Jump to content

சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா?


Recommended Posts

சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா?
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

 

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரே இலங்கை மண்ணில் சங்கக்காரா சந்திக்கும் இறுதிப் போட்டியாக அமையும்.

இதேவேளை வங்கதேசத்தில் நடைபெற்ற 20 - 20 உலகக்கிண்ணப் போட்டிகளின் போதே `நான் 2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன்’ என சங்கக்காரா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=770273661321649998#sthash.3jHEaakb.dpuf

Link to comment
Share on other sites

ஓய்வை பிற்போட சங்ககார யோசனை

இலங்கை அணியின் வீரர் சகலவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் இடம் சங்ககார தெரிவித்து இருந்தார். உலகக்கிண்ணத்திற்கு பின்னர் ஓய்வு பெறுவதாகவே அவர் தெரிவுக்குழுவுக்கு அறிவித்து இருந்தார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டாம். இன்னும் சிறிது காலம் விளையாடி ஓய்வு பெறுமாறு கேட்டுள்ளனர். அணியில் இருந்து இரு சிரேஸ்ட வீரர்கள் ஓய்வு பெற்றால் அணிக்கு பின்னடைவை உருவாக்கும், எனவே குறித்த முடிவு பற்றி யோசிக்குமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தொடந்து விளையாடுவதா ஓய்வு பெறுவதா என யோசித்து வருவதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெறவிருந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது என்ற முடிவையே குமார் சங்ககார எடுத்து இருந்தார். ஏற்கனவே 20 - 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/134410-2014-11-22-18-13-38.html

 

Link to comment
Share on other sites

டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெ­று­வதை பிற்­போ­டு­மாறு சங்­கக்­கா­ர­விடம் வேண்­டுகோள்
 

 

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டி­க­ளுடன் சக­ல­வி­த­மான சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்தும் வில­கு­வ­தாக அறி­வித்­துள்ள இலங்­கையின் நட்­சத்­திர கிரிக்கெட் வீர­ரான குமார் சங்­கக்­கார, தற்­போது டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து வில­கு­வதா? இல்­லையா? என்­பது குறித்து ஆலோ­சித்து வரு­கின்றார்.

டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறும் திட்­டத்தை மீளாய்வு செய்­யு­மாறு குமார் சங்­கக்­கா­ரவை தெரி­வா­ளர்கள் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து, அவர் டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­வது பிற்­போ­டப்­ப­டலாம் எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

 

இது குறித்து கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றதா? என தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜய­சூ­ரி­ய­விடம் கேட்­ட­போது,
'கடந்த வியா­ழக்­கி­ழமை தனது ஓய்வு குறித்து குமார் சங்­கக்­கார என்­னிடம் தெரி­வித்தார். நான் அது குறித்து மீளாய்வு செய்­யு­மாறு அறி­வுரை வழங்­கினேன்' என வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டிற்கு தெரி­வித்தார்.

இதே­வேளை, இலங்­கையின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கரி­சனை கொண்­டுள்ள கிரிக்கெட் விற்­பன்­னர்­களும் டெஸ்­டி­லி­ருந்து ஓய்வு பெற­வேண்டாம் என குமார் சங்­கக்­கா­ரவை கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற உலக இரு­ப­துக்கு இரு­பது கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை சம்­பி­ய­னான பின்னர் கருத்து வெளி­யிட்ட குமார் சங்­கக்­கார, 2015 உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

 

அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்டில் கூடுதல் அக்­கறை செலுத்­த­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
முன்னாள் அணித் தலை­வரும் சிரேஷ்ட வீர­ரு­மான மஹேல ஜய­வர்­த­னவைத் தொடர்ந்து குமார் சங்­கக்­கா­ரவும் டெஸ்ட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்றால் அது இலங்கை அணிக்கும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது கிரிக்கெட் விமர்­ச­கர்­களின் கருத்­தாகும்.

 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எஸ். எஸ். சி. மைதா­னத்தில் நடை­பெற்ற மஹேல ஜய­வர்­த­னவின் பிரியா­விடை டெஸ்ட் போட்­டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 59 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்த குமார் சங்­கக்­கார அரங்­கை­விட்டு வெளி­யே­றும்­போது தனது துடுப்பை சுழற்­றி­ய­வாறு ர­சி­கர்­க­ளுக்கு சைகை செய்தார். இது அப்­போது பெரும் சந்­தே­கத்தை தோற்­று­வித்திருந்தது. ஆனால் அதுதான் இலங்­கையில் தனது கடைசி டெஸ்ட் என்பதை அவர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.

128 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியுள்ள குமார் சங்கக்கார 37 சதங்கள், 51 அரைச் சதங்கள் அடங்கலாக 58.76 என்ற சிறந்த சராசரியுடன் மொத்தம் 11,988 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/23/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AF%81%C2%AD%E0%AE%AA%E0%AF%86%C2%AD%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%8B%C2%AD%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சங்கா...பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
    • நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.  
    • ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல் கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான்  அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.