Jump to content

முழங்கால் மூட்டு பிரதியீடு (Knee replacement (arthroplasty)) என்றால் என்ன..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முழங்கால் மூட்டு சார்ந்து காலப்போக்கில் ஏற்படும் பிரச்சனைகளில் முழங்கால் மூட்டு பிரதியீட்டு நிலை என்பது உச்ச விளைவு எனலாம்.. இது தொடர்பாக... கேள்வி - பதில் வடிவ குறிப்பொன்றை நோக்குவோம்.

 

முழங்கால் மூட்டு எங்குள்ளது.. அது எதனால் ஆக்கப்பட்டுள்ளது..??!

 

replacementknee.jpg

முழங்கால் மூட்டு காலின் தொடை எலும்புகளுக்கும் கணுக்கால் எலும்புகளுக்கும் இடையில் உள்ள பிரதான மூட்டு ஆகும். இந்த மூட்டுச் சார்ந்து காலை ஒரு வழியில் (பின்பிறமாக) மடிக்க முடிகிறது. இது மனிதனின் நிமிர்ந்த உடற்கோலத்துடன் கூடிய நடத்தலுக்கு.. உடை எடையை தாக்குவதற்கு முக்கியமான ஒன்றாகும்.

 

உதாரணமாக வீட்டின் கதவை திறந்து மூடுவதற்கு பாவிக்கும் பிணைச்சல் போல.. இங்க மூட்டு செயற்படுகிறது. இந்த முழங்கால் மூட்டை ஆக்குவதில்.... தொடை எலும்பு (Femur).. இரண்டு கணுக்கால் எலும்புகள் (Fibula and Tibia).. முழங்கால் சில்லு அல்லது மூடி (Patella) மற்றும் இவற்றிற்கு இடையே உள்ள உராய்வு நீக்கியான கசியிழையம் (cartilage) (எலும்புக்கு அடுத்தபடியான உறுதியான ஆனால் நெகிழ்வுத்தன்மையுள்ள கட்டமைப்பு) என்பன பிரதான பங்கு வகிக்கின்றன.

 

முழங்கால் மூட்டு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது..??!

 

முக்கியமாக மூட்டு சேத நோயால் (Osteoarthritis) அதிகம் ஏற்படுகிறது. இந்த நோய் எவரையும் தாக்கலாம். ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகம் காணப்படுகிறது. இதில் பல நிலைகள் உண்டு. குளிர்நாடுகளில் இது அநேகரில் மூட்டுக்களில் நோய்.. உழைவு சார்ந்து ஏற்படும். பின்னர் காணாமல் போய்விடும். சிலரில் அதுவே தீராத வலியோடு தொடர்ந்து இருந்துவிடும்.

 

இதைத் தவிர..

 

Rheumatoid arthritis (வீக்கங்களுடன் கூடிய நீண்ட கால மூட்டுளைவு.. மற்றும் நோ.. வலி உள்ளவர்களில் உள்ள நிலை)

 

மூட்டுகளை சுற்றி சோடியம் யூரேட் படிவுகள் தோன்றுதல். இதனை Gout என்பார்கள்.

 

மூட்டுக்கு அதிகம் வேலை கொடுக்கும்.. தொழில்கள்.. அதிகம் நடத்தல். விளையாட்டுக்கள்.. மற்றும் விபத்தில் சேதமடைதல் காரணமாகவும் குருதி உறையா நோய் என்ற பரம்பரை நோய் சார்ந்தும் இந்த நிலை தோன்றலாம்.

 

முழங்கால் மூட்டு தேய்மானத்தில் எலும்புகள் தேய்வடைகின்றன.. என்பது முற்றிலும் உண்மையா..??!

 

முழங்கால் மூட்டு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் எலும்புகள் சேதமாவதை.. தேய்வடைவதை விட.. அங்குள்ள கசியிழையங்கள்.. இணையங்கள்..பாதிப்படைவது தான் முக்கிய பிரச்சனை.

 

இந்தப் பிரச்சனையை கட்டாயம் சத்திர சிகிச்சை மூலம் தான் தீர்க்க  வேண்டுமா..?!

 

சிகிச்சை முறை என்பது பாதிப்பின் தன்மையை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பாதிப்பு சுமார் என்றால்.. சத்திரசிகிச்சை அற்ற பிசியோதெரபி (physiotherapy) உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் மூட்டு தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளும் வகைக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

 

ஆனால் பாதிப்பு கடுமையான நிலையில்.. முழங்கால் மூட்டு பிரதியீட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிடலாம்.

 

அதிலும் இரண்டு வகைகள் உண்டு. 1. முழு மூட்டு பிரதியீடு. 2. பகுதி மூட்டு பிரதியீடு. இதுவும் பாதிப்பின் தன்மையை இட்டே தீர்மானிக்கப்படுகிறது.

 

முழங்கால் மூட்டு மாற்றுச் சத்திர சிகிச்சை என்றால் என்ன எலும்புகளை வெட்டி மாற்றுவதா..??!

 

இல்லை. பாதிக்கப்பட்ட கசியிழையத்துக்கு மாற்றாக.. மற்றும் எலும்புகளின் முனைப் பகுதிகளில் திருத்தம் செய்து.. செயற்கை உலோக உராய்வு நீக்கிகளை பொருத்தி முழங்கால் மூட்டை வலி இன்றி இயங்கச் செய்தல் ஆகும். இந்தச் செய்முறையின் போது எலும்புகளின் முனைப்பகுதிகளில் சிறிது வெட்டி.. செயற்கை பாகங்களை வலுவாகப் பொருத்த.. தேவையான இடவசதிகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட நேரிடலாம்.

 

kneereplacement_clip_image004.jpg

 

 

 

knee-replacement_1.png

 

சத்திரசிகிச்சையின் பின் எவ்வளவு காலம் ஓய்வு தேவை..?!

 

பொதுவாக 6 வாரங்களில் சத்திரசிகிச்சைக்கு உள்ளானோர் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவார்கள். அதன் பின் அவர்களின் உடல் நிறையை பிரதியீட்டு மூட்டு தானே தாங்கும் வலிமையைப் பெறும். சப்போட் (ஆதாரம்) இன்றி நடக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

 

இந்த சத்திர சிகிச்சையின் பின் மீண்டும் பிரச்சனைகள் வருமா..??!

 

சத்திர சிகிச்சையின் பின் வேறு சில பிரச்சனைகள் வரவாய்ப்பிருந்தாலும்.. தொடர் பிசியோதெரபி மற்றும் கண்காணிப்புக்கள் மூலம் அது தீர்க்கப்படும். எனவே அதை இட்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

 

இந்த சிகிச்சை ஆயுள் காலம் வரை பயனளிக்குமா..??!

 

பொதுவாக முழங்கால் மூட்டு பிரதியீட்டு சத்திர சிகிச்சையின் பின் 10 - 15 வருடங்கள் பிரச்சனை இன்றி வாழலாம். அதன் பின் மீண்டும் பிரச்சனை தோன்றினால்.. மீண்டும் அதே போன்ற ஒரு சத்திரசிகிச்சைக்கு உள்ளாக நேரிடலாம். அவ்வளவும் தான்.

 

சத்திர சிகிச்சைக்கான மாதிரி காணொளி விளக்கம்..

 

 

உசாத்துணை:

 

http://www.nhs.uk/conditions/Knee-replacement/Pages/Kneereplacementexplained.aspx

 

http://www.nhs.uk/conditions/Knee-replacement/Pages/Kneereplacementexplained.aspx

 

http://www.nhs.uk/conditions/Gout/Pages/Introduction.aspx

 

http://www.webmd.com/osteoarthritis/guide/knee-replacement-surgery

 

யாழுக்காக.. நெடுக்ஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு நெடுக்ஸ்.
ஊரில் உள்ளவர்களை விட, இங்குள்ள வெள்ளையர்களுக்கு இந்த முழங்கால் பிரச்சினை அதிகம் உள்ளதை அவதானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு நெடுக்ஸ்.

ஊரில் உள்ளவர்களை விட, இங்குள்ள வெள்ளையர்களுக்கு இந்த முழங்கால் பிரச்சினை அதிகம் உள்ளதை அவதானித்துள்ளேன்.

 

 

நல்லதொரு அவதானம் தமிழ்சிறீ அண்ணா.

 

 

இங்கு எம்மவர் மத்தியிலும் அதிகம். காரணம்.. விற்றமின் D மற்றும் தைரொக்சின் பிரச்சனைகள். சூரிய ஒளி அதிகம் கிடைக்காத மேற்கு நாடுகளில்.. தோலில் இருந்தான விற்றமின் D உற்பத்தி போதிய அளவுக்கு இல்லாத நிலையில் சரியான மாற்றீடுகளை உணவு மூலம் உள்ளெடுப்பது அவசியம். விற்றமின் D என்புகளின் வளர்ச்சி வலிமை.. மற்றும் தைரொக்சின் உற்பத்தி என்பனவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைரொக்சின்.. கல்சியம் சார்ந்த உடலிரசாயனச் செயன்முறைக்கு மிக அவசியம்.

 

இந்த விற்றமின் D குறைபாடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலை தோன்ற முக்கிய காரணமாக உள்ள  Osteoarthritis க்கு முக்கிய காரணி ஆகும்.

 

வெள்ளைகளில் இந்த நிலைக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களின் தோல் நிறமணிகள் போதிய விற்றமின் D ஐ உருவாக்க முடியாமையும் அதில் கூடுதல் காரணி ஆகிறது.

 

எங்களின் பிரவுன் அல்ல கறுத்த தோல்.. மனிதன் வெற்றிகரமாக பூமியில் வாழ முக்கிய ஒன்றாகும். ஆனால் என்னவோ கண்ணுக்கு கவர்ச்சி இல்லை என்ற "நாகரிக" நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் அது பூமியில் உயிர் வாழ்தலுக்குரிய நாகரிகமாக தெரியவில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஆஸ்தான  உடலியல் கூற்று வித்துவான் நெடுக்ஸ் க்கு என் நன்றிகள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.