Jump to content

சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் சேர்ந்து நடத்திய ... கைது நாடகம் -அம்பலம்
OCT 30, 2014
1414640764_F_newstig8108.jpg
நேற்று இரவு முதல் இணையதளங்களில் சுபாஷ்கரனும் ராஜபக்சேவும் நடத்திய ,சுபாஷ்கரன் கைது என்னும் கபட நாடகத்தின் அரங்கேற்றத்தை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
 
நாடகத்தின் காட்சிகள் :
 
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமியும் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. 
 
கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா வந்த  பின்னர், அதனைக் கொண்டாட மாலைத்தீவுகள் சென்று தங்கி கொண்டாடிவிட்டு , பின்னர் மாலைத்தீவில் இருந்து லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்களாம். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
 
அப்போது , சுபாஷ்கரன் அல்லிராஜா வின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனிடம் நாங்கள் புலனாய்வுப் பிரிவினர் உங்களிடம்  விசாரணை நடத்தவேண்டும் , விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறுகூறி அழைத்துச் சென்றுள்ளதாகவும்,. இச்சம்பவம் பற்றி  சக பயணிகளில் ஒருவர் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாகவும் இணையதளத்தில் செய்திகள் வந்துள்ளன.
 
இதில், மேலும் நகைப்பிற்குரிய விசயம் என்னவெனில், இருவரும் கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பிரிட்டனின் உயர்அதிகாரிகளின் அழுத்தமே காரணம் எனவும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
நாடக அரங்கேற்றத்திற்கு காரணம்,
 
இந்த நாடக அரங்கேற்றத்திற்கு காரணம், லைக்காவின்  "கத்தி" படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்குள் அவர்கள் பட்ட கஷ்டமும், கோடி கோடியாக பணத்தை கொட்டியும், முழுமையாக லைகா என்ற பெயரில்? படத்தை வெளியிட முடியவில்லை.
 
இதன் மூலம், தமிழ் அமைப்புகள் மற்றும் மக்களின் தீவிரத்தை உணர்ந்துள்ளார்கள். இனி, தமிழர்களின் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே சினிமா துறையில் காலூன்றி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றமுடியும் என்பதை நன்றாகவே உணர்ந்த சுபாஷ்கரணும் ராஜபக்சேவும் திட்டமிட்டு கொழும்பில் வைத்து இந்த கைது நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
 
இந்த கைது நாடகத்தின்  மூலம் தமிழர்கள், சுபாஷ்கரனும் ராஜபக்சேவுக்கு எதிரிதான் என்று நம்புவார்கள் என நினைத்து செயல்படுகிறார்கள்.
 
இதற்கு முக்கிய காரணமே சைமன் போன்ற சில முக்கிய ராஜபக்சேவின் கைக்கூலிகள் தான். ஏன் என்றால் ஈழம் ஈழம் எனக்கூவி விட்டு, தற்பொழுது லைகாவிடம் பெட்டிகளை வாங்கிவிட்டு பதுங்கிவிட்டனர். வெளியில் வந்தால் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே சுபாஷ்கரனிடம் நீங்கள் ராஜபக்சேவின் விரோதியாக காட்டினால் மட்டுமே தமிழகத்தில் காலூன்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
 
தற்பொழுது அதுபோன்ற நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளனர். ஆனால் பாவம் அவர்கள் நாடகம் நம்பும் படியாக இல்லையே. இங்குள்ள கைகூலிகளை உடன் அழைத்து சென்றிருந்தால் துல்லியாமாக நாடகத்தை நடத்தி அனைவரையும் நம்பவைத்திருப்பார்கள்.http://www.ta.newstig.com/single-standard.php?pid=8108
Link to comment
Share on other sites

நாதாரித்தனம் பண்ணிலாலும் நாசூக்காசெய்யணும்ப்பா ....இப்போ வடை போச்சு?

Link to comment
Share on other sites

சைமன் போன்ற சில முக்கிய ராஜபக்சேவின் கைக்கூலிகள் தான்.

 

 

 

என்ன இப்படி சொல்லிட்டாங்க?? 

இத யாரு எழுதினா? இந்த வலைத்தளம் நம்பகமானதா ??  :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.