Jump to content

வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் சுமார் நூறு மில்லியன் வரையில் மோசடி


Recommended Posts

Flash%20news1_CI.jpg

 வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியினில் சுமார் நூறு மில்லியன் வரையில் சுருட்டப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோரே அம்மோசடியில் பிரதான பங்கு வகித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் உலக வங்கியினால் யுத்த பாதிப்பிற்குள்ளான எமது மக்களிற்கென உட்கட்டுமான வேலைகளை மேற்கொள்ளவென 2010ம் ஆண்டு நெல்சிப் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளுராட்சி மன்ற வீதிகள் அமைப்பு உள்ளிட்டவற்றை முன்னெடுக்க ஒதுக்கப்பட்ட நிதியினில் 120 வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் என்பவரை பிரதம செயலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். இந்நபர் தனது தந்தையாரான சச்சிதானந்தன் மற்றும் நண்பரான தீபரூபன் ஆகியோரினை பங்காளர்களாக்கி ஸ்கலாட் என்ஜிரியங் எனும் போலி ஒப்பந்த நிறுவனத்தை தோற்றுவித்து அதற்கென வேலைகளை வழங்கி பெரும் மோசடிகளை செய்துள்ளார். அத்துடன் அவருக்கு நெருக்கமான ஜந்து ஒப்பந்த நிறுவனங்களிற்கே வேலைகளை ஒதுக்கி வழங்கியுமுள்ளார்.

மிகக்குறைந்த காலப்பகுதியினுள் சுமார் 40 மில்லியன் வரை சொத்து சேர்த்துள்ள அவரே இம்மோசடிகளை நடத்திய மையப்புள்ளி என கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளை இம்மோசடி மூலம் கிட்டிய பணத்தில்  உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவின் வீடு பல மில்லியனில் மீள புனரமைக்கப்படுவதாகவும், யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் என்பவரிற்கு அரியாலையினில் புதிய பங்களா ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் என்பவரை பிரதம செயலாளரே ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார்.ஊழல் மோசடிகள் அம்பலமானதையடுத்து அவரை ஆளுநர் சந்திரசிறி பதவி நீக்கஞ்செய்துள்ளார். பிரதம செயலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஒருவரை ஆளுநர் பதவி நீக்கஞ்செய்வது என்ன நடைமுறையென்பது தெரியவில்லை.

எனினும் தனி ஒரு நபரால் இம்மோசடி நடந்திருக்காதென்பது தெளிவானது.கூட்டு மோசடிகளினில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் இடைநிறுத்தப்பட்டு உள்ளார். வடமாகாண ஆளுநர் மீது வேறு வேறான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதும் ஊழலிற்கு எதிரானவரென கூறப்படுகின்றது.இந்நிலையினில் மோசடி நபர்களினை காப்பாற்ற ஆளுநர் முற்படுவாரானால் அவரும் இம்மோசடிகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தை ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 வெறும் பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் நூறு மில்லியன் மோசடியென்பது சாதாரணமானதல்ல.அண்மைக் காலங்களில் மக்களிற்கென ஒதுக்கப்பட்ட பணத்தினில் வடக்கினில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மோசடி இதுவாகும்.

பக்கச்சார்பற்ற விசாரணைகள் காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அது வரை விசாரணைகளினை குழப்பாத வகையில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோர் இடைநிறுத்தப்பட வேண்டும்.

இதே வேளை உள்ளுராட்சி அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரும் பக்கசார்பின்றி விசாரணைகளை மேற் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தனக்கு கிட்டிய ஆவணங்கள் பிரகாரம் சுருட்டப்பட்டது நூறு மில்லியன் எனக் கூறப்படுகின்ற போதும் அத்தொகை இதைவிட அதிகமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113070/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.