Jump to content

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

201410011052559783_jeya-bail-plea-adjour

பெங்களூர்,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து ஜெயலலிதாவும், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு, அப்பீல் மனு, குற்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதே போன்று சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டின் (தசரா) விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது.இதில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இதன் காரணமாக ஜெயலலிதா 6-ந் தேதி வரை ஜாமீனில் வெளியே வரமுடியாது என்ற நிலை உருவானது.இதையடுத்து ஜெயலலிதாவின் வக்கீல்கள் ராம்ஜெத்மலானி தலைமையில், ஐகோர்ட்டின் பதிவாளர் தேசாயை சந்தித்து,  ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இன்று  விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது இன்று (புதன்கிழமை) சிறப்பு அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கினார். அதன்படி ஜெயலலிதா ஜாமீன் மனு, அவசர வழக்காக இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி ரத்தினகலா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. 

இதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க  அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதாவை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிப்பது  ஏன் விளக்கி பவானி சிங் மனு தாக்கல் செய்தார். அரசு மனுவை ஏற்ற நீதிபதி ரத்னகலா அக்டோபர் 7 (செவ்வாய்கிழமை)ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார். 

http://www.dailythanthi.com/News/India/2014/10/01105302/jeya-bail-plea-adjourn-again.vpf

Link to comment
Share on other sites

ஜெயலலிதா ஜெயராமினால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மற்றும் பிணை மனுக்கள் இரண்டும், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்த கலாவினால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அரச தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிணை வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுவொன்றைத் தாக்கல்  செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு, இம்மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தார். இதனால், எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஜெயலலிதா பிணையில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று இந்த மனுக்கள் நீதிபதி ரத்ன கலா முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் முறைப்படியான வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகியிருக்கவில்லை. மாறாக சொத்துக் குவிப்பு வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக வாதாடி வந்த பவானி சிங் ஆஜராகியிருந்தார். அவர் நீதிபதி ரத்ன கலாவிடம், என்னை இந்தப் புதிய வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்திருப்பதாக எந்த தகவலும் எனக்கு முறைப்படி வரவில்லை. எனவே இதில் நான் ஆஜராகி எனது எதிர்ப்புகளைப் பதிவு செய்ய முடியாது என்று கூறினார்.

இதனையடுத்தே, அரச தரப்பு வழங்கறிஞரை அரசாங்கம் நியமிக்கட்டும் என்று கூறி, எதிர்வரும் 6ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை அணுகியது. அவரிடம், இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட விசாரணை நடத்தலாம் என்பதை சட்ட விவரத்துடன் எடுத்துக் கூறி உடனடியாக இதை விசாரிக்க வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவைத் தொடர்பு கொண்டார் பதிவாளர் ஜெனரல். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பவானி சிங்கின் நியமன உத்தரவு அவசரம் அவசரமாக அவரிடம் தரப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணை நடந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். பிணை  மனு விசாரணையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளும், அ.தி.மு.க தொண்டர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.

விசாரணை தொடங்கியதுமே பவானி சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பிணை அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்ன கலா, விசாரணையை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

ஒக்டோபர் 6ஆம் திகதி பக்ரீத் விடுமுறையாகும். இதையும் மனதில் கொண்டும், தசரா விடுமுறைக்குப் பின்னர் ரெகுலரான பெஞ்ச் பிணை மனுக்களை விசாரிக்கும் என நீதிபதி ரத்ன கலா உத்தரவிட்டார். ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெயில்தான் இதன் காரணமாக ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது வெறும் 2 நிமிடங்களிலேயே அது முடிந்து போனது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 5 நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜெயலலிதா சார்பில் மீண்டும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பட்டேலிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இன்று மாலையே இந்த மனு மீது விசாரனை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர். இந்த அவசர மனு ஏற்கப்படுமா என பிற்பகலில் தெரியவரும். http://www.pathivu.com/news/34254/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் எப்படி பிணையில் வெளியே வரமுடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச தரப்பு ஜெயலலிதாவை வெளியே வரவிடாமல்த் தடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.