Jump to content

மகிந்த ராஜபக்ச முன்னர் எப்போதையும் விட தற்போது அரசியல் ரீதீயாக பலவீனமான நிலையிலுள்ளார் - அலன்கீனன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் - இணைப்பு 2

Alan_Keenan_CI.jpg

01:19
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னர் எப்போதையும் விட தற்போது அரசியல் ரீதீயாக பலவீனமான நிலையிலுள்ளதாக தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர் அலன்கீனன்-அவரின் தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்;கு சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியே அமையப்போகின்றது, மிகவும் விலைகொடுத்து பெறப்பட்ட வெற்றியை தன்னாலேயே உறுதிப்படுத்த முடியும் எனவும்-மேற்குலகிலும் உள்நாட்டிலும் உள்ள சதிகாரர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்க்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தன்னாலேயே தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கப் போகிறார் என குறிப்பிட்டுள்ளார்.


டிடபில்யூ.டிஈ செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்;ள சர்வதேச நெருக்கடி குழுவை சேர்ந்த ஆய்வாளர் அலன்கீனனின் பேட்டி வருமாறு


கேள்வி—ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஒன்றிற்க்கு அழைப்பு விடுக்கவேண்டும்?
 

பதில்-- சமீபத்தில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தல்களில் கிடைத்துள்ள முடிவுகள் குறித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது ஆலோசகர்களும் கவலையடைந்துள்ளனர் போல தோன்றுகின்றது,


செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஊவா மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிய பெரும்பான்மையையே பெற்றுள்ளது. முன்னர் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது அதன் வாக்குகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆச்சரியப்படத்தக்க விதத்தில் வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவே வெற்றிபெறுவதற்கான உறுதியான வாய்ப்புள்ளபோதிலும்,ராஜபக்ச தேர்தலை பிற்போட்டால் அது அவரது வெற்றியை பாதிக்கும் என்பது அனேக ஆய்வாளர்களின் கருத்தாகஉள்ளது.

கேள்வி- ராஜபக்சவின் ஆதரவு ஏன் குறைந்து வருகின்றது?


பதில்- வாழ்க்கை செலவு உயர்வு மற்றும் சமாதானம் மூலமாக உரிய பலாபலன்கள் கிடைக்காதது குறித்த அதிருப்தி அதிகரித்துவருகின்றது, சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடன் யுத்தத்திற்க்கு பின்னரான பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்.ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட்ட அரசதரப்பினரிடையே ஊழல் என்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.


அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும்,ஆளும் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கரிசனைகளாலும் ஜனாதிபதியின் ஆதரவில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.


ராஜபக்சாவிற்க்கு தமிழர்கள் மத்தியில் என்றும் ஆதரவு இருந்ததில்லை,பௌத்த குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதற்க்கு முயலாமல் அரசாங்கம் சகித்துக்கொண்டுள்ளதால் அந்த சமூகத்தினர் மத்தியிலும் ஜனாதிபதிக்கான ஆதரவு குறைவடைந்துவருகின்றது.

கேள்வி- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடலாமா குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளதே- இது குறித்து உங்கள் கருத்தென்னஃ


பதில்--ராஜபச்ச அரசாங்கத்தினால் 2010 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தம்,ராஜபக்சாவிற்க்கு இரண்டு தடவை தான் போட்டியிடலாம் என்ற தடையை நீக்கவில்லை-எதிர்கால ஜனாதிபதிகளுக்கே அது பொருந்தும் என சட்டநிபுணர்கள் வாதிடுகின்றனர்.


அவ்வேளை 18 வது திருத்தத்தை நிறைவேற்றிய ராஜபக்சாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பாராளுமன்றம்-அவர் மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் என தெளிவாக நம்பியது,


இதேவேளை இந்த விடயத்தில் இலங்கை உச்சநீதிமன்றம்-ராஜபக்ச போட்டியிடுவதற்க்கு எதிராக தீர்ப்பளிக்கும் அல்லது கருத்து கூறும் என எவரும் இலங்கையில் எதிர்பார்க்காத நிலையே காணப்படுகின்றது.


தற்போதைய பிரதமநீதீயரசர் ஜனாதிபதி மீது வெளிப்படுத்தும் விசுவாசம் நன்கு அறியப்பட்டவிடயம்.முன்னாள் பிரதம நீதீயரசர் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 2013 இல் இவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

கேள்வி- ராஜபக்சவிற்க்கு எதிராக யார் போட்டியிடப்போகின்றனர்-அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறுள்ளன?


பதில்- பலவருடங்களில் முதற்தடவையாக ராஜபக்ச அரசியல் ரீதீயாக பலவீனமான முறையில் உள்ளார் என தோன்றுகிறது-


எனினும் எதிர்க்கட்சிகள் தமக்குள் பிளவபட்டுள்ளதுடன் தமது தந்திரோபாயம் குறித்து தெளிவில்லாத நிலையில் உள்ளன.


எதிர்க்கட்சிகளை, நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கும்- அரசமைப்பபு மாற்றங்களை மேற்கொள்ளும் பொது வேலைதிட்டத்தின் கீழ் இணைக்கும் -பொதுவேட்பாளர் குறித்த பொதுக்கருத்தை ஏற்படுத்துவதற்கான,முயற்சிகள் இடம்பெறுகின்றன.


முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தன்னுள் பிளவுபட்டுநிற்கின்றது, அது தனது சொந்த வேட்பாளரை நிறுத்த விரும்புவது போல் தோன்றுகிறது-இது எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும்-மூன்று-நான்கு வேட்பாளர்கள் ராஜபக்சாவிற்க்க எதிராக போட்டியிடலாம்.

கேள்வி-இலங்கையில் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன-


பதில்--முதலாவது வாக்களிப்பில் எந்தவேட்பாளருக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத பட்சத்தில்-தேர்தல் இரண்டாம் சுற்றிற்க்கு செல்லும்- இலங்கையில் இது ஒருபோதும் நடைபெற்றதில்லை.


இரண்டாவது சுற்றிற்க்கு தேர்தல்சென்றால் ஏற்கனவே வன்முறை மிகுந்ததாக அமையப்போகின்ற இலங்கை தேர்தல்களை இது மேலும் வன்முறைமிகுந்ததாக்கும் என்ற அச்சங்களும் காணப்படுகின்றன.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது வலுவான குடும்பமும் இலகுவில் அதிகாரத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள் என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.


கேள்வி-தேர்தல் சிறுபான்மை தமிழர் மீதும். நல்லிணக்க முயற்சிகள் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்;-
 

பதில்- ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்க்கு சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியே அமையப்போகின்றது, மிகவும் விலைகொடுத்து பெறப்பட்ட வெற்றியை தன்னாலேயே உறுதிப்படுத்த முடியும் எனவும்-மேற்குலகிலும் உள்நாட்டிலும் உள்ள சதிகாரர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்க புத்துயிர் கொடுப்பதற்க்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தன்னாலேயே தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கப்பபோகிறார்.


சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான தற்போதைய ஒடுக்குமுறைகள் மேலும் தீவிரமடையலாம்-குறிப்பாக வடகிழக்கில் பணியாற்றுபவாகள் மீதான ஒடுக்கமுறைகள்.


தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதநிதிகளுடன் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன,

கேள்வி-தேர்தல்கள் பரிசுத்த பாப்ரசரின் இலங்கை விஜயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?


பதில்-தனது விஜயங்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக தேர்தல் நடைபெறும் வேளைகளில் குறிப்பிட்ட நாட்டிற்க்கு விஜயம் மேற்கொள்வதை பாப்பரசர் தவிர்ப்பது வழமை-இலங்கையில் தேர்தல்கள் ஜனவரி 10 திகதி நடைபெறலாம் என்பது ஒரளவிற்க்கு உறுதியாக தெரிகின்ற சூழ்நிiயில்.(ஜனாதிபதியின் ஜோதிடரால்குறிக்கப்பட்ட திகதி) பரிசுத்த பாப்ரசரின் விஜயம் மீளதிட்டமிடப்பட வேண்டியது என்றே தோன்றுகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112856/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.