Jump to content

லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. 
[Wednesday 2014-10-01 10:00]
yalini-murukathas-011014-300-seithycom.j

வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எடுத்து, தனது முழு நேரத்தையும் சட்டத்துறையில் செலுத்தி, தீவிரமாகப் படித்து சட்டத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் இளம் வயதிலேயே பெற்றிருக்கின்றார்.

   

பல்கலைப் படிப்பில், சட்டத்துறையை (law) யாரும் அதிகளவில் விரும்பிப்படிப்பதில்லை. காரணம் சுமைகள் கூடிய சிக்கலான துறை இதுவாகும். அதிக நேரத்தை செலவிட்டு அதிகம் படிக்கவேண்டும். ஆனால் செல்வி.யாழினி இந்தச் சுமைகள் கூடிய படிப்பை ஒரு தவமாக எண்ணி விரும்பிப் படித்திருந்தார். தனது நாட்களின் அதிகளவு நேரத்தை இந்த துறையில் செலவிட்ட யாழினி ஒரே தடவையில் படித்து முடித்துப் பட்டம் பெற்றது மட்டுமில்லாமல், மறு நாளே அவருக்கு லண்டனில் உள்ள பிரபல நீதிமன்றமான Croydon County Court இல் அரச சட்டத்தரணியாக பணியாற்றும் சேவையையும் பெற்றுள்ளார் என்பது இங்கு சிறப்புடன் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில், தனது இளம் வயதில் சட்டத்தரணியாகியுள்ள செல்வி யாழினி வல்வெட்டித்துறைக்கும் இந்த வகையில் பெருமை சேர்த்துள்ளார்.செல்வி யாழினி வல்வை ஊரிக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த திரு அருட்பிரகாசம், சாந்தகுணநாயகி ஆகியோரின் பேர்த்தி ஆவார். மறைந்த திரு அருட்பிரகாசம் அவர்கள் ஒரு மிகச் சகலதுறை விளையாட்டு வீரர் என்பதும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117838&category=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LLB= 3 வருடம்

 

LLM = 1 வருடம்.

 

மொத்தம் 4 வருடம்.

 

18 வயதில யுனிக்கு போக லண்டனில் நல்ல வாய்ப்புள்ளது. போனால் 22 வயதில் இதெல்லாம் முடிக்கலாம். அப்படித்தான் முடிக்கிறாங்க. இப்ப MEng, MSci MPhy.. எல்லாமே 4 வருடங்கள் தான் மொத்தம்.

 

இது சாதனை என்று சொல்ல முடியாது. பிள்ளை ஒரு வருசத்தை வீணாக்கி படிச்சிருக்குது. :lol::D

 

இதே ஊரில் என்றால்.. ஏ எல் எடுத்து.. வெட்டுப்புள்ளி வர காத்திருந்து.. அப்புறம் 19/ 20 வயசில யுனிக்குப் போய்.. முடிய.. 23.. 24 ஆகிடும். அதோடு ஒப்பிடும் போது.. இது கெட்டித்தனம் தான். அதில் பிள்ளையின் பங்கைவிட.. பிரித்தானியாவின் கல்வி நிர்வாக முறைமை மாணவர்களை 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை திறம்பட வெளிப்படுத்துவது தான் காரணம்..!!

 

இதெல்லாம் சாதனை என்றால்.. வெவ்வேறு துறைகளில்.. வெவ்வேறு யுனிகளில்.. பெயர் நீளத்துக்கும் பட்டம் பெற்ற எத்தனையோ பேர் இருக்கினம். அவங்க...???! :icon_idea::)


இன்னொரு கதையளப்பு இந்தச் செய்தியில் உள்ளது. பிரித்தானியாவிலும் சரி.. இப்ப ஊரிலும் சரி.. நிறைய சட்டம் படிக்க மாணவர்கள் குவிகிறார்கள். சுமை... கஸ்டம் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.

 

இந்தச் செய்தியை ஆக்கிய ஊடகக்காரர்களுக்கு தான்.. எல்லாமே கஸ்டம் போல இருக்குது..!!

 

குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழக கல்வியில்.. இப்போ.. சட்டம்.. முகாமைத்துவம்.. ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது..! அந்தளவுக்கு அவற்றின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் அமைந்துள்ளதோடு.. நிர்வாக முறைமைக்கு அடிப்படை சட்ட அறிவு எல்லோருக்கும் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுஎப்படியோ.. ஒரு பட்டதாரிக்கு பட்டங்கள் பெற்றமைக்கான சாதாரண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தரும் அதேவேளை நெடுக்கர் சொன்னது போல இது குறிப்பிடத் தக்க சாதனை அல்ல.

தமிழர்கள் பெரும் கல்விச் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருகிறார்கள். இது அதனுள் ஒன்று என எடுத்துக் கொள்ள முடியாது.

சட்டத் துறையில் இலங்கையில் மூவர் தான் கலாநிதிப் பட்டம் பெற்று உள்ளனர். (எனக்குத் தெரிந்த வகையில்) ஒருவர் மறைந்த கதிர்காமர். அடுத்தவர் பேராசிரியர் பீரிஸ்.

 

 இன்னுமொருவர் லண்டனில் உள்ள தமிழர். இவர் இலங்கை அரசால் புலைமைப் பரிசில் வழங்கி அனுப்பப் பட்டவர். (கடந்த 7 வருடங்களில்). டாக்டர் பட்டம் பெற்றதும் இங்கேயே தங்கி விட்டார். மேலும் ஆளும் பழமைவாத கட்சி தமது கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்து இருந்தது. (சட்டத் துறை டாக்டர் என்பதால்)

இந்த பெண்ணும் கலாநிதியாவதுடன் பாரிஸ்டர் ஆகி வர வாழ்த்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  தொடர்ந்தும் சட்டத்துறையில் முன்னேறித் தமிழனின் பெருமையைத் தரணியெங்கும் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

எல்லாத்துறையிலும் தமிழன் நிமிரணும்...

சட்டத்துறை

பொருளியல்த்துறை

பத்திரிகைத்துறை  உட்பட...

 

 

LLB= 3 வருடம்

 

LLM = 1 வருடம்.

 

மொத்தம் 4 வருடம்.

 

18 வயதில யுனிக்கு போக லண்டனில் நல்ல வாய்ப்புள்ளது. போனால் 22 வயதில் இதெல்லாம் முடிக்கலாம். அப்படித்தான் முடிக்கிறாங்க. இப்ப MEng, MSci MPhy.. எல்லாமே 4 வருடங்கள் தான் மொத்தம்.

 

இது சாதனை என்று சொல்ல முடியாது. பிள்ளை ஒரு வருசத்தை வீணாக்கி படிச்சிருக்குது. :lol::D

 

இதே ஊரில் என்றால்.. ஏ எல் எடுத்து.. வெட்டுப்புள்ளி வர காத்திருந்து.. அப்புறம் 19/ 20 வயசில யுனிக்குப் போய்.. முடிய.. 23.. 24 ஆகிடும். அதோடு ஒப்பிடும் போது.. இது கெட்டித்தனம் தான். அதில் பிள்ளையின் பங்கைவிட.. பிரித்தானியாவின் கல்வி நிர்வாக முறைமை மாணவர்களை 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை திறம்பட வெளிப்படுத்துவது தான் காரணம்..!!

 

இதெல்லாம் சாதனை என்றால்.. வெவ்வேறு துறைகளில்.. வெவ்வேறு யுனிகளில்.. பெயர் நீளத்துக்கும் பட்டம் பெற்ற எத்தனையோ பேர் இருக்கினம். அவங்க...???! :icon_idea::)


இன்னொரு கதையளப்பு இந்தச் செய்தியில் உள்ளது. பிரித்தானியாவிலும் சரி.. இப்ப ஊரிலும் சரி.. நிறைய சட்டம் படிக்க மாணவர்கள் குவிகிறார்கள். சுமை... கஸ்டம் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.

 

இந்தச் செய்தியை ஆக்கிய ஊடகக்காரர்களுக்கு தான்.. எல்லாமே கஸ்டம் போல இருக்குது..!!

 

குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழக கல்வியில்.. இப்போ.. சட்டம்.. முகாமைத்துவம்.. ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது..! அந்தளவுக்கு அவற்றின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் அமைந்துள்ளதோடு.. நிர்வாக முறைமைக்கு அடிப்படை சட்ட அறிவு எல்லோருக்கும் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!! :):icon_idea:

 

 

எனது மகன் 22 வயசில்

 

பட்டப்படிப்பு 3 வருடம் + MASTER 2 (2வருடம்)  முடித்தான்

பததிரிகைகள் ஒன்றிலும் காணோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் 22 வயசில்

 

பட்டப்படிப்பு 3 வருடம் + MASTER 2 (2வருடம்)  முடித்தான்

பததிரிகைகள் ஒன்றிலும் காணோம்....

 

(முழு) நிறைவாகும் வரை மறைவாயிருப்பது நல்லது. :D

 

குடும்பத்தில் முதல் பட்டப் படிப்பாயின் போடலாம்.  :lol:
 
உங்கள் சில விவேகமான எழுத்துக்களைப் பார்த்தால், குட்டி பதினாறு அடி பாயந்துள்ளதாக கருதலாம், விசுகர். :icon_idea:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.