Jump to content

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை


Recommended Posts

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை
வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014

மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய‌ கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.

மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரைக் கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. ஐந்தாவ‌து ஒருநாள் போட்டி, டெஸ்‌ட்‌ போட்டிக‌ள், ரி-20 போட்டி என்பன‌‌ கைவிட‌ப்ப‌ட்ட‌த‌னால் இந்திய‌க் கிரிக்கெட்டின் வ‌ருமான‌த்தில் அடிவிழுந்த‌து.

இழ‌ந்த‌ வ‌ருமானத்தை ஓர‌ள‌வேனும் மீட்ப‌த‌ற்காக‌ இல‌ங்கைக்கு அழைப்பு விடுத்த‌து இந்தியா. எதுவித‌ ம‌றுப்பும் தெரிவிக்காது உட‌ன‌டியாக‌ இல‌ங்கை ச‌ம்ம‌த‌ம் தெரிவித்த‌து. இதேவேளை மேற்கு இந்திய‌த்தீவுக‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டைப்பெறுவ‌த‌ற்காக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்போவ‌தாக‌ இந்தியா அறிவித்துள்ள‌து. கிரிக்கெட் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌தால் சுமார் 400 கோடி இந்திய ரூபா‌ய் இழ‌ப்பு என‌ இந்தியா அறிவித்துள்ள‌து.

இந்தியாவுக்கு எதிரான‌ கிரிக்கெட் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌த‌ற்கு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் கிரிக்கெட் ச‌பை அறிவித்துள்ள‌‌து. ச‌ம்ப‌ள‌ ஒப்ப‌ந்த‌ப் பிர‌ச்சினையை பேசித் தீர்த்திருக்க‌லாம் என்ற‌ மேற்கு இந்திய‌ கிரிக்கெட் ச‌பையின் கூற்றை வீர‌ர்க‌ள் நிராக‌ரித்துள்ள‌ன‌ர். வீர‌ர்க‌ள் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் இடையேயான‌ பிர‌ச்சினைதான் இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம். மேற்கு இந்திய‌ கிரிக்கெட் ச‌பை இத‌னை சுமுக‌மாக‌த் தீர்த்திருக்க‌லாம் என‌று இந்தியா க‌ருதுகிற‌து.

மேற்கு இந்திய‌தீவுக‌ளுட‌னான‌ கிரிக்கெட் தொட‌ர்க‌ளுக்கு ஐந்து வ‌ருட‌ங்க‌ள் த‌டைவிதிப்ப‌து, ஐ.பி.எல் தொட‌ர்க‌ளில் இருந்து மேற்கு இந்தியாதீவுக‌ள் வீர‌ர்க‌ளை நீக்குவ‌து போன்ற‌ அதிர‌டி முடிவுகளை‌ இந்திய‌ கிரிக்கெட் எடுக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌து. மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ ச‌மிக்ஞை‌யை இந்தியா வெளிப்ப‌டுத்தி உள்ள‌து. ஐ.பி.எல்லில் இருந்து வீர‌ர்க‌ளை வெளியேற்றுவ‌தில்லை என‌ இந்தியா தீர்ம‌னித்துள்ள‌‌து. மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கான‌ ர‌சிக‌ர் ப‌ட்டாள‌ம் இந்தியாவில் உள்ள‌து. அத‌னை இழ‌க்க‌ இந்திய‌ கிரிக்கெட் விரும்ப‌வில்லை. மேற்கு இந்திய‌ கிரிக்கெட் வீர‌ர்க‌ளை இந்தியா பாதுகாத்துள்ள‌து. ஆகையினால் இத‌ற்கு சுமுக‌மான‌ முடிவைக்காணும் சூழ்நிலைக்கு மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்திய‌ கிரிக்கெட்டுட‌ன் ப‌கைத்தால் வ‌ருமான‌த்தில் பாதிப்பு ஏற்ப‌டும் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ உண்மை. இந்தியா விரும்பிய‌துபோல‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேற்கு இந்தியாத்தீவுக‌ளுட‌ன் விளை‌யாடாம‌ல்விட்டால் அத‌ன் பொருளாதார‌ தாக்கத்தை ச‌மாளிப்ப‌து க‌டின‌ம். ஆகையினால் ஏதோ ஒரு வ‌ழியில் இந்தியாவைச் ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் முய‌ற்சி செய்யும்.
இந்திய‌ - பாகிஸ்தான் அர‌சிய‌ல் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ இந்திய‌ கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்குச் செல்வ‌தில்லை. ஐ.பி.எல்லில் விளையாட‌ பாகிஸ்தான் வீர‌ர்கள் அ‌னும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ ப‌கிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் வ‌ருமான‌ இழ‌ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. இதேவேளை ஐ.பி.எல்லில் ப‌யிற்சியாள‌ர்க‌ளாக‌வும் வ‌ர்ண‌னையாள‌ர்க‌ளாக‌வும் பாகிஸ்தானின் முன்னாள் வீர‌ர்க‌ள் க‌ட‌மையாற்றுகின்ற‌ன‌ர்.

ச‌ம்ப‌ள‌ நிலுவை கார‌ண‌மாக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளும் மிக‌வும் துன்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் எந்த‌நிலையிலும் இல‌ங்கைக்கு அவ‌மான‌ம் த‌ரும் வகையில் அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்து கொண்ட‌தில்லை. ச‌ம்ப‌ள‌ப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்கள்‌ நாடுதிரும்பிய‌தால் அந்த‌ இடத்தை நிர‌ப்புவ‌த‌ற்காக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், இந்தியாவுக்குச் சென்றுள்ள‌ன‌ர். திட்ட‌மிட‌ப்ப‌டாத‌ இந்த‌த்தொட‌ர் இல‌ங்கை வீர‌ர்க‌ள் மீது வ‌லிந்து திணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.

இந்தியாவுக்கு எதிரான‌ தொட‌ரை இல‌ங்கை வீர‌ர்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை. அனுப‌வ‌ம் மிக்க‌வ‌ரான‌ ச‌ங்க‌கார‌ த‌ன‌து ம‌ன‌தில் உள்ள‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ அறிவித்துள்ளார். இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு எதிராக‌ விளையாடுவ‌த‌ற்கு த‌யாராக‌ இல்லாத‌ நிலையிலேதான் இலங்கை‌ வீர‌ர்க‌ள் சென்றுள்ள‌ன‌ர். முத‌ல் மூன்று ஒருநாள் போட்டிக‌ளில் டோனி விளையாட‌மாட்டார். க‌டைசி இர‌ண்டு போட்டி ஒருநாள்  போட்டிக‌ளிலும் டோனி விளையாடுவார். இந்திய‌ அணி முழுப்ப‌ல‌த்துட‌ன் உள்ள‌து.

ம‌லிங்க‌, ர‌ங்க‌ண‌ ஹேர‌த், அஜ‌ந்த‌ மெண்டிஸ் ஆகியோர் அணியில் இல்லாததனால் ப‌ந்து வீச்சில் ச‌ற்று தள‌‌ர்வு உள்ள‌து. ச‌ங்க‌கார‌, க‌ள‌ம் இற‌ங்குவாரா என்ப‌து இன்ன‌மும் உறுதி செய்ய‌ப்ப‌ட‌வில்லை. எத்த‌கைய‌ இக்க‌ட்டான‌ நிலையிலும் மன உதியுட‌ன் விளையாடும் துணிவு இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் உள்ள‌து. ஆகையினால் ஒருநாள் தொட‌ரில் ப‌ர‌ப‌ர‌ப்புக்குப் ப‌ஞ்ச‌மிருக்காது. கிரிக்கெட்டின் வெற்றி என்ப‌த‌ற்கு அப்பால் உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் இட‌ம் பிடிக்க‌ வேண்டும் என்ற‌ அவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ள‌து என்ப‌த‌னால் அதிக‌ ப‌ட்ச‌ திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நெருக்க‌டி வீர‌ர்க‌ளுக்கு உள்ள‌து.

இங்கிலாந்து, மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌ தொட‌ர்களில் வெற்றி பெற்ற‌ ந‌ம்பிக்கையில் இந்தியா உள்ள‌து. பாகிஸ்தான், தென்.ஆபிரிக்கா ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌‌ தொட‌ர்க‌ளில் தோல்விய‌டைந்த‌ இல‌ங்கை, இங்கிலாந்துக்கு எதிரான‌‌ தொட‌ரில் வெற்றி பெற்றுள்ள‌து.

இந்தியா, பாகிஸ்தான், இல‌ங்கை ஆகிய‌ நாடுக‌ள் இணைந்து 1996ஆம் ஆண்டு உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெட் போட்டியை ந‌ட‌த்தின‌. அப்போது இல‌ங்கையில் குண்டு வெடிப்புக‌ள் அடிக்க‌டி ந‌டைபெறுவ‌த‌னால் பாதுகாப்பு இல்லை என‌ அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்திய‌த்தீவுக‌ளும் இல‌ங்கையில் விளையாட ம‌றுப்புத் தெரிவித்த‌ன‌. இல‌ங்கையில் எந்த‌வித‌மான‌ பாதுகாப்பு அச்சுறுத்த‌லும் இல்லை என்ப‌தை வெளிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ இந்திய‌ - பாகிஸ்தான் வீர‌ர்க‌ள் இணை‌ந்து இல‌ங்கையில் விளையாடினார்க‌ள்.

இந்திய‌ நாடாளும‌ன்ற‌ தேர்த‌ல் கால‌த்தில் ஐ.பி.எல்லுக்கு பாதுகாப்பு த‌ர‌முடியாது என‌ ம‌த்திய‌ அர‌சாங்க‌ம் அறிவித்த‌த‌னால், 2009ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் சில‌போட்டிக‌ள் தென். ஆபிரிக்காவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. அப்போது இந்திய, தென். ஆபிரிக்க‌ கிரிக்கெட் உறவுக‌ள் மிக‌ இறுக்க‌மாக‌ இருந்த‌ன‌. 2013ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்திய‌ கிரிக்கெட் அணி, தென்ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிக‌ளின் அட்ட‌வ‌ணை ஒருத‌லைப்பட்ச‌மாக‌‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் குற்ற‌ம் சாட்டிய‌து இந்தியா. அத‌ன் கார‌ண‌மாக‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ளை த‌னது நாட்டுக்கு அழைத்து இர‌ண்டு டெ‌ஸ்ட் போட்டிகளை நடத்தியது.

தென்ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200ஆவது போட்டியை நடத்தி திருப்தியடைந்தது. இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக் கைவிட்டதனால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/131458-2014-10-31-01-36-19.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.