Jump to content

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peeves "


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் "  விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற  மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே.
 
-  இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~  செம கடுப்பு (முகறையில  ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது )
 

-  டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில்  தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், கற்பழிக்கும் காட்சிகளும் அடக்கம்) கடைக்கு வரும் வேற்று நாட்டவர் அதிர்ந்து போய் நிற்பார்கள்!!!
 

- இங்கு வரும் பத்திரிகைகளில், வானொலிகளில் பயன்படுத்தப்படும் " பக்த கோடிகள், சிறப்பு மிக்க, வரலாறு படைத்த, தளபாட சந்தை, அனுபவம் மிக்க, போன்ற மிகைப் படுத்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள்.
 

- வானொலி விளம்பரங்களில் நகைச்சுவை உணர்வு அறவே இல்லாமல் நகைச்சுவை (அறுவை) பேசுவோர்
 

- வேண்டாதவன் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாமே புலிகளின் குற்றம் எனும் தொனியில் கதைப்போர்.
 

- மேடை இசை நிகழ்சிகளில் பாடகர், பாடகியர் பாடி முடிந்ததும் கையை தட்டி உற்சாகம் கொடுக்காமல் கவலையாய் உக்கார்ந்து இருப்போர்.
 

-  விழாக்களில் / பார்டிகளில் ஒருவர் பாடிக்கொண்டு இருக்கும் போது சொரனையே இல்லாமல் கதைத்துக் கொண்டு இருப்பவர்கள்.
 

- தெருவுக்கு தெருவு (டொராண்டோவில்) கோவில் கட்டி சைவமும், தமிழும் தழைத்து ஓங்க அறப்பணி செய்வோர்.
 

- கார் ஓட்டும் போது சற்றும் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடிப்போர்.
 

 

- தான் நினைப்பதும், கூறுவதும் மட்டுமே சரி என்று நினைப்போர்.
 

- ஒரு பிரச்சினையை கதைக்கும் போது அதற்கு எதுவித சம்பந்தமும் இல்லாத இன்னும் ஒரு பிரச்சினையை கதைப்பவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச் சாப்பாட்டுக்கடைகளில் நாம லைன்னில் நிக்க அண்ண போன் ஓா்டா் நான் தான்று இடையில வாறது

நீங்கள் சொன்னது போல வராத நகைச்சுவையை வரவைத்து தாமே சிாிப்பது

கோயிலுக்கு போகும் போது அள்ளி நகை போட்டிட்டு போறது (சிலநேரம் பசங்க பாக்கவோ?)

60 ரோட்டில 40ல ஓடுறது.. (கோா்ன் என்ன பின்னாலையே போய் இடிக்கனும் போல தோனும்)

தப்புச் செய்யாமலே காவல்த்துறையை கண்டா வேகத்தை குறைக்கிறது... பயந்து சாகிறது

பேட்ரோல் (Gas Station) கடையில போய் ஏன் பெட்ரோல் (Gas) இந்த விலை என்று கேக்கிறது

வெள்ளிக்கிழமை பின்னேரம் 401 ல வாகன நொிசல்ல மாட்டீட்டன் என்கிறது

 

பல்கலைகழகத்துக்கு போற பசங்களை பாா்த்து எப்ப கண்டாலும் படிப்பு எப்பிடி போகுது என்று கேக்கிறது


இப்பிடி நிறையச் சந்தா்ப்பத்தில் நமக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டு கை கழுவுவம் என்று... ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்க...
ஒரு அகப்பை, சோத்தை.... போட்டு இதையும் சாப்பிடுங்கோ என்று சொல்லவதையும்.....
" Pet Peeves "ல் சொல்லலாமா சசி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழ்ல்ல.. இதை தான் கடுப்பேத்திறது என்றாய்களோ..!! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசியண்ணா இந்த விடையத்தை பதிந்துட்டு போனதிலிருந்து இதுவரைக்கும், எத்தனை தரம் இந்த பக்கத்தை ஓடி வந்து பார்த்துட்டு எழுதுவமா,விடுமா என்று நினைச்சுட்டு போய்க் கொண்டு இருந்தன் என்று எனக்கே தெரியாது..காரணம் நேரம் எடுத்து எழுதுவதைத் தவிர வேறு எதையும் காணப் போறது அல்ல,எழுதியும் பிரியோசனம் இல்ல என்பதும் எனக்கு புரியும்.மற்றவர்களால் செய்யும் எரிச்சல் ஊட்டும் விடையங்களால் நிறைய மனம் நொந்த நேரங்ளும் இருக்கிறது.அவ்வாறன விடையங்களால் சந்தோசப்பட ஏலாது என்பதும் அனைவரும் அறிவீர்கள்...இந்த தலைப்பை பதிந்ததினால் இவற்றை எழுதிறன் இல்லாது விட்டால் அனைத்துமே மனதோடு இருந்துட்டுப் போய் விடும்.

 

 

காலையில் வெளியில் போக எத்தணிக்கும் போது அக்கம்,பக்கத்தில் இருப்பவர்கள் கதவைத் திறந்து கொண்டு வந்துட்டு மீண்டும் கதவை அடிச்சு சாத்திட்டு போவது.அங்கே முளுவியளம் பாக்கப் படுகிறது.

 

நண்பர்கள்,பிரியமாய் பழகியவர்கள் என்று ஏதாச்சும் சொல்லப் போனால் எல்லாவற்றையுமே தப்புத் தப்பாய் எடுத்து கடசியில் தண்டனைக்கு உரியவர்களாக மாத்தி விடுவது.

 

ஒரு விடையத்தை வாயால் சொல்ல முடியாத விடத்து எழுதியாவது புரிய வைப்பம் என்று மெயிலிட்டால் அதற்கு இல்லாத வரைவிலக்கணம் எல்லாம் கொடுத்து ஏளனப்படுத்துவது.

 

தாங்கள் சொல்கிறபடி மட்டும் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது..யாராக இருந்தாலும் மற்றவர்களுக்கும் விருப்பு,வெறுப்புக்கள் இருக்கு என்பதை புரிந்து கொள்வதே இல்ல..

 

தாங்கள் சொன்வற்றையே திரும்ப கேட்கும் போது தாங்கள் சொல்லவே இல்ல மறுத்துடுவார்கள்..

 

இப்படி நிறைய விடையங்கள் மற்றவர்களை இன்சல்ட் பண்ணும் விதமாக உலகத்தில் நடந்த வண்ணமே உள்ளது...

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.