Jump to content

பதுளையில் பாரிய நிலச்சரிவு! 12 சடலங்கள்! 200 பேரின் நிலை தெரியவில்லை!


Recommended Posts

Landsilde3.jpg பதுளையில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் சுமார் 200 பேர் வரை சிக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர், மீட்புப் படையினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மண் சரிவில் அந்தப் பிரதேசத்தில் இருந்த சுமார் 80 லயன் அறைகள் முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதோடு, ஒரு கோவிலும் மூடப்பட்டள்ளது.

சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 12 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்புப் பணிகள் துரிதப்பட்டுள்ள போதிலும் ஒரு பகுதியில் தொடர்சியான மண்சரிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்

 

http://www.tamil.srilankamirror.com/news/2740-200-12-200

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Many missing after S Lanka landslip
_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd
 

At least 150 missing and three dead in landslide after monsoon rains in central Sri Lanka, officials say.

 

http://www.bbc.co.uk/news/world-asia-29813981

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka landslide: Three dead and 150 missing

(பதுளை மண்சரிவு: மூவர் பலி மற்றும் 150 பேரைக் காணவில்லை. 70 வீடுகள்... 10 கடைகள்.. 3 அரசாங்க அலுவலங்கள்.. பருவகால..கடும் மழைவீச்சியை அடுத்து ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு போயுள்ளது. சிறீலங்கா பாதுகாப்பு படை உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக.. சிறீலங்கா அமைச்சரை மேற்கோள் காட்டி.. செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.)

 

_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd
 

At least 150 people are missing and three people are dead following a landslide in central Sri Lanka, disaster officials say.

 

The landslide, which came after heavy monsoon rains, engulfed dozens of houses in Badulla district, officials said.

 

Security forces have been mobilised in search and rescue operations.

 

Much of Sri Lanka has been lashed by heavy rain in recent weeks, with mudslide warnings issued.

 

"About 70 houses, 10 shops and three official residences are hit by the landslide," Disaster Management Minister Mahinda Amaraweera told local media.

 

Sections of several national highways have been washed away by the rains, AFP news agency reported.

 

http://www.bbc.co.uk/news/world-asia-29813981

Link to comment
Share on other sites

ஏழு லயன் அறைகளும், கோவில் ஒன்றும் மண் சரிவில் சிக்கியுள்ளன (படங்கள், வீடியோ இணைப்பு)

 

5863_content_badulla%20(1).jpg

 

5863_content_badulla%20(2).jpg

 

5863_content_badulla%20(12).jpg

 

 

5863_content_badulla%20(14).jpg

 

 

 

 

 

 http://www.thinakkural.lk/article.php?local/csfrypvxpc9382d9a5cf487c24627dczfg8317dba2cc8fafcf8a18a87ixpi#sthash.LREVOJss.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1(147).jpg
-அழகன் கனகராஜ்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே  மண்ணில் புதையுண்டுள்ளன.

7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட  66 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று  முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.
1%20(1).jpg
unnamed(3).jpg


1%20(3).JPG
1%20(4).JPG
unnamed%20(6).jpg
1%20(2).JPG
2(92).jpg
3(76).jpg
4(43).jpg
5(21).jpg

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/131246-2014-10-29-03-44-39.html

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்துக்கு பளபளக்கும் வீதிகளையும், தண்டவாளங்களையும் கட்டுகிறார்கள். இவர்களுக்கு ஒழுங்கான கூரைகூட இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தமிழர்களை இன்றுவரை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு பளபளக்கும் வீதிகளையும், தண்டவாளங்களையும் கட்டுகிறார்கள். இவர்களுக்கு ஒழுங்கான கூரைகூட இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

அதுவும் புலம்பெயர் தமிழர்களை தமிழீழத்தை கைவிடும் வரை தான். அதுக்குப் பிறகு யாழ்ப்பாணமும் இப்படித்தான் ஆகும்.

 

ஜூனில் இதே போன்ற நிகழ்வு சிங்களப் பகுதியில் நடந்த போது.. சிறீலங்கா விமானப்படை உலங்கு வானூர்திகள் மீட்பில் உபயோகிக்கப்பட்டன.

 

இங்கு இடர்கால மீட்பு நிலைமை அவ்வளவு தீவிரமாக இன்றி ஏனோ தானோ என்று இருக்கிறது.

 

இவை இன்னும் இன்னும் உயிரிழப்புக்களை அதிகரிக்கவே செய்யும்.

 

சிங்கள அரசில் அமைச்சுக் கட்டில் இருக்கும் தமிழர்கள்.. இதுவரை அனர்த்தம் பற்றி அக்கறை எடுத்துள்ளதாகத் தெரியவில்லை..!! :(:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக அரசியல்வாதிகள் எப்படி இப்போதும் பரம்பரை அரசியல்வாதிகளாக இருக்கின்றார்களோ
அப்படியே தோட்டத்தொழிலாளர்களும் பரம்பரை பரம்பரையாக
இந்த அவல வாழ்க்கையைத் தொடர்கின்றார்கள்
சிங்கள அரசுக்கு வால்பிடிக்கும் மலையக அரசியல் வாதிகள்
குறைந்தது மலையக மக்களின் அன்றாட வாழ்க்கையிற்கு எதாவது செய்தார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.
மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.
உயிரிழப்பு எதுவுமில்லாமல் எல்லோரும் காப்பாற்றப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு03- ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 300 பேரைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 600 பேர் வரை புதையுண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 30க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணால் போன 300 பேரும் உயிழந்திருக்கலாம் எனவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  ; ஆனாலும் உயிரிழைந்தவர்களின் முழுமையான விபரங்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு02- ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் மீட்பு

29-10-2014- 02.05

பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 100 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நூற்றுக் கணக்கான காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மண் சரிவில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் பல மண்ணில் புதையுண்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சுமார் 300 பேர் வரையில் மண் சரிவில் சிக்குண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக பெல்212 ரக ஹெலிகொப்டர் ஒன்றை ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுமார் 120 வீடுகள் முற்று முழுதாக சேதமடைந்திருப்பதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக 2005ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டு ஆகியவற்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது குறித்த இடத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீரியபெத்த மலைப் பகுதியில் தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் :

பதுளை ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற பாரியளவிலான மண் சரிவில் பெரும் எண்ணிக்கையிலான லயன் வீடுகள் முற்றுமுழுதாக மண்ணில் புதையுண்டுள்ளன.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதனால் அதிகமானவர்கள் இந்த மண் சரிவினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் ஒரு சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் பத்து லயன் வீட்டுத் தொகுதிகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. உயிர் மற்றும் உடமைச் சேத விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113022/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

சிங்களவன் அவர்களது அரசியல் உரிமையை பறித்தான் மிச்சம் எல்லாம் நாங்கள் புடுங்கியதுதான்.

 

மலையக அரசியல்வாதிகளுக்கு வேறு தெரிவுகள்  இருந்ததாக  தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வித்தியாசமான சத்தத்துடன் மலை சரிந்தது; 128 லயன் அறைகளில் ஒன்றுகூட இல்லை' 

 

'இன்று காலை ஏழு மணியளவில் திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது. அதுவொரு வித்தியாசமான சத்தம். நான் ஓடினேன். எந்தப்பக்கம் என்று தெரியாமல் ஓடினேன். அப்படி ஓடும்போது மலை சரிந்து விழுந்தது. நான் அதில் புதையுண்டேன். என்னைக் காப்பாறிய சிலர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்' என்று கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிர்பிழைத்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளியான ராதா (34 வயது) கூறுகையில், 'திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் எனது இடுப்புப் பகுதி வரை மண் மூடிக்கொண்டது. எனது நான்கு பிள்ளைகளும் வேறு பக்கமொன்றில் இருந்தனர். தந்தையும் தாயும் கூட இருந்தனர். அவர்கள் தொடர்பில் தகவல் இல்லை. அவர்கள் புதையுண்டனரா என்பது பற்றி தெரியவில்லை' என அவர் குறிப்பிட்டார்.

புதையுண்டு மீட்கப்பட்டவர்களை லொறியொன்றில் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சாரதி இது தொடர்பில் கூறுகையில், 'வீதியொன்று தென்படவே இல்லை. மிகவும் கடினமான முறையில் மீட்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தேன்.

சுமார் 128 லயன் அறைகளில் ஒன்றுகூட தற்போது தென்படுவதில்லை. கோயிலையும் காணவில்லை. அந்த லயன் அறைகளில் 300 அல்லது 400பேர் இருந்திருக்கக்கூடும்' என அவர் தெரிவித்தார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/131288--128-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பதுளை மண்சரிவு ; மீறியபெந்த தோட்டத்தைக் காணவில்லை (இரண்டாம் இணைப்பு) - 
 
 

 ஹப்புத்தளை,  ஹல்துமுல்ல  மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.  

 
எட்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது மீட்கப்பட்டிருப்பதாகவும் 300 பேர் வரையில் காணாமற்போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 150 க்கு மேற்பட்ட வீடுகள்  நிர்மூலமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார்.  

 

(முதலாம் இணைப்பு)

மண்சரிவில் இருவர் சாவு ; 400 பேர் மாயம்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இருவர் பலியானதுடன் 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளது.
 
மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன.
7 ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.
 
 
குறிப்பிட்ட பகுதி தொடர்ந்தும் மண்சரிவுக்குள்ளாகி வருவதாகவும் தற்போது 1 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=615843590629235318#sthash.PT1r0Ogs.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"என் குடும்பத்தில் ஐந்து பேரை நிலச்சரிவு காவுகொண்டுவிட்டது"

 

BBC யில் ஒருவரது பேட்டி:

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141029_landslidevictim

Link to comment
Share on other sites

வரவு செலவுத் திட்டத்தில் அனைவரையும் கவர நடவடிக்கை எடுத்த மகிந்த தோட்டத் தொழிலாளர்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் ஆறுமுகம் தொண்டமானைத் தனிப்பட்ட முறையில் கவனித்தால் தோட்ட வாக்குகளை அள்ளிவிட முடியும் என்பதை அறிந்திருப்பதால் தான். சரியான தலைமைத்துவம் இன்றித் தவிக்கும் அந்த மக்களை நாங்களும் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே இதுவரை கருதி வந்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலைய மக்களுக்கு இவற்றின் மூலம் உதவிகளை அளிக்க முடியுமா..??!

 

http://www.oxfam.org/en/countries/sri-lanka

 

https://www.icrc.org/en/resource-centre/result?t=sri+lanka+

 

https://twitter.com/SLRedCross

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.