Jump to content

ஈழத் தமிழரை, திருமணம் செய்கிறார்.... நடிகை பூஜா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

26-1414303569-pooja24334-600.jpg

 

டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!

 

சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார்.

உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா

இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

 

விடியும் முன்...

இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார்.

 

திருமணம்...

இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தோன்றுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பூஜாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பேஷன் டிசைனர்...

இது காதல் திருமணம் என்றும், மாப்பிள்ளையின் பெயர் தீபக் சண்முகநாதன் என்றும் கூறப்படுகிறது. ஈழத்தைச் சேர்ந்த தீபக், மாடலிங் மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார்.

 

காதலுக்கு சம்மதம்...

தீபக் தனது பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி தனது காதலை பூஜாவிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பூஜா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

 

விரைவில் திருமணம்...

அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மவுனம் சாதிக்கும் பூஜா...

பொதுவாக இது போன்ற திருமணம், காதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவரும் போது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ஆம், இல்லை என விளக்கமளிப்பர். ஆனால், பூஜா தொடர்ந்து மவுனம் சாதிப்பது திருமணத் தகவலை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கமே சூத்திரா (கமே - கிராமம்) (Kaema Sutra ) உணவகம் 'promotion' நிகழ்வுக்கு, வந்த நம்ம பூஜா, அம்மியில சம்பல் அரைக்கும் அழகை, 19:30 நிமிடத்தில் இருந்தது பார்த்.....து  ரசியுங்கள். 

 

Kaema Sutra - நல்ல தொரு பெயர் - சந்தைப் படுதலுக்கு இல்லையா ? ( ரூம் போட்டு ஜோசித்திருப்பாங்களோ ?)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம தீபக்கா, இதற்குதானா ஆசைப்பட்டாய் தீபக் எப்படியோ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தீபக்கை எனக்கு நன்கு தெரியும் நாதமுனி, இவர் என்னுடைய நண்பர், 
இவருடைய வீட்டீட்கு பலமுறை சென்றுளேன். (காரணத்தோடுதான்)  :D  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தீபக்கை எனக்கு நன்கு தெரியும் நாதமுனி, இவர் என்னுடைய நண்பர், 
இவருடைய வீட்டீட்கு பலமுறை சென்றுளேன். (காரணத்தோடுதான்)  :D  :icon_mrgreen:

 

 

அப்ப, பிறகென்ன, இனி சம்பல் சாப்பாடு அந்த மாதிரி, உங்கள் நண்பருக்கு..  :icon_mrgreen:

 

இனி உங்களுக்கு போக கிடைக்காது.  அழைப்பு இருக்காது.  :o

 

நம்மவர் ஒருவர் தீடீரேனே ஒரு நடிகையை கல்யாணம் செய்து வந்தார். அவருக்கோ பெருமை பிடிபடவில்லை.
 
நண்பர்களை புறக்கணித்தார்.
 
ரம்பாவை கட்டிய இந்திரன் போல் பெரு வியாபாரியாக இல்லை என கண்டதும் நடிகை விலகிச் செல்ல மீண்டும் வந்த போது நண்பர்கள் இல்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமராக்கு முன் தான் நடிகை. மற்றும் படி.. பெண்..! முதலில்... நடிகை என்ற மாயைப் பார்வையை முதலில் கைவிடனும்...!!  :)

 

பூஜா சம்பல் அரைக்குது.. தலை முடியை தடவித் தடவி. அது சுகாதாரத்துக்கு உகந்ததல்ல..!!!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பூஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூஜா கதைக்கும்போது ஒர் அழகிய நளினம் இருக்கு. அதுதான் பெண்மைக்கு வேணும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனராக இருக்கும் தீபக் சண்முகநாதனை நடிகை பூஜா கரம் பிடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருக்கிறது.

சரண் இயக்கிய ‘ஜே.ஜே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதனைத் தொடர்ந்து ‘அட்டகாசம்’, ‘உள்ளம் கேட்குமே’, ‘பட்டியல்’, ‘ஓரம்போ’ என பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’ படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்த பூஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இவரது நடிப்பைப் பார்த்து ரஜினிகாந்த் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பூஜாவிற்கு திருமணம் என்று இருமுறை செய்திகள் வெளிவந்தன. இதற்கு பூஜா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், தற்போது இலங்கையில் மாடலாகவும், ஃபேஷன் டிசைனராகவும் உள்ள தீபக் சண்முகநாதனை காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

பொது நிகழ்ச்சியில் ஒன்றில் இருவரும் சந்தித்து நண்பர்களாக வலம் வந்திருக்கிறார்கள். தீபக்கின் பிறந்த நாளான அக்டோபர் 17-ம் தேதி, பூஜாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். தீபக்கின் காதலை ஏற்றுக் கொண்ட பூஜா, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.

இதனை உறுதி செய்யும் விதமாக, தீபக் சண்முகநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பூஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

poojafinal_2172237f.jpg

http://www.jvpnews.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. கடைசியில இவர் கூடவாவது.. பூஜா செற்றிலாகிடிச்சேன்னு.. சொல்லி வாழ்த்திடுங்க. :D:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.