Jump to content

சீர்குலையும் சிரியா - 5


Recommended Posts

சீர்குலையும் சிரியா - 1
 
வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்?
 
அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சிரியா. சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமான பதிவு பெற்ற நகரம். உலகில் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் தொன்மையான சில நகரங்களில் ஒன்று. இங்கு அதிகம் வசிப்பது சன்னி அரபு இனத்தவர்.
 
கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். உக்கிரமான யுத்தம். எந்த வெளிநாட்டுடனும் அல்ல (குறைந்தபட்சம் வெளிப்படையாக). உள்ளுக்குள்ளேயே நடந்து உயிர்களைக் காவு வாங்கும் புரட்சி, அடக்குமுறை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டு கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம். நோய்வாய்ப்பட்டவர்களின் நிலை இன்னும் படுமோசம். ஓடவும் முடியாது, உள்நாட்டில் மருத்துவ வசதிகளும் கிடையாது.
 
தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு. குண்டு வீசுவது அமெரிக்கா. அவர்கள் இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள். ஆனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காதா என்ன?
 
சிரியாவின் (துருக்கிக்கு அருகில் உள்ள) எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து ஐ.எஸ்.தாக்குதல் நடத்த, அமெரிக்க அணியின் வான்வெளித் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. 21 தாக்குதல்கள், இருபுறமும் நடந்துள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில்அவர்கள் மேலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள்.
 
‘‘எங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்த முடியவில்லை. எனவேதான் வான்வழியாகத் தாக்குகிறோம்’’ என்று வியாக்கியானம் கூறுகிறது வெள்ளை மாளிகை.
 
இப்படி உள்நாட்டு அவதிகளால் தடுமாறும் மக்களால் ‘‘அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை. என்ன காரணம்? ஒருவேளை பலவீனமான அரசாங்கம் கைகட்டிக் கொண்டிருக்கிறதா? இல்லை தன் பங்குக்கு அதுவும் மக்களை வாட்டி வதைக்கிறது!
 
கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.
 
என்னதான் நடக்கிறது சிரியாவில்? ஒரு பக்கம் சிரியா அரசு மறுபக்கம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு. இரண்டும் கடுமையாக மோதிக் கொள்ள, இப்போதைக்கு சிரியா நாட்டில் சுமார் 40 சதவீதம் பேர்தான் அரசின் கட்டுப்பாட்டில்!
 
ஐ.நா. சபையின் உண்மை அறியும் குழு ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள் மீதும் தாக்குதல். ‘‘சந்தேகமில்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.
 
‘‘ஆமாம். துருக்கி நாட்டு ஜெட் விமானம் ஒன்றை நாங்கள்தான் சுட்டோம். இப்போது அதற்கு என்னவாம்?’’ என்று தன் குற்றத்தைக் கூசாமல் ஒத்துக்கொண்டிருக்கிறது சிரியா அரசு. (இதைத் தொடர்ந்து துருக்கி தன் ஆதரவை சிரியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டது வேறுவிஷயம்).
 
7_2176588f.jpg
சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி
 
ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விசிட். அவ்வளவுதான். தன் தூதர் பதவியியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தை இடது சுண்டு விரலால் தீண்டக் கூட சிரியா தயாராக வில்லை என்பதால் எழுந்த கோபம்.
 
சிரியாவின் வடக்குப் பகுதியில் தலையை நுழைத்தது ‘ஐ.எஸ். ஒட்டகம்’ இன்று சிரியாவின் பெரும்பகுதி அதன் பிடியில். சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புரிந்த அநியாயங்களையும் தாண்டிச் செயல்படுகிறது தீவிர(வாத) அமைப்பான ஐ.எஸ்.கள்ள உறவில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெண்மீது கற்களை எறிந்து கொன்றார்கள். சமீபத்திலும் இதே காரணத்துக்காக மற்றொரு பெண் கொல்லப்பட்டாள். இந்த முறை அவளது தந்தையே கற்களை எரியும்படி ஆனது. ‘’நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்’’ என்று கூறியபடியே அந்தப் பெண் கல்லடிக் கொலைகளுக்குத் தயாரானாள்.
 
சிறுவன் ஒருவன் ரம்ஜான் நோன்பைக் கடைப்பிடிக்கவில்லை. பொது இடத்தில் சில நாட்கள் அவன் கட்டி வைக்கப்பட்டு காட்சிப் பொருளானான். நோ உணவு, நோ நிழல். ஐ.எஸ். ஏன் சிரியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அது ஒரு தனிக்கதை.
 
சிரியாவின் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ள ஐ.எஸ். அமைப்பு குறித்து அறிவது அவசியம். அந்த அமைப்பு குறித்து அறிந்து கொள்ள முஸ்லிம்களின் இரு பிரிவுகள் குறித்துப் புரிந்து கொள்வது அவசியம். அதை நாளைக்குப் பார்ப்போம்.
 
Link to comment
Share on other sites

சீர்குலையும் சிரியா - 2

 

syria_2178355h.jpg

சிரியாவில் அணிவகுப்பு நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள். கோப்பு படம் - ஏபி

 

முகம்மது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு (கி.பி. 632ல்) இரண்டாகப் பிளவுபட்டது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில் தான் பிளவு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகம் மது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெ டுத்தார்கள். இவர்கள் தங்களை ‘சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

 
இரண்டாவது பிரிவினர் தங்களை ‘ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர்களைப் பொருத் தவரை முகம்மது நபியின் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.
 
இப்போதைய உலகின் முஸ்லிம் களில் சுமார் 87 சதவிகித்ம் பேர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். பெரும்பாலான அரபு நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளிலும் அவர்கள்தான் மெஜாரிடி. இரான், இராக், பஹரின் போன்ற நாடுகளில் ஷியாக்கள் அதிக எண் ணிக்கையில் இருக்கிறார்கள்.
 
சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இந்தோனேஷியா. ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இரான். உலகிலேயே சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடு எது தெரியுமா? உலகிலேயே ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடுதான் அதுவும்! அது நம் அ(ச)ண்டை நாடான பாகிஸ்தான்.
 
கருத்துவேற்றுமை என்ற கட்டத்தையெல்லாம் எப்போதோ கடந்து விட்டார்கள் இந்த இரண்டு பிரிவினரும். பிரிவு, பகைமை, விரோதம் என்பதையெல்லாம் தாண்டி மற்றொரு இனத்தை அழித்து விடுவதுதான் லட்சியம் என்ற எண்ணப்போக்கு வளர்ந்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் ஐ.எஸ். இயக்கம். I.S.I.L., I.S.I.S., I.S., இந்த மூன்று அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
 
இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவன்ட் என்பதன் சுருக்கம்தான் I.S.I.L.. லெவன்ட் என்ற சொல் அந்தக் காலத்தில் சிரியா, ஜோர்டான், இஸ்ரேல் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியே குறிக்கப்பட்டது என்றாலும் நாளடைவில் லெவன்ட் என்பது சிரியா மட்டுமே என்று ஆகிவிட்டது. இந்தப் பெயர் மாற்றத்தால் தன் பெயரையும் I.S.I.S. என்று மாற்றிக் கொண்டது அந்த இயக்கம். இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா.
 
நாளடைவில் இந்த இயக்கத் தினர் மேலும் தீவிரமாக யோசித்தார் கள். ‘’எதற்காக இஸ்லாமிய தேசமாக இராக்கையும், சிரியாவையும் மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும்? இவற்றைத் தாண்டியும் விரிவுபடுத்திக் கொள்ள லாமே’’. இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் I.S. என்று தங்கள் பெயரை சுருக்கிக் கொள்ள வைத்திருக்கிறது.
 
தங்கள் தலைவராக (அதாவது காலிஃபாக) இந்த இயக்கம் நியமித்திருப்பது அபுபக்கர் அல் பஹாதி என்பவரை. இவர் முன்பு இந்த இயக்கத்தின் தளபதியாக (அதாவது எமிர் என்ற பதவி) விளங்கியவர். இராக்கில் பிறந்து பாக்தாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இஸ்லாமிய மார்க்கம் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பெற்றவர். நாளடைவில் எம்.எஸ்.சி. என்ற அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் முழுப் பெயர் ‘முஜாஹெதீன் ஷுரா கவுன்சில்’.
 
இந்த அமைப்பின் பெயர் பலருக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் ஆறு சன்னி இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பான இவற்றில் ஒன்றின் பெயர் உலகம் முழுவதுமே பரவலாக அறியப்பட்ட ஒன்று. அல் கொய்தா!
 
இன்றைய தேதியில் அபுபக்கர் அல் பஹாதியைப் பிடிப்பதற்கோ, கொல்வதற்கோ உதவும் வகையில் துப்பு கொடுப்பவருக்கு ஒரு கோடி டாலர் வெகுமதி என்று அறிவித்திருக்கிறது அமெரிக்கா. இதைவிட அதிகத் தொகையை - 2.5 கோடி டாலர் அளிப்பதாக அமெரிக்கா அறிவித் திருப்பது வேறு ஒரே ஒருவரின் தலைக்குதான். அவர் அய்மான் அல் ஜவாஹிரி அல் கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவர். (என்ன இருந்தாலும் அல் கொய்தா அமெரிக்காவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுத்தியவர் அல்லவா? இடித்து வீழ்த்தப்பட்ட இரட்டை வணிக கோபுரங்கள்).
 
‘சிரிய ராணுவம்’ என்ற பெயரில் ஒரு பெரிய ‘ராணுவத்தை’ சிரியாவில் ஏற்படுத்தியது ஐ.எஸ். அதன் மூலம் இராக் வழியாக சிரியா வின் கிழக்குப் புறத்தில் ஊடுரு வத் தொடங்கியது. மூன்றே வருடங் களில் சிரியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி ஐ.எஸ்.ஸின் அதிகாரத்துக்குள் வந்துவிட்டது. தற்செயலாகவோ, திட்டமிட்டோ சிரியாவிலுள்ள பெட்ரோலியக் கிணறுகள் பலவும் ஐ.எஸ்ஸால் ஆக்ரமிக்கப்பட்ட இந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளன.
 
ஐ.எஸ். அமைப்பு குறைந்தகால கட்டத்திலேயே உச்சத்தைத் தொட்டதற்கு சில காரணங்கள் உண்டு. நிதி உதவியைத் தடையில்லாமல் அளிக்கிறார்கள் வளைகுடாவைச் சேர்ந்த அரபு இனத்தவர். ‘’ஷியாக்களை ஒடுக்கு’’ இதுதான் அவர்களுக்கு இடப்படும் ஒரே கட்டளை.
 
சிரியாவிலும், ஈராக்கிலும் வரி வசூலிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது ஐ.எஸ். சிரியா அரசு எப்படி இவர்களை சமாளிக்கிறது? தீவிரவாத இயக்க மான ஐ.எஸ். அளவுக்கு அந்த அரசும் ஏன் உலகெங்கும் கடுமை யான கண்டனங்களை சந்திக்கிறது? நியாயமான கேள்விகள்தான்.
 
Link to comment
Share on other sites

சீர்குலையும் சிரியா - 3

 

syria_2180342f.jpg

சிரியா அதிபர் பஷார்-அல்-ஆசாத் உடன் அவரது மனைவி அஸ்மா அல்- ஆசாத். கோப்புப் படம் - ஏஎப்பி
 
 
 
‘நாட்டை ஆண்ட இந்திரா காந்திக்கு இரண்டு மகன்கள். மகன்களில் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். அரசியல் செயல் பாடுகளில் தடாலடியாக ஈடுபட்டார். பாராட்டுகள், விமர்சனங்கள் ஆகிய இரண்டும் எழுந்தன. அடுத்ததாக அவர்தான் ஆட்சி நாற்காலியில் அமருவார் இப்படித் தான் பலரும் யூகித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் விபத்தொன்றில் இறந்தார் அவர்.
 
இந்த நிலையில் அவரது சகோதரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலை உண்டானது. தான் அரசியலுக்கு வருவோம் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மேலை நாட்டில் கல்வி கற்ற இளைஞர் அவர். அவர் மனைவியும் வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர்.’’.
 
எதற்காக இந்திரா காந்தி- சஞ்சய் காந்தி - ராஜீவ் காந்தி சோனியா காந்தி கதையை இங்கே கொண்டுவர வேண்டுமென்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். மேலே குறிப்பிட்டது சிரியாவின் ஆட்சியில் அமர்ந்தவர்கள் குறித்த விவரங்கள்தான்! இந்திரா காந்தி என்ற இரு வார்த்தைகளை மட்டுமே மாற்ற வேண்டும், அவ்வளவுதான்.
 
சுமார் 30 வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அஸாத். எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது என்று வெளிப்படையாகவே 1990ல் அறிவித்தார். அவ்வப்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் மக்களின் பெரும் ஆதரவு பெற்றவராகத்தான் இவர் விளங்கினார். 1991 தேர்தலில் 99.98 சதவிகித வாக்களித்து இவரை நான்காம் முறையாக நாட்டுத் தலைவராக்கினார்கள் சிரியா மக்கள்.
 
இவரது இரண்டு மகன்களில் ஒருவனான பஸ்ஸெல் அல் அஸத் என்பவர்தான் அந்த நாட்டின் அடுத்த அதிபர் என்று மக்கள் நினைத்திருக்க, கார் விபத்தொன்றில் அவர் பிராணனை விட்டார்.
 
மற்றொரு மகன் பஷர் அல் அஸாத் அதிபரானார். பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்கு பாலைவனத்தில் போட்ட மீனாகத் துடித்தார். காரணம் அவரது கனவு அரசியல் அல்ல. லண்டனில் கண் மருத்துவர் படிப்பை முடித்துவிட்டு டமாஸ்கஸுக்கு வந்து தன் தாய் நாட்டு ராணுவத்தில் கண் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த அவருக்குதான் மணிமுடி.
 
இன்று பல உலக நாடுகளின் கண்டனத்துக்கும், ஐ.எஸ்.ஸின் நேரடித் தாக்குதலுக்கும் அவர் மையப் புள்ளி. கல்வியாளர் என்பதாலோ என்னவோ ராணுவத்திலும் ஒரு நவீனப் பிரிவை ஏற்படுத்தினார். இதன் பெயர் ‘சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி’.
 
இவர்களின் ஆயுதம் துப்பாக்கி அல்ல, கணினி. அரபு உலகத் தில் இப்படியொரு படை செயல் படுவது இதுவே முதல் முறை. எதிரிகளின்மீது வலைத்தளப் பக்கங்களின் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது சிரியா அரசு. (ஸைபர் அட்டாக்).
 
இவர் மீது ஐ.எஸ். தனி கவனம் எடுத்து தாக்கத் தொடங்கி இருப்பதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு. பிறப்பால் இவர் ஷியா இனத்தைச் சேர்ந்தவர். ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு தேசத்தை முஸ்லிம் ஒருவர் தலைமையேற்று ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத் திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் ‘முக்கால்வாசி மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் ஒரு தேசத்தை ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத்ததால் அங்கு ஓர் உலக மகா கலவரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
 
அதிபர் பஷாரின் மனைவி அஸ்மா. அழகானவர். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். பிரிட் டனைச் சேர்ந்தவர். ‘பாலைவன ரோஜா’ என்று உள்ளூர் ஊடகங் களால் வர்ணிக்கப்பட்டவர்.
 
தற்போதைய சிரிய கலவரம் குறித்து இவரது கருத்து என்ன என்பதை அறிய உலக ஊடகங்கள் முயற்சித்தன. இவரது கருத்துகள் கிடைக்கவில்லை. காரணம் இவரே கிடைக்கவில்லை! எந்தப் பொது விழாவிலும் அவரைக் காணோம். ஒருவேளை பிறந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறாரோ? ஆனால் லண்டனில் உள்ள அவரது பிறந்த வீட்டினர் அங்கு அஸ்மா வரவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றனர். எங்கே அஸ்மா? அரண்மனையில் ரகசியமாக சிறை வைக்கப்பட்டுள்ளாரா? பரபரப்பான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
 
உள்நாட்டில் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு புறமிருக்க, இந்த உள்ளூர் கலவரங்கள் உச்சத்தை அடைவதற்கு முன்பாக தனது அண்டை நாடுகளில் ஒன்றான லெபனானுடன் போரிட்டுக் கொண்டிருந்தது சிரியா. இன்னமும்கூட அந்த நெருப்பு அணைந்த பாடில்லை. செப்டம்பர், 2014ல் ஐ.நா.பாதுகாப்புக் குழு ஒரு தீர்மானம் போட்டது. லெபனானில் உள்ள தனது 15,000 ராணுவ வீரர்களை சிரியா உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். சிரியா தனது 3,000 வீரர்களை மட்டும் இடம் பெயரச் செய்தது.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிலி படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின்னணியாகச் செயல்பட்டது சிரியாதான் என்று பரவலாகவே பேசப்பட்டது.
 
இஸ்ரேலின் புலனாய்வுத் துறையில் உச்சபதவியில் இருப் பவர் பிரிகேடியர் ஜெனரல் இடாய் ப்ரூன். சிரியாவின் அதிபர் அஸாத் ரசாயன ஆயுதங்களை தீவிரவாதிகள் மீதும் தன் பொது மக்கள் மீதும் நிச்சயம் பயன் படுத்தினார் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உண்டு என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். குறிப்பாக சரின் எனப்படும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் மிக ஆபத்தான ரசாயனப் பொருள் இதில் பயன்படுத்தப்பட்டது எனக்கூறி பதற வைத்தார். பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் கூட இதை வழி மொழிந்தன. குறிப்பாக டமாஸ்கஸ், அலெப்போ, ஹோம்ஸ் ஆகிய பகுதிகளின் மீது ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன என்று கூறின.
 
இந்தக் கருத்தைப் பற்றி சிரிய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அரசைப் பதற வைத்த வேறு சில நிகழ்ச்சிகள் அரங்கேறின.
 
Link to comment
Share on other sites

சீர்குலையும் சிரியா - 4

 

index_2182355h.jpg

சிரியாவில் இருந்து அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள். கோப்பு படம் - ஏஎப்பி

பொருளாதாரத்தில் சிரியா தள்ளாட, 2001 மார்ச்சில் அரசுக்கு எதிராக சுவரில் ஓவியங்கள் வரைந்தனர் சில குழந்தைகள். அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பொருளா தாரத்தை மேம்படுத்த அல்ல. மேற்படி குழந்தைகளைக் கொன்றது. மக்கள் கொந்தளித்தார் கள். தொடங்கியது உள்நாட்டுப் போர். வெளிநாடுகளிலிருந்தும் சில ஜிகாதிகள் சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் அழுத்தமாகக் கால் பதித்தது.

 

ஐ.எஸ்.தீவிரவாதிகளை அடக்குவதற்கு முயற்சி எடுக்கி றேன் என்று பொறுப்பற்ற முறையில் அரசு நாட்டின் பல பகுதிகளிலும் குண்டு வீசிக் கொண்டி ருக்கிறது. இதனால் தீவிரவாதி களைவிட அப்பாவிப் பொதுமக்கள் தான் அதிகமாக இறந்து கொண் டிருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த மக்கள் அண்டை நாடுகளான லெபனான், துருக்கி, ஜோர்டான், எகிப்து, இராக் போன்ற நாடுக ளுக்கு தெறித்து ஓடிக் கொண்டிருக் கிறார்கள்.

 

சிரியா அரசை இப்போது மிகவும் வெறுப்பேற்றும் மற்றும் கவலைப்பட வைக்கும் விஷயம் இதுதான். இப்போது ஐ.எஸ். இயக்கத்திலுள்ள பலரும் நேற்று அரசின் ராணுவத்தில் பதவி வகித்த வர்கள். உள் விஷயங்களை நன்கு தெரிந்தவர்கள்.

ஜூலை 18 அன்று வெடிக்கப் பட்ட ஒரு குண்டு அஸாத் அரசை நிலைகுலைய வைத்திருக்கிறது. அரசின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கூடி யிருந்தனர். அந்த சந்திப்பு நிகழ்ந்தது தலைநகர் டமாஸ் கஸில் இருந்த தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில். அதாவது உச்சகட்ட பாதுகாப்பான இடத்தில். அங்கு வீசப்பட்ட குண்டு பாதுகாப்பு அமைச்சரைக் கொன்றது. கூடவே அஸாதின் மைத்துனரை யும் கொன்றது. அஸாதின் வலது கை என்று கருதப்பட்ட இவர், அரசின் சக்தி படைத்த உறுப்பினராகவும் விளங்கியவர்.

 

ஆகஸ்ட் 6 அன்று விழுந்தது அடுத்த இடி. இது குண்டினால் உருவானது அல்ல. முதுகில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி. சிரியாவின் பிரதமர் ரியாத் ஹிஜாப் என்பவரும் வேறு இரண்டு அமைச்சர்களும் ஜோர்டானுக்குச் சென்றார்கள். அங்கு ‘நாங்கள் இனி எதிர்க்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்போம்’ என்று உரத்துக் கூறினார்கள்.

கி.மு. 1500-ல் எகிப்தின் வசமானது பண்டைய சிரியா. பிறகு பலரின் கைமாறி அலெக் ஸாண்டரின் பிடிக்குள் வந்து சேர்ந்தது. நாளடைவில் ரோம சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக ஆனது. கி.பி. 636-ல் அரேபியர்கள் இப்பகுதியை வென்று தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். அப்போது இது ஒரு மாபெரும் வணிகக் கேந்திரமாக உருவானது.

ஏழாம் நூற்றாண்டில் இதனை ஆண்ட ஆட்சியாளர்கள் தங்கள் மொத்த சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக டமாஸ்கஸைத்தான் கொண்டிருந்தனர்.

 

அப்போது சிரியா நான்கு பிரம்மாண்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததது. அவை டமாஸ்கஸ், ஹோம்ஸ், பாலஸ் தீனம் மற்றும் ஜோர்டான். (ஆம் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம்). இந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்பெயினிலிருந்து படர்ந்தது. ஆனால் காலப்போக்கில் டமாஸ் கஸ் மதிப்பிழந்தது. சாம்ராஜ்யத் தலைநகர் பாக்தாத் (தற்போதைய இராக்கின் தலைநகர்) என்றானது.

 

1916-ல் ஆங்கிலேயர்களுக் கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற ரகசிய உடன்படிக்கையின்படி பிரான்ஸின் வசம் வந்து சேர்ந்தது சிரியா. நாளடைவில் லீக் ஆஃப் நேஷன்ஸ் (அந்த நாளைய ஐ.நா.சபை) அமைப்பும் பிரான்ஸுக்கு அந்த உரிமையை அளித்தது.

 

சுதந்திரப் போராட்டங்கள் நடை பெற்ற 1944 ஜனவரி 1 அன்று சிரியாவை சுதந்திரக் குடியரசாக ஏற்றுக் கொண்டது பிரான்ஸ். என்றாலும் தனது படைகளை ஏப்ரல்1946-ல்தான் சிரியாவி லிருந்து விலக்கிக் கொண்டது பிரான்ஸ். எனவே அப்போதுதான் சிரியாவில் சுதந்திர அரசை அமைக்க முடிந்தது.

பிரான்ஸ் நாட்டின் பிடியிலி ருந்த சிரியா 1944 புத்தாண்டு தொடக்கத்தில் சுதந்திரம் பெற்றது. இன்று அந்த சுதந்திரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களில் கணிசமானவர்கள் பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, அவர் களில் சிலர் எடுத்துள்ள முடிவு புருவங்களை உயர்த்த வைக்கிறது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4/article6555294.ece

 

Link to comment
Share on other sites

சீர்குலையும் சிரியா - 5

 

syria_2183303h.jpg

 

அரசின் தாக்குதல்களால் வெறுத்துப் போன பொது மக்களில் பலரும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்கிறார்கள். ‘’என் அண்ணனைக் கொன்ற இந்த அரசை சும்மா விடமாட்டேன்’’ என்பதுபோல தனிப்பட்ட பகைமை காரணங்களை தனக்கெதிராக ஏராளமாக உருவாக்கி வருகிறது சிரியா அரசு.

அமெரிக்காவில் கொலாரடோ பகுதியின் டென்வர் நகரில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி அதிர்ச்சிகரமானது. 15லிருந்து 17 வயது கொண்ட மூன்று மாணவி கள் அமெரிக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்ல முடிவெடுத்து கொலாரடோ விமான நிலையத்தை அடைந்துள்ளனர். பள்ளியிலிருந்து இவர்கள் வீடு திரும்பாததால் காவல்துறையிடம் பெற்றோர்கள் புகார் செய்தனர். தேடுதலில் அவர் களைக் கண்டுபிடித்த காவல் துறையினர் ‘’எதற்காக வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பினீர்கள்? எங்கே செல்வதாகத் திட்டம்?’’ என்று கேட்க, சிறிதும் தயக்கமில்லாமல் வந்த விடை இது. ‘’சிரியாவிலுள்ள ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்ந்து சிரியாவின் ஆட்சியை கீழே இறக்கச் செல்கிறோம்’’.

காவல்துறை அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியது வேறு விஷயம். சிரியாவின் ஆட்சியை ஓரள வுக்கு மேல் ஐ.நா.வால் கண்டிக்க முடியவில்லை. காரணம் பொதுச் சபையில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானங்களை சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்து தடுத்து விடுகின்றன. இரானும், லெபனானும் (அங்கு ஷியாக்கள் அதிகம் என்பதால்) சிரியா அரசை ஆதரிக்கின்றன.

ஆக சிரியா - ஐ.எஸ். போர் என்பது உண்மையில் பலவித மறைமுகப் போர்களின் திரைபோலவே காட்சியளிக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இதன் மூலம் தங்கள் பலத்தை சோதனை செய்து கொள்கின்றன.

அமெரிக்கா எதற்காக சிரியா வின் உள்நாட்டுப் போரில் தலையிட வேண்டும்? ‘’வழக்கம்போல அது தன் பெரியண்ணன் தோரணையை காட்டுகிறது’’ என்று மட்டுமே முடிவெடுக்க முடியாது. வேறு பல காரணங்களும் உள்ளன. சிரியா அரசுக்கு எதிரான ஐ.எஸ்., அல் கொய்தாவின் மேலும் தீவிரப்பட்ட வடிவம். ஐ.எஸ்.சிரியாவில் தன் ஆட்சியை நிறுவினால் அது அல் கொய்தாவின் (அமெரிக்க நலனுக்கு எதிரான) செயல்களில் நிச்சயம் ஈடுபடும். ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் ‘இரான், வடகொரியா, இராக் ஆகியவை தீயவற்றின் அச்சாணிகள்’ என்று கருத்து கூறியிருக்கிறார்.

சிரியாவில் ஐ.எஸ். ஜெயித்தாலும், தோற்றாலும் ஒரு காலத்தில் அமெரிக்கா அங்கு போரில் ஈடுபட வேண்டியிருக்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுட னான தூதரக உறவைத் துண்டித் துக் கொண்டுள்ளன. இரானும், சீனாவும், ரஷ்யாவும் இப்போதை க்கு சிரியாவின் நண்பர்கள்.

இந்த நிலையில் பிரிட்டனிலுள்ள பல நிதி நிறுவனங்களும் முக்கியமாக HSBC வங்கி தங்களிடமுள்ள சிரியா தேசத்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கணக்கை முடித்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதியிருந்தன. இதற்குக் கடும் கண்டனம் எழ, சம்பந்தப்பட்ட வங்கி இந்தச் செய்தி தவறென்று சமாளித்திருக்கிறது.

2004 ஜூன் 3 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அஸாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை. காரணம் அரசின் வசம் முழுமையாக இருந்த பகுதி களில் மட்டுமே தேர்தல் நடை பெற்றது. தவிர எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இந்த நிலையில் அஸாத் வென்றது செல்லாது என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. உண்மைதான் என்று ஒத்துக் கொண்டன பல மேலை நாடுகள்.

ஹஜ் பயணம் செல்பவர்கள் மெக்காவிற்குச் செல்வதற்கான ஒரு நுழைவு வாயில் டமாஸ்கஸ் (சிரியாவின் தலைநகர்). அங்கே இப்படிப்பட்ட உச்சகட்ட கலவரங்கள் நடைபெறுவது உலக முஸ்லிம்களுக்கேகூட சங்கடத்தைத் தருகிறது. ஒரு காலத்தில் ஸ்பெயின், ஜோர்டான், பாலஸ்தீனம் போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருந்த சிரியா இப்போது தன் சிறிய பரப்பே துண்டாடப்படுவதை நினைத்து தவிக்கிறது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5/article6557456.ece

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.