Jump to content

தென் ஆப்ரிக்க அணி வெற்றி: டிவிலியர்ஸ், டுமினி அசத்தல்


Recommended Posts

தென் ஆப்ரிக்க அணி வெற்றி: டிவிலியர்ஸ், டுமினி அசத்தல்
அக்டோபர் 21, 2014.

 

பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி மிரட்ட தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பே ஓவலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

நழுவிய சதம்:

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (5), நீசம் (16) மோசமான துவக்கம் தந்தனர். பின் வந்த பிரவுன்லி (24), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (16) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரி ஆண்டர்சன் ‘டக்–அவுட்’ ஆனார்.

அடுத்து லதாம் (29), நாதன் மெக்கலம் (6), மில்ஸ் (1) நடையைக்கட்டினர். இருப்பினும், அதிரடியாக ரன்கள் சேர்த்த லுாக் ரோஞ்சி, 99 ரன்னுக்கு (83 பந்து) அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், மார்னே மார்கல், தாகிர், மெக்லாரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கு:

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு பவுல்ட் அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் குயின்டன் டி காக் (9), டுபிளசி (8) ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.

ஆம்லா(38), ரோசோவ் (26) ஓரளவு கைகொடுத்தனர். இதன் பின் டிவிலியர்ஸ், டுமினி ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. இருவரும் அரைசதம் எட்டினர்.

இந்த ஜோடியை பிரிக்க எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. நீசம் ஓவரில் டிவிலியர்ஸ் மூன்று பவுண்டரி அடித்தார். மறுமுனையில் டுமினி, மில்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்ப, தென் ஆப்ரிக்க அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த, டிவிலியர்ஸ் (89), டுமினி (58) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை டிவிலியர்ஸ் வென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1413877060/ABdeVillierscricket.html

 

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 24ம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.

Link to comment
Share on other sites

ஆம்லா சதம்: தொடரை வென்றது தென் ஆப்.,
அக்டோபர் 24, 2014.

 

பே ஓவல்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவின் ஆம்லா சதம் அடித்து அசத்தினார்.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்று, 1–0 என, முன்னிலையில் இருந்தது.

பே ஓவலில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பவுலிங்’ தேர்வு செய்தது. 

ஆம்லா சதம்:

தென் ஆப்ரிக்க அணியிக்கு (26), ஆம்லா துவக்கம் கொடுத்தனர். பின் டுபிளசி, ஆம்லா இணைந்து சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர். டுபிளசி 67 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் டிவிலியர்ஸ் (37), டுமினி (19) நிலைக்கவில்லை. அதிரடி மில்லர் (7), பிலாண்டர் (1) என, பின் வந்த வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை.

இருப்பினும், துவக்க வீரர் ஆம்லா, ஒருநாள் அரங்கில் 16வது சதம் (119) கடந்து அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆம்லா நியூசிலாந்தின் சவுத்தி, பவுல்ட், மெக்லீனகன், ஆண்டர்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ரோஞ்சி ஆறுதல்:

கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11), நீஷம் (10), பிரவுன்லி (20), லதாம் (16), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (12) என, ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் யாரும் நீடிக்கவில்லை.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சன் (1) ஏமாற்றினார். ரோஞ்சி மட்டும் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 46.3 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மெக்லீனகன் (34) அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, ஒரு போட்டி மீதமிருக்கையில், தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரை, 2–0 என, வென்றது.

‘நம்பர்–1’ வாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில், 115 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பெறலாம். ஆஸ்திரேலியா (114) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

http://sports.dinamalar.com/2014/10/1414169564/HashimAmlaSouthAfrica.html

 

Link to comment
Share on other sites

மழையால் போட்டி ரத்து
அக்டோபர் 27, 2014.

ஹாமில்டன்: தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.     

தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது.

முதலில் ‘பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ஹசிம் ஆம்லா (12) ஏமாற்றினார். அடுத்து வந்த ரோசவ் ‘டக்–அவுட்’ ஆனார். டேவிட் மில்லர் (17) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் அரைசதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 30.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. குயின்டன் (80) அவுட்டாகாமல் இருந்தார். மழை நீடித்ததால், போட்டி ரத்தானது.

 

இதனையடுத்து முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது.     

மீண்டும் ‘நம்பர்–1’     

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி, ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் 115 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றியது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இந்தியா (113) அணிகள் உள்ளன. சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி 96 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/10/1414427890/SouthAfricaNewZealandOneDayCricketRainCancelQuinton.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.