Jump to content

என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா?


Recommended Posts

என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா?

குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நாள் அவனுக்கு வேறொரு பிரச்சினை வந்த போது மின்னலை மீண்டும் வரவழைத்து உதவி கோருகிறான். மின்னல் உதவுகிறது. சுபம்.

இந்த மாதிரியான கதைகள்தான் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் என்று யாராவது சொல்லக் கூடும். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை வேண்டுமானால் சரியான வாதம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவோ தாண்டிச் செல்கிறார்கள். மூன்று வயது குழந்தைக்கு குறைந்தபட்சம் மின்னல் எப்படி உருவாகிறது என்கிற அறிவு இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து வைத்திருக்கும் குழந்தையிடம் இந்தக் கதையைச் சொல்லிப் பாருங்கள். எந்த பாதிப்பையும் உருவாக்காது. உடான்ஸ் என்று சொல்லிவிடும். இந்தக் காலத்துக் குழந்தைகளை அழைத்து வைத்து மின்னலை வலையில் பிடிக்கிறான் என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஏதாவதொரு வகையில் அவர்களது வளர்ச்சியைத் தடுக்கிறோம் என்றுதான் பொருள்.

மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைப்பவர்களுக்கு அலீஸா கார்சனின் கதையைச் சொல்லிவிட வேண்டும்.

அலீஸா கார்சன்(Alyssa Carson) அமெரிக்கக் குழந்தை. குழந்தைதான். பதின்மூன்று வயது. ஏழாம் வகுப்பு படிக்கிற வயது. ஆனால் செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டாள். நாஸாவும் அவளுக்கு எல்லாவிதமான முன்னுரிமையையும் கொடுத்திருக்கிறது. அநேகமாக செவ்வாயில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற GK கேள்விக்கு அலீஸா கார்சன் என்ற பதிலை நாம் விரைவில் எழுதக் கூடும்.

அலீஸாவுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சுவாரசியமான பின்னணி இருக்கிறது. மூன்று வயதில் ஏதோ ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் சிலர் செவ்வாய் கிரகத்துக்கு பயணிப்பது பற்றிய ஒரு நிகழ்வைப் பார்க்கிறாள். செவ்வாய் கிரகம் பற்றி அப்பாவிடம் விசாரிக்கிறாள். அவளது அப்பா செவ்வாய் கிரகத்தைப் பற்றி விவரிக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களில் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக்கிக் கொள்வதாக முடிவு செய்கிறாள். நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் - ஆனால் அவள் அப்படி முடிவு செய்த போது அவளது வயது வெறும் மூன்று.

அலீஸாவுடன் இந்தியக் குழந்தைகளை ஒப்பீடு செய்ய முடியாதுதான். நம் குழந்தைகள் மூன்று வயதில் முடிவெடுப்பதற்கான வளர்ச்சியை அடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெற்றவர்கள் என்ற வகையில் நம்மால் அவர்களுக்கு அடிப்படையான அறிவியல் அறிமுகங்களை கொடுக்க முடியும். அலீஸாவின் அப்பா அதைத்தான் மூன்று வயதில் அவளுக்குச் செய்திருக்கிறார். ‘செவ்வாய் என்பது ஒரு கிரகம்’ என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருந்தால் அலீஸாவுக்கு இதில் ஆர்வம் உருவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது. செவ்வாய் கிரகம் பற்றிய விவரங்களைத் தன்னால் முடிந்த அளவு திரட்டிக் கொடுத்திருக்கிறார். அலீஸாவுக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆர்வம் தானாக பற்றிக் கொண்டது. அவ்வளவுதான். ‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’. உதவிவிட்டார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்குச் செல்பவர்களுக்காக ‘நாஸா பாஸ்போர்ட் ப்ரோகிராம்’ என்றொரு தேர்வை வைக்கிறார்கள். அதில் வெற்றியடைந்த முதல் நபர் அலீஸாதான். கிட்டத்தட்ட அத்தனை விண்வெளி பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். இப்பொழுது விண்கலங்கள் ஏவப்படுவதை நேரடியாகப் பார்ப்பதற்கு நாஸா அவளுக்கு அனுமதியளித்திருக்கிறது. நாஸாவின் அனைத்து Space camp களையும் முடித்த முதல் ஆளாக அலீஸா இருக்கிறாள்.

அலீஸா செவ்வாய் கிரகத்துக்கு செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

அலீஸாவின் கதை உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மகனிடம் சொல்லியிருந்தேன். ‘அந்த அக்காவிடம் பேச முடியுமா?’ என்றான். பேச முடியும் என்று உறுதியளிக்க முடியவில்லை. ஆனால் அலீஸாவிடம் சில கேள்விகளை அனுப்பி பதிலை வாங்கிவிட முடியும் எனத் தோன்றியது. அவரிடம் பேசினேன். மின்னஞ்சல் ஐடியைக் கொடுத்து கேள்விகளை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார். அனுப்பி வைத்தேன். பதில் வந்து சேர்ந்தது. அந்த பதில்களை வைத்து மகனுக்கு ஒரு கதையைச் சொன்னேன். அவனுக்கு பரம சந்தோஷம்.

அலீஸாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். யாராவது பத்திரிக்கை நிருபர்கள் விரும்பினால் அவரது மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ஒரு விரிவான நேர்காணலை முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு அலீஸா போன்றவர்களின் வழிகாட்டுதல்கள்தான் அவசியம். இல்லையா?

அலீஸாவின் நேர்காணல்:

நீங்கள் விண்வெளியாளர் ஆக வேண்டும் என்று எதனால் முடிவு செய்தீர்கள்?

மூன்று வயதில் ஒரு சிறார் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் குழந்தைகள் தங்கள் வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்குச் செல்வார்கள். அப்பாவிடம் செவ்வாய் பற்றிக் கேட்டேன். அள்ளிக் கொட்டினார். அடுத்த இரண்டு வாரத்தில் நான் விண்வெளியாளர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். அதுவும் செவ்வாய்க்குத்தான் செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அப்பொழுதிலிருந்து இதுவரை அந்தக் கனவை அடைவதற்காக என்னால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.

என்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்துக் கொள்கிறீர்கள்?

விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக விண்வெளியில் இருப்பது போன்றே புவியீர்ப்பு விசை இல்லாத, அங்கு இருப்பது போன்றே காலநிலை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட பயிற்சிக் கூடங்களில் (Simulators) எல்லாவிதமான பயிற்சிகளையும் எடுத்துக் கொள்கிறேன். தவிரவும், ஸ்கூபா டைவிங் சான்றிதழ் பயிற்சி, விமானிக்கான உரிமம் மற்றும் விண்ணில் சுழலும் பயிற்சி ஆகியனவற்றை ஆரம்பித்திருக்கிறேன். இவையாவுமே விண்வெளி வீரருக்கு அவசியமானவை என்று நாஸா அறிவுறுத்தியிருக்கிறது.

பயிற்சிகளைத் தவிர வேறு என்ன செய்கிறீர்கள்?

பியானோ வாசிக்கத் தெரியும், புத்தகங்கள் வாசிக்கிறேன், பள்ளியின் ரோபாடிக்ஸ் குழுவில் இருக்கிறேன், ஃபுட்பால் விளையாடுகிறேன், பள்ளியின் நாடகக் குழுவில் தீவிரமான உறுப்பினராக இருக்கிறேன். ஆங்கிலம் தவிர ப்ரெஞ்ச், சீனம் உட்பட நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவை தவிர Scout உறுப்பினராகவும் இருக்கிறேன்.

மூச்சடைக்கிறது. பதின்மூன்று வயதில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

நான்கு வயதிலேயே நேர மேலாண்மையை அப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் எல்லாமுமாக இருக்கிறது. நேரத்தை துல்லியமாக நிர்வகிக்கிறேன். அது எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்ய உதவுகிறது. So simple.

நீங்கள் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் உந்துதலூட்டும் பேச்சுக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள் என்று தெரியும். சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

இளைய வயதினருக்கு ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதே உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பாடத்தில் உங்கள் வேலையை அமைத்துக் கொள்ள முடிவெடுங்கள். என்னைப் போலவே அந்தத் துறையில் சாதிக்க கனவு காணுங்கள். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருங்கள்....உங்களிடமிருந்து உங்களின் கனவை பறித்துவிட யாரையும் அனுமதித்துவிடாதீர்கள். இதுதான் தாரக மந்திரம்.

http://www.nisaptham.com/2014/10/blog-post_23.html

http://1.bp.blogspot.com/-CrlcbX7-GAA/VEkhEMlr41I/AAAAAAAAERs/KqnDqWyQK2k/s1600/Alyssa.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

நீங்கள் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் உந்துதலூட்டும் பேச்சுக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள் என்று தெரியும். சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

இளைய வயதினருக்கு ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதே உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பாடத்தில் உங்கள் வேலையை அமைத்துக் கொள்ள முடிவெடுங்கள். என்னைப் போலவே அந்தத் துறையில் சாதிக்க கனவு காணுங்கள். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருங்கள்....உங்களிடமிருந்து உங்களின் கனவை பறித்துவிட, யாரையும் அனுமதித்து விடாதீர்கள். இதுதான் தாரக மந்திரம்.

 

அலீஸா கார்சன்(Alyssa Carson),

பதின்மூன்று வயதில், கூறிய பதில்..... அனைவரும் பின் பற்றினால்,

நாம் நினைத்த இலக்கை,  அடைய முடியும்.

 

பகிர்விற்கு... நன்றி அபராஜிதன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு... நன்றி அபராஜிதன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.