Jump to content

புலிகள் மீதான தடை– மேல்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை உதவி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் மீதான தடை– மேல்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை உதவி. 
sri-lankan-flag-150.jpg
[Thursday 2014-10-23 08:00]
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அளித்த தீர்ப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்ட அறிக்கைகளையிட்டு, ஆச்சரியமடைவதாகக் கூறியுள்ள இலங்கை அரசாங்கம், இந்தத் தீர்ப்புத் தொடர்பாக மேல் முறையீடு செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு உதவவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிவாதியாக காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிக்கைகள், பிழையான எடுகோள்களின் அடிப்படையில் அமைந்தவை என வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கம் பிரதிவாதிக்கு உதவக்கூடிய விடயங்களை கொடுத்து வந்தது. விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மறுப்பதற்காக பொருத்தமான சகல விவரங்களையும் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஆணையகத்துக்கு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதியான ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தகால எல்லைக்குள் மேன்முறையீடு செய்ய முடியும். எதிர்கால நடவடிக்கைகளாக குறித்த கட்சிக்காரர்கள் அதாவது ஐரோப்பிய ஒன்றியம் புதிய கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை கொண்டு வரலாம். ஐரோப்பிய நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்யலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
 
எஞ்சியுள்ள புலிகளினால் தமது பிரஜைகளிமிருந்து பலவந்தமாக பணம் கறப்பதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உதவி வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டது என வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=119221&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.