Jump to content

குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல....

19 அக்டோபர் 2014

"ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை"

n.kuru1_CI.jpg

ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும் விடையத்தைத்தான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்

தமிழ் ஊடகத்துறையில் இருப்பவர்கள் எல்லோருமே இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்களா என்ற கேள்வியும் என்னுள் அடிக்கடி எழுவதுண்டு. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட இன்னமும் தனது அரசியல் சமூக பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வரும் இனம் ஒன்றினுள் ஊடக தர்மத்தைப் பேணிக்கொண்டு ஊடகம் செய்ய விரும்புவதனாற்றான் இவ்வளவு அழுத்தங்கள் வருகின்றனவோ எனவும் மனம் அங்கலாய்க்கிறது.

13.10.14 அன்று மாலை லண்டன் நேரம் 5.43ற்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தின் வாசகர் ஒருவர் ஸ்கைப்பில் (skype) தொடர்புகொண்டார். நீங்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவரா? எதிரானவரா? என எடுத்த எடுப்பிலேயே என் நெற்றியில் ஒரு அடி அடித்தார்.பின் தொடர்ந்து கீழ் வருமாறு கூறினார்:

“வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரிச் செய்திகளைக் கொடுக்கிறீர்களா? ஊடகம் என்பதற்காக அனைவரதும் செய்திகளையும் ஏன் போடுகிறீர்கள்? நானும் பார்க்கிறேன், ஈ.பி.டி.பி சந்திரகுமாரின் செய்திகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? நான் எனது நண்பரிடமும் இது பற்றிக் கேட்டேன் ஒரு அருமையான செய்தித்தளம். நிரம்பக் காத்திரமான செய்திகள், கட்டுரைகள் எனப் பல தரப்பட்ட விடயங்கள் வருகிறன. ஆனால் அதற்குள் சந்திர குமாரின் செய்தியும் வருகிறது. ஏன் குருபரன் இப்படிச் செய்கிறார்? பதிலாக எனது நண்பர் சொல்கிறார் நீங்கள் பழைய புளொட்காரர்(P.L.O.T) என. நீங்கள் புளொட் என்பதற்கும் எனது கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறு சொல்லி உங்களது தளத்தை வெறுமனே நிராகரிக்க முடியாது என எனது நண்பரிடம் நான் சொன்னேன் ” என ஸ்கைப்பில் தொடர்புகொண்ட அவர் கூறினார்.

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கே தனது நண்பர் ஒருவருடன் பல விடையங்களைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருந்த போது என்னைப் பற்றியும் குளோபல் தமிழ்த் தளத்தைப்பற்றியும் உரையாடல் வந்தபோது “குருபரன் ஆமியோடு நின்றவர். சிக்கலான ஆள் என்று அவர் நண்பர் கூறி இருக்கிறார். அதற்கு எனது நண்பர், அவர் எங்கு நின்றவர் என்று எனக்கு தெரியும் அந்தப் பேச்சை விடு என்றிருக்கிறார்.

ஒருவர் என்னை புளொட்டுடன் நின்றவர் என்கிறார் இன்னோருவர் ஆமியுடன் நின்றவர் என்கிறார்.

முகநூலில் இடம்பெற்ற உரையாடலில் ஒரு நண்பர் கீழ் வருமாறு கேட்டார்: “நீங்கள் தனித் தமிழீழத்தை ஆதரிக்கின்றீர்களா ? தேசியத்தலைவராக திரு பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொள்கின்றீர்களா? உங்கள்கொள்கை என்ன என்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லையே அண்ணா “

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகள் உருவாக்கி முன்வைத்த தமிழ்த்தேசிய வகைமாதிரி மிகமோசமான தோல்வியைத் தழுவியமைக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று தமக்குள்ளும் தாம் போராடிய மக்கள் கூட்டத்துள்ளும் இருந்திருக்க வேண்டிய சனநாயகச் சூழ்நிலையை மறுத்தலித்ததன் மூலம் மக்களினது உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி இருந்தமை

இரண்டு தமிழீழ விடுதலைப்போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த சர்வதேச அரசியற் சூழ்நிலைகள் பற்றிய புரிதல் அற்றிருந்தமை அதாவது தம்மைச் சூழ நிகழ்ந்து கொண்டிருந்தவைகளை அறியக் கூடிய நிலையில் அத்தேசியம் தன்னை வைத்திருக்க வில்லை.

மேற்குறித்த இரண்டு தவறுகளும் தீடீர் எனக் குறுகிய காலத்தில் உருவானவை அல்ல. இவை மூன்று தசாப்தங்களில் படிப்படியாக உருவாகியவை. இச்சூழ்நிலை உருவாக்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு அஞ்சியோ அவர்களுடன் உடன்பட்டோ அல்லது அரசியல் விழிப்புணர்வற்ற இனவுணர்வு காரணாமாகவோ அனேகமான பிரதான நீரோட்டத்தில் இருந்த தமிழ் ஊடகங்களும் பங்களித்துள்ளன. ஒரு ஊடகவியலாளனாக நானும் விடுதலைப்புலிகளின் தவறுகளை வெளிப்படுத்துவதில் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறேன் எனபதை இங்கு ஒத்துக் கொள்ளவேண்டும்.

எனவே இன்றைக்குத் தமிழ்த்தேசியம் என நாங்கள் உணர்வது சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை அறியவும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் விளையும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதனை வளர்ப்பதற்கான ஊடகம்தான் இன்றைக்குத் தேவைப்படுகிறது.

22-09-2014 அன்று 02:55 ரகு கதிரவேலு என்பவர் எனது முகநூல் உட்பெட்டியில் இப்படி எழுதி இருந்தார்.

என்ன குருபரன் அண்ணா அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை மட்டும் பொறுக்கி எடுத்துப் போடுறியள். யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி போன செய்தி உங்களுக்குத் தெரியாதோ? இல்லாட்டிக்கு உங்கடை செய்தியாளர் யாழ்ப்பாணத்திலை இல்லையோ? நீங்கள் எப்ப இங்காலைப் பக்கமா வாறியள். உங்களுக்கு நல்ல செய்திகள் நாங்கள் தருவம். (இவர்தான் அண்மையில் தனது முகநூலில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தவர்...)

யாழ்பாணத்திற்கு யாழ்தேவி சென்றமை, வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றமை, அரச நிர்வாகக்கட்டிடங்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்றமை போன்ற விடையங்கள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வரலாற்றிலேயே முதன் முதலாக வழங்குகிற விடையங்கள் அல்ல. இவை போராட்டம் தொடங்க முன்பும் இருந்தன. தமிழர்கள் போராடியதன் நோக்கமே தமது பிரதேசங்களின் சமூக பொருளாதார அரசியற் கட்டமைப்புக்களைத் தாங்களே தங்களது அடையாளங்களுடன் உருவாக்க அதிகாரம் வேண்டும் என்பதுதான். தண்டவாளங்களைப் பிடுங்கி,யாழ்தேவியை வரவேண்டாமென்று ஆக்கியது போராளிகளே. யாழ்தேவி அன்றைக்கு ஆக்கிரமிப்பின் குறியீடாகப் பார்க்கப்பட்டது இன்றைக்கும் அது ஆக்கிரமிப்பின் வலிமையான குறியீடாகவே இருக்கிறது. அதேவேளை மக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அதன் தேவை இருக்கிறது. எனவே இத்தகைய சம்பவங்களில் மிக நுணுக்கமாக சென்று பார்த்துச் செய்தியை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய சம்பவங்களும் எனது ஊடகத்தில் செய்தியாக வந்துள்ளமையைப் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். நிகழாதவைகளைச் செய்தியாக வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நிகழ்பவற்றுக்குள் இருக்கும் நுண்ணிய செய்திகளை நாங்கள் வழங்கும் போது கவனிக்கத்தவறி விடுகிறார்கள்.

கடந்த காலங்களில் மேற்குறித்தவாறான பல உரையாடல்கள் முக நூலிலும் தொலைபேசியிலும் இணையமூலமா ன தொடர்பாடல்களிலும் நிகழ்ந்துள்ளன.

இவற்றிலெல்லாம் மேலெழுத்து வரும் விடையங்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவை:

  • தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் அல்லது மறுப்பவர்களின் செய்திகளை வெளியிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு
  • விடுதலைப்புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டு இலங்கை அரசின் இன ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
  • தமிழர்களின் விடுதலைக்கு எதிரான ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாமே தவறானவை என்ற கணிப்பு.
  • விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஊடகங்களில் அல்லது அவ்வாறு நடிக்கும் ஊடகங்களில் வருகிறவைகள் எல்லாமே உண்மை என்ற நம்பிக்கை
  • செய்திகளை வெளியிடும் போது ஏதோவொரு குழுவின் அல்லது மக்களின் மனங்களைத் திருப்திப்படுத்தும் அல்லது கவரும் வகையிற் செய்திகளையும் தலையங்கங்களையும் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
மேற்கூறிய எதிர்பார்ப்புகள் ஊடகத்தனத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமையால் வருகின்றனவா அல்லது கண்மூடித்தனமான உணர்வுகளின் காலங்களில் இருந்து மீளாமையினால் வருகின்றனவா என்று அங்கலாய்க்க வேண்டியுள்ளது .

ஒருவர் ஏன் அரசு சார்புச் செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்கிறார் இன்னொருவரோ ஏன் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்கிறார். இருவருமே தமிழர்கள். மேற்குறித்தவர்கள் எங்கள் மத்தியில் நிலவும் இருவகையான போக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதுதான் உண்மை. மேற்குறித்த இரு போக்குகளையும் திருப்தி செய்ய நான் விரும்பினால் எனக்கு அதிகம் சாத்தியக்கூறுகள் இல்லை. அது மலினமான ஊடகத்தனத்துள் என்னைக் கொண்டு சென்று விட்டுவிடும் ஆனால் இதனைத்தான் இன்றைக்கு அனேகமான ஊடகங்கள் செய்து வருகின்றன.

சிங்கள அரசுடன் நிற்பவர்கள், தமிழ் தேசிய உணர்வை ஏற்காதவர்கள், சிங்கள அரசு, சிங்கள இனவாதிகள் எனப்பலரது செயற்பாடுகளை குளோபல் தமிழ் ,செய்திகளாக பிரசுரித்து வருகிறது. நிகழ்கிற சம்பவம் ஒன்றை எந்தப் பூச்சுகளும் அற்று செய்தியைச் செய்தியாகவே வழங்குவது ஊடகவியலின் அடிப்படை.

ஒரு மக்கட் கூட்டத்தை திருப்திப்படுத்தும் நோக்குடன் செய்திகளை வெளியிடும் போக்கு மக்களை மாயையில் ஆழ்த்தி வைத்திருக்கவே உதவும். சிங்களப்பேரினவாதத்தின் பிடியில் இருக்கும் பெரும்பான்மையான சிங்கள மற்றும் ஆங்கிலப்பத்திரிகைகள் இன்றளவும் அவ்வாறுதான் நடந்தும் வருகின்றன. ஆனால் குளோபல் தமிழ் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை. சமூக ஊடகங்களினூடான தனிநபர் வலையமைப்பு விரிவடைந்து வரும் இந்த தசாப்தத்தில் ஒருவரின் கருத்தையோ சமூகத்தில் நிகழும் ஒரு சம்பவத்தின் செய்தியையோ இருட்டடிக்க ஒரு செய்தி நிறுவனம் முயன்றால் அது நகைப்புக்கிடமாகும். இன்றைக்கு இலங்கை அரசும் அதனைச் சார்ந்தவர்களும் இலங்கையின் வடக்கு கிழக்கில் “செயற்பட்டுக்” கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சொல்வது அவர்கள் எதற்காக அதனைச் செய்கிறார்கள் என மக்கள் உணர்ந்து கொள்வதற்கு உதவிசெய்யும்.

இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அவற்றின் அடையாளத்தையும் சுயாதீனத்தையும் பேணக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாதவரை இன ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டைச் சிங்கள இனம் கேள்விக்குட்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பை நீக்கி அதிகாரங்களைப்பகிராத வரை இலங்கையில் இன ஐக்கியம் சாத்தியமில்லை. இந்தச் சாத்தியமின்மையில் இருந்துதான் தமிழர்களின் இன விடுதலைக்கான நியாயாதிக்கமும் பிறக்கிறது.

ஆனால் துரதிருஸ்ட வசமாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை கண்டு கொண்டும் தமது நலன்களுக்காக அதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரித்து நகருகின்றன. அரசியல் ரீதியில் மிக்க மிகப் பலவீனமான நிலையில் நிற்கும் ஒரு இனம் எல்லா வகையான செய்திகளையும் பார்வைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமானது. இந்த நிலையில் தமிழ் மக்களை மூன்று தசாப்தங்களுக்கு முந்திய சூழ்நிலைகளுக்குள் கொண்டு செல்லும் ஊடகவியலை நாங்கள் தெரிவு செய்ய முடியாது.

ஊடகம் நடத்தும் எவரும் அதன் உள்ளடக்கம் அது வெளிப்படுத்தும் அரசியல் மற்றும் சமூகப்பார்வைகள் குறித்து புரிந்து கொள்ள முடியாத ஒருசிலர் குறித்து கவலை கொள்வதில் அர்த்தமில்லை என எனது நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்

உண்மை. குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.

நடராஜா குருபரன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112724/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.