Jump to content

மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்


Recommended Posts

141121144857_maithripala_sirisena__640x3

 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/11/8ca6b0df_profileofmaithripalasirisena_141121_maithripala_profile_au_bb.mp3

 

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
 
உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.
 
அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார்.
1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார்.
 
மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன,
1970களில் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார். அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
இதில் 1982-ம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.
 
1989-ம் ஆண்டில், 38வது வயதில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவனார்.
அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றதுக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
 
பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க 1994-ம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரிபால, மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதிவியொன்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சி கண்டார்.
பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற சிறிசேன. 2004-ம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார்.
 
அதன்பின்னர், மகிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மைத்திரிபால, 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008-ம் ஆண்டில் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையில் மைத்திரிபால சிறிசேன தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ஷ- மைத்திரிபால சிறிசேன: ஓர் ஒப்பீடு

 

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

 

மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சிக்குள்ளிருந்தே அவருக்கு எதிரான பொது வேட்பாளர் உருவாகியிருப்பது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில்,
 
*இலங்கை அரசியலில் மைத்திரிபால சிறிசேன என்பவர் யார்?
 
*மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து மைத்திரிபால சிறிசேன எந்த இடத்தில் வேறுபடுகின்றார்?
 
*ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்ஷவின் பின்புலத்துக்கும் மைத்திரிபால சிறிசேனவின் பின்புலத்துக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் உள்ளதா?
 
*ஆளும் சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் மீறி மைத்திரிபாலவால் அந்தக் கட்சிக்குள் ஆதரவைத் திரட்ட முடியுமா?
 
*2010-இல் சரத் பொன்சேகா மகிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக களமிறங்கிய சந்தர்ப்பத்திலும் பார்க்க, இப்போது மைத்திரிபாலவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது?
 
*சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு எந்தளவுக்கு கிடைக்கும்?
 
*இம்முறைத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் தீர்க்கமான சக்தியாக அமைய வாய்ப்பு உள்ளதா?
 
*மகிந்தவுக்கு போட்டியாக அவரது கட்சிக்குள்ளிருந்தே தான் ஒருவரை களமிறக்க வேண்டியிருக்கின்றது என்கின்ற நிலைமை இலங்கை அரசியலில் எதனை உணர்த்துகின்றது?
 
*நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பாக அமைய முடியுமா?
 
உள்ளிட்ட கேள்விகள் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என். வித்யாதரன் பிபிசி தமிழோசைடன் நடத்திய ஆய்வுக் கலந்துரையாடலை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
 
 
Link to comment
Share on other sites

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

 

100 நாட்களில்... ஆங்கிலம்,  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கற்க முடியுமானால்....

இதுவும் சாத்தியமே.....JC_hurrah.gif

141121144857_maithripala_sirisena__640x3

 

இவருக்கு, ஜனாதிபதிக்குக்குரிய முகவெட்டு உள்ளதா?

கொஞ்சம்... சந்தேகமாக உள்ளது. :D

Link to comment
Share on other sites

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

Link to comment
Share on other sites

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

 

எங்க அடிபட்டாலும் நீங்கள் ஒரே காலைத்தான் தூக்குறிங்களே அது ஏன்? 

Link to comment
Share on other sites

 

 
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

 

 

Link to comment
Share on other sites

இதுதான் மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமாம்

https://m.facebook.com/profile.php?id=365053451326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அடிபட்டாலும் நீங்கள் ஒரே காலைத்தான் தூக்குறிங்களே அது ஏன்? 

 

அது, அவர்களின் குணம்.

நாய்வாலை,  நிமிர்த்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது, அவர்களின் குணம்.

நாய்வாலை,  நிமிர்த்த முடியாது.

மாற்றம் என்ற ஒன்றைத் தவிர....எதுவுமே நிரந்தரமில்லை! :D

 

- யாழ் களத்தின் தத்துவவாதி ஒருவரின் கருத்திலிருந்து பொறுக்கியது !

 

100_0323.jpg

Link to comment
Share on other sites

100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போறாராம்.. chuckling-gesture-smiley-emoticon.gif

 

அதுக்கு அவர் முதல்ல ஜனாதிபதியாக வரவெல்லோ வேணும். பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டு காசாவது மிஞ்சியிருக்கும்.  மைத்திரி பாலாவை போட்ட சிங்களவனின் அறிவோ அறிவு . சிங்கள மோடையா என்று  சும்மாவா சொன்னாங்கள்.  :D  :D  :D

Link to comment
Share on other sites

அதுக்கு அவர் முதல்ல ஜனாதிபதியாக வரவெல்லோ வேணும். பொன்னர் அல்லது அம்மையார் நின்றிருந்தால் கட்டு காசாவது மிஞ்சியிருக்கும். மைத்திரி பாலாவை போட்ட சிங்களவனின் அறிவோ அறிவு . சிங்கள மோடையா என்று சும்மாவா சொன்னாங்கள். :D:D:D

பொன்சேகாவும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சும் அம்முவும் நிக்க சட்டப் பிரச்சினை விடாது. மோடயர்கள் சிங்களவர்கள் மட்டுமில்லை ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர், நகைச்சுவை நடிகர் சுந்தர்ராஜனைப் போல சிரிக்கும்
இவர் அரசியலில் நகைச்சுவையாகவே இருப்பார் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

இவருக்கும் தற்கொலை தாக்குதல் நடந்திருக்கு . :o  எவரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கு .

புலிகளுக்கு உப்பு காண்டம் யார் வந்தாலும்  தொடரும் போல .

 

 

மைத்திரியும் தனது மகளின் காதலனை வாகனத்தால் அடித்து கொன்றவராம் (80 களில்) கேள்விப்பட்டீர்களோ?? :unsure:  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இவர் மீது  தாக்குதல்  நடாத்தியிருக்கிறார்கள் என்றால்....

இவர் தமிழருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது

 

எனவே ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு எதிராக தனது பலத்தை சிங்களமக்களுக்கு காட்ட மும்மரமாக முனைவார்..

 

பூனைக்கு விளையாட்டு

உயிர் போவது தமிழருக்குத்தானே.. :(

Link to comment
Share on other sites

ஹம்பாத்தோட்ட.....சிங்கள கடும் போக்காளர்கள் போலவே பொலநறுவை சிங்களவர்களும் மிகவும் கடும்போக்கானவர்களே.....இதில் மகிந்த ராஜபக்சவிற்கும் மைத்திரிபாலவிர்க்கும்....தமிழர்களை அடக்கி ஆளும் விடையத்தில் பெரிய வித்தியாசம் இருக்க போறதில்லை....என்னை பொறுத்த வரை மீண்டும் மகிந்த வந்தால் தான் சர்வதேசத்தை வைத்து தமிழர் தரப்பு தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்.....புதிய ஆட்சிக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசமே தமிழர் தரப்பை இன்னும் ஒரு 10 வருடங்கள் காத்திருக்க செய்யும்.....

Link to comment
Share on other sites

ஹம்பாத்தோட்ட.....சிங்கள கடும் போக்காளர்கள் போலவே பொலநறுவை சிங்களவர்களும் மிகவும் கடும்போக்கானவர்களே.....இதில் மகிந்த ராஜபக்சவிற்கும் மைத்திரிபாலவிர்க்கும்....தமிழர்களை அடக்கி ஆளும் விடையத்தில் பெரிய வித்தியாசம் இருக்க போறதில்லை....என்னை பொறுத்த வரை மீண்டும் மகிந்த வந்தால் தான் சர்வதேசத்தை வைத்து தமிழர் தரப்பு தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்.....புதிய ஆட்சிக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசமே தமிழர் தரப்பை இன்னும் ஒரு 10 வருடங்கள் காத்திருக்க செய்யும்.....

 

மகிந்த ,மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட முடிவானதொன்று. தேர்தலுக்கு பிறகு சந்திரிக்கா திரும்பவும் வெளிநாடு போயிடும். கட்சிமாறின ஆட்களெல்லாம் காணாமல் போடுவினம் உவர் மைத்திரி மந்தியாகலாம்.

 

எல்லாத்துக்கு பிறகு குள்ளநரி ரணில் திரும்ப தலையெடுக்கும். 

 

எப்பிடிப்பார்த்தாலும் யாரையும் ஆதரிப்பதில்லை என்பதே கூட்டமைப்பின் முடிவாகவும் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ,மீண்டும் வெல்வது கிட்டத்தட்ட முடிவானதொன்று. தேர்தலுக்கு பிறகு சந்திரிக்கா திரும்பவும் வெளிநாடு போயிடும். கட்சிமாறின ஆட்களெல்லாம் காணாமல் போடுவினம் உவர் மைத்திரி மந்தியாகலாம்.

 

எல்லாத்துக்கு பிறகு குள்ளநரி ரணில் திரும்ப தலையெடுக்கும். 

 

எப்பிடிப்பார்த்தாலும் யாரையும் ஆதரிப்பதில்லை என்பதே கூட்டமைப்பின் முடிவாகவும் வரவேண்டும்.

 

மகிந்தவின் ஆதிக்க

பண மற்றும் படை பலம் பற்றியும் தமிழருக்கு தெரியும்

ஆனால்......?

 

எனக்கு இவை எல்லாம் மகிந்த குடும்பத்தின் நரிவேலைகள் போலவே தெரிகிறது

ஒருவேளை

இறுதி நேரத்தில் மைத்திரி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பார் என்று ஒரு கணக்கு எனக்குண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஆதிக்க

பண மற்றும் படை பலம் பற்றியும் தமிழருக்கு தெரியும்

ஆனால்......?

 

எனக்கு இவை எல்லாம் மகிந்த குடும்பத்தின் நரிவேலைகள் போலவே தெரிகிறது

ஒருவேளை

இறுதி நேரத்தில் மைத்திரி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பார் என்று ஒரு கணக்கு எனக்குண்டு...

 

கடைசி நேரத்தில், விசுகு சொன்னமாதிரியும்.... நடக்க சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால நான் அறிஞ்சவரையில் இலங்கையின் இன்னுமொரு மூன்றாந்தர அரசியல்வாதி. தாராளமான ஊழல், nepotism, cronyism எல்லாம் நிறைந்த ஒருவர். முதன் முதலில் சிரசவில் கொடுத்த நேர்முகத்தில் பல கேள்விகள் கேட்டார்கள். "நான் 47 வருடம் சு.கவில் பொது செயலாளராக இருந்தேன்" என்றதைத் தவிர factual ஒரு ஆன பதிலும் மைத்திரிபால கொடுக்கவில்லை! சு.க என்ற குண்டர் கூட்டத்தை ஏதோ ஹாவார்ட் பல்கலைக்கழகம் மாதிரித் தான் இந்த மனுஷன் நினைச்சுக் கொண்டிருக்குது பாவம்! மகிந்த நித்திரை கொண்டாலும் உவர் வெல்லப் போவது இல்லை! :D

Link to comment
Share on other sites

கடைசி நேரத்தில், விசுகு சொன்னமாதிரியும்.... நடக்க சந்தர்ப்பம் உண்டு

தமிழ் படமா எடுக்கின்றார்கள் .

மகிந்தா அண்ட் கோ வில் இருந்து நாட்டை காக்கவேண்டும் என்று அவர்கள் தமது எதிர்கால அரசியலை உயிரை பணயம் வைத்து எடுத்த முடிவு இது .இலங்கை என்ற நாட்டை பற்றிதான் அவர்கள் கவலை .

மைத்திரிபால தான் அநேகமாக வெல்லுவார் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.