Jump to content

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு சேவகம் செய்தது! -சுட்டிக்காட்டுகிறார் வி.உருத்திரகுமாரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Rudrakumaran-150-news1.jpg

விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில்,

   

ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அனைவருடனும் சேர்ந்து வரவேற்றுக் கொள்கிறது. சட்டமுறைகள் வழுவாவண்ணம் நல்லாட்சியை உறுதிசெய்த ஐரோப்பிய நீதிமன்றத்துக்குத் தனது மதிப்புக் கலந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தியா விடுதலைப் புலிகள் அமைப்பின்மேல் விதித்திருந்த தடையினை மேற்கோள் காட்டியும், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஐரோப்பிய சமூகம் கொண்டு வந்த தடையானது, இந்தியச் சட்ட ஆட்சியில் நீதி வழங்கப்படும் முறை ஐரோப்பிய சமூகத்தின் நீதி முறைமைக்கு சமத்துவமானதெனக் கொள்ளமுடியாத காரணத்தினாலும், விடுதலைப் புலிகளுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமுறைமையின் கீழ் நிரூபிக்கப்படாத காரணத்தினாலும் இத்தடையினை நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

ஐரோப்பிய சமூகம் அவசர அவசரமாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது 2006 ஆம் ஆண்டு கொண்டு வந்த தடை சட்டபூர்வமற்றது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில், இத்தடை சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது 2009 இல் முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கைக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்பதனைத் தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதனால் தமக்கு நீதி வேண்டும் என்று ஈழத் தமிழர் தேசம் நடாத்தும் தொடர்ச்சியான போராட்டத்துக்கு ஐரோப்பிய சமூகம் தனது ஆதரவினை வெளிப்படுத்த வேண்டிய ஒரு தார்மீகக் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது என்பதனையும் இடித்துரைக்க விரும்புகிறோம். சிறிலங்கா பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முலாம் பூசியதன் பின்னரே மேற்கொண்டது. இன்றும் ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபை தீர்மானம் 1373ஐ துர்ப்பிரயோகம் செய்து 16 தமிழ் அமைப்புக்களுக்கும் 427 தனிநபர்களுக்கும் பயங்கரவாத முலாம் பூசி தமிழ் இனத்திற்கெதிரான கட்டமைப்பு இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

2009க்கு முன்னர் இலங்கைத் தீவில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்ற கருத்து இந்திய மேற்குலக கொள்கை வகுப்பாளர்களிடையே இருந்தது. கடந்து போன ஐந்தாண்டுகள் அந்நிலைப்பாட்டின் உண்மையற்ற தன்மையை இன்று உணர்த்தியுள்ளன. தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகளாகவும் மாவீரர்களாகவுமே கருதுகின்றனர். ஆண்டுதோறும் மாவீரர்தின நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வது இதற்குச் சான்றாக அமைகின்றது.

பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இணைப்பதின் மூலம் தமிழ் தேசிய ஆன்மாவிலிருந்து தமிழீழ விடுலைப் புலிகளின் மேலான பற்றினை அகற்றிவிடலாம் என எண்ணுவது சாத்தியமற்றது என்பதை கடந்த எட்டு ஆண்டுகள் நிரூபித்துள்ளன. அரசியல் வழிமுறைகளின் படியும் ஜனநாயக ரீதியாகவும் போராடிவரும் ஒரு தேசிய இனத்தின் உணர்வுகளை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுக்குமெனவே நாம் நம்புகின்றோம்.

பயங்கரவாதப் பட்டியலில் ஒரு அமைப்பை உள்ளடக்குவது ஒரு அரசியல் முடிவென (political question) ஐரோப்பிய ஒன்றியம் தனது வாதத்தில் தெரிவித்திருந்தது. இவ்வேளையில் பயங்கரவாதப் பட்டியலை மீளாய்வு செய்யும்போது சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை (factual changes) கவனத்தில் கொள்ளவேண்டுனெ நீதிமன்றம் கூறியதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மௌனித்திருக்கும் இவ்வேளையில், ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் அரசியல், இராஜதந்திர வழிமுறையினைப் பின்பற்றும் இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளக் கொண்டு வருவது எந்த ஒரு அரசியல் முடிவிற்கும் வழி சமைக்குமென நாம் கருதவில்லை. மாறாக பயங்கரவாதமென்ற காரணியை தமிழ் தேசிய பிரச்சனை என்ற சமன்பாட்டில் இருந்து முற்றாகக் கலைவது தமிழ் தேசிய பிரச்சனைக்கு நீதியான தீர்வொன்றினை அடைவதற்கு உதவும்.

இவ்வடிப்படையில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கும்படி நாம் கோருகின்றோம்.அத்தோடு நாம் ஐரோப்பிய சமூகத்திடம் மூன்று கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம்.

1. விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை மௌனித்திருக்கும் இவ் வேளையில், ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் அரசியல், இராஜதந்திர வழிமுறையினைப் பின்பற்றும் இக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளக் கொண்டு வருவதனை ஐரோப்பிய சமூகம் தவிர்க்க வேண்டும்.

2. தமிழர் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட, இன்றும் மேற்கொள்ளப்படும் இனஅழிப்புக் குறித்த அனைத்துலக விசாரணையினை நடாத்துவதற்கான கோரிக்கைக்கு ஐரோப்பிய சமூகம் தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டும்.

3. தமது தீர்ப்பின் மூலம் ஜனநாயக அரசியலில் சரியான வழிமுறைகள் அவசியம் என்பதனை ஐரோப்பிய நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள இவ் வேளையில் ஈழத் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து அனைத்துலக சமூகத்தின் தலைமையில் தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் மக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு ஐரோப்பிய சமூகம் ஆதரவு தர வேண்டும்.

ஐரோப்பிய சமூகத்தின் முன் இம் மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது என்பதனை நாம் அறியத் தருகிறோம். இத் தீரப்பு ஏற்படுத்தியுள்ள உற்சாகத்தினை எமக்கான உந்துசக்தியாகப் பயன்படுத்தி அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் இக்கோரிக்கைகளை ஐரோப்பிய சமூகத்தின் முன்னெடுத்துச் செயற்படுமாறும் நாம் இத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

இச்சட்ட நடவடிக்கையில் தமிழர் தரப்பின் சார்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=119174&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் இயங்குகி்ன்றது என்பதை அறிக்கைகள் வாயிலாக மட்டுமே அறிய முடிகிறது..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.