Jump to content

ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்!


Recommended Posts

ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்!
 

 

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் இந்திய கிரிக்கெட் ‘ரவி சாஸ்திரி காலகட்டம்’ என்ற ஒன்றை விரைவில் காணும் என்று 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் பத்தியில் கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார்.

அவர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு:

டைகர் பட்டோடிக்குப் பிறகு ஒரு கேப்டனாகவே வளர்த்தெடுக்கப்பட்ட ரவி சாஸ்திரி ஏன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன்சி செய்தார் என்பது எனக்கு தர்க்கபூர்வமாகத் தெரியவில்லை. அந்த ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் இந்தியா வெற்றி பெற்றது.

ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 அணியை தலைமையேற்றுச் சென்ற காலக்கட்டத்திலேயே அவரை ஒரு லீடர் என்றே அனைவரும் கருதினர். ரவி சாஸ்திரி கிரிக்கெட் ஆட்டத்தை கவனமாகக் கற்ற மாணவர். சுனில் கவாஸ்கரின் கொள்கையை இவர் பெரும்பாலும் பின்பற்றினார். ஆனால் ஒரேயொரு வித்தியாசம்: ரவி சாஸ்திரி ஆக்ரோஷமான கேப்டன், எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார். சுனில் கவாஸ்கர் சற்றே இந்த விஷயத்தில் தடுப்பு உத்தி கொண்டவர்.

 

பெங்களூரில் முதன் முதலாக ரவி சாஸ்திரியை அண்டர்-19 முகாமில் சந்தித்தேன். அப்போதே, நவ்ஜோத் சித்து, குருசரண் சிங், சதானந்த் விஸ்வநாத் (வி.கீ./ பேட்ஸ்மென்) மனீந்தர் சிங் போன்ற எதிர்கால இந்திய வீரர்களை ரவி சாஸ்திரி திறம்பட வழிநடத்தினார். அப்போதே இந்திய அணிக்காக திட்டங்கள் தீட்டக்கூடியவர் ரவி சாஸ்திரி.

அப்போது ரவி சாஸ்திரி என்னிடம் 22 வயதுக்குள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்றார். அப்போதிருந்த அவருடைய மனநிலையின்படி பார்த்தால் குறைந்தது 50 டெஸ்ட் போட்டிகளிலாவது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

திலிப் தோஷியின் (இடது கை சுழற்பந்து வீச்சாளர்) பதிலி வீரராக நியுசீலாந்துக்கு அவசரமாக வரவழைக்கப்பட்ட ரவி சாஸ்திரி, விமான நிலையத்திலிருந்து நேராக மைதானத்திற்கு வர நேரிட்டது. இந்த அவசரமான அறிமுக டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒரு பத்தாண்டுகளிலேயே அணித் தேர்வுக்குழுவை இவர் ஏனோ ஈர்க்கவில்லை. அவரது நேரடியான அணுகுமுறைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது. இளம் வீரராக ஒரு பெரிய ஐகானாகவே அவர் ஒரு புறம் வளர்ந்தாலும் பலருக்கும் பிடிக்காத ஒரு வீரராகவே அவர் இருந்தார். அவரை கேலி செய்வதில் சில ரசிகர்கள் திருப்தி அடைந்து கொண்டிருந்தனர். களத்திற்கு வெளியே அவரது ‘மீறல்கள்’ செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

 

அணித் தேர்வுக்குழுவுக்கு இவரது பிரபலத்தன்மையையும், அதற்கு எதிரான போக்குகளையும் ஒருங்கே கையாள முடியாமல் போனது. சாஸ்திரி ஒன்றும் துறவி அல்ல, ஆனாலும் அவர் மிக முக்கியமான ஒருவர், அணிக்காக பங்களிப்பு செய்வதில் அவர் ஒரு தொழில்பூர்வ ஆட்டக்காரர். பிசிசிஐ-யில் பலவீனமான சிலர் இருந்ததால் ‘சாஸ்திரி காலக்கட்டம்’ என்ற ஒன்று உருவாகமலேயே போனது.

20-வயதுகளில் இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது கடினமான சூழல். ஆனால் எதிர்மறைகளை அவர் தன்னை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

 

எதிர்மறை விமர்சனங்கள் எனக்கு தூண்டுகோலாக அமைந்தன என்று சாஸ்திரி என்னிடம் கூறினார். அதாவது 1980-களில் அவர் பின்கள வீரர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற நிலையிலிருந்து தொடக்க வீரராக வளர்ச்சி கண்டார். பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்தபோது என்னிடம் தெரிவித்தார்.

 

ஊடகப் பணி

30 வயதில் அவரது கனவு முடிவுக்கு வந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரது நண்பர் மார்க் மஸ்கரன்ஹாஸ், ரவி சாஸ்திரிக்கு ஊடகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். கொழும்புவில் ஆசியக் கோப்பை போட்டிகளின் போது சாஸ்திரி ஓய்வு அறிவித்தார். அப்போது, கிரிக்கெட் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத சி.என்.என். சானலே ரவி சாஸ்திரி ஓய்வு அறிவித்த செய்தியை ஒளிபரப்பியது.

 

இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக, அவர் விளையாடிய காலத்தில் செய்ய முடியாததை செய்ய வாய்ப்பிருக்கிறது. பலவழிகளில் இந்தப் பதவிக்கு பொருத்தமான நபர் ரவி சாஸ்திரிதான். வீரர்களால் டன்கன் பிளெட்ச்சரை எளிதில் அணுக முடியாத நிலையில் இப்போது ரவி சாஸ்திரி வீரர்களுடன் வீரராக இருந்து செயலாற்றுவது நிச்சயம் பலன் சேர்க்கும்.

வீர்ர்களுடன் நேரடியாகப் பேசி, வீரர்களிடம் கருணையும், புரிதலையும் ஏற்படுத்தக்கூடிய பரந்த மனது படைத்த ஆனால் கண்டிப்பான அணுகுமுறை கொண்ட ஒருவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவை என்றால் அது ரவி சாஸ்திரி என்று கூறலாம்.

1994ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றார் அதன் பிறகே அவர் ஊடக ஆளுமையாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிசிசிஐ என்ற நிறுவனத்திற்கான மனிதராகவே அவர் உருவெடுத்து விட்டார்.

 

அவர் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஊடகத்தில் பணிபுரிவதன் வாயிலாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து போட்டிகளையும் காண வாய்ப்பு பெற்றுள்ளார். அவரே கூறுவது போல், “என்னிடம் இந்திய அணிக்கு அளிக்க நிறைய கிரிக்கெட் அறிவு உள்ளது, மறப்பதற்குள் அதனை பயன்படுத்துவேன்’ என்றார்.

உள்நாட்டு கிரிக்கெட்

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் பொதுவாக கவனிக்கப்படுவதில்லை, அதனை மேம்படுத்தவும் தான் திட்டம் வைத்திருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சர்வதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார் ரவி சாஸ்திரி.

கால்பந்து பயிற்சியாளர் பாணியிலான ஒரு நபர் ரவி சாஸ்திரி. உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி தற்போது வகிக்கும் பதவியை வகிப்பார். அவரது பொறுப்பு நீட்டிக்கப்பட்டால் ‘ரவி சாஸ்திரி காலக்கட்டம்’என்ற ஒன்று உருவாகலாம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6519626.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.