Jump to content

கலக்கம் - சுவிட்சர்லாந்து வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, பிரபலங்களின் பட்டியலை வெளியிட மத்திய அரசு முடிவு


Recommended Posts

சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ள தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
பதிலடி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், 'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, நூறு நாட்களில் நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். அதற்காக குழு ஒன்றையும் அமைத்தனர்.ஆனால், 'வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின், பெயர்களை வெளியிடுவதில், சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவுடன், இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என,சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திடீர், 'பல்டி' அடித்தது.
 
இதற்கு காங்., கடும் கண்டனம் தெரிவித்தது. 'வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு' என, கிண்டலடித்தது. 'பட்டியலை வெளியிட்டால், பாதிக்கப்படுவது காங்கிரசார் தான்' என, பா.ஜ., பதிலடி கொடுத்தது.'பரவாயில்லை; கருப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிடுங்கள் பார்க்கலாம்' என, காங்.,தெரிவித்ததை அடுத்து, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், சட்ட விரோதமாக கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கி உள்ளது.இதைத் தொடர்ந்து,
கருப்புப் பணத்தை பதுக்கி உள்ள தனிநபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
20 பேர் பட்டியல்: முதல் கட்டமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள, 20 பேரின் பெயர்களை வெளியிட தயாராகி வருகிறது.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய மற்றும் மாநில கட்சிகளை சேர்ந்த, இந்த நால்வரில் மூவர், மத்தியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். ஒருவர், தமிழக அரசியலில் முக்கிய புள்ளி என, தகவல்கள் கூறுகின்றன.இந்த பட்டியல் வெளியானால், தமிழகத்தில், அவர்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்களும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும்கலக்கம் அடைந்துள்ளன.
சிக்கல்: இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:சொத்து குவிப்பு வழக்கு தண்டனையால், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள
 
பின்னடைவை காரணம் காட்டி, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.அந்த இடத்தை, நாங்கள் தான் நிரப்புவோம் என்றும், சில கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த நேரத்தில், கருப்புப் பண முதலைகள் பட்டியல் வெளியீடு, அக்கட்சிகளுக்கு, கடும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா....இனிமேல் சுவீசிலை ஆடுமாடு மேய்க்கிற இடங்களிலை பாட்டுக்கட்டங்களை எடுத்துப்போட்டு சுவீசிலை படம் எடுத்தம் எண்டு கணக்கு காட்டேலாது.....காசையும் சுவீசிலை அமுக்கவும் ஏலாது... :lol:  :D  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.