Jump to content

ஒரு நாள் நதிச் சொர்க்கம் - 16 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதை


Recommended Posts

என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது

 

இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன்.

 

பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது

 

------------

 

 

 

 

 

image.jpg
 

image.jpg
 

image.jpg
 

 

Link to comment
Share on other sites

சிறப்பான கவிதை அண்ணை 

 

தொகுப்பாகவே எதிர்பார்க்கிறோம்

 

எப்போ கிடைக்கும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

பின்னூட்டங்களை இட்ட நெற்கொழுதாசனுக்கும், சுமே யிற்கும் பச்சை புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றி.

 

இக் கவிதையில் குறிப்பிடப்பட்ட பெண் பின்னர் இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளராக வந்து பலரது பாராட்டுகளைப் பெற்று முன்னேறியவர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கவிதை அண்ணா... மிகவும் ரசித்தேன்

Link to comment
Share on other sites

சில கவிதைகளை நீண்டகாலத்தின் பிறகு வாசிக்கிற போது நாங்களா எழுதினோம் என பிரமிக்க வைக்கும். அதுபோன்றதொரு உணர்வை இக்கவிதையும் உங்களுக்குத் தந்திருக்கும் நிழலி. அழகு அருமை என்பதனை விட ஆற்றல் மிக்க ஒரு கவிஞனை இக்கவிதை பல ஆண்டுகள் முதல் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போன காலங்களில் எழுதிய கவிதைகளை. இரை மீட்டுப் பார்க்கையில், அவை மீண்டும் உங்களை அதே கால கட்டத்தில் இருந்த மன நிலைக்குக் கொண்டு செல்லும்!

 

மீண்டும் அது போன்ற ஒரு காதலியை வாழ்வில் அடைய முடியாது எனினும்.. நீங்கள் மீண்டும் ஒரு காதலானாக வாழ்ந்து பார்ப்பதில், நிச்சயம் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கின்றது!

 

இப்படிப் பழையதுகள் எங்கயாவது சந்திச்சால், இங்க கொண்டு வந்து இணையுங்கோ!

 

கவிதையின் நகர்வு அழகு, நிழலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நல்ல கவிஞராய் இருந்துள்ளீர்கள், அதனால் அப்ப எழுதிய கவிதைகளை கொஞ்சம் எடுத்து விடுங்கள்...!

Link to comment
Share on other sites

text-align: right;  வாசிக்க நல்லா இருக்கு !!  :) 
Link to comment
Share on other sites

சிறப்பான கவிதை அண்ணா... மிகவும் ரசித்தேன்

 

 

 

 

text-align: right;  வாசிக்க நல்லா இருக்கு !!  :) 

 

 

 

நன்றி சுபேஸ் மற்றும் இளம்பிறையன்

 

--------------------

 

சில கவிதைகளை நீண்டகாலத்தின் பிறகு வாசிக்கிற போது நாங்களா எழுதினோம் என பிரமிக்க வைக்கும். அதுபோன்றதொரு உணர்வை இக்கவிதையும் உங்களுக்குத் தந்திருக்கும் நிழலி. அழகு அருமை என்பதனை விட ஆற்றல் மிக்க ஒரு கவிஞனை இக்கவிதை பல ஆண்டுகள் முதல் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.

 

 

கடந்து போன காலங்களில் எழுதிய கவிதைகளை. இரை மீட்டுப் பார்க்கையில், அவை மீண்டும் உங்களை அதே கால கட்டத்தில் இருந்த மன நிலைக்குக் கொண்டு செல்லும்!

 

மீண்டும் அது போன்ற ஒரு காதலியை வாழ்வில் அடைய முடியாது எனினும்.. நீங்கள் மீண்டும் ஒரு காதலானாக வாழ்ந்து பார்ப்பதில், நிச்சயம் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கின்றது!

 

இப்படிப் பழையதுகள் எங்கயாவது சந்திச்சால், இங்க கொண்டு வந்து இணையுங்கோ!

 

கவிதையின் நகர்வு அழகு, நிழலி!

 

 

அப்ப நல்ல கவிஞராய் இருந்துள்ளீர்கள், அதனால் அப்ப எழுதிய கவிதைகளை கொஞ்சம் எடுத்து விடுங்கள்...!

 

 

இக்கவிதைக்கும் இப்போதைய எழுத்து இயல்புக்கும் இடைவெளி அதிகம். old is gold.

 

அன்று பேரினவாத அச்சுறுத்தல்களுக்குள் கொழும்பில் வாழ்ந்தாலும் அதில் 'வாழ்க்கை' இருந்தது. அம்மா அப்பா அக்கா என்று நெருக்கமான உறவுகள், தோள் கொடுக்கும் நண்பர்கள், நன்கறிந்த தெருக்கள், நாவுக்கு இசைவான உணவுகள், இலக்கியம், இலக்கிய கூட்டங்கள், சரிநிகர் என்று வாழ்க்கை சுவாரசியமாக போய்க் கொண்டு இருந்தது. இவற்றை விட கள முனைகளில் தமிழர்களின் வீரம் சிங்கள நண்பர்கள் மத்தியில் ஒரு வித மதிப்பையும் தந்து கொண்டு இருந்தது.  எல்லா உணர்வுகளும் பொங்கி பிரவகித்துக் கொண்டு இருந்த நேரங்களில் எழுந்த கவிதைகள் உணர்வு பூர்வமாக இருந்தன.

 

இன்று.............  வசதியாக வாழ்வது என்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் எழும் அநேக உணர்ச்சிகள் இரவல் உணர்ச்சிகளாக இருக்கின்றன. அவ் இரவல் உணர்ச்சிகள் சார்ந்து வரும் கவிதைகள் கூட அதன் மொழியில், போக்கில் வரண்டு விடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! நான் உங்கள அளவுக்கு எழுதிக் குவிக்கவில்லையாயினும் எனக்கும் இதே தான் நடந்தது!

Link to comment
Share on other sites

உண்மை! நான் உங்கள அளவுக்கு எழுதிக் குவிக்கவில்லையாயினும் எனக்கும் இதே தான் நடந்தது!

நீங்களும் கவிதையில் அல்லது கதையாக சொல்லுங்கோ ஜஸ்ரின். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் வந்து போன வசந்த நாளின் வருகையை எண்ணி எழுதப்பட்ட உங்கள் கவிதை நதியாகப் பிரவாகித்து எம் மனங்களை நனைத்தது.

Link to comment
Share on other sites

ஆத்மார்த்தமான காதல் போல் உள்ளதே அண்ணா... இதன் பின் விளைவுகள் ஏதேனும் உண்டா ?

ஒருநாள் நதிச் சொர்க்கம் - கவிதை வாசித்த பின்பு தலைப்பு அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இந்த ஒருவரியிலேயே கவிதை அடங்கிவிட்டது :) அழகான கவிதை அற்புதமான தலைப்பு நிழலி அண்ணா :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.