Jump to content

சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார்


Recommended Posts

சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார்
 

 

பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர்.

 

நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர்.

சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும்.

 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து வீச்சு மதிப்பீட்டுக் குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும். எச்சரிக்கைப் பட்டியலில் சுனில் நரைன் பெயர் சேர்க்கப்படும், அவர் தொடர்ந்து விளையாடலாம், பந்து வீசலாம்.

ஆனால் மீண்டும் ஒருமுறை இவர் மீது புகார் எழுப்பப்பட்டால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் அவர் பந்து வீசத் தடை விதிக்கப்படும் அவர் பேட்ஸ்மென் என்ற நிலையில் விளையாடலாம்.

 

நடப்பு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நரைன் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார்.

கடந்த 3 ஐபில் தொடர்களில் 2 முறை கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல சுனில் நரைன் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6461196.ece

 

Link to comment
Share on other sites

சுனில் நரையன், பந்தை வீசி எறிவதாக முறையீடு
 
suniln.jpgமேற்கிந்திய தீவுகளின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரையன், பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிவதாக சம்பியன் லீக் தொடரில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின் நடுவர்கள் அவரின் பந்துவீச்சு மீது சந்தேகம் இருப்பதாக முறையீடு செய்துள்ளனர். கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்காக சம்பியன் லீக் தொடரில் சுனில் நரையன் விளையாடி வருகின்றார். நேற்று நடைபெற்ற டொல்பின்ஸ் அணியுடனான போட்டியின் போது வேகமாக துடுப்பாட்ட வீரர்களை நோக்கி வரும் பந்துகளை வீசும் போதே குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக போட்டியின் நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதன்படி அவர்  போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியும். ஆனாலும் இன்னொரு முறை இவ்வாறு குற்றம் சாட்டப் பட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபைக்கு உட்பட்ட போட்டிகளில் பந்து வீச முடியாத படி தடைசெய்யப்படுவார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபையின் உதவியுடன் தொடர்ந்து சம்பியன் லீக் தொடரில் விளையாட முடியும். 
 
சம்பியன் லீக் போட்டிகளில் இவ்வாறு முறையீடு செய்யப்பட்டுள்ளமையால் சர்வதேசப் போட்டிகளிலும் முறையீடு செய்யப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் நேற்று முன் தினம் இவ்வாறு முறையீடு செய்யப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களிலும் சிறந்த நடுவர் விருதை வென்ற இலங்கையின் குமார் தர்மசேனா சம்மந்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

Link to comment
Share on other sites

சனிக்கிழமை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் சுனில் நரைன் பந்து வீச முடியாது.

இன்று நடந்த அரை இறுதி போட்டியிலும் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருந்ததால் இறுதி போட்டியில் பந்து வீச தடை செய்யபட்டு உள்ளார்.

 

http://www.espncricinfo.com/champions-league-twenty20-2014/content/current/story/786857.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.