Jump to content

பாதாளத்தை நோக்கி…


Recommended Posts

பாதாளத்தை நோக்கி…

 

போருக்குப்பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை அடைவதற்காக பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகின்றது. ஆனால் நல்லிணக்க நடவடிக்கைகளாக அரசு குறிப்பிடுபவையயல்லாம் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்களின் மத்தியில் காணப்படும் அச்சங்களைப் போக்குகின்ற விடயங்களாகக் காணப்படவில்லை. மாறாக சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை யீனத்தை அதிகரிக்கின்றதும் ஸ்திரநிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதுமான செயற்பாடுகளே தற்போது அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வடக்குக் கிழக்கிலே பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்துதல், பெளத்த மக்களே இல்லாத இடத்தில் விகாரைகளை நிர்மாணித்தல், பொருளாதார வளங்களை சூறையாடல் போன்ற விடயங்களை பலமுறை சுட்டிக்காட்டியும் இன்னமும் உரிய நடவ டிக்கை இது விடயத்தில் எடுக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க மதத்தீவிரவாத அமைப்புக்களின் எழுச்சி அரசால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டு அல்லது மறைமுகமாக தட்டிக்கொடுக்கப்பட்டு தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரசாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.

இராணுவ சர்வாதிகாரம் நிலவும் மியன்மாரில் ஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காக இடைவிடாது குரல் எழுப்பி செயற்பாடுகளை வழிநடத்தியமைக்காக சமாதானத் திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி இருந்தும் அப்பாவி ரொகின்யா முஸ்லிம்களை கொத்துக்கொத்தாக கொலைசெய்தும் சித்திரவதைக்குட்படுத்தியும் அட்டூழியங் களை அரங்கேற்றியதன் பின்னணியிலுள்ள மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு பெளத்த அமைப்பான 969 என்ற அமைப்பின் ஸ்தாபக தலைவர் அ´ன் விராத்து தேரர் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அசன் விராத்து தேரர், முஸ்லிம் களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல தொடர்ந்தும் இலங்கையின் பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்கவுள்ளதாகவும் மாநாட்டில் விராத்து தேரர் தெரிவித்திருந்தார்.

அளுத்கம கலவரத்தில் சிந்திய இரத்தத்தின் வடுக்கள் இன்னமும் மனங்களில் பேரச்சமாக குடிகொண்டுள்ள நிலையில் அஸின் விராது தேரரின் கூற்றுக்கள் இந் நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மத்தியில் குறிப்பாக முஸ்லிம்களிடையே பாரிய உளவியல் தாக்கத்திற்கு வித்திட வழிவகுக்கக்கூடியதுமட்டுமன்றி எதிர்காலத்தில் நினைத் தும் பார்க்காத பாரிய அசம்பாவிதங்கள் தோற்றுவிக்கப்படக் கூடிய ஏதுநிலைகளையும் புறக்கணிக்கமுடியாது.

அளுத்தகம கலவரத்தின் பின்னர் அமைக்கப்படுமென ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்ட விசேட குழு இன்னமும் அமைக்கப்படாத நிலையிலும் அங்கு அழித்தொழிக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட கட்டடங்கள், சொத்துக்கள் இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் நிலையிலும் அங்கு ஊடகவிய லாளர்கள் சென்று தகவல் திரட்டுவதற்கு தற்போது இராணு வத்தினரின் அனுமதி மறுக்கப்படும் நிலையிலும் சாட்சியங் கள் இல்லாமல் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படும் நிலையிலும் பொதுபலசேனாவின் தற்போதைய மாநாட்டை யும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை – எச்சரிக்கைகளை யும் எளிதாகக் கருதிவிடமுடியாது.

இந்த மாநாட்டில் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங் கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர் கள் இங்கு தெரிவித்தனர்.

இங்கு பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கை யிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம் களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுபல சேனாவின் கடும்போக்கின் அடையாளமாக பார்க்கப்படும் கலபொட அத்தே ஞானசார தேரர், அஸின் விராது தேரருக்கு விஸா அனுமதிகொடுக்கக்கூடாது எனக் கூறுவதற்கு முஸ்லிம் அமைப்புக்களுக்கு என்ன அருகதை உள்ளதெனக் கேள்வியயழுப்பியதுடன் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.

இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொதுபலசேனா அமைப்பு இங்கு வெளியிட்டது.

முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படாமல் அன்றேல் அலட்சியமாக கருதப்பட்டு பொது பலசேனா மாநாட்டில் மியன்மாரின் கடும்போக்கு அஸின் விராது தேரர் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டமையும் பொது பலசேனாவின் அதிரடி அறிவிப்புக்களும் எச்சரிக்கையும் அடுத்துவரும் காலப்பகுதிகள் தொடர்பான ஐயப்பாடுகளைத் தருகின்றன. அளுத்கம சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக எத்தனையோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அவை தட்டிக்கழிக்கப் பட்டதன் விளைவை முஸ்லிம் மக்கள் அனுபவிக்கநேர்ந்

தது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத்தவறின் பாதிக்கப்படப்போவது அனைத்து இனமக்களுமே என்பதை இந்த அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

http://sudaroli.com/?p=3694

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.