Jump to content

டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் 50 பேர் படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பியோங்யாங்: தென் கொரிய நாட்டு டி.வி. சீரியல்களைப்  பார்த்ததற்காக, வட கொரியாவில் பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் தென் கொரிய நாட்டு படங்கள், வீடியோ பதிவுகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால்  அங்கு தென் கொரிய நாட்டு ரேடியோ போன்ற சாதனங்கள் கறுப்பு சந்தை வழியாகவே  விற்கப்பட்டு வருகின்றன.

இந்த திருட்டுச்  சந்தையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்டாலும், தென்கொரியாவின் திரைப்படங்கள் மக்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகின்றன.   

இந்நிலையில் 2014 ஆம் வருடத்தில், தென் கொரிய டிவி  தொடர்களை இணையதளம்  மூலம் விதிமுறைகளை மீறி பார்த்ததற்காக  பல்வேறு அரசியல் கட்சிகளைச்  சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் நிறுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் காணாமல் போன சிலர் குறித்து தகவல் தெரியாத நிலையில், அவர்கள் இந்த படுகொலையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால்  வட கொரிய மக்கள்  கடும்  அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு  சிலர் அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=34138

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.