Jump to content

'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே'


Recommended Posts

ஆக்ரா என்றதும் உடன் நினைவுக்கு வருவது தாஜ்மஹால். இப்போது அங்கு இன்னொரு இடம் அங்கு வருபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அது 'ஷிரஸ் ஹாங் அவுட் காஃபே'. இது தாஜ்மஹால் கேட்வே எதிரில் இருக்கும் ஃபதேஹாபாத் சாலையில் அமைந்திருக்கிறது.
 

acid%20woman%20cafe%201.jpg

இந்த காபி ஷாப் சமீபத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ளது. என்ன சிறப்பு என்றால் ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களுக்கான 'ஸ்டாப் ஆசிட் அட்டாக்' எனும் அமைப்பும் சான்வ்  (Chaanv) எனும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த காபி ஷாப்பை தொடங்கி உள்ளன.

ஆசிட் வீச்சுக்கு முன் வண்ணமயமாக இருந்த அவர்களது வாழ்க்கை திடீரென ஒரு நொடியில் இருண்டு விடுகிறது. அதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவர்களது முகம் பார்ப்பதற்கு மிகவும் கொடுரமாக இருக்கும். மற்றவர்களின் பார்வையை இவர்களும் எதிர்கொள்வது மிகவும் துயரமான நிகழ்வுதான்.
 

acid%20woman%20cafe%20.jpg

ஆசிட் வீச்சுக்கு பின் அப்படியே வீட்டில் முடங்கி விடாமல், இனி ஒரு முறைகூட இப்படி ஒரு கொடுரச் செயல் நிகழக்கூடாது என்றும் அதை வலியுறுத்தவும்தான் இது போன்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.
 
ரிது (Ritu) என்ற ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வெப் சைட் மூலம் நிதியை சேகரித்தது சான்வ் தொண்டு அமைப்பு. ரிது மீது ஆசிட் தாக்குதல் நடந்ததும் அவரது குடும்பம் தெருவிற்கு வந்துவிட்டது. குடும்ப பாரம் முழுவதும் ரிது மீது வீழ்ந்தது. இந்த காஃபே ஆரம்பித்ததின் மூலம் ரிது போன்ற ஆசிட் வீச்சினால் பாதித்த இளம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வருகிறது. இப்போது இவர்கள் யாருடைய உதவியின்றி வாழ்கிறார்கள்.
 

acid%20woman%20cafe%202.jpg

இதுபோன்ற காஃபே ரெஸ்டாரண்டுகளை அதிக அளவில் திறக்கவேண்டும் என்று சான்வ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த காபி ஷாப்பில் படிப்பதற்கு என தனி அறை இருக்கும். இங்கு பெண்களின் சாதனைகள் பற்றிய புத்தகங்கள் இருக்கும். ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்த ரூபா என்ற பெண் வடிவமைத்த ஆடைகளைக் கொண்டு இங்கு ஃபோட்டோ ஷூட் நடந்தப்பட்டுள்ளது. புகைப் படக் கலைஞனர் ராஹுல் ஷர்மா (Rahul Saharan) ஆசிட் வீச்சினால் பாதித்தப் பெண்களைப் பற்றி ஒரு டாக்குமன்டரி படம் எடுக்கிறார்.

விரைவில் டெல்லி, கான்பூர், லூதியானா நகரங்களிலும் இதுபோன்ற காஃபி ஷாப் திறக்க திட்டமிட்டுள்ளது சான்வ் தொண்டு அமைப்பு. இங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசிட் வீச்சினைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்கிறது சான்வ். இது ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்த இளம் பெண்கள் தங்களது  கனவை நனவாக்க ஒரு நல்ல தளம்.

-என்.மல்லிகார்ஜுனா

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33824

Link to comment
Share on other sites

இப்படி அசிட் வீச்சினால் பாதிக்கபட்ட பெண்கள் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்களா? அல்லது உலகம் முழுவதும் இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.