Jump to content

ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ்


Recommended Posts

ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ்

 
da2(1).JPG

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைதினையடுத்து, எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

 

யாழ்;ப்பாணம், பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள் தடைப்பட்டிருக்கலாமேயொழியே, இலங்கை தமிழர்களை பொறுத்தவரையில் அது இன்னும் முன்னேற்றகரமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார் 

'எல்லை தாண்டிய தமிழ் நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பினுள் வந்து தொழில் செய்வதனால் எம்முடைய கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமன்றி இவ்வாறு எல்லை தாண்டிய அவர்களது தொழில் நடவடிக்கைகளால் எமது கடல் வளமும் சூறையாடப்படுகின்றது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் கைதுக்கு பின்னர் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றதென்று சுட்டிக்காட்டினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தாளும் ஒரு நாள் அங்க அம்மாவை உள்ளுக்க சந்திக்க வேண்டி வரும்..
 
எதுக்கும் அளந்து கதைக்கிறது நல்லது.  :D
Link to comment
Share on other sites

பூனையில்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம். எலி ஒன்று துள்ளிக் குதிக்கிறது.

Link to comment
Share on other sites

மீனவர்கள் எல்லை மீறுவதற்கு ஜெயாவே காரணம் என்று பழிபோடுறார்.. எந்தக்காலத்தில் ஆள் இருக்குது? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் எல்லை மீறுவதற்கு ஜெயாவே காரணம் என்று பழிபோடுறார்.. எந்தக்காலத்தில் ஆள் இருக்குது? :D

 

 

மாமா

ஆளைத்தெரியாமல் காலை விடுகிறார்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமா

ஆளைத்தெரியாமல் காலை விடுகிறார்... :lol:

 

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை ஆன கருணாநிதியே வாயை பொத்திக்கொண்டிருக்கிறார்......இந்தாளுக்கு தேவையில்லாத சோலி.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை ஆன கருணாநிதியே வாயை பொத்திக்கொண்டிருக்கிறார்......இந்தாளுக்கு தேவையில்லாத சோலி.. :lol:

 

எல்லாம் சுப்பிரமணி இருக்கிற துணிவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இன்னும்.... ஒரு மதமோ, இரண்டு மாதமோ... தான் சிறையில் இருப்பார்.
அதன் பின் எப்படியும், வெளியில் வந்து விடுவார்.
அதுக்குப் பிறகு, டக்ளஸ் வாலைச் சுருட்டிக் கொண்டுதான் இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

தமிழக மீனவர்கள் 16பேர் சிங்களக் கடற்படையால் கைது!

 

 

navy.jpgதமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.இதேபோல், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசை படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் இலங்கை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 16 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

http://tamilleader.com/?p=42079

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 16பேர் சிங்களக் கடற்படையால் கைது!

 

இனி  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டத்தேவையில்லை

சிங்களவன் எல்லை தாண்டி வருவான் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MGR க்கு பிறகு இலங்கையரசிற்க்கு ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்து இலங்கை அரசிற்க்கு அதிக நெருக்கடிகளை கொடுத்தவர் மம்மி தான்  இதை சென்றல் ரசிக்கபோவதில்லை தெரிஞ்சும் கண்டன தீர்மாணங்களை இலங்கை இனவாத அரசிற்க்கு எதிராக இயற்றினார் இந்த வகையில் கைபுள்ளைகருநாநிதியை விட எவ்வளவோ மேல் மம்மி வெளியில் விரைவில் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.