Jump to content

உலக செஸ்: ஆனந்த் முதல் வெற்றி * மூன்றாவது சுற்றில் பதிலடி


Recommended Posts

உலக செஸ்: ஆனந்த் முதல் வெற்றி * மூன்றாவது சுற்றில் பதிலடி
நவம்பர் 11, 2014.

 

சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில், ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ கார்ல்சனை வீழ்த்தினார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012) உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார்.

முதல் இரு சுற்று முடிவில், ஆனந்த் 0–5–1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஆனந்த் பின்தங்கி இருந்தார். நேற்று மூன்றாவது சுற்று நடந்தது.

 

துவக்கமே நெருக்கடி:

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், முதல் சுற்றில் விளையாடியது போல, ராணிக்கு முன் இருக்கும் சிப்பாயை நகர்த்தி, ‘இந்தியன் டிபன்ஸ்’ முறையில் போட்டியை துவக்கினார். இந்த முறையில் கார்ல்சன் தடுமாறுவார் என, ஆனந்த் நினைத்தது சரியாக நடந்தது.

முதல் 3 நிமிடத்துக்குள் இருவரும் 10 நகர்த்தல்கள் செய்தனர். இதன் பின் இருவரும் நிதானம் காட்டினர். இருப்பினும், ஆனந்த் கை, இம்முறை ஓங்கி இருந்தது.

ஒவ்வொரு முறையும் அதிக நேரம் எடுத்துக் கொண்ட கார்ல்சனுக்கு, ஒரு கட்டத்தில் 7 நிமிடத்தில் 12 நகர்த்தல்கள் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

 

கார்ல்சன் தவறு:

31வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறு காரணமாக, தனது யானையை, ஆனந்த் சிப்பாயிடம் பறி கொடுத்தார். வேறு வழியில்லாத நிலையில், 34 வது நகர்த்தலின் போது, கார்ல்சன் சரண் அடைந்தார்.

இதன் மூலம் நான்கு ஆண்டுக்குப் பின் (2010), கார்ல்சனுக்கு எதிராக ஆனந்த் வெற்றி பெற்றார்.

 

3 மணி நேரம், 35 நிமிடம் நீடித்த மூன்றாவது சுற்று முடிவில், இரு வீரர்களும் 1.5–1.5 என்ற புள்ளிக்கணக்கில் சம நிலை வகிக்கின்றனர். இன்று நான்காவது சுற்றில் ஆனந்த், கறுப்பு காய்களுடன் விளையாட உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415722673/AnandwinoverCarlsenWorldChess.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
anath--carlsen-win-111114-200-india.jpg

உலக செஸ் போட்டியில் 3வது சுற்றில் இந்தியாவின் ஆனந்த் வெற்றி பெற்று கார்ல்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்- இந்தியாவின் முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். முதல் சுற்றில் டிரா செய்த ஆனந்த், 2வது சுற்றில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் 3வது சுற்று நேற்று நடந்தது. வெள்ளை நிறக் காய்களுடன் களம் கண்ட ஆனந்த், ராணிக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார்.

   

11வது நகர்தலில் இருவரும் ஒரு பிஷப்பை விட்டுக்கொடுத்தனர். 18 முதல் 20வது நகர்த்தலுக்குள் இருவரும் குதிரைகளை காவு வாங்கிக் கொண்டனர். 24வது நகர்த்தலுக்கு பிறகு ஆனந்தின் கை ஓங்கியது. ஆனந்தின் அதிவேக ஆட்டம் கார்ல்சனை திணறடித்தது என்றே சொல்லாம். ஆனால் ஆனந்த் தனது ராஜாவையும், யானையையும் கோட்டை கட்டாதது சிறிது கவலை அளிப்பதாக இருந்தது. 25வது நகர்த்தலில் ராஜாவையும், யானையையும் இடமாற்றியதன் மூலம் கோட்டை கட்டி நிம்மதி அளித்தார்.

28வது நகர்த்தலில் கார்ல்சன் தனது பிஷப்பை தவறாக ஆடியதால் மேலும் சிக்கலுக்குள்ளானார். இதைத் தொடர்ந்து 32வது நகர்தலில் ஒரு யானையை ஆனந்தின் பிஷப்புக்கு கட்டாயம் தர வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் கார்ல்சன் ஒரு நிமிடம் 44 விநாடிகளில் எட்டு நகர்த்தல்களை ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனந்துக்கு 29 நிமிடங்கள் எஞ்சியிருந்தன. 34வது நகர்த்தலின் போது ஆட்டத்தில் தனக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தாலும், நேரம் இல்லாததாலும் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதன் மூலம் 2வது சுற்றில் அடைந்த தோல்விக்கு ஆனந்த் பதிலடி கொடுத்து விட்டார். நீண்ட நேரம் நடக்கும் கிளாசிக்கல் முறையில் கார்ல்சனை ஆனந்த் ஜெயிப்பது 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். சென்னையில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன், ஆனந்திடம் ஒன்றில் கூட தோற்காமல் கோப்பையை வசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இருவரும் 1.5- 1.5 என்ற புள்ளி வீதம் சமநிலை வகிக்கிறார்கள். ஆனந்த் இன்றைய 4வது சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறார்.

http://seithy.com/breifNews.php?newsID=120567&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

உலக செஸ்: ஆனந்த் ‘டிரா’
நவம்பர் 12, 2014.

சோச்சி: ஆனந்த், கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ‘டிரா’ ஆனது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை ‘உலக சாம்பியன்’, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகின்றனர். 3வது சுற்று முடிவில்  இருவரும் சம புள்ளிகள்(1.5–1.5) பெற்றிருந்தனர்.

நேற்று நான்காவது சுற்று நடந்தது.

இம்முறை ஆனந்த், கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்த, ஆனந்த் ‘சிசிலியன்’ முறையில் நகர்த்தலை துவக்கினார்.

முதலில் கார்ல்சன் சற்று ஆதிக்கம் செலுத்துவது போலத் தெரிந்தாலும், 11வது நகர்த்தலில் ஆனந்த் சுதாரித்துக் கொண்டார்.

 

ஆனந்த் துணிச்சல்:

ஒருகட்டத்தில் கார்ல்சன் தனது ராணியை, இழக்க முன்வந்த போதும், ஆனந்த் எச்சரிக்கையுடன் நகர்த்தினார். 38வது நகர்த்தலில் முதன் முறையாக தனது ராணியை வைத்து, கார்ல்சனுக்கு ‘செக்’ வைத்தார்.

பதிலுக்கு கார்ல்சனும் ‘செக்’ வைக்க போட்டி ‘டிராவை’ நோக்கிச் சென்றது. இருவரும் எப்படியும் வென்று விடுவது என்று தீர்மானத்துடன் இருந்தனர்.

ஆனந்தை விட கார்ல்சனுக்கு ஒரு சிப்பாய் கூடுதலாக இருந்த நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக, மூன்று முறை தனது ராணியை நகர்த்தினார்.

இருவரும் சாதுர்யமாக ஆடியதால், சுமார் 4 மணி நேரம், 53 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில், போட்டி ‘டிரா’ ஆனது. நான்கு சுற்றுக்கள் முடிவில், இரு வீரர்களும் 2–2 என்ற புள்ளிக்கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

இன்று ஓய்வு நாள். நாளை ஆனந்த் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்குவார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415811804/worldchessanandcarlsendraw.html

Link to comment
Share on other sites

உலக செஸ்: டிராவானது 5-வது சுற்று
 

 

உலக செஸ் போட்டியில் ஆனந்த் - கார்ல்சன் இடையே நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, இருவரும் தலா 2.5 புள்ளிகள் பெற்று, சமநிலையில் உள்ளனர்.

ரஷ்யாவின் சூச்சியில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை நிறக் காய்களில் ஆடினார். இந்த ஆட்டத்தில் ஜெயித்து முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே இருவரும் கவனமாக ஆடினார்கள்.

3...b6 நகர்த்தியதன் மூலம் குயின்ஸ் இண்டியன்ஸ் தொடக்கத்தைத் தேர்ந்தெடுத்தார் கார்ல்சன். கார்ல்சனின் 16. Na5 நகர்த்தல் செஸ் வட்டாரத்தில் பாராட்டைப் பெற்றது. 20வது நகர்த்தலை நெருங்கும்போது ஆட்டம் டிரா ஆகிவிடுமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. கார்ல்சன், ஆனந்துக்கு எவ்வித அட்வாண்டேஜூம் கொடுக்கவில்லை. கார்ல்சனை விட 45 நிமிடங்கள் பின்தங்கியிருந்தார் ஆனந்த். ஆனால், ஆனந்தின் 20. Nd5, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சென்னைக்கும் சூச்சிக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்று எண்ணவைத்தார் ஆனந்த். ஆட்டம் டிரா ஆகும் அல்லது ஆனந்த் ஜெயிக்க வாய்ப்புண்டு என்ற அளவுக்கு சூழ்நிலை மாறியது. b2 சிப்பாயை கார்ல்சன் வீழ்த்தியபோது ஆனந்த்தின் வலையில் சிக்குகிறாரா என்கிற சந்தேகம் உருவானது.

 

கார்ல்சனும் டென்ஷனாக இருந்தார். 24வது நகர்த்தலில் இருவருடைய ராணிகளும் வெளியேறின. ஆனந்த் 26. Rxa7 ஆடியபிறகு கார்ல்சன் துல்லியமாக ஆடினால் டிரா ஆகலாம் என்கிற நிலைமை இருந்தபோது, அப்படியே ஆடினார் கார்ல்சன். ஆனந்தின் 27. Rb7 நகர்த்தல், அனைவரும் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தைக் குறைத்தது. 39வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. இன்று 6வது சுற்று ஆட்டம் நடக்கிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article6602191.ece

Link to comment
Share on other sites

உலக செஸ்: ஆனந்த் தோல்வி
நவம்பர் 15, 2014.

சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6வது சுற்றில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.     

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகின்றனர்.                             

ஐந்து சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். நேற்று ஆறாவது சுற்று நடந்தது. இதில் ஆனந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார்.                     

   

வெள்ளை நிற காய்களுடன் போட்டியை துவக்கிய கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை ‘கிங் பான்’ முறையில் (இ4) இரண்டு கட்டம் நகர்த்தினார். ஆனந்த், தனது பிஷப்புக்கு முன் இருந்த சிப்பாயை ‘சிசிலியன் டிபன்ஸ்’ முறையில் (சி5) இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை துவக்கினார். போட்டியின் 9வது நகர்த்தலில் கார்ல்சன், தனது ராணியை வைத்து, ஆனந்தின் ராணியை வீழ்த்தி ‘செக்’ வைத்தார். இதற்கு ஆனந்த், தனது ராஜாவை கொண்டு, கார்ல்சனின் ராணியை வீழ்த்தி உடனடியாக பதிலடி கொடுத்தாா.                 

 

வெள்ளை நிற காய்களுடன் விளையாடியது கார்ல்சனுக்கு சாதகமாக இருந்ததால், ஆனந்த் காய்களை நகர்த்த அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இருப்பினும் போட்டியின் 30–33வது நகர்த்தலில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த், தனது சிப்பாயை வைத்து கார்ல்சனின் பிஷப்பை வீழ்த்தினார். ஆட்டத்தின் 38வது நகர்த்தலில் கார்ல்சன், தனது யானையை கொண்டு ‘செக்’ வைத்தார். அப்போது கார்ல்சனை விட மூன்று சிப்பாய்கள் குறைவாக வைத்திருந்த ஆனந்த், தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.     

இதனையடுத்து ஆறு சுற்றுகளின் முடிவில் ஆனந்த் 2.5 – 3.5 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளார். இன்று ஓய்வு நாள். ஏழாவது சுற்று நாளை நடக்கிறது. இதில் கார்ல்சன், மீண்டும் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416069110/WorldChessChampionshipRussiaAnandCarlsonSixthRound.html

Link to comment
Share on other sites

உலக செஸ் போட்டி : பரபரப்பாக நடந்த 7-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது
 

 

ஆனந்த் கார்ல்சன் இடையே நடக்கும் உலக செஸ் போட்டியின் 7-வது சுற்று ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது.

ரஷ்யாவின் சூச்சியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 6-வது சுற்றின் முடிவில் கார்ல் சன் 3.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். ஆனந்த் 2.5 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலை யில் நேற்று 7-வது சுற்று ஆட்டம் நடந்தது. 6-வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடி கார்ல்சன் ஜெயித்ததால் மீண்டும் அவர் 7வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறபோது ஆனந்தை வெல்லும் வாய்ப்பு உருவாகுமா என்கிற கேள்வி எழுந்தது.

 

வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டால், எப்படியாவது இந்தச் சுற்றை டிரா செய்ய ஆனந்த் முயற்சி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த 5 சுற்றுகளில் ஆனந்த் 3 சுற்றுகளில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுவதால், இந்தச் சுற்றின் முடிவு இந்தப் போட்டியின் திருப்பமாக அமையும் என்று அனைவரும் கருதினார்கள்.

e4 - e5 என ஆரம்பமானது முதல் நகர்த்தல். ஆனந்த், பெர்லின் ஆட்டமுறையைத் தேர்ந் தெடுத்தார். ஆரம்பத்திலிருந்து இருவரும் வேகமாக ஆடினார்கள். 8வது நகர்த்தலில் இருவருடைய ராணிகளும் வெளியேறின. 20 நிமிடங்களில் 25 நகர்த்தல்களை ஆடினார்கள். 20வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆகக்கூடிய சூழல் இருந்தது. ஆனந்தின் 28...Ne5 நகர்த்தல், கார்ல்சனுக்கு சிறிய வாய்ப்பை அளித்தது. இதைக் கொண்டு அவர் நிச்சயம் வெற் றியை நெருங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

பலரும் கார்ல்சன் எப்படியும் வெற்றி பெற்றிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று 8வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article6610681.ece

Link to comment
Share on other sites

உலக செஸ் சாம்பியன்ஷிப் 8-வது சுற்று ஆட்டம் டிரா
 

 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.

5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் இடையே இப்போட்டி நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் சூச்சி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நேற்று 8-வது சுற்று நடைபெற்றது. இதில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடனும், கார்ல்சன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர். இதில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்று ஆட்டம் சமனில் முடிந்தது.

 

நேற்றைய ஆட்டம் 124 நகர்த்தல்கள் வரை சென்றது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டயில் இதுவே அதிகபட்ச நகர்த்தல்களை கொண்ட போட்டியாக அமைந்தது. இதற்கு முன்பு நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டி 122 நகர்த்தல்கள் வரை சென்று டிராவில் முடிந்தது.

 

மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இது வரை நடைபெற்றுள்ள 8 சுற்றுகளில் இரண்டில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். ஆனந்த ஒரு ஆட்டத்தில் வென்றார். மற்ற 5 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இப்போதைய நிலையில் கார்ல்சன் (4.5 புள்ளிகள்) ஆனந்தை (3.5 புள்ளிகள்) விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

இன்னும் 4 சுற்றுகள் நடை பெறவுள்ள நிலையில் அவை அனைத்தையும் டிரா செய்தால் கூட கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். சாம்பியன் பட்டத்தை மீண்டும் வெல்ல ஆனந்துக்கு வெற்றிகள் தேவைப்படுகின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-8%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article6614588.ece

Link to comment
Share on other sites

கார்ல்சன் முன்னிலை; என்ன செய்யப் போகிறார் மெட்ராஸ் டைகர்?
 

 

ரஷ்யாவின் சூச்சியில் நடைபெற்று வரும் ஆனந்த் – கார்ல்சன் இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 4.5 - 3.5 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறார். எஞ்சிய 4 சுற்றுகளில் குறைந்தது 2-ல் வெற்றி பெற்றால்தான் 6-வது முறையாக உலக சாம்பியன் ஆகமுடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த்.

கடந்த உலக சாம்பியன்ஷிப் போன்று இந்தமுறை கார்ல்சனால் முழு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சென்ற முறை எட்டாவது சுற்றின் முடிவில் கார்ல்சன் உலக சாம்பியன் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. 5 - 3 என முன்னிலை பெற்றிருந்தார். அடுத்த இரண்டு சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியன் ஆகிவிட்டார். சென்னையில் கார்ல்சன் 3 சுற்றுகளில் வெற்றி பெற்றார். ஆனந்தால் ஒருமுறை கூட கார்ல்சனை வீழ்த்த முடியவில்லை.

 

வாய்ப்பை தவறவிட்ட ஆனந்த்

ஆனந்தின் கதை முடிந்துவிட்டது என்று அனைவரும் எண்ணியிருந்தபோது கேண்டிடேட்ஸ் போட்டியை வென்று மீண்டும் கார்ல்சனுடன் ஆடத் தயாரானார் ஆனந்த். இப்போது சூச்சியில் நீயா நானா போட்டி கொஞ்சம் கடுமையாகவே உள்ளது. ஆரம்பம் முதல் ஆனந்த் ஈடுகொடுத்து ஆடிவருகிறார். 2-வது சுற்றில் கார்ல்சன் ஜெயித்தவுடன், அவ்வளவுதான் சென்னையில் பார்த்ததெல்லாம் மீண்டும் திரும்பப் போகிறது என்று பலரும் நினைக்க அடுத்தச் சுற்றிலேயே கார்ல்சனை தோற்கடித்து பதிலடி கொடுத்தார் ஆனந்த். ஆறாவது சுற்றில் மட்டும் ஆனந்த் ஜெயித்திருந்தால் போட்டியின் நிலைமையே மாறிப் போயிருக்கும். ஆனால், செய்யக்கூடாத இடத்தில் தவறு செய்து, தங்க வாய்ப்பை தவறவிட்டார் ஆனந்த்.

 

26-வது நகர்த்தலில் Kd2 என்று நகர்த்தி, நம்பமுடியாத ஒரு தவறைச் செய்தார் கார்ல்சன். இதைக் கவனித்த அத்தனை பேரும் அடுத்த நொடியே ஆனந்தின் வெற்றிக்காக பரவசமானார்கள். ஆனால் ஆனந்த், அவசரமாக a4 ஆடி (Ne5 நகர்த்துவதற்குப் பதிலாக) வெற்றி பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பத்தை இழந்தார். உலக சாம்பியன்ஷிப் போன்ற ஒரு போட்டியில் கார்ல்சனும் பெரிய தவறு செய்து நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் என்று நிரூபிக்கப்பட்ட தருணம் அது. “ஆனந்த் இன்று தூங்கமாட்டார்” என்று கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருணா ட்வீட் செய்தது ஆட்டத்திலேயே பிரதிபலித்தது.

 

திருப்புமுனை

தவறாக ஆடியும் இயல்பாக இருந்த கார்ல்சன், ஆனந்த்தும் பதிலுக்குத் தவறுதலாக ஆடி முடித்தபிறகுதான் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ஆனந்த்தால் இயல்பாக ஆடமுடியாமல் போனது. வருத்தம், சங்கடம் எல்லாம் அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. இறுதியில் அந்தச் சுற்றில் தோற்றதுதான் இந்தப் போட்டியின் பெரிய திருப்புமுனையாகிவிட்டது. நல்ல வாய்ப்பைத் தவறவிட்ட ஆனந்த், இன்னும் உள்ள நான்கு சுற்றுகளில் குறைந்தது இரண்டில் ஜெயித்தால்தான் 6-வது முறையாக உலக சாம்பியன் ஆகமுடியும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. ஒரே ஆறுதல், இரண்டு சுற்றுகளில் அவர் வெள்ளை நிறக் காய்களில் ஆடப்போகிறார்.

122 நகர்த்தல் வரை சென்ற 7-வது சுற்று ஆட்டம் மாரத்தானுக்குச் சமம். 8-வது ஆட்டத்தில், 9-வது நகர்த்தலில், Re8 ஆடினார் கார்ல்சன். இந்த புதுமையான நகர்த்தல், செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் பாராட்டைப் பெற்றது. இதற்கடுத்த நகர்த்தலுக்காக 12 நிமிடங்கள் யோசித்தார் ஆனந்த். ஆனால், 25-வது நகர்த்தல் வரை கார்ல்சன் மிகவும் வேகமாக ஆடினார். இது அவருடைய ‘செகண்ட்ஸ்’ எனப்படுகிற பயிற்சியாளர்களின் தயாரிப்பு, கூர்மையாக இருப்பதை எடுத்துக்காட்டியது.

 

நெருக்கடியில் ஆனந்த்

ஆனந்த் இதை உடனடியாக உணர்ந்து கொண்டதால் கார்ல்சனின் வழிக்குச் செல்லாமல், பெரும்பாலான நகர்த்தல்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார். 8-வது சுற்றில், ஆனந்த் வெள்ளை நிறக்காய்களில் ஆடியதால், இன்னும் ‘ரிஸ்க்’ எடுத்து ஆடியிருக்கவேண்டும். எப்படியும் கார்ல்சன் டிராவுக்காகத்தான் ஆடுகிறார் என்கிறபோது இன்னும் முயற்சி செய்திருந்தால் அது கார்ல்சனை யோசிக்கவைத்திருக்கும் என்று 8-வது சுற்றில் ஆனந்த் ஆடிய விதம் பற்றி விமர்சனம் எழுகிறது.

உலக செஸ் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கார்ல்சன் எல்லா ஆட்டங்களையும் டிரா செய்தாலே எளிதாக உலக சாம்பியன் ஆகிவிடுவார். ஆனால், ஆனந்தோ இரண்டு வெற்றிகளைப் பெற்றால் தான் மீண்டும் மகுடம் சூடமுடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறார். என்ன செய்யப் போகிறார் அவர்? மெட்ராஸ் டைகரின் பாய்ச்சலுக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்று 9-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6615727.ece

Link to comment
Share on other sites

உலக செஸ் போட்டி: 20-வது நகர்த்தலில் டிராவானது 9-வது சுற்று
 

 

ஆனந்த் கார்ல்சன் இடையே நேற்று நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 9-வது சுற்று ஆட்டம் 20 நகர்த்தல்களில் டிரா ஆனது. இதையடுத்து கார்ல்சன் 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

ரஷ்யாவின் சூச்சியில் உலக செஸ் போட்டி நடந்துவருகிறது. போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் ஆனந்த் குறைந்தது இரண்டு வெற்றிகள் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் கார்ல்சன் மீதமுள்ள சுற்றுகளை டிரா செய்தாலே உலக சாம்பியன் ஆகிவிடலாம்.

இந்த நிலையில் நேற்று நடந்த 9வது சுற்று ஆட்டம், e4 e5 என்கிற முதல் நகர்த்தலுடன் ஆரம்பமானது. கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களில் ஆடினார். பெர்லின் தொடக்கமுறையில் ஆட்டம் தொடங்கியது. இந்தச் சுற்றுக்கு ஆனந்த் நன்கு தயாராகி வந்தது அவருடைய வேகமான நகர்த்தல்களில் தெரிந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி ஆட்டம் சீக்கிரம் முடிந்தது.

 

கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களில் ஆடிய 7-வது சுற்று 122 நகர்த்தல்கள் வரை சென்றது. ஆனால் நேற்றைய ஆட்டம் 20 நகர்த்தல்களில், ஒரு மணி நேரத்தில் முடிந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. “என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனந்த் என்னைவிடவும் நன்கு தயாராகி வந்திருந்தார். சென்னையை விடவும் இங்கு கடினமான போட்டி நிலவுகிறது. முன்னிலை பெற்றிருப்பதால், இந்த டிராவை ஏற்றுக்கொள்கிறேன்.” என்று ஆட்டம் முடிந்தபிறகு கார்ல்சன் கூறினார். “வெள்ளை நிறக் காய்களில் நான் இன்னும் கடினமாக ஆடவேண்டும்” என்றார் ஆனந்த்.

 

மீதமுள்ள மூன்று சுற்றுகளில், இரண்டில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறார் ஆனந்த். கடந்த 6 சுற்றுகளில் ஆனந்த் வெற்றி எதுவும் பெறாததால் அதிக முனைப்புடன் ஆடி முழுப் புள்ளியை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 10-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-9%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/article6621484.ece

Link to comment
Share on other sites

உலக செஸ் ஆனந்த் பரிதாப டிரா
நவம்பர் 21, 2014.

 

சோச்சி: ஆனந்த், கார்ல்சன் மோதிய உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று ‘டிரா’வில் முடிந்தது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகின்றனர்.

ஒன்பது சுற்றுகளின் முடிவில், ஆனந்த் 4–5 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்தார். நேற்று பத்தாவது சுற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், தனது ராணிக்கு முன்பு இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி (டி4), ‘இந்தியன் டிபன்ஸ்’ முறையில் போட்டியை துவங்கினார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய கார்ல்சன், தனது குதிரையை (என்எப்6) நகர்த்தி போட்டியை துவக்கினார்.

 

போட்டியின் 15வது நகர்த்தலில் ஆனந்த், தனது குதிரையை வைத்து கார்ல்சனின் குதிரையை வெட்டினார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த கார்ல்சன், தனது பிஷப்பை வைத்து ஆனந்தின் குதிரையை காலி செய்தார். பின், 18வது நகர்த்தலில் இருவரும் தங்களது ராணியை பலி கொடுத்தனர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 31வது நகர்த்தலின் போது முதன்முறையாக ‘செக்’ வைத்தார். ஆனால் அதிலிருந்து கார்ல்சன் எளிதாக மீண்டார்.

மூன்று மணி நேரம், 15 நிமிடங்கள் வரை நீடித்த போட்டியின் 32வது நகர்த்தலில் இருவரும் ‘டிரா’ செய்ய ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 10 சுற்றுகளின் முடிவில், ஆனந்த் 4.5 – 5.5 என்ற புள்ளி கணக்கில் தொடர்ந்து பின்தங்கி உள்ளார்.

 

சிக்கலில் ஆனந்த்:

இன்று ஓய்வு நாள். இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே மீதமுள்ளன. இரண்டிலும் ஆனந்த் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம். கார்ல்சனை பொறுத்தவரை இரண்டையும் ‘டிரா’ செய்தால் போதுமானது.

நாளை நடக்கவுள்ள 11வது சுற்றில் ஆனந்த் வெற்றி பெற்றால் மட்டுமே, சாம்பியன் பட்டத்துக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இதில் ஆனந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாட இருப்பது சற்று பின்னடைவான விஷயம். ஒருவேளை 11வது சுற்று, ‘டிரா’வில் முடிந்தால், கடைசி சுற்றில் ஆனந்த் வெற்றி பெற வேண்டியது அவசியம். இதன்மூலம் ஆனந்த் சாம்பியன் பட்டம் வெல்ல ‘சூப்பர் டை–பிரேக்கர்’ வாய்ப்பை பெறலாம்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416588475/anandchessindia.html

Link to comment
Share on other sites

கட்டாய வெற்றியை நோக்கி ஆனந்த்: கார்ல்சனுடன் இன்று 11வது மோதல்
நவம்பர் 22, 2014.

 

சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று நடக்கும் 11வது சுற்றில், ஆனந்த் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார். இல்லையெனில், மீண்டும் மகுடம் இழக்க நேரிடும்.            

ரஷ்யாவின் சோச்சி நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன் மோதுகின்றனர்.                        

சொதப்பல் ஆனந்த்: முதல் சுற்று ‘டிரா’ ஆனது. அடுத்த இரு சுற்றில் கார்ல்சன், ஆனந்த் வெற்றி பெற்றனர். 4, 5வது சுற்றும் ‘டிரா’ ஆக, தலா 2.5 புள்ளியுடன் சம நிலையில் இருந்தனர். 6வது சுற்றில் கார்ல்சன் செய்த தவறை ஆனந்த், கவனிக்கத் தவறினார். இது, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. முடிவில், கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை (3.5–2.5) பெற்றார்.            

 

தொடர்ந்து ‘டிரா’: இதன் பின், தற்காப்பு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் கார்ல்சன். வெற்றிக்கு எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில், தொடர்ந்து 7 முதல் 10 வரை என, 4 சுற்றில், ‘டிரா’ செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆனந்தை தள்ளினார்.            

10வது சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஆனந்த், வழக்கம் போல கார்ல்சனை தப்பிக்க விட்டுவிட்டார். தற்போதைய நிலையில் 5.5–4.5 என, கார்ல்சன் முன்னிலையில் உள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் செல்ல இவருக்கு இன்னும் 1 புள்ளி தான் தேவை.

 

இன்று நடக்கும் 11வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கும் கார்ல்சன், வெற்றிக்கு முயற்சிக்கலாம். முடியாத பட்சத்தில் 11, 12வது சுற்றினை ‘டிரா’ செய்தாலே போதும். ஆனால், ஆனந்த்தைப் பொறுத்தவரையில் இன்று கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளார். இல்லையெனில், கடைசி சுற்றில் (12வது) ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினாலும், பெரும் நெருக்கடி தான் ஏற்படும். தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக, இளம் வீரர் கார்ல்சனிடம் கோப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416674435/WorldChessChampionshipSochiRussiaAnandCarlsen.html

 

Link to comment
Share on other sites

அதிசயம் நிகழ்த்துவாரா ஆனந்த்?
 

 

சொந்த மண்ணில் பறிகொடுத்த உலக செஸ் சாம்பியன் பட்டத்தை, நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனிடமிருந்து மீண்டும் தட்டிப்பறிக்க, இன்று நடக்கும் போட்டியில் வென்றே தீரவேண்டிய நெருக்கடியில் களம்காண்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

ரஷ்யாவில் உள்ள சூச்சி நகரில் 12 சுற்றுக்களைக் கொண்ட உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தும், கடந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆனந்தை வீழ்த்தி, முதல் முறையாக உலக சாம்பியன் ஆனவரும், ‘சூப்பர் டேலன்ட்’ என்றழைக்கப்படுபவருமான நார்வேயின் இளம் வீரர் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர்.

 

10 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த் 4.5 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறார். முதலில் 6.5 புள்ளிகளை யார் பெறுகிறாரோ அவரே சாம்பியன் என்பதால், கார்ல்சன் ஒரு வெற்றி பெற்றால் (வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி) கூட போதும். அதேநேரத்தில், அடுத்த இரு போட்டிகளையும் சமன் செய்தாலும் பட்டத்தை அவர் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

 

நெருக்கடியில் ஆனந்த்

இன்று நடக்கும் 11-வது சுற்றில் வெற்றி பெற்று, ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், இந்த ஊசலாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கார்ல்சன் தீவிரம் காட்டுவார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதேநேரத்தில், மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் உலக சாம்பியன் பட்டத்தினை கார்ல்சனிடமிருந்து மீண்டும் பறிக்க முடியும் என்ற மிக நெருக்கடியான நிலைக்கு மூத்தவீரர் ஆனந்த் தள்ளப்பட்டுள்ளார். மேக்னஸ் கார்ல்சன் போன்ற மிகத் துடிப்பான வீரரிடம், இத்தகைய நெருக்கடியான கட்டத்தில்,இரண்டு வெற்றிகள் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஆனால், “மீண்டு வருவேன்,” என்று நம்பிக்கையுடன் ஆனந்த் கூறியிருப்பது, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கிறது.

 

ஆனால், ஆனந்த் ஓர் அற்புதத்தினை நிகழ்த்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏன் அப்படி? சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், 4 சுற்றுகள் மீதமிருக்கையில், பின்தங்கிய நிலையிலிருந்த வீரர்கள் வெற்றி பெற்றதேயில்லை என்பது வரலாறு. அவற்றில் பெரும்பாலான ஆட்டங்களில், 10-வது சுற்றின் முடிவில் இரு வீரர்களும் சமநிலை பெற்றிருந்தபோதிலும் முதலில் முந்தியவரே பட்டத்தை வென்றுள்ளனர். அதிலும் தற்போதைய நிலையில் ஆனந்த் ஒரு புள்ளி பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அற்புதம் நிகழ்த்துவாரா?

இன்றைய போட்டியில் வெள்ளைக் காய்களை வைத்து ஆடுவது கார்ல்சனுக்கு கூடுதல் பலம். ஒவ்வொரு நகர்த்துதலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் (கடந்த போட்டியில் ஒரு நகர்த்தலுக்கு 33 நிமிடங்களை செலவிட்டார் கார்ல்சன்) செஸ் ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் களமிறங்குபவரே முதலில் காய் நகர்த்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அந்த வகையில், ஒரு வெற்றி பெற்றாலே சாம்பியன் பட்டத்தினை தக்கவைக்கலாம் என்ற நிலையில் வெள்ளைக் காய்களுடன் களமிறங்குவது கார்லசனுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. எனவே, அடுத்தடுத்த வெற்றி என்ற அற்புதத்தினை ஆனந்த் நிகழ்த்தினாலொழிய, நார்வே இளம்புயல் மீண்டும் சாம்பியனாவதை அவரால் தடுக்கமுடியாது.

 

அக்னி பரீட்சை

ஆனால் 2012-ல் பட்டத்தினை தக்கவைத்தபோது, போரிஸ் கெல்பாண்டுடன் சமநிலை பெற்ற பிறகு, டைபிரேக்கரில் அவரை ஆனந்த் வென்றார். அதனால் போட்டியை தொடருவதற்கான கடைசி வாய்ப்பினைத் தக்க வைத்துக் கொள்ள தனது அனுபவம் முழுவதையும் இன்றைய ஆட்டத்தில் ஆனந்த் காட்டுவார் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்ச மிருக்காது என்பது உறுதி.

 

ஒருவேளை, இந்த சுற்றில் வெற்றி பெற்று, செவ்வாய்க்கிழமை நடக்கும் இறுதிச்சுற்றில் டிரா செய்தால், அதன்பிறகு டைபிரேக்கரில் கார்ல்சனை வெல்ல ஆனந்துக்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு அவர் இன்றைய அக்னி பரீட்சையைக் கடக்கவேண்டும். அற்புதம் நிகழ்த்துவாரா ஆனந்த்?
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/article6625491.ece

 

 

Link to comment
Share on other sites

ஆனந்த் தோல்வி: கார்ல்சன் சாம்பியன்
நவம்பர் 22, 2014.

 

சோச்சி: உலக செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.  11வது சுற்றில் தோற்ற ஆனந்த் வாய்ப்பை இழந்தார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன் விளையாடினர்.  முக்கியமான 11வது சுற்றில் ஆனந்த் ஏமாற்றினார். 45வது நகர்த்தலில்  தோல்வியை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முதலில் 6.5 புள்ளிகள் பெற்ற கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆனந்த் 4.5 புள்ளி மட்டுமே பெற்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416674435/WorldChessChampionshipSochiRussiaAnandCarlsen.html

Link to comment
Share on other sites

ஆனந்த் வாய்ப்புகளைத் தவறவிட்டார்: கார்ல்சன்

 

கார்ல்சன் | படம்: ஏபி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை ஆனந்த் தவறவிட்டதால் தோல்வியடைய நேர்ந்தது என்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ள கார்ல்சன் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சூச்சியில் நடை பெற்ற உலக செஸ் போட்டியின் 11வது சுற்று ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்று மீண்டும் செஸ் உலக சாம்பியன் ஆனார். 6.5 - 4.5 என்ற புள்ளிக்கணக்கில் சூச்சியில் வெற்றிவாகை சூடிய 23 வயது கார்ல்சனுக்கு ரூ. 4.8 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. போட்டியில் தோற்ற 44 வயது ஆனந்துக்கு ரூ. 3.2 கோடி கிடைத்தது.

 

11வது சுற்று ஆட்டத்தின் 26வது நகர்த்தலின்போது ஆனந்துக்கு வெற்றி பெறுவதற்கான சந்தர்ப் பங்கள் உருவாகியும் தொடர்ந்து தவறுகள் செய்ததால் கார்ல்சனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். மீண்டும் உலக சாம்பியன் ஆனது பற்றி கார்ல்சன் கூறியதாவது: ஆனந்த் இந்தமுறை கடுமையான போட்டி மனப்பான்மையை உருவாக்கினார். சென்னையில் ஆடியதை விடவும் இங்கு நன்றாக ஆடினார். 8 மற்றும் 10-வது சுற்றுகளில் வெள்ளை நிறக் காய்களில் ஆனந்த் ஆடியபோது ஏதாவது செய்திருக்கவேண்டும். தன் வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டார்.

 

11வது சுற்றில், 18-23 நகர்த்தல்களின்போது நான் சரியாக ஆடவில்லை. அதன்பிறகு, மீண்டு வந்து ஆனந்துக்கு மேலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் செய்தேன். அவருடைய பிஷப்பை வெளியேற்றியபிறகு வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தேன் என்றார்.

கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக், ஆனந்த் ஆகியோருக்குப் பிறகு கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தோல்வி பற்றி ஆனந்த் கூறியதாவது: இந்தப் போட்டியில் கார்ல்சன் சிறப்பாக ஆடினார். 11வது சுற்றில் யானையை இழந்தது தவறான திட்டமிடல். அதற்காக தண்டிக்கப் பட்டுவிட்டேன். இந்தப் போட்டியில் தோற்றதால் ஓய்வு பெறமாட்டேன் என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6632606.ece

 

 

Link to comment
Share on other sites

மீண்டும் உலக சாம்பியன் ஆன கார்ல்சன்: செஸ் உலகம் என்ன சொல்கிறது?
 

 

உலக செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை மீண்டும் தோற்கடித்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறார் கார்ல்சன். அவருடைய அசத்தலான வெற்றி மற்றும் போட்டியின் தன்மை குறித்து பிரபல செஸ் கிராண்ட்மாஸ்டர்கள், “செஸ்24 மற்றும் ஸ்பீகில் ஆன்லைன்” இணையதளங்களுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு:

காஸ்பரோவ் (முன்னாள் உலக சாம்பியன், சூச்சி போட்டியில் கார்ல்சனுக்கு உதவியவர்)

 

உலக செஸ் போட்டியில் மீண்டும் அதே வீரருடன் விளையாடி பட்டத்தைத் தக்கவைப்பது எளிதல்ல. சூச்சியில் கார்ல்சன் தன் திறமைக்கு ஏற்றாற்போல ஆடவில்லை. ஆனால் ஆனந்த் இந்தமுறை நன்றாக ஆடினார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே கார்ல்சன் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினேன். ஏனெனில் கார்ல்சன் சிறந்த வீரர். கனவுகள் கொண்ட இளமையான கார்ல்சன் உலக சாம்பியன் ஆகியிருப்பது செஸ் விளையாட்டுக்கு நல்ல விளம்பரம் தரக்கூடியது.

 

ஹிகாரு நகமுரா (அமெரிக்கா)

கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வார் என்பது முதலிலேயே தெரிந்ததுதான். ஆனால் அவருடைய ஆட்டத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதேநேரத்தில் ஆனந்த் நன்றாக விளையாடினார். கார்ல்சன் 6-வது சுற்றில் தவறு செய்து வென்றது இயல்புக்கு மாறானது. பின்னடைவிலிருந்து மீண்டு வந்தார். அவர் கடந்த உலக செஸ் போட்டியில் ஆடியதுதான் ஊக்கமளிப்பதாக இருந்தது. அடுத்த தடவை கார்ல்சனுடன் வேறொரு போட்டியாளர் ஆடவேண்டும் என்றுதான் அனைவரும் எண்ணுகிறார்கள்.

 

லெவோன் ஆரோனியன் (ஆர்மேனியா)

ஆனந்த் இந்தமுறை நன்கு தயாராகி வந்தார். இருந்தாலும் அவருக்கு கார்ல்சனுடன் விளையாடுவது கடினமாக உள்ளது. கார்ல்சன் வேறொரு தலைமுறையைச் சேர்ந்தவர். செஸ் அடுத்தக் கட்டத்துக்கு நகர்கிறது. மைக்கேல் ஜோர்டன் இன்றைய வீரர்களுடன் விளையாடினால் அவரால் மிகச்சிறந்த வீரர் ஆக முடியாது. இந்த தலைமுறை வீரர்களுடன் ஆனந்த் மோசமாக ஆடி வருவதை வரலாறு வெளிப்படுத்துகிறது. வழக்கமாக உலக செஸ் போட்டிகளில் ஆட்டங்களின் தரம் நன்றாக இருக்காது. ஆனால் இந்தப் போட்டியில் தரம் இருந்தது.

 

செர்ஜி கர்ஜாகின் (ரஷ்யா)

ஆனந்தின் பிரச்னை, நல்ல நிலைமைக்கு வந்து தவறவிடுவது. போட்டியின் கடைசி இரு சுற்றுகளில் கார்ல்சன் அல்லாத வேறு ஒருவருடன் ஆடியிருந்தால் ஆனந்த் நிச்சயம் அரைப் புள்ளிக்குப் பதிலாக ஒன்றரைப் புள்ளிகள் எடுத்திருப்பார். 11-வது சுற்றில் கண்டது மோசமான தோல்வி. இது ஆனந்தின் செஸ் பலத்தைப் பிரதிபலிக்கவில்லை.

 

பென் ஃபின்கோல்ட் (அமெரிக்கா)

பலர் நான் சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனந்த் இந்தப் போட்டியை வெல்வார் என்று நினைத்தேன். அவர் நன்றாக விளையாடினாலும் நிறைய தவறுகள் செய்தார். 2-வது சுற்றில் 34…h5 மற்றும் 11வது சுற்றில் 27…Rb4 போன்ற தவறுகள் எல்லாம் எனக்குப் புரியவில்லை. ஆனந்த் எப்போதாவது ஒரு தவறு செய்து மொத்தத்தையும் பாழாக்கிவிடுகிறார். ஆனந்த்-கார்ல்சன் ஆடும் அடுத்த உலக செஸ் போட்டி இன்னும் நன்றாக இருக்கும்! ஆமாம். கார்ல்சனுக்கு மீண்டும் ஆனந்த் சவால் விடுக்கப்போகிறார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6638499.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.