதாபென் பேட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
josodaben-modi-221114-350-indian-news.jp

மோடி விரும்பி அழைத்து சென்றால் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலின் போது வதோதரா தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு மனைவி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த தகவலை மறைத்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் மோடியின் மனைவி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாயின. குஜராத்தை சேர்ந்த யசோதாபென் என்பவருக்கும் மோடிக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்தார். தற்போது 62 வயதான யசோதா பென் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார். குஜராத்தில் உள்ள ஐஸ்வர்வாடா என்ற கிராமத்தில் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.

   

தேர்தலின் போது ஊடகங்களின் வெளிச்சம் இவர் மீது படவே சிறிது காலம் தீர்த்த யாத்திரை செல்வதாக கூறி தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் மும்பையில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. பிரதமரின் மனைவி என்பதால் அவருக்கு கமாண்டோ படை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி விரும்பினால் அவருடன் சேர்ந்து வாழ நான் தயாராக இருக்கிறேன். அவர் வந்து என்னை அழைத்து சென்றால் அவருடன் செல்ல தயார் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=121283&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி, இப்போ... பிஸி.
அவர், எதிர் கட்சியிலிருக்கும் போது... "பிறீ"
அப்போ... அழைத்துச் செல்வார்.
அதுவரை, காத்திருக்கவும்.
 

1968´ம் ஆண்டிலிருந்து... ஆசிரியையாக இருந்த நீங்கள்,
இன்னும், ஐந்து ஆண்டுகள்.... காத்திருக்க முடியும் தானே.....
என்ன, உலகப்பா.... schock.gif
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை டீ கடை வைத்திருக்கும்போது  சொல்லியிருந்தா எவ்வளவு நன்னா இருந்திருக்கும் . :icon_idea:

Link to comment
Share on other sites

மோடி, இப்போ... பிஸி.

அவர், எதிர் கட்சியிலிருக்கும் போது... "பிறீ"

அப்போ... அழைத்துச் செல்வார்.

அதுவரை, காத்திருக்கவும்.

 

1968´ம் ஆண்டிலிருந்து... ஆசிரியையாக இருந்த நீங்கள்,

இன்னும், ஐந்து ஆண்டுகள்.... காத்திருக்க முடியும் தானே.....

என்ன, உலகப்பா.... schock.gif

 

இதுவே எங்கட தமிழ் சிறியர் மோடியாக  இருந்திருந்தால் இவ்வளவு  நாளாக மனைவியை தனிய விட்டு வைத்திருப்பாரா? :D 
 
மோடி  பிள்ளை குட்டி என்று வந்தால்தனது  அரசியல் கவனம் சிதறிவிடும் என்று நினைத்திருப்பார். மோடிக்கு அந்த நேரத்தில் எங்கடை தமிழ் சிறியர்  மாதிரி ஒரு உதவியாளர் இருந்திருந்தால் அடுத்த நாளே ஆண் கருத்தடை ஆபிரேசன் செய்துகொண்டு  மனிசியை தன்னுடன்  கூட்டி  கொண்டு போயிருப்பார்.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புக்களில் பல வகை உண்டு!

 

இப்போது ஒரு புதிய வகை உருவாகியுள்ளது!

 

அதற்குப் பெயர் ' யூரேனியச் சிரிப்பு" ! :D

 

tony_abott.jpg

Link to comment
Share on other sites

மிகச்சிறுவயதில் செய்து வைக்கப்பட்ட திருமணம் என மோடி தெரிவித்து இருந்தார். மிகச்சிறுவயதில் செய்து வைப்பது திருமணம் அல்ல என்றும் சொல்லி இருந்தார். இப்பெண்ணை விட்டு விலகி ஆர் எஸ் எஸ் இல் இணைந்து கொண்டவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.