Jump to content

சுவிஸ் பேர்ன் மாநிலத்தின் தூண் பிரதேச சபைக்கு கவுன்சிலர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Dharsika-krisnanantham-301014-200-seithy

சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;.

   

'எஸ்பி' கட்சியானது பெற்றோர் வேலைக்குச் செல்லும் போது பிள்ளைகளை இலவசமாக பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் சுமார் ஏழு எட்டு வயதிலிருந்தே தனது தாய் தந்தைக்காக இணைந்து சுவிஸ் காரியாலயங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்ததுடன் பின்னர் உறவினர்களுடன் இணைந்து சுவிஸ் காரியாலயங்களிலும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். அதற்குப் பின்னர் அரச காரியாலயங்களிலும் அவர் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இவர்; பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம் கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டுள்ளார்.

திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் கணக்கியலாளராக பயின்று பட்டம்பெற்று மாநிலக்காவல்துறை அதாவது கன்டோன்பொலீஸ் மொழி பெயர்ப்பாளராகவும் சிவில் மற்றும் உயர்நீதிமன்ற மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கின்றார். அதேநேரத்தில் சுவிஸ் பிள்ளைகளுக்கு இந்துமதம் தொடர்பான விளக்கங்களையும் இவர் வழங்கிவருபவர். இதனால் இவரது பணிகள் தொடர்பாக பல சுவிஸ் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளால் விபரிக்கப்பட்டு பாராட்டினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் தூண் மாநகரசபையின் வெளிநாட்டவர்களுக்கான பொறுப்பாளர் இவரது செயல்களைப் பாராட்டி 'பொதுக் காரியாலயங்களில் ஈடுபடுவதற்கு அரசியல் ரீதியாக செயற்பட வேண்டுமென்று' இவருக்கு வழங்கிய ஊக்கத்தினைத் தொடர்ந்து தான் எஸ்பி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக திருமதி தர்ஷிகா fpU;zhde;jd; அவர்கள் தெரிவித்துள்ளார். மற்றும் 'இனிமேலாவது நான் நீ என்று பிரிந்து நிற்காமல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டுமெனவும் நான் நீ என்று சிந்தித்தபடியினால் தான் தமிழ் மக்களாகிய நாம் தற்போது இத்தகைய நிலையில் நிற்கின்றோம்' என்றும் கூறியதுடன் 'இனியாவது புலம்பெயர் நாடுகளில் நாம் என்று சிந்திப்போம்' எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எமக்கு ஒரு புலம்பெயர் அரசியல் தேவைப்படுகிறது. நாம் எமது நாட்டில் சென்று வாழ முடியாது. ஆனால் நாம் ஈழநாட்டின் தமிழர்கள் என்ற பெயருக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் இணைவிற்கும் தன்மண் வாசனையைப் புலம் பெயர்ந்த நாட்டில் சுவைப்பதற்கும் தான் யார் எனச்சிந்திப்பதற்கும் இந்த அரசியல் தேவை. எனக் குறிப்பிடுகிறார் திருமதி தர்ஷிகா கிருஷ்ணானந்தன் அவர்கள். மேற்படி வழித்தோன்றலில் இருந்து கரம்விரிக்கும் திருமதி தர்ஷிகா கிருஷ்ணானந்தன் அவர்களை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் பெருமகிழ்வுடன் ஆதரிப்பதுடன் புலம்பெயர்நாட்டில் தமிழ்மகளின் வெற்றிக்கு ஒத்துழைப்புத்தந்து வரலாற்றில் தங்கள் வெற்றி பதிவுற எம்தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

 

எம் தமிழ் வாழ்வதற்குக் கரம் கொடுப்போம்

 

-உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்-

 

http://www.seithy.com/breifNews.php?newsID=119702&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.