Jump to content

நனையாத மார்பு கச்சைகள்...


Recommended Posts

ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது
வேப்பங்கிளையில் தூளி..,

ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில்
கிளைநிரப்பிய கொய்யா..,

யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன
யாழும் குழலும்..,

விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர்
இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி..,

புள்ளதாச்சி குழிகளின் சாபம்
முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி..,

மழைநீரால் ஒளிந்து கொள்ளும்
பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,

சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ
வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ..,

விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர்
முகவரி தொலைத்த விடுமுறைகாலம்..,

மழைநீரை வெறித்தபடி கவலைகளில்
மிதக்கின்றன சில காகிதங்கள்..,

புதுவர்ண பூச்சு அலங்கோலம்
தூரிகை மாயம் சுவற்றில்..,

மதிப்பிழந்த சில்லறை காசுகள்
அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்..,

பால்கடி தட சுகயேக்கம்
நனையாத மார்பு கச்சைகளுக்கு....


~ ராஜன் விஷ்வா

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

வித்தியாசமாக ஹைக்கூ பாணியில் கவிதை எழுதியுள்ளீர்கள்.  ஒரு மரத்தில் தனித்து நின்று கூவும் ஒற்றைக் குயிலின் சோகம் போன்று இருக்கின்றது அனைத்து வரிகளையும் வாசிக்கும் போது எழும் மனவுணர்வு.



மழைநீரால் ஒளிந்து கொள்ளும்
பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,



 

 

இவ் வரிகள் மட்டும் ஒவ்வாமல் இருக்கின்றன போன்று எனக்கு தோன்றுகின்றது. மழை நீரில் நிரம்பிக் கொள்ளும் பழைய கொள்ளைப்புற நீர்த்தொட்டி பின் எவ்வாறு ஒளிந்து கொள்ளும் என்ற கேள்வி எழுகின்றது. நிரம்பலின் பின் ஒளிவு சாத்தியமில்லையே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

வித்தியாசமாக ஹைக்கூ பாணியில் கவிதை எழுதியுள்ளீர்கள். ஒரு மரத்தில் தனித்து நின்று கூவும் ஒற்றைக் குயிலின் சோகம் போன்று இருக்கின்றது அனைத்து வரிகளையும் வாசிக்கும் போது எழும் மனவுணர்வு.

இவ் வரிகள் மட்டும் ஒவ்வாமல் இருக்கின்றன போன்று எனக்கு தோன்றுகின்றது. மழை நீரில் நிரம்பிக் கொள்ளும் பழைய கொள்ளைப்புற நீர்த்தொட்டி பின் எவ்வாறு ஒளிந்து கொள்ளும் என்ற கேள்வி எழுகின்றது. நிரம்பலின் பின் ஒளிவு சாத்தியமில்லையே...?

இந்தமுறை நீங்கள் கூறியபடி அதிக இடைவெளிகள் விட்டு எழுதியுள்ளேன்.

சிறிய வயதில் ஒளிந்து விளையாடும் போது ஒளிந்து கொள்ளும் இடங்களில் ஒன்று கொள்ளைபுற தொட்டி.

சிறுவர்கள் இல்லாத வீட்டில் நீர்த்தொட்டி தன்னையே ஒளித்து கொள்கிறது இங்கு.

கருத்து பகிர்விற்க்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகளண்ணா... :)

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

நிற்சயம் நிறைய எழுதுவேன் யாழில். அன்பிற்கு நன்றி கிருபன் அண்ணா :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ராசா  :) 

Link to comment
Share on other sites

ஆழ்ந்து உணரக் கூடியவாறு நுணுக்கமாக காட்சிகளை வெளிப்படுத்துகின்றது உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.

 

சிறிய வயதில் ஒளிந்து விளையாடும் போது ஒளிந்து கொள்ளும் இடங்களில் ஒன்று கொள்ளைபுற தொட்டி.

சிறுவர்கள் இல்லாத வீட்டில் நீர்த்தொட்டி தன்னையே ஒளித்து கொள்கிறது இங்கு.

 

 

விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடிகின்றது.  கொல்லைப்புற காட்சிகளில் இருந்து ரொம்பத்தூரம் தள்ளிப்போய்விட்டோம்.

 

Link to comment
Share on other sites

அழகான . அருமையான கவிதை..... வாழ்த்துக்கள்..... :)

Link to comment
Share on other sites

நல்லாயிருக்கு.. :huh: என்ன மீனிங்கு?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

விளங்காட்டி ஒரு பச்சையை குத்திவிடுங்கோ . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்காட்டி ஒரு பச்சையை குத்திவிடுங்கோ . :icon_mrgreen:

இதுவும் ஒரு விளையாட்டு ம்..ம்                  மற்றபடிகவிதை நன்றாயுள்ளது வாழ்த்துக்கள் ரா.விஷ்வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

 

220px-A_writing_stick_%28%E0%AE%95%E0%AE

 

பலப்பம் என்பது, சிலேட்டில்... எழுத பாவிக்கப் படும் பென்சில்.

Link to comment
Share on other sites

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ராசா :)

நன்றி ராசா :D

ஆழ்ந்து உணரக் கூடியவாறு நுணுக்கமாக காட்சிகளை வெளிப்படுத்துகின்றது உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.

விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடிகின்றது. கொல்லைப்புற காட்சிகளில் இருந்து ரொம்பத்தூரம் தள்ளிப்போய்விட்டோம்.

வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா :)

என்ன செய்வது பழமைகள் எல்லாம் தொலைத்து கொண்டிருக்கிறோமே :(

அழகான . அருமையான கவிதை..... வாழ்த்துக்கள்..... :)

நன்றிகளக்கா :)

நல்லாயிருக்கு.. :huh: என்ன மீனிங்கு?? :D

குரு எனக்கு தெரியும்... சிஷ்யபிள்ளையின் அறிவை பரிசோதித்து பார்க்கிறீர் என்று..., :D

பிள்ளையில்லா வீட்டின் வெறுமைகளே பாடுபொருள் :)

Link to comment
Share on other sites

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

ஆராவரம் பிள்ளைகள் கூடும் போது எழும் கூச்சல், உற்சாகம். பலப்ப்ம் சிலேட்டு குச்சி :) வழக்கு சொற்கள் இங்கு...

இதுவும் ஒரு விளையாட்டு ம்..ம் மற்றபடிகவிதை நன்றாயுள்ளது வாழ்த்துக்கள் ரா.விஷ்வா

நன்றியண்ணா :)

220px-A_writing_stick_%28%E0%AE%95%E0%AE

பலப்பம் என்பது, சிலேட்டில்... எழுத பாவிக்கப் படும் பென்சில்.

இதே தான். சிறுவயதில் கனக்கா இதை தின்ன அனுபவமுண்டு. இணைப்பிற்கு நன்றிகள் சிறியண்ணா :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே தான். சிறுவயதில் கனக்கா இதை தின்ன அனுபவமுண்டு. இணைப்பிற்கு நன்றிகள் சிறியண்ணா :)

 

விஷ்வா.... நீங்கள் பலப்பத்தை தான் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்கள்,

நாங்க, சிலேட்டையே.... சாப்பிட்டு இருக்கிறம். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விளங்கினது...பச்சை குத்தியுள்ளேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்கடி தட சுகயேக்கம்

நனையாத மார்பு கச்சைகளுக்கு....

 

 

இந்தக் கவிதைக்கு.. அதிக ஆக்கள் ஆஆஆஆ என்று கொண்டு வர..வர காரணம்.. இது தான். அதாவது தலைப்பும்.. இந்தப் பகுதியும்.

 

நமக்கு இது புரியவே இல்ல...???!

 

பொழிப்புரை தாருங்கள் கவிஞரே..!!!

 

அப்பதான் யோசிக்கலாம்.. பச்சை போடுறதா இல்லையான்னு..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாபா பெரிய ரோதனையாய்க் கீது...! 

 

நல்லாக் கேட்டுக்கோ...!!

 

அந்தா அந்த வேப்ப மரத்தில ஒரு ஏணை சும்மா கிடக்கு.

அங்கின யாருமில்லை நைனா !

 

கொய்யா மரத்தில எம்மாம் பழங்கள் கீது.

ஒரு குருவிங் காட்டியும் துன்ன வரேல்ல..!

 

நம்ம சரசுவதி கையில கிடக்குமே அந்த உலக்கையும் ,

கிட்டினன் ஊதுற குழலும் தேமென்னு கிடக்கு...!

 

பெரிய பெரிய சாமிங்கல்லாம் குறட்டை வுடுது,

அய்யரு தம்பாட்டுக்கு கத்திக்கினூ இருக்கார்.

 

இங்கின புளியங்கொட்டைங்க பாண்டி பலகைக்கு பக்கமா

பப்பரக்கான்னு கிடக்கு..!

புள்ளத்தாச்சிங்க பாண்டி ஆடக்கூடாது ,ஆங் சொல்லிப்புட்டன்.

 

கொல்லைக்குள்ளாற வாட்டர் டாங்கு உந்தச் சின்னபுள்ளைங்க

தொந்தரவில்லாமல் ஹாயாய் கிடக்கு .  யாரும் பாக்கேல்ல..!

 

நம்ம சிறிப்பய  சிலேட்டுக் குச்சிய பாதியை கடிச்சுத்துன்னுட்டு

அதால  அ னா , இ னா ன்டு ஏதொ கிறுக்கிறாப்பல...!

 

இந்தாபாரு ஒரு லீவு லட்டர் அட்ரச தொலைச்சுட்டு அம்போன்னு கிடக்கு..!

வேணுன்னா நீ எடுத்துக்கோ...!

 

மானம் பொத்துக்கிட்டு கொட்டுது , இந்த பேப்பருங்க எல்லாம்

வெள்ளத்தில இஸ்த்துக்கினு நவுருது..!

 

சுவத்தில புச்சு புச்சா பெயின்ட்டு பூசி

பீலா உடுறாங்க டோய்...!

 

அங்கின செல்லாக் காசுங்க செதறிக் கிடக்கு,

ஒரு குவாட்டருக்கு பிரயோசனமில்லை...!

 

நம்ப கடோசிக்கு மூனுவயசாகுது, அதுக்குப் பிறகு

நம்ம சிவப்பி வயத்தில ஒரு பூச்சி புழு இல்ல,

மாருல பாலும் வத்திட்டுது, அதுதான் உட்சட்டையை

கொடில போட்டிருக்கு, உந்தப் பொடி எங்கன நின்னு

பாத்துதோ தெரியாது, பார்திபன் மாதிரி

கவிதை எழுதிப் போட்டுது...!  :D :D

 

 

எதோ நம்ம அறிவுக்கு  விளங்கினது...!! :lol::D

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

அடேயப்பா.. இப்ப மறுபடியும் வாசித்துப் பார்த்தேன்.. அருமையாகப் புனையப்பட்டுள்ளது.. இல்லையில்லை.. வனையப்பட்டுள்ளது கவிதை.. :D விளக்கத்திற்கு நன்றி சிஷ்யா.. :huh::D

சுவியண்ணா.. உங்கட பொழிப்புரையும் அபாரம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறாம் ஆண்டீல் ஒருமாதகாலம் எங்களுடைய ஊருக்குள் புகுந்த இராணுவம் ஒருமாதத்தின் பின் மண்டைதீவுக்கு சென்று முகாமிட்டனர். அந்த வேளையில் நான் என் உறவுகளுடன் ஊருக்குள் போய் வீட்டை பார்க்கவும் ஏதாவது பொருட்கள் இருந்தால் பொறுக்கி வரவும் சென்றேன். ஓரு ஜந்து நிமிடந்தான் அங்கு நிற்கக்கூடியதாக இருந்தது. விஸ்வாவின் இக்கவிதையை வாசிக்கும் பொழுது என் மனதில் நான் அன்று பார்த்த அக் காட்சி நிழற்படமாக ஓடியது. நல்லதொரு கவிதை. சில எழுத்துப் பிழைகள்தான் வாசிப்பவர்களுக்கு விளக்கமின்மையைக் கொடுத்திருக்கிறது. உதாரணமாக முதல் வரியில் ஆளரவமற்ற என்று வரும் என நினைக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நைனா :D
 கவிதையும் சுவி அண்ணாவின் :D பொழிப்புரையும் மிக்க நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளும் மிளிர்கின்றன கவிஞ்ஞா ...

Link to comment
Share on other sites

விஷ்வா.... நீங்கள் பலப்பத்தை தான் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்கள்,

நாங்க, சிலேட்டையே.... சாப்பிட்டு இருக்கிறம். :D:lol:

கரும்பலகையை சாப்பிட்ட நந்தண்ணணே அமைதியாக இருக்கிறார். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாபா பெரிய ரோதனையாய்க் கீது...! 

 

நல்லாக் கேட்டுக்கோ...!!

 

அந்தா அந்த வேப்ப மரத்தில ஒரு ஏணை சும்மா கிடக்கு.

அங்கின யாருமில்லை நைனா !

 

கொய்யா மரத்தில எம்மாம் பழங்கள் கீது.

ஒரு குருவிங் காட்டியும் துன்ன வரேல்ல..!

 

நம்ம சரசுவதி கையில கிடக்குமே அந்த உலக்கையும் ,

கிட்டினன் ஊதுற குழலும் தேமென்னு கிடக்கு...!

 

பெரிய பெரிய சாமிங்கல்லாம் குறட்டை வுடுது,

அய்யரு தம்பாட்டுக்கு கத்திக்கினூ இருக்கார்.

 

இங்கின புளியங்கொட்டைங்க பாண்டி பலகைக்கு பக்கமா

பப்பரக்கான்னு கிடக்கு..!

புள்ளத்தாச்சிங்க பாண்டி ஆடக்கூடாது ,ஆங் சொல்லிப்புட்டன்.

 

கொல்லைக்குள்ளாற வாட்டர் டாங்கு உந்தச் சின்னபுள்ளைங்க

தொந்தரவில்லாமல் ஹாயாய் கிடக்கு .  யாரும் பாக்கேல்ல..!

 

நம்ம சிறிப்பய  சிலேட்டுக் குச்சிய பாதியை கடிச்சுத்துன்னுட்டு

அதால  அ னா , இ னா ன்டு ஏதொ கிறுக்கிறாப்பல...!

 

இந்தாபாரு ஒரு லீவு லட்டர் அட்ரச தொலைச்சுட்டு அம்போன்னு கிடக்கு..!

வேணுன்னா நீ எடுத்துக்கோ...!

 

மானம் பொத்துக்கிட்டு கொட்டுது , இந்த பேப்பருங்க எல்லாம்

வெள்ளத்தில இஸ்த்துக்கினு நவுருது..!

 

சுவத்தில புச்சு புச்சா பெயின்ட்டு பூசி

பீலா உடுறாங்க டோய்...!

 

அங்கின செல்லாக் காசுங்க செதறிக் கிடக்கு,

ஒரு குவாட்டருக்கு பிரயோசனமில்லை...!

 

நம்ப கடோசிக்கு மூனுவயசாகுது, அதுக்குப் பிறகு

நம்ம சிவப்பி வயத்தில ஒரு பூச்சி புழு இல்ல,

மாருல பாலும் வத்திட்டுது, அதுதான் உட்சட்டையை

கொடில போட்டிருக்கு, உந்தப் பொடி எங்கன நின்னு

பாத்துதோ தெரியாது, பார்திபன் மாதிரி

கவிதை எழுதிப் போட்டுது...!  :D :D

 

 

எதோ நம்ம அறிவுக்கு  விளங்கினது...!! :lol::D

 

இப்ப தான்.... கவிதை விளங்கினது.

சுவி, நீங்கள் சென்னையில் வசித்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

சென்னைப் பாசையில், எழுதிய  பொழிப்புரை... சூப்பரு நைனா. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.