Jump to content

சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா?


Recommended Posts

சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா?
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

 

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரே இலங்கை மண்ணில் சங்கக்காரா சந்திக்கும் இறுதிப் போட்டியாக அமையும்.

இதேவேளை வங்கதேசத்தில் நடைபெற்ற 20 - 20 உலகக்கிண்ணப் போட்டிகளின் போதே `நான் 2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன்’ என சங்கக்காரா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=770273661321649998#sthash.3jHEaakb.dpuf

Link to comment
Share on other sites

ஓய்வை பிற்போட சங்ககார யோசனை

இலங்கை அணியின் வீரர் சகலவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் இடம் சங்ககார தெரிவித்து இருந்தார். உலகக்கிண்ணத்திற்கு பின்னர் ஓய்வு பெறுவதாகவே அவர் தெரிவுக்குழுவுக்கு அறிவித்து இருந்தார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டாம். இன்னும் சிறிது காலம் விளையாடி ஓய்வு பெறுமாறு கேட்டுள்ளனர். அணியில் இருந்து இரு சிரேஸ்ட வீரர்கள் ஓய்வு பெற்றால் அணிக்கு பின்னடைவை உருவாக்கும், எனவே குறித்த முடிவு பற்றி யோசிக்குமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தொடந்து விளையாடுவதா ஓய்வு பெறுவதா என யோசித்து வருவதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெறவிருந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது என்ற முடிவையே குமார் சங்ககார எடுத்து இருந்தார். ஏற்கனவே 20 - 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/134410-2014-11-22-18-13-38.html

 

Link to comment
Share on other sites

டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெ­று­வதை பிற்­போ­டு­மாறு சங்­கக்­கா­ர­விடம் வேண்­டுகோள்
 

 

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டி­க­ளுடன் சக­ல­வி­த­மான சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்தும் வில­கு­வ­தாக அறி­வித்­துள்ள இலங்­கையின் நட்­சத்­திர கிரிக்கெட் வீர­ரான குமார் சங்­கக்­கார, தற்­போது டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து வில­கு­வதா? இல்­லையா? என்­பது குறித்து ஆலோ­சித்து வரு­கின்றார்.

டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறும் திட்­டத்தை மீளாய்வு செய்­யு­மாறு குமார் சங்­கக்­கா­ரவை தெரி­வா­ளர்கள் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து, அவர் டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­வது பிற்­போ­டப்­ப­டலாம் எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

 

இது குறித்து கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றதா? என தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜய­சூ­ரி­ய­விடம் கேட்­ட­போது,
'கடந்த வியா­ழக்­கி­ழமை தனது ஓய்வு குறித்து குமார் சங்­கக்­கார என்­னிடம் தெரி­வித்தார். நான் அது குறித்து மீளாய்வு செய்­யு­மாறு அறி­வுரை வழங்­கினேன்' என வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டிற்கு தெரி­வித்தார்.

இதே­வேளை, இலங்­கையின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கரி­சனை கொண்­டுள்ள கிரிக்கெட் விற்­பன்­னர்­களும் டெஸ்­டி­லி­ருந்து ஓய்வு பெற­வேண்டாம் என குமார் சங்­கக்­கா­ரவை கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற உலக இரு­ப­துக்கு இரு­பது கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை சம்­பி­ய­னான பின்னர் கருத்து வெளி­யிட்ட குமார் சங்­கக்­கார, 2015 உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

 

அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்டில் கூடுதல் அக்­கறை செலுத்­த­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
முன்னாள் அணித் தலை­வரும் சிரேஷ்ட வீர­ரு­மான மஹேல ஜய­வர்­த­னவைத் தொடர்ந்து குமார் சங்­கக்­கா­ரவும் டெஸ்ட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்றால் அது இலங்கை அணிக்கும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது கிரிக்கெட் விமர்­ச­கர்­களின் கருத்­தாகும்.

 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எஸ். எஸ். சி. மைதா­னத்தில் நடை­பெற்ற மஹேல ஜய­வர்­த­னவின் பிரியா­விடை டெஸ்ட் போட்­டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 59 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்த குமார் சங்­கக்­கார அரங்­கை­விட்டு வெளி­யே­றும்­போது தனது துடுப்பை சுழற்­றி­ய­வாறு ர­சி­கர்­க­ளுக்கு சைகை செய்தார். இது அப்­போது பெரும் சந்­தே­கத்தை தோற்­று­வித்திருந்தது. ஆனால் அதுதான் இலங்­கையில் தனது கடைசி டெஸ்ட் என்பதை அவர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.

128 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியுள்ள குமார் சங்கக்கார 37 சதங்கள், 51 அரைச் சதங்கள் அடங்கலாக 58.76 என்ற சிறந்த சராசரியுடன் மொத்தம் 11,988 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/23/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AF%81%C2%AD%E0%AE%AA%E0%AF%86%C2%AD%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%8B%C2%AD%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு சங்கா...பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.