Jump to content

தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு!

[Tuesday 2014-09-30 20:00]
Google-300-tech-news-seithycom.jpg

கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியால் ஆர்குட்டின் வளர்ச்சி தடைபட்டதால் ஆர்குட்டின் சேவையை நிறுத்தி கொள்ளும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

  

கடந்த 2004ம் ஆண்டு ஆர்குட் சேவை தொடங்கப்பட்டது. அதே வருடம் பேஸ்புக் நிறுவனமும் தொடங்கப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது 128 கோடி பயன்பாட்டாளர்களுடன் உலகின் பெரிய சமூக வலைதளமாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியது. அதன்பின் பிற சேவைகளுக்கும் அதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. பேஸ்புக் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் தொடக்கத்தில் இருந்தே தன்னை நிலை நிறுத்தி கொண்டது கூகுள் பிளஸ். அதனையடுத்து கடந்த சில வருடங்களில் ஒருங்கிணைந்த பயன்பாட்டாளர் அடையாள முறை கொண்டதாக கூகுள் பிளஸ் வளர்ச்சி அடைந்து நிலை நிறுத்தி கொள்ளப்பட்டது.

காம்ஸ்கோர் ஆய்வு நிறுவனத்தின்படி, கடந்த 2010ம் வருடம் ஆர்குட்டை இந்திய அளவில் பேஸ்புக் முந்தியது. அதன் வருகையாளர்கள் 2.09 கோடியாக அதே வருடத்தின் ஜூலையில் அதிகரித்தனர். இது ஆர்குட் நிறுவனத்தின் 16 சதவீத வளர்ச்சி நிலையில் 1.99 கோடி வருகையாளர்கள் என்ற நிலைப்பாட்டை காட்டிலும் அதிகமானது. ஆர்குட் பயன்பாட்டாளர்கள் அனைவரது பதிவுகளும் பாதுகாக்கப்பட்டு அவை இன்று முதல் (செப்டம்பர் 30) கிடைக்க கூடிய வகையில் செயல்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117812&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.