Jump to content

அசிட் கொடுத்து குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  _78509708_ins_solanki_family_ruislip_9.j

 

இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார்.

 

மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

அண்மையில் ஈழத்து வம்சாவளி பெண் ஒருவரும் இவ்வாறு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

_78509710_ins_solanki_family_ruislip_7(2

 

http://www.bbc.co.uk/news/uk-england-london-29759591

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

கணவனைத் துன்புறுத்தவே குழந்தைகளைக் கொல்கிறார்கள் என நினைக்கிறேன்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனை துன்புறுத்தனுன்னா.. பழிவாங்கனுன்னா.. அவங்களுக்கு அசிட்டை கொடுக்கிறது. எதுக்கு எதுவுமே அறியாத இந்தப் பாலன்களை வதைக்கனும்..????! ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தாலும்.. அதனைக் கொல்ல அவளுக்கு உரிமை கிடையாது..!!  :icon_idea:

Link to comment
Share on other sites

குழந்தைகளைப் பார்க்க மனம் பதைக்குது

 

 

அண்மையில் இங்கு ஒரு தமிழ் பெண்ணை மணந்திருந்த வேற்றின ஆண் ஒருவரும் தன் இரு பிள்ளைகளைகளையும், தன்னையும் காருக்குள் வைத்து தீமூட்டி கொன்றும் தற்கொலை செய்தும் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படியானதுகளுக்கு கடவுள் பிள்ளைகளைக் கொடுத்தார் என்றே தெரிய இல்ல..மிகவும் மனதுக்கு கஸ்ரமான செய்தி.இந்தப் பிள்ளைகளைப் பார்க்க கொல்ல மனம் வருமா.. சில வேளைகளில் படிச்ச படிப்பும் தான் உயிரை எடுக்கிறது பாருங்கள். :( :(

 

 

Link to comment
Share on other sites

என்ன கொடுமை இது :o :o  எல்லாவற்றிக்கு மனஅழுத்தம் காரணம் என்று ஒன்றை கூறி முடித்துவிடுவார்கள். :huh:

மனஅழுத்தம் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை நாடாமல் தமக்குள்ளேயே யோசித்து யோசித்து இந்த நிலைக்கு ஆளாகுகின்றார்கள்.

என்ன தான் மனஅழுத்தம் இருந்தாலும் இப்படி பிஞ்சு குழந்தைகளை கொல்வதற்று மனம் வருமா என்ன???? :( :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

 

இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார்.

 

மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

அண்மையில் ஈழத்து வம்சாவளி பெண் ஒருவரும் இவ்வாறு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

 

 

http://www.bbc.co.uk/news/uk-england-london-29759591

 

 

குறிப்பிட்ட இரண்டு செய்திகளில்.....இரண்டாவது செய்திக்கு கணவனே காரணமென சொல்கின்றார்கள்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளைப் பார்க்க மனம் பதைக்குது

 

 

அண்மையில் இங்கு ஒரு தமிழ் பெண்ணை மணந்திருந்த வேற்றின ஆண் ஒருவரும் தன் இரு பிள்ளைகளைகளையும், தன்னையும் காருக்குள் வைத்து தீமூட்டி கொன்றும் தற்கொலை செய்தும் உள்ளார்.

அவரது மன நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது! :o

Link to comment
Share on other sites

Mum killed herself and two daughters with poison after struggling to live with husband's parents
Heena Solanki, 34, was found dead in her bed alongside Jasmine, nine, and Prisha, four, by her widower at their home last year
 
INS%C2%A3%C2%A3%C2%A3Woman-laboratory-techn
Tragic: Heena Solanki killed herself and her two young daughters, Jasmine, aged nine, and Prisha, aged four,
 

A mother poisoned herself and her two young daughters after struggling to live with her husband's parents, an inquest heard today.

Heena Solanki, 34, was found dead in her bed alongside Jasmine, nine, and Prisha, four, by her widower at their home in Ruislip, west London.

An inquest heard today that that police and paramedics who went to the scene were forced back by poisonous fumes.

None of her family attended the hearing but a statement was read out from her widower, Kalpesh Solanki, in which he spoke of his surprise at his wife's actions.

"Prior to her death I believed that Heena was happy and content," he said. "We lived a nice life with our two children, Jasmine and Prisha.

"The only thing that I was aware of that made her unhappy was that we lived with my parents.

"This issue got her down at times but it's the only issue I can think of."

He added that they had decided to move out but had not yet told his parents.

Mr Solanki said his Indian-born wife had not shown signs of depression and had never talked of taking her own life.

He added: "There were obviously things she didn't talk to me about which I didn't know. I'm aware of that now."

But he added that there was "no indication to me or anyone else that I'm aware of that Henna was so unhappy that this would be her solution".

 

FacebookHeena-Solanki-with-Daughter-Jasmin.jpg
Heena Solanki is pictured with daughter Jasmin  

 

The inquest heard from Mrs Solanki's friend, Branali Chambhare, who said she had confided in her that "her father-in-law was a bit cranky and a bit problematic".

She added that she had cried about her problems with him on one occasion but did not think she was depressed.

Mrs Chambhare said her friend had also clashed with her husband and his parents about their daughters' studies as "she pressurised her children".

"I think her in-laws and husband didn't like it at all," she added.

She said Mrs Solanki never spoke of being depressed or harming herself but used to say she wanted to go and live in India with her children.

Detective Sergeant Simon Rogers, of the Metropolitan Police's homicide assessment team said officers were called on the evening of April 12 last year with initial reports that a third party might have been involved.

 

FacebookKalpesh-Jasmin-and-Heena-Solanki.jpg
Heena and husband Kalpesh can be seen with daughter Jasmin  

 

Only firefighters wearing specialist breathing equipment were allowed on the scene where a suicide note was also found, the contents of which were not detailed in court.

Post-mortem examinations found all three died of substance intoxication.

He concluded that Mrs Solanki took her own life while Jasmine and Prisha were both unlawfully killed.

A statement from the girls' schools described Jasmine as a "normal, healthy, happy child" while Prisha was said to be "very happy", with no indications of any troubles at home for either.

Asked to comment as she left the inquest, Mrs Chambhare said: "They were a happy family and it's a sad thing."

http://www.mirror.co.uk/news/uk-news/mum-killed-herself-two-daughters-4500492?ICID=FB_mirror_main

 

Link to comment
Share on other sites

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை

இந்த அழகிய  முகங்களை விரும்பாதவர் உண்மையில் மனித இனமாக இருக்கமுடியாது..

 

 

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

 

சரி

பிழை

தவறுகளுக்குப்பால்......

அந்த தாய்  தகப்பன் மகனில் வைத்திருக்கும் அன்பு கூட

இவர் தனது செல்வங்களில் வைத்திருக்கவில்லை

வைத்திருந்தால்  எங்காவது உயிர்வாழ வழி செய்திருப்பார்........ :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்தெரியாத பெண்களுக்கு இந்தப்பெண்  ஒரு உதாரணம்.

Link to comment
Share on other sites

இத்தலைப்பில் குறித்த பெண்மீது கோபித்து கருத்தெழுதியவர்களுக்கு,
 
மன அழுத்தம் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ? அதன் தாக்கம் எத்தகையது என்பது பற்றி தெரியுமா ? 
 
தமிழர்களில் பலர் இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலைகள் செய்திருக்கிறார்கள். இத்தகைய இழப்புகளுக்கான மாற்றீடு அல்லது மருத்துவம் பற்றி எங்கள் சமூகத்தின் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் ஏதாவது செய்துள்ளார்களா ? அல்லது உதவியிருக்கிறார்களா ?
 
மன அழுத்தம் கான்சரை விடவும் கொடியது.  கான்சருக்கு ஓரளவு மருத்துவ வசதி இருக்கிறது. மன அழுத்தத்திற்கான மருத்துவ வசதிகள் மிக குறைவு. உடனடி நிவாரணிகள் மட்டுமே இருக்கிறது.குறிப்பாக தலையிடிக்கும் போது மாற்றீடாக பனடோல் போலவே.
 
இது பற்றி ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். தமிழர்களில் குறிப்பாக பெண்கள் மன அழுத்தத்தால் பாதிப்புற்றிருக்கிறார்கள் நிறையவே. மரணமும் இல்லை வாழ்வும் இல்லாத போராட்டமே மன அழுத்தத்தால் பாதிப்புற்றோரின் நிலமை.
 
இதுபற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்ற பலநாள் எண்ணம் இச்செய்தியை பார்த்த பிறகு இங்கு எழுதப்பட்ட கருத்துகளையும் வாசித்த பிறகு அவசரமாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. 
 
கருத்துக்களை விதண்டாவாதமாக அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு தெரிவியுங்கள். அதுவே மாற்றீடாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் இரண்டு பிள்ளைகளுடன் தனியாகிறாள்.....
இரண்டு பிள்ளைகளின் தந்தை?

ஒரு பெண்ணால் எந்தளவு சுமையை சுமக்க முடியுமோ அதற்கும் மேலான சுமையை இந்த சமூகம்  அவள்மீது சுமத்துகிறது.

வீட்டு கைதிகளாக ஆயிரத்திற்கும் மேலான ஈழ பெண்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்.
பார்பவர்கள் அவர்களுக்கு அறிவில்லை என்று எதேட்சையாக சொல்லிவிட்டு போக முடியும் ஆனால் இப்படியான தட் கொலைகளைதான் அவர்கள் தவிர்த்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பிள்ளைகளை நேசித்ததன் காரணம்தான் அந்த பிள்ளைகளையும் கொல்ல வேண்டும் என்று ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது.
ஆணாதிக்க சமூகம் அவர்களையும் ஒருநாள் நிர்கதி ஆக்கிவிடும் என்ற அச்சத்திற்கு. இந்த உலகில் என்னா நிவராணம் அல்லது நிர்ச்சைய தனம் இருக்கிறது?

இப்போது இந்திய வெறியர்கள் பெண்கள் பிரியும்போது ..... அல்லது பிரிந்த நிலையில் இன்னொரு ஆணுடன் உறவு ஏற்படும்போது. தங்களோடு இருந்த நாளில் எடுத்த அந்தரங்கமான படங்கள் வீடியோ க்களை இணையத்தில் விடுகிறார்கள்.
எவளவு மன உளைச்சலை உண்டாக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன இறுக்கம்.. மன அழுத்தம்.. மன விரக்தி.. மனநோய்..இவை எல்லாமே ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. பெண்களால் மன அழுத்தம்.. இறுக்கத்துக்கு ஆளாகி மன விரக்தி அடைந்து.. தற்கொலை செய்த ஆண்களும் உளர். அதேபோல் ஆண்களால் மன இறுக்கம்.. அழுத்தம் ஆளாகி மன விரக்தி அடைந்து பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

இவை எல்லாமே அறியாமையின் விளைவு ஆகும். குறிப்பாக மேற்கு நாடுகள்.. மனப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பல மார்க்கங்களை இனங்காட்டுகிறார்கள். மனம் விட்டுப் பேச.. பழக.. வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கவுன்சிலிங் கொடுக்கிறார்கள். கணவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு சலுகைகளுடன் பிள்ளைகளை பராமரிக்க நிதி மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இப்படி எண்ணற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் அறியாமையால் எடுக்கும்.. முடிவுகளுக்கு தீர்வு என்பது அவர்களின் அறியாமையை போக்குவது என்பதே ஆகும். இதனை அவர்களைச் சூழ உள்ள உறவுகள் நண்பர்கள் நண்பிகள் தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

 

பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவது கூட மன இறுக்கம்.. பாரம்.. மன அழுத்தம்.. மனச் சிதைவில் இருந்து விடுபட நல்ல மார்க்கமாகும். அத்தோடு கோவில்கள் வழிபாட்டிடங்கள் என்று சமூக ஒன்று கூடல்களில்  பங்கேற்று கூடிப் பழகுதல் கூட மனதை இலகு படுத்த உதவும். குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே பேசித் தீர்வு காண வேண்டும். இன்றேல்.. குடும்ப வைத்தியரூடாக.. பிரச்சனைகளை அடுத்தமட்டத்திற்கு தெரியப்படுத்தி கவுன்சிலிங் மூலம் தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டும்.

 

இதில் ஆண்.. பெண் என்ற சண்டைக்கு பாகுபாட்டுக்கு இடமில்லை. சிறுவர்கள் கூட பெரியவர்களுக்குரிய விளையாட்டுக்களை விளையாடப் போய் மன அழுத்தம்.. இறுக்கத்துக்கு ஆளாகி.. விளையாட்டுக்களுக்கு.. சமூக வலைகளுக்கு அடிமையாகி.. அவற்றை கட்டுப்படுத்த போக.. தம்மை தாமே துன்புறுத்தும்.. மனச் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவற்றிற்கு விடை.. சரியான ஆலோசனைகளோடு அமைந்த.. அணுகுமுறைகளே அன்றி.. பால்.. இன.. பிரிவு வாதங்கள் அல்ல..!!  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிலைவாதம்.. இந்த அளவுக்கு வந்து நிற்குது.... :lol:

 

Link to comment
Share on other sites

வீட்டு கைதிகளாக ஆயிரத்திற்கும் மேலான ஈழ பெண்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்.

உண்மை. ஒரு தடவை ஒரு அக்காவுடன் கதைத்த போது class க்கு சென்றால் வேறு ஆண்களுடன் கதைத்து விடுவேன் என்று கூறி தன்னை பிரெஞ்சு படிக்க தனது கணவன் விடுவதில்லையாம் என்று கூறினார்.

அதே போல் போன வருடம் பிரெஞ்சு படிக்க சென்ற போது அங்கு படிக்க வரும் ஒரு அக்கா(அன்ரி) தலையில் பல காயங்களுடன் வருவார். எமது ஆசிரியை கவனித்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டபோது கணவன் அடித்தது என்று கூறியிருந்தார். அவருக்கு அவ்வளவாக பிரெஞ்சு கதைக்க தெரியாது. எனவே எமது ஆசிரியை இன்னொரு தமிழ் பெண் மூலம் என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து கொண்டார். வீட்டில் கணவன் கொடுமைப்படுத்துவது, அடிப்பது என்பவை தெரிய வந்தது.

இது பற்றி அவரது கணவனை தான் எச்சரிக்கை செய்யவா, police இல் புகார் கொடுக்க சம்மதமா? விவாகரத்து பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விகளையும் முன்வைத்த போது ஆரம்பத்தில் ஆம் என்று சொன்ன அப்பெண் பின்னர் பயத்தில் வேண்டாம் என்று கூறி விட்டார். class முடிந்த பின்னர் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. இப்பொழுது அவர் நிலை என்ன என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

துளசி, நீங்கள் எழுதியது போல ஆயிரக்கணக்கான விடயங்கள் இருக்கிறது. இதனை இங்கு பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆ ஊ என்றால் ஆண்களும் பெண்களால் இறந்தார்கள் என சொல்லி சப்பைக்கட்டு கட்டிக்கொள்வார்கள். 
 
மன அழுத்தம் என்பதனை வகைப்படுத்தலில் கூட தங்கள் வெறும் புத்தக அனுபவத்தின் படியே சிலர் விளக்கியும் விளங்கியும் கொள்கிறார்கள். 
 
ஒரு மொழியைக்கூட ஒரு பெண் படித்தால் தன்னைவிட அதிகம் படித்துவிட்டாள் என்பதற்காகவே அவளது ஆழுமையை அடக்கி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சாகடிக்கும் ஆதிக்கம் மிக்கவர்களின் நடுவே வாழும் பெண்கள். அவர்கள் பற்றி வெறும் புத்தகப்படிப்பை மட்டுமே முடிபாகவும் விதியாகவும் விதிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு புரியப்போவதில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக  மனம் ஒரு நிலையில் இல்லாது பாதிக்கபடும் போது இவ்வாறன முடிவுகளைத் தான் எடுப்பார்கள் என்பது  அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய விடையம்..ஆனாலும் தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு எதற்காக ஒன்றும் அறியதாத அப்பாவிப் பிள்ளைகளை கண்டதையும் குடுத்து கொல்கிறார்கள்..அந்த பிள்ளைகள் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை..உண்மையாக பிள்ளைகள் யாரும் அற்றவர்களாக இருந்து கஸ்ரப்பட்டு கொண்டு இவ்வாறன முடிவுகளை எடுப்பவர்களாக இருந்தால் கூட சில விடையங்களை நம்பலாம்.

 

ஒரு பொறுப்பு உணர்வுள்ள தாய் என்றால் இவ்வாறு நடந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.எங்கள் நாட்டில் இல்லாத பிரச்சனைகளா,அந்தப் பெண்கள் சந்திக்காத பிரச்சனைகளையா இவர்கள் சந்திக்கிறார்கள்...கணவர் சரியில்லயா..அவர்களோடு இருக்கப் பிடிக்க இல்லயா...பெற்றோருடன் தானே இருக்க விரும்பிறீர், நீர் இரும் என இருக்க விட்டுட்டு இப்படியானவர்கள் தங்கள் பாட்டுக்கு போய் இருந்து வாழ்ந்திருக்கலாம்..அல்லது அவர்களது நாட்டுக்குத் தன்னும் போய் இருக்கலாம் தானே...இதில் சம்பந்தப்பட்டு இருக்கும் பெண் ஒன்றும் வீட்டுக்குள் அடை பட்டுக் கிடந்தவர் போல் தெரியவில்லையே.வேலைக்கு போய் வந்திருக்கிறாவே...தான் பணி புரிந்த பாடசாலையில் தன் இயலாமையச் சொல்லி இருந்தால் கூட அவர்களாவது பிள்ளைகளின் எதிர் காலம் கருதி ஏதாவது உதவி கண்டிப்பாக செய்து கொடுத்து இருப்பார்கள் தானே..

 

இங்கும் இவ்வாறன குடும்பங்கள் இருக்கிறார்கள் கேட்டால் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு விதமான சரியும் இருக்கும்,பிழையும் இருக்கும்...சிலர் வெளியில் சொன்னால் வெக்கம் பின்னர் வெளியில் கணவருடன் போகும் போது உறவுகள் ஒரு மாதிரி பார்ப்பார்கள்,பேசுவார்கள் என்றதற்காகவே மௌனமாக வாழுற பெண்களும் இருக்கிறார்கள்..மற்றப்படி ஆண்கள் செய்வது எல்லாம் சரி என்றும் சொல்ல வர இல்ல.நாங்களும் பல தரப்பட்ட மன உணர்வை,பேச்சுக்களை உடையவர்வர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் நிறையவே வந்து போய் கொண்டு தான் இருக்கிறது.இனிமேல் வேண்டாம் என்ற அளவுக்கு கூட மனம் காயப்பட்டு இருக்கலாம்.அதற்காக யாரையும் கஸ்ரப்படுத்த விரும்ப இல்ல.தாங்கள் செய்யும் எந்த தவறையும்,பேச்சுக்களையும்  தப்பு என்று உணர்ந்து கொள்ளதவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்,செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனார் மாமியார் பிரச்சினை என்றால் தனியாகப் போய் வாழ்ந்திருக்கலாம். ஜேர்மனியில் இருந்து வாறவைக்கு காசு குடுக்கினம். இவவுக்கு குடுக்க மாட்டினமா??

எனக்கு கணவனிலும் டவுட் இருக்கு. இந்த ஆளும் தாய் தகப்பன் பக்கம்தான் நின்றிருக்கிறார்.

 

ஏன் கனடாவில இருந்து வந்தாலும் காசு குடுக்கினம் இசை. :D

 

என்ன தவறு என்றாலும் மற்றவருக்குத் தண்டனை கொடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

துளசி, நீங்கள் எழுதியது போல ஆயிரக்கணக்கான விடயங்கள் இருக்கிறது. இதனை இங்கு பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆ ஊ என்றால் ஆண்களும் பெண்களால் இறந்தார்கள் என சொல்லி சப்பைக்கட்டு கட்டிக்கொள்வார்கள். 
 
மன அழுத்தம் என்பதனை வகைப்படுத்தலில் கூட தங்கள் வெறும் புத்தக அனுபவத்தின் படியே சிலர் விளக்கியும் விளங்கியும் கொள்கிறார்கள். 
 
ஒரு மொழியைக்கூட ஒரு பெண் படித்தால் தன்னைவிட அதிகம் படித்துவிட்டாள் என்பதற்காகவே அவளது ஆழுமையை அடக்கி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சாகடிக்கும் ஆதிக்கம் மிக்கவர்களின் நடுவே வாழும் பெண்கள். அவர்கள் பற்றி வெறும் புத்தகப்படிப்பை மட்டுமே முடிபாகவும் விதியாகவும் விதிக்கும் புத்தகப் பிரியர்களுக்கு புரியப்போவதில்லை.

 

 

இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம். ஆண்களின் துணை இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைக்கு எப்போது பெண்கள் வெளியே வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

ஆண்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கட்டும்.

பெண்கள் நீங்கள் விட்டில் பூச்சிகளாக இருக்காமல் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது என்பதை நிரூபித்து  வெளியே வாருங்கள்.

எடுத்ததற்கெல்லாம் ஆண்களைக் குறை கூறும் பல்லவியைப் பாடாமல் அடுத்த கட்டம் என்ன என்பதை யோசியுங்கள்.

ஒரு ஆணின்  துணை இல்லாமல் இந்த உலகில் அதுவும் பெண்களுக்கே அதிக சுதந்திரம் அளிக்கும் மேற்குலகில் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? வாழ்ந்து காட்டுங்கள் என்பதையே நாங்களும் கோடிட்டுக் காட்டுகின்றோம் :icon_idea: 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம். ஆண்களின் துணை இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைக்கு எப்போது பெண்கள் வெளியே வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

ஆண்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கட்டும்.

பெண்கள் நீங்கள் விட்டில் பூச்சிகளாக இருக்காமல் உங்களாலும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை உள்ளது என்பதை நிரூபித்து  வெளியே வாருங்கள்.

எடுத்ததற்கெல்லாம் ஆண்களைக் குறை கூறும் பல்லவியைப் பாடாமல் அடுத்த கட்டம் என்ன என்பதை யோசியுங்கள்.

ஒரு ஆணின்  துணை இல்லாமல் இந்த உலகில் அதுவும் பெண்களுக்கே அதிக சுதந்திரம் அளிக்கும் மேற்குலகில் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? வாழ்ந்து காட்டுங்கள் என்பதையே நாங்களும் கோடிட்டுக் காட்டுகின்றோம் :icon_idea: 

 

 

பெண்கள் தனியாக வாழமுடியும்.
ஆண்களும் வாழமுடியும். அதில் யாருக்கு என்ன லாபம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை.
 
இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் ... பேரு வலிக்கு தன்னை உட்படுத்தி பெண் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுக்கிறாள். இரண்டு பேர் என்பது இப்போது நான்கு  பேர் என்று ஆகிறது.
 
இப்போ கணவன் விட்டு விலகி போகிறார் .......
இரண்டு பிள்ளைகள்?
இவை யாருடையவை?
ஏன்  இந்த சுமைகள் அந்த பெண் மீது சுமத்த படுகிறது?
 
ஒரு பெண்ணின் இளமை காலத்தை காதல் கலியாணம் கத்தரிக்காய் என்று அழித்துவிட்டு இரண்டு உயிர்களையும் அவள் தலையில் கட்டிவிட்டு. 
தனியாக வாழ்ந்து காட்டுங்கள் ??? என்பது ஆணாதிக்கத்தின் அருவெறுப்பான அதி உச்சம். 
 
எதை வைத்து பெண்கள் தனியாக வாழ முடியாது என்று எண்ணுகிறீர்கள்??
Link to comment
Share on other sites

மருது.. பிரிந்து செல்லும் பெண்களுக்கு தம் பிள்ளைகளை வளர்க்க விருப்பம் இல்லாவிட்டால் கணவர்களிடம் விட்டுவிடலாம். கணவர் சரியில்லாவிட்டால் அரசாங்கமே வளர்க்கும்தானே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.