Jump to content

1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமையை கனடா தற்போது எதிர்நோக்கி வருகின்றது – கோதபாய


Recommended Posts

gotta_CI.jpg

1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112852/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில இருக்கிற பிரச்சனை வேறு. இலங்கையில் உள்ள பிரச்சனை வேறு. தமிழர்கள் மீது இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் சிங்களவர்கள் மேற்கொண்ட அடக்குமுறையின்.. கலவரங்களின் தொடர்ச்சியே.. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம். கனடா இன்று அனுபவிக்கும் தீவிரவாதம் என்பது அது நாட்டுக்கு வெளியில் வைத்துக் கொண்ட அநாவசிய தலையீடுகளின் விளைவு.

 

1980 களுக்கு பின்னர் அமெரிக்கா கிரீன்காட் பெற்ற நீரு.. கனடாவுக்கு போதனை பண்ணினது காணும். அடங்கிக் கிடவும். பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய...போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளிற வழியை பாரும். :):icon_idea:

Link to comment
Share on other sites

 

gotta_CI.jpg

உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112852/language/ta-IN/article.aspx

 

 

கோதபாய கூறியதில் தவறேதும் இல்லை. சர்வதேச சமூகம் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் பாராமுகமாக இருந்தது தவறானதே. இன்று கனடா பாராளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே 1956 ல் பாராளுமன்ற முன்றலில் புத்தபகவானின் போதனைகளை கடைப்பிடித்து முற்றிலும் அகிம்ஸை  முறைப்படி சத்தியாகிரகம் இருந்த தமிழ் தலைவர்களின் மீது சிங்கள பயங்கரவாதிகளால் மேற்கொள்ளபட்ட தாக்குதலில் அவர்கள் இரத்தம் சிந்தியபடி பாராளுமன்றத்திற்குள் சென்றபோது அவர்களை துரத்தி துரத்தி மேற்கொள்ளபட்ட பயங்கரவாத செயல்களையும் தொடந்து தமிழ் மக்கள் மீது அதே பாணியில் மேற்கொள்ளபட்ட பயங்கரவாத செயல்களை சர்வதேச சமூகம் கண்டு கொள்ளாததாலேயே அந்த பயங்கரவாதிகள் உற்சாகம் அடைந்து தமிழ் மக்களை கொன்றால் எவரும் கேட்க ஆளில்லை என்பதை புரிந்து லட்சக்கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தார்கள். ஆகவே கோதபாய கூறியதில் தவறேதும் இல்லை.

 

Link to comment
Share on other sites

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

பயங்கரவாதம் கோத்தாவின் முஞ்சியிலே அப்பிக்கிடக்கிறது எங்கு எது நடந்தாலும் பயங்கரவாதம்? பயங்கரவாதம்? என்று அதுவும் ஓடித்திரிகிறது.  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

பயங்கரவாதம் கோத்தாவின் முஞ்சியிலே அப்பிக்கிடக்கிறது எங்கு எது நடந்தாலும் பயங்கரவாதம்? பயங்கரவாதம்? என்று அதுவும் ஓடித்திரிகிறது. :icon_mrgreen:

இனிமேல் இறாலே சாப்பிறதில்ல என்டு முடிவெடுத்திட்டன்

Link to comment
Share on other sites

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

 

 

உண்மையாகவா.....??? உவ்வாக்

 

 

இனிமேல் இறாலே சாப்பிறதில்ல என்டு முடிவெடுத்திட்டன்

 

எதுக்கும் இன்னொரு முறை இத் தகவல் சரியா என்று ஆராய்ந்து போட்டு முடிவெடுப்பம் என்ன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் எதுக்கு ஆராய்ச்சி ! இறாலைக் கழுவும்போது அதன் தலையின் பின் பிடரியில் பென்சில் கூர் போன்ற ஒரு பகுதியை அகற்றிவிட்டுத்தான் கழுவுறது...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

 

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

 

அப்பாடா

பலருக்கும்

இறால் சீ

பால் வார்த்தாய் ராசா.... :lol:  :D

Link to comment
Share on other sites

அப்பாடி... இனி வழக்கம் போல பின் பக்கத்தினை மட்டும் வெட்டி எறிந்து விட்டு சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

பலருக்கும்

இறால் சீ

பால் வார்த்தாய் ராசா.... :lol:  :D

 

இறாலுக்கு ஒரு பழக்கம் உண்டு. உடலைச் சுருட்டி.. வாயால் தன் பின் பக்கத்தை துப்பரவு செய்வது. அதன் போது அதன் மூஞ்சியில் மலம் அப்ப வாய்ப்புண்டு. ஒருவேளை அதைச் சொன்னாரோ தெரியாது. எதுஎப்படியோ மூஞ்சியில் மலம்..என்பது கோத்தாவுக்கு அப்படியே பொருந்துது.  :lol:  :)

Link to comment
Share on other sites

குரங்கு தின்ற கோப்பி பழத்தை அது கழிவு ஆக்கியவுடன் அதைக் கழுவி கோப்பி விதையை எடுக்கிறார்கள். :o அதை அரைத்து விற்கினம் இனியில்லை எண்ட விலைக்கு.. :wub: இறால் என்ன பிரமாதம்.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

 

தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கு என்றுமாம்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசு.. என்டை பிள்ளை.. உங்களைப்போல அவதார  புருஷனல்ல நான். நீங்கள் தமிழகத்தின் விடிவெள்ளி. நாங்களெல்லாம் பொதுஜனம். அண்ணை உங்கட பிள்ளையின்ட அருமை பெருமைககளை சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் பற்றிய தகவல் உண்மையோ பொய்யோ, கோத்த அபய விற்கான உவமானம் சிரிப்பை வரவழைத்தது.

Link to comment
Share on other sites

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது. கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை.

அது சரி உங்களை யாராவது இப்ப தற்கொலை தாக்குதலுக்கு கேட்டது போல எல்லோ உங்க கதை போகுது. யாரப்பா கேட்டது உங்களை.

Link to comment
Share on other sites

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

 

 

இறால் மலத்தை தலையில் வைத்துக்கொண்டு மணக்குது..! மணக்குது...! என்று ஓடித்திரியுமாம். இந்த உவமானத்தை பெருசுகள் சொல்லச் சிறுவயதில் கேட்டுள்ளேன். தற்போது நெடுக்காலைபோவன் அவர்கள் அதனைப் படம்போட்டு விளக்கியுள்ளதானது பெருசுகள் சொன்னது உண்மையென்றே உணர்த்தியுள்ளது. மலமானது வயிற்றுப்பாகத்தில்தான் உற்பத்தியாகித் தங்கியிருக்கும். அதன் வெளியேற்றம் பின்புறம் என்பது உண்மைதான். இறாலுக்கு வயிற்றுப்பாகம் தலையிலேதான் உள்ளது. உண்மை அறிந்து ஓங்காளம் எடுப்பவர்களே எடுங்கள். இனி இறால் வாங்காதீர்கள். நீங்கள் வாங்காதுவிட்டால் விலை குறையும். எங்கள்பாடு கொண்டாட்டம்தான். :D  :lol:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் மலத்தை தலையில் வைத்துக்கொண்டு மணக்குது..! மணக்குது...! என்று ஓடித்திரியுமாம். இந்த உவமானத்தை பெருசுகள் சொல்லச் சிறுவயதில் கேட்டுள்ளேன். தற்போது நெடுக்காலைபோவன் அவர்கள் அதனைப் படம்போட்டு விளக்கியுள்ளதானது பெருசுகள் சொன்னது உண்மையென்றே உணர்த்தியுள்ளது. மலமானது வயிற்றுப்பாகத்தில்தான் உற்பத்தியாகித் தங்கியிருக்கும். அதன் வெளியேற்றம் பின்புறம் என்பது உண்மைதான். இறாலுக்கு வயிற்றுப்பாகம் தலையிலேதான் உள்ளது. உண்மை அறிந்து ஓங்காளம் எடுப்பவர்களே எடுங்கள். இனி இறால் வாங்காதீர்கள். நீங்கள் வாங்காதுவிட்டால் விலை குறையும். எங்கள்பாடு கொண்டாட்டம்தான். :D  :lol:   

 

பாஞ்சு அண்ணன்.. இரைப்பையில் இருப்பதை மலம் என்று சொல்வதில்லை. குடலை (intestine) தாண்டி போயும் சமிபாடின்றி உள்ள கூறுகளை தான் மலம் என்பது.

 

 அதன் படி பார்த்தால்.. கூட.. இறாலுக்கு பின்னாடி தான் மலம் இருக்கனும்.. போகனும்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உங்களை யாராவது இப்ப தற்கொலை தாக்குதலுக்கு கேட்டது போல எல்லோ உங்க கதை போகுது. யாரப்பா கேட்டது உங்களை.

தற்கொலை தாக்குதலா? நானா? உந்த மனித வெடிகுண்டு மண்ணாங்கட்டி வெடிகுண்டு எல்லாம் வேண்டாமென்றுதானே மார்க்கம் வரை வந்து வாழ்கிறோம்? அண்ணே..  உந்த கட்டையில போற மனிதவெடிகுண்டு யாராவது மார்க்கம் டிம் ஹோட்டனில் வெடித்தால் பக்கத்தில் இருக்கிற எங்களுக்கும் அல்லவா மோட்சம்? பேசாமல் அபு பக்கர் அல்-பக்தாதி சிரியா கொபானியில் இந்த நாசத்தையெல்லாம் நடத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கு என்றுமாம்.  :lol:  :D

அதுதானே இந்த சுளகு பின்னங்கால் பிடரியில் அடிபட கனடா வரை ஓடி வந்து வாழுது? இங்கேயும் படக்கு படக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

 

 

எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர் போலுள்ளது. பாஸ்போட் எடுக்க எத்தனித்து உள்ளார். கட்டாயம் சிரியா போக வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டுமென்பதில்லை தானே. யாருடனும் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. தானே  சில நாட்களுக்கு முன் கார் ஒன்று வாங்கி தாக்குதல் நடாத்தி உள்ளார்.கனேடிய உளவுத்துறையின் பயங்கரவாதிகளின் பட்டியலிலும் இருக்கவில்லை. ஐஎஸ ஐ எஸ் சுடன் எந்த தொடர்பும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை. றொப் வோட் மாதிரி ஒரு றக்குக்கு அடிமையானவர். வித்தியாசம் அவர் வெள்ளை. இவர் முஸ்லிம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர் போலுள்ளது. பாஸ்போட் எடுக்க எத்தனித்து உள்ளார். கட்டாயம் சிரியா போக வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டுமென்பதில்லை தானே. யாருடனும் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. தானே  சில நாட்களுக்கு முன் கார் ஒன்று வாங்கி தாக்குதல் நடாத்தி உள்ளார்.கனேடிய உளவுத்துறையின் பயங்கரவாதிகளின் பட்டியலிலும் இருக்கவில்லை. ஐஎஸ ஐ எஸ் சுடன் எந்த தொடர்பும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை. றொப் வோட் மாதிரி ஒரு றக்குக்கு அடிமையானவர். வித்தியாசம் அவர் வெள்ளை. இவர் முஸ்லிம். :)

ISIS வட அமெரிக்காவில் பெரிதாக இல்லை என்கிறார்கள். அமெரிக்க உளவுத்துறை பெரிய அச்சுறுத்தலாக நினைப்பது, கொராசன் குரூப் Khorasan Group பற்றித்தான். நம்ம ஆர்.சி.எம்.பி. ஆட்கள், கனிஷ்கா (ஏர்இந்தியா) குண்டு வெடிப்புக்காக பிரிட்டிஷ் கொலம்பியா டங்கன் காட்டுக்குள் டெஸ்ட் பாம் வெடிக்க வைத்தபோதே மறைந்திருந்து பார்த்துவிட்டு, பிறகு வான்குவர் ஏர்போர்ட்டில் சி.பி.எயார் பிளேனில் பொம் ஏற்றுவதை தடுக்காத கில்லாடிகள். கொராசன் குரூப் சுலபமாக ஊடுருவும்.

Link to comment
Share on other sites

பாஞ்சு அண்ணன்.. இரைப்பையில் இருப்பதை மலம் என்று சொல்வதில்லை. குடலை (intestine) தாண்டி போயும் சமிபாடின்றி உள்ள கூறுகளை தான் மலம் என்பது.

 

 அதன் படி பார்த்தால்.. கூட.. இறாலுக்கு பின்னாடி தான் மலம் இருக்கனும்.. போகனும்.  :lol:  :D

தங்கள் விளக்கம் சில தவறான புரிதலைச் சரிப்படுத்தியுள்ளது. நன்றி நெடுக்கவர்களே!

 

இனிமேல் இறாலின் தலையை நீக்கவேண்டாம் என்று மனைவியிடம் சொல்லி அவ வைக்கும் சொதியையும் ரசித்துச் சாப்பிடலாம். ஆனால் கோத்தபாயாவின் தலையை நீக்காவிட்டால் முழுஇலங்கையுமே  நாறுமே...?? :(:o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.