Jump to content

வீடில்லா புத்தகங்கள்


Recommended Posts

வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண்

 

bookj_2113540g.jpg

 

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல்.

 

புயலின் கண்

எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன்.

பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்துவிடும். ‘‘ரொம்ப ரேர் புக் சார். 500 ரூபா குடுங்க’’ என்று ஆரம்பிப்பார்.

‘‘சும்மா படிக்கலாம் என நினைத்து எடுத்தேன். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’’ எனத் தவிர்த்துவிட்டு நடந்தால், சற்று பேரம் இறங்கிவரும். பழைய புத்தக வியாபாரிகள் தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் பேரம் பேசுவதை விரும்பவே மாட்டார்கள். அவர்கள் சொல்கிற விலைதான். அதேநேரம் நாம் தொடர்ந்து அவரிடம் புத்தகம் வாங்கினால் அரிய புத்தகங்களைக் கூட இலவசமாகத் தந்துவிடுவார்கள்.

சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகளின் சங்கமம். எரிந்து போவதற்கு முந்தைய மூர் மார்க்கெட்டில் நிறையப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அது போலவே ஓல்டு டெல்லியில் தரியாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் கிதாப் பஜாரை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் போதாது. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்.

 

புதுவையில் ஞாயிறு மாலை நடைபாதை புத்தகக் கடைகள் அதிகம் உண்டு. சென்னையில் திருவல்லிக்கேணி, மாம்பலம், அசோக்பில்லர், அண்ணா சாலை, சென்ட்ரல், அடையாறு, எக்மோர், மயிலாப்பூர் எனப் பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. திருச்சியில் மலைக்கோட்டை அருகில், மதுரையில் ரீகல் தியேட்டர் முன்பு, நேதாஜி சாலையில் நியூ சினிமா தியேட்டர் பக்கம் உள்ள சந்தில் பழைய புத்தகக் கடைகள் உண்டு.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், பழநி பேருந்து நிலைய வாசலில், கோவை ராஜவீதியில், சேலம் ரயில் நிலையம் எதிரில், பெங்களுர் எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு, மற்றும் மைசூர் பேங்க் சர்க்கிள், காரைக்குடி மலர் லாட்ஜ் எதிரில் என ஒவ்வோர் ஊரிலும் சிறந்த நடைபாதை புத்தகக் கடைகள் இருக்கவே செய்கின்றன. .

 

ஒருமுறை அண்ணா சாலையில் உள்ள பழைய புத்தகக் கடையில் பிரெஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனேயின் தீப்ஸ் ஜெர்னல் என்ற அரிய புத்தகம் தற்செயலாகக் கிடைத்தது. கடைக்காரர் அதற்கு 400 ரூபாய் கேட்டார். அது சந்தையில் விற்பனையில் இல்லாத புத்தகம். பேரம் பேசி படியவில்லை. பரவாயில்லை விட்டுவிடு வோம் என மனமில்லாமல் அதை புத்தகக் குவியலிலேயே போட்டுவிட்டுத் திரும்பினேன்

 

நல்ல புத்தகத்தைப் பாக்கெட்டில் பணம் இல்லாத காரணத்தால் இழந்துவிட்டேனே என மனம் அடித்துக்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே புத்தகக் கடைக்குப் போனபோது அதே புத்தகம் கிடந்தது. கடையில் இப்போது புத்தகக் கடைக்காரரின் மகன் இருந்தார். அவரிடம் ஜெனேயை கையில் எடுத்து எவ்வளவு என்று கேட்டேன். ‘‘20 ரூபாய் கொடுங்கள்’’ என்று சொன்னார். ஆஹா அதிர்ஷ்டம் என உடனே பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். அறைக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவரின் பெயர் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அவர் ஜெனே எல்லாம் படிப்பவர் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அதை லண்டனில் வாங்கியிருக்கிறார் என்ற குறிப்பும் இருந்தது.

 

கையில் கிடைத்த ஜெனேயின் புத்தகத்தை ஊருக்குக் கொண்டுபோய் ஒரு மாதகாலம் சுற்றுக்கு விட்டுப் படித்தோம், இப்படி பழைய புத்தகக் கடைகளின் வழியேதான் உலகின் மிகச் சிறந்த நாவல்கள், கட்டுரைகள், ஓவிய நூல்கள் எனக்குக் கிடைத்தன சமீபமாக திண்டுக்கல்லில் பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்தபோது நீலவண்ணன் எழுதிய ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம் கிடைத்தது. 1978-ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இலங்கையைத் தாக்கிய பெரும் சூறாவளியைப் பற்றி முழுமையான நேரடி அனுபவத்தை விவரிக்கிறது இந்தப் புத்தகம். நீலவண்ணன் ஈழத்து எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுபோன்ற சிறப்பு நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

 

ஆனால், நீலவண்ணனின் புத்தகம் அந்த எண்ணத்தைக் கைவிடச்செய்தது.சென்னையைச் சுனாமி தாக்கியபோது நான் ஐஸ்ஹவுஸ் பகுதியில் மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தேன். என் கண்முன்னேதான் பேரலையில் தப்பி மனிதர்கள் கூக்குரலோடு ஓடினார்கள். நானும் நண்பர்களும் உடனடியாக அங்கிருந்து இடம் பெயர்ந்தோம். அதனை அடுத்த சில நாட்களில் சுனாமி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டபோது அடைந்த மனத்துயரை இப்போது நினைத்தாலும் வலிக்கவே செய்கிறது.

 

இந்தப் புத்தகத்தை வாசித்தபோது சுனாமியின் நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்கின. தமிழ்நாட்டை ஆண்டுக்கு ஒருமுறை புயல், சூறாவளி தாக்குகிறது. ஆனால், புயல் என்பது என்ன, அது எப்படி உருவாகிறது, அதன் வேகம், திசை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, சூறாவளி தாக்குதலில் என்ன நடக்கிறது, இதைத் தடுக்க நாம் செய்ய வேண் டியது என்ன, என்பது குறித்து விரிவான தகவல்கள் கொண்டபுத்தகங்கள் தமிழில் இல்லை.

 

இயற்கை பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும், அதற்காக எழுதப்படும் புத்தகங்கள் தமிழில் குறைவு. வரதர் வெளியீடாக 1979-ல் வெளியாகியுள்ள ‘12 மணி நேரம்’ என்ற புத்தகம், ஓர் ஆவணப்படத்தைக் காண்பதைப் போல சூறாவளியின் தாக்குதலை நுட்பமாக விவரிக்கிறது.

 

உலகில் எங்கெங்கே, எப்போது, எப்படி, சூறாவளிகள் உருவாகின? அதன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் எப்படியிருந்தன என்பதை விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களுடன் எளிமையாக விவரிக்கிறது. மேற்கிந்திய தீவுகளில் சூறாவளியை ஹரிக்கேன் என்பார்கள். கிழக்காசிய நாடுகளில் தைபூன் என அழைக்கிறார்கள். சூறாவளி நாட்களில் ஏற்றப்படும் விளக்கின் பெயரே ஹரிக்கேன் விளக்கு. அதை மக்கள் அரிக்கேன் விளக் காக மாற்றிவிட்டார்கள் என்கிறார் நீலவண்ணன்.

சூறாவளிக்கும் கண் இருக்கிறது. அதை உட்கருப் பகுதி என்பார்கள். சூறாவளி பெரும்பாலும் ஒற்றைக்கண் அரக்கனே. இந்தக் கண்ணின் விட்டம் 10 மைலில் இருந்து 20 மைல் வரை இருக்கும். கடல் அலைகள்தான் சூறாவளியின் தூதுவர்கள். அதன் வருகையை முன்கூட்டி அறிவிப்பதே கடலின் வேலை. மட்டகிளப்புப் பகுதியை சூறாவளி கடுமையாகத் தாக்கியது. ஊழிக் கூத்துவைப் போல அது நடந்தேறியது. கரைபுரண்டு ஓடிய வெள்ளம், அதில் சிக்கி தவித்த உயிர்கள், இடிந்து போன வீடுகள், முறிந்த மரங்கள், அடித்துக்கொண்டு போன பொருட்கள், ஐந்தாயிரம் பேர்களுக்கும் மேல் காயம் அடைந்த துயரம் எனச் சூறாவளியின் அகோரப் பசியை விரிவாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் நீலவண்ணன்.

 

இயற்கை பேரிடர் குறித்த முதன்மையான ஆவணங்களில் ஒன்றாகவே இதைக் கருதுகிறேன். பழைய புத்தகங்கள் நடைபாதை கடைகள் மட்டுமின்றி, இன்று இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 100 வருஷங்களுக்கு முன்பு வெளியான ஒரு நூலை வாசிப்பதற்கு, முன்பு ஆவணக் காப்பகங்களைத் தேடிச் செல்ல வேண்டும். இன்று, அவை இணையத்தில் எளிதாக வாசிக்கக் கிடைக்கின்றன. இப்படி கையருகே அரிய புத்தகங்கள் கிடைத்தாலும் அதைத் தேடி வாசிப்பவர்கள் குறைந்து கொண்டேதான் வருகிறார்கள், கடந்த 30 ஆண்டுகளாக பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைந்து எனக்கு சுவாச ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது, ஆனாலும், அந்தப் பழக்கத்தை நிறுத்தவே முடியவில்லை.

 

காரணம், பழைய புத்தகக் கடை என்பது ஒரு புதையல் சுரங்கம். எப்போது என்ன கிடைக்கும் எனச் சொல்லவே முடியாது. புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையாக எனக்கு வேறு எதுவுமில்லை. ராமபாணம் என்றொரு பூச்சி புத்தகத்துக்குள் உயிர் வாழும் என்பார்கள், ஒருவேளை நானும் ஒரு ராமபாணம்தானோ என்னவோ!

- இன்னும் வாசிப்போம்...

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article6421560.ece

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

வீடில்லா புத்தகங்கள் 2 - நின்று கொல்லும் நீதி

 

charles_2124591f.jpg
சார்லஸ் லாசன்

நின்று கொல்லும் நீதி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை கடற்கரையில் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு புத்தகப் பரிமாற்றம் என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது.

ஒவ்வொருவரும் தான் படித்து முடித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்து கடற்கரையில் போடப்பட்டிருந்த பெரிய மேஜையில் போடச் சொன்னார்கள். அவற்றில் எது நாவல், எது கட்டுரை, சிறுகதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வகைமைப் பிரித்து தனியே அடுக்கி வைத்துக்கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. அது முடிந்தவுடன் பார் வையாளர்கள் யார் வேண்டுமானாலும், தனக்கு விருப்பமான ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை அந்த மேஜையில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார்கள்.

இந்தப் புத்தகப் பரிமாற்ற நிகழ்வின் மூலம் முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தகங் கள் ஒருவருக்கொருவர் கைமாறின. இதுபோன்ற ஒரு நிகழ்வினை தமிழகம் முழுவதும் நடத்தினால், எத்தனையோ வீடுகளில் தேங்கிப் போய் கிடக்கும் புத்தகங்கள் பரிமாற்றம் கொள்ளும்தானே?

படித்து முடித்து, வேண்டாம் என நினைக்கிற புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ள புத்தக வங்கி ஒன்றை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் தரலாம். யாருக்குப் புத்தகம் தேவையோ, அவர்கள் இலவசமாக அந்த வங்கியில் இருந்து புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது கிராமப்புற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம்.

இதற்குத் தேவை ஓர் அறையும், பொறுப்பாளர் ஒருவர் மட்டுமே. புத்தகப் பரிமாற்றம் என்பது ஒரு அறிவியக்கம் போல விரிவடைய தொடங்கும்போதுதான் வாசிப்பு பரவலாகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 570 பொறியியல் கல்லூரிகள், 566 கலை - அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில், எத்தனைக் கல்லூரி வளாகங்களில் புத்தகக் கடை இருக்கிறது?

நோட்டு - பாடப் புத்தகங்கள் விற்கும் ஸ்டோர், வங்கி, கேன்டீன் ஆகியவற்றைப் போல, ஏன் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு புத்தகக் கடை திறக்கக் கூடாது? கல்லூரி நிர்வாகமே அதற்கு முனைப்பு காட்டலாம்தானே? பாடப் புத்தகங்களுக்கு வெளியே கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூகவியல் போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், வாங்கிப் பயன் அடையவும், இதுபோன்ற புத்தகக் கடைகள் பெருமளவு உதவும்தானே?

பொதுவாக விளையாட்டு, இசை, நுண்கலை போன்றவற்றில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கு இங்கே தனி கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புத்தக வாசிப்பைத் தூண்டும், அதிகப்படுத்த உதவும் புக் கிளப், தரமான புத்தகக் கடை, புத்தகக் காட்சி போன்றவற்றில் எந்தக் கல்வி நிறுவனமும் ஆர்வம் காட்டுவதே இல்லை.ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங் களில் பயிலும் மாணவர்கள், தங்களுடைய ஓய்வு நேரத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் படித்துக் காட்ட உதவுகிறார்கள்.

பார்வையற்றோர் மையத்தில் போய் கண் தெரியாதவர்களுக்குப் புத்தகம் படித்துக் காட்டுகிறார்கள். சிறார்களுக்கு கதை சொல்கிறார்கள். நமது கல்வி நிலையங்களில் இதுபோன்ற புத்தக வாசிப்புத் தொடர்பான சேவைகள் எங்கேயும் நடைபெறுவதாக நான் கேள்விப்படவே இல்லை. அமெரிக்காவின் முக்கிய நூலகங் களில் பயன்படுத்திய புத்தகங்களை வாரம் ஒருமுறை ஒரு டாலர், இரண்டு டாலருக்கு என மலிவு விலையில் விற் பனை செய்கிறார்கள். கலைக்களஞ்சியம் தொடங்கி நவீன நாவல்கள் வரை அத்தனையும் கிடைக்கிறது அங்கே. யார் வேண்டுமானாலும் அதை வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் எந்த நூலக மும் அப்படி ஒரு விற்பனையை நடத்தி நான் கண்டதே இல்லை.

நூலகம் டாட் ஓஅர்ஜி (noolagam.org) என்ற இணையதளத்தில் பெரும்பான்மை யான ஈழ எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கின்றன. தமிழில் இதுபோன்று பழந்தமிழ் நூல்களைப் பகிர்ந்துகொள்ள ‘மதுரை திட்டம்’ என்ற இணையதளம் உதவுகிறது. ‘குட்டன்பெர்க்’ என்கிற ஆங்கில இணையதளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல்வேறு துறைச் சார்ந்த ஆங்கிலப் புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இவை எல்லாம் புத்தகப் பகிர்வு எவ்வளவு முக்கியமானதொரு சாளரம் என்பதன் அடையாளங்கள் ஆகும்.

 

கடற்கரையில் நடைபெற்ற புத்தகப் பரிமாற்றத்தைப் பற்றி சொன்னேன் இல்லையா? அங்கே எனக்குக் கிடைத்த ஆங்கில நூல் மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ். சர் சார்லஸ் லாசன் என்பவர் எழுதியது. 1905-ம் ஆண்டு லண்டனில் வெளியாகி உள்ளது. மதராஸின் கடந்த கால வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான நூல் இது. சார்லஸ் லாசன், மெட்ராஸ் மெயிலின் ஆசிரியர். 1830-களில் சென்னையில் இரண்டே நியூஸ் பேப்பர்கள்தான் இருந்தன. ஒன்று, ‘தி ஸ்பெக்டேடர்’, மற்றது ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’.

இரண்டு பத்திரிகைகளும் ஆங்கிலேயர்கள் நடத்தியது. இதில், மெட்ராஸ் டைம்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் லாசன். அதிலிருந்து விலகி, 1868-ல் அவர் மெட்ராஸ் மெயிலைத் தொடங்கினார். வணிகர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்த லாசன், மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலாளராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 1887-ல் இங்கிலாந்துக்குச் சென்று விக்டோரியா ராணியைச் சந்தித்த லாசன், அவரது புகழ் பாடி, ‘சர்’ பட்டம் பெற்றிருக்கிறார்.

இவர், சென்னை நகரின் வரலாற்றை மெட்ராஸ் மெயிலில் தொடராக எழுதினார். அந்தத் தொகுப்பே இந்த நூலாக உருமாறியது. இந்நூல் சென்னையை ஆட்சி செய்த கவர்னர்களையும் அவர்களின் செயல்பாட்டினையும் விவரிக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் எனக்கு முக்கியமாகப்பட்டன.

 

சர் பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் இருவரும் 1639-ல் சென்னப் பட்டினத்தை விலைக்கு வாங்கி, கோட்டையுடன் கூடிய புதிய நகரை உருவாக்க தொடங்கினார்கள் என்பதை நாம் அறிவோம், மதராஸின் முதல் கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் என புகழப்பட்ட ஆண்ட்ரூ கோகன் மீது, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம், கலகம் மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணை ஒன்றினை நடத்தத் திட்டமிட்டது.

அவர் லண்டன் சென்று கிழக்கிந்திய கம்பெனி யின் இயக்குநர்களில் ஒருவரான தனது மாமனாரின் உதவியை நாட, அவரின் தயவால் தற்காலிகமாகத் தப்பித்தார். அப்படியும் பிரச்சினை அவரை விடவில்லை. சில ஆண்டுகளில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அதன் முடிவில் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு தண்டனை பெற்று வறுமையில், புறக்கணிப்பில் தனிமையில் வாடி ஆண்ட்ரூ கோகன் இறந்து போனார் என்பதை லாசன் சுட்டிக் காட்டுகிறார்,

 

இன்று நாம் பிரிட்டிஷார் அறிமுகம் செய்த ஆங்கிலவழிக் கல்வியை உயர்த்திப் பிடிக்கிறோம். ஆனால், 1787-ல் சென்னைக்கு வந்த டாக்டர் ஆண்ட்ரூ பெல், சென்னை எக்மோரில் செயல்பட்ட அநாதைகள் காப்பகத்தில் கல்விப் பணியாற்றியபோது, தான் கற்றுக்கொண்ட கல்வி முறையை இங்கி லாந்துக்கு எடுத்துச் சென்று, ‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்று அறிமுகம் செய்து பிரபமலமாக்கியுள்ளார். அந்த வரலாற்று நிகழ்வை இந்நூல் விவரிக்கிறது.

‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்பது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாகும். அத்துடன் வகுப்பில் படிக்கும் சிறந்த மாணவனைக் கொண்டு மற்ற மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையாகும். சட்டாம்பிள்ளை என அழைக்கப்படும் புத்திசாலி மாணவன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவான். இப்படி ஆசிரியர், சட்டாம்பிள்ளை இருவரும் இணைந்து கற்பிக்கின்ற காரணத்தால் படிப்பு எளிதாக அமைந்தது.

இந்த முறையை ஆண்ட்ரூ பெல் இங்கிலாந்தில் அறிமுகம் செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இவர் மதராஸ் மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கிலாந்தில் தான் வாங்கிய பண்ணைக்கு எக்மோர் என பெயரிட்டிருக்கிறார். ஆண்ட்ரூ பெல் 13 பள்ளிகளை நடத்தியிருக்கிறார். இந்தப் பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் 230 பள்ளிகளில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’ பரவியது.

மெட்ராஸ் கல்விமுறையைப் பற்றி ஆண்ட்ரூ பெல் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். ‘நமது கல்விமுறை இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு நமக்கு மறந்துபோய், அவர்களுடைய கல்வியை நாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்’ என்பது காலக்கொடுமை.

சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் கவர்னர்களின் வரலாற்றை ஒருசேர வாசிக்கும்போது, ‘சுயலாபங்களுக்காக நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் முடிவில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தார்கள்’ என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. நின்று கொல்லும் நீதி என்பது இதுதானோ?

- வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
writerramki@gmail.com

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/article6443328.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீடில்லா புத்தகங்கள் 3 - அதுவொரு தோழமை

 

book_2137595f.jpg

 

திருச்சி மலைக்கோட்டை போகிற வழியிலுள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ பழைய இதழ்களின் பைண்ட் வால்யூம் ஒன்று கிடைத்தது. பைண்டிங் வால்யூமை இரவெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். மனம் காலத்தின் பின்னோடி, பழைய நினைவுகளைக் கிளர்ச்சியுறச் செய்தது. அப்போது இரண்டு பேர் என் நினைவில் வந்து போனார்கள். ஒருவர் எனது தாத்தா. இன்னொருவர் என் கணித ஆசிரியர் ஞானசுந்தரம். இருவரும் இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் தீவிர வாசகர்கள்,

எனது தாத்தா இல்லஸ்ட்ரேடட் வீக்லி சந்தாதாரர் என்பதால் வீட்டுக்கே இதழ்கள் வந்துவிடும். பள்ளி நாட்களில் அதைப் புரட்டிப் பார்ப்பேன். அற்புதமான வடிவமைப்பு கொண்ட அந்த இதழை ரவிசேகர் அழகாக வடிவமைப்பு செய்திருப்பார்.

எனது தாத்தா கையில் பென்சில் வைத்துக்கொண்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லியைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பார். புதிதாக ஏதாவது ஆங்கிலச் சொல் இடம்பெற்றால் அடிக்கோடிட்டு அகராதியைப் புரட்டிப் பார்த்து, அதை தனி நோட்டில் எழுதிக் கொள்வார். இதழைப் படித்து முடித்தவுடன் ஆசிரியருக்கு அந்த இதழைப் பற்றி ஒரு போஸ்ட் கார்டு எழுதி அனுப்பி வைப்பார். அப்படியெல்லாம் இதழ்களைப் படிப்பவர்கள் இன்று இருக்கிறார்களா எனத் தெரியவில்லை, ஒருமுறை கூட அவரது கடிதம் வீக்லியில் வெளியானதில்லை. ஆனால், சளைக்காமல் எழுதிக் கொண்டிருப்பார்.

கணித ஆசிரியர் ஞானசுந்தரம், வீக்லியைப் பற்றி கூறும்போது, ‘அது காலேஜ் படிக்கும் பெண்ணைப் போல கவர்ச்சியானது; பார்க்கவும் படிக்கவும் சுவையூட்டுவது’ எனச் சொன்னது நினைவில் இருக்கிறது. ஞானசுந்தரம் சாரிடமிருந்து யாரும் ஒரு புத்தகத்தைக் கூட இரவல் வாங்கிவிட முடியாது. தனது புத்தகங்களைப் பிள்ளைகளை விடவும் நேசித்தவர். ஒருமுறை அவரது மைத்துனர் அவரைக் கேட்காமல் ‘வுதரிங் ஹைட்ஸ்’ என்ற நாவலை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என அறிந்து, இரவோடு இரவாகப் புத்தகத்தைத் திரும்பக் கொண்டுவந்து தந்துவிட வேண்டும் என போனில் சண்டை போட்டு விட்டார்.

விடிகாலையில் புதுக்கோட்டையில் இருந்து மைத்துனர் பஸ் ஏறிவந்து புத்தகத் தைக் கொடுத்துவிட்டு, ‘மாப்பிள்ளை… சின்ன விஷயத்துக்காக இப்படியா கோபப்படுவது’ எனக் கேட்டதற்கு, ‘எதுய்யா சின்ன விஷயம்? புஸ்தகத்தோட மதிப்பு உனக்கு என்னத் தெரியும்? என்னைக் கேட்காமல் புத்தகம் எடுத்துட்டுப் போனது திருட்டுத்தனம். அப்படி ஒரு ஆளோட உறவே எனக்கு வேணாம்யா’ என பொங்கி எழுந்துவிட்டார்.

அவ்வளவு ஆசையாகச் சேர்த்தப் புத்தகங்களை முதுமையில் அவரால் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒருமுறை மதுரை நியூசினிமா அருகில் உள்ள பிளாட்பாரக் கடையில் ஞானசுந்தரம் கையெழுத்திட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன,

எப்படி கிடைத்தது எனக் கேட்டேன். ‘சிம்மக்கல்ல ஒரு பெரியவர் செத்துப் போயிட்டார். அவரு வீட்டுல இருந்த புத்தகங்களை எடைக்குப் போட்டார்கள். அதுதான்’ என்றார் புத்தக வியாபாரி.

ஞானசுந்தரம் இறந்த பிறகு, இந்தப் புத்தகங்களை வைத்துக் காப்பாற்ற வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை. முதுமையில் மனிதர்கள் வாழ்வதற்கே வீட்டில் இடம் தர மறுக்கும்போது, புத்தகங்களுக்கு யார் இடம் தரப் போகிறார்கள்? அவரது மரணத்தோடு அவரது புத்தகங்கள் வீதிக்கு வந்து விட்டன. கொட்டிக்கிடந்த அந்தப் புத்தகக் குவியலில் இருந்து ‘வுதரிங் ஹைட்ஸ்’ நாவலை மட்டும் எடுத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்துக்காகத்தானே அவர் தனது மைத்துனரின் உறவையே முறித்துக்கொண்டார்!

மனிதர்கள் புத்தகங்களுடன் கொள்ளும் உறவு விளக்க முடியாதது. சிலருக்கு அது தோழமை. சிலருக்கு வழிகாட்டி. சிலருக்கு அது ஒரு சிகிச்சை. இன்னும் சிலருக்கு புத்தகங்கள் மட்டும்தான் உலகம். புறஉலகை விட புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறவர்கள்.

ஒருவேளை இந்த உலகில் புத்தகம் படிப்பது தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்பதை ரே பிராட்பரி ‘பாரன்ஹீட் 451’ என்ற நாவலாக எழுதியிருப்பார். அதில் ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொண்டு, தானே நடமாடும் புத்தகமாக மாறிவிடுவான். புத்தகங்களின் சிறப்பைச் சொல்வதற்கு இதற்கு நிகரான நாவலை நான் வாசித்ததே இல்லை.

அந்தக் காலத்தில் பலரிடமும் கையில் பணமில்லை. ஆனால், புத்தகம் படிக்க நேரமும் விருப்பமும் இருந்தது. தேடிப் போய் படித்தார்கள். இரவல் வாங்கிப் படித்தார்கள். நூலகத்தில் மாலை நேரங்களில் விலக இடமிருக்காது. இன்று பலருக்கும் விலையைப் பற்றி கவலையின்றி புத்தகம் வாங்குவதற்கு வசதி வந்துவிட்டது. ஆனால், படிக்க விருப்பமில்லை அல்லது நேரமில்லை. ஏன் படிக்க வேண்டும் என்ற மனப்போக்கு வந்துவிட்டது.

மனிதகுல வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு மகத்தானது. வேறு எந்தக் கருவியை விடவும் புத்தகம் வழியேதான் மனிதன் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறான். வளர்ச்சி அடைந்திருக்கிறான். உலகை மாற்றியிருக்கிறான்.

ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது. ஜப்பானின் பிரபல எழுத்தாளர் ஹரூகி முரகாமி, கார்டியன் இதழில் ‘எவ்வளவு காலத்துக்கு இலக்கியம் வாசிக்கப்படும்’ என்ற கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.

‘உலகம் முழுவதும் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள். அவர்கள் டி.வி-யில் உலகப் கோப்பைப் போட்டிகளோ, பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார்கள். புத்தகம் படிப்பதே தடைசெய்யப் பட்டால் கூட அவர்கள் காட்டுக்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவுகொண்டபடியே இருப்பார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே நான் எழுதுகிறேன்’ என்று கூறுகிறார். தமிழ்ச் சூழலில் தீவிரமான புத்தக வாசிப்பாளர்கள் 5 சதவீதம் கூட இருப்பார்களா?

பைண்டிங் வால்யூமின் ஒரு இதழில் வெளியாகியிருந்த அம்ரிதா ப்ரீதம் கவிதையின் அடியில், கறுப்பு மை பேனாவால் யாரோ ‘இதை அகிலாவை வாசிக்கச் சொல்ல வேண்டும்’ என்று எழுதியிருந்தார்கள், யார் அந்த அகிலா எனத் தெரியவில்லை. ஒருவேளை இல்லஸ்ட்ரேடட் வீக்லி வாங்கியவரின் மகளா? மனைவியா? அவர் இக்கவிதையைப் படித்தாரா என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவு கள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்து கின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ… விருப்பமான புத்தகங்கள் என்றோ… பேதமில்லை. இரண்டும் பயனற்றவற்றை யாகத் தூக்கி எறியப்படவே செய்யும்,

ஆனால், எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புதியப் புத்தகம். உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன!

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/article6468061.ece

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 4 - '80 ரயில்களில் ஓரு இந்தியப் பயணம்'

 

veedilla_2145570f.jpg

மோனிஷா ராஜேஷ்

சில புத்தகங்களின் தலைப்புகளே நம்மை வாங்கத் தூண்டிவிடும். அப்படித்தான் அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள பழைய புத்தகக் கடையில் மோனிஷா ராஜேஷ் எழுதிய ‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ (Around India in 80 Trains) என்ற புத்தகத்தை வாங்கினேன்.

 

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பல்வேறு ரயில்களில் பயணம் செய்பவன் என்பதால் மோனிஷா ராஜேஷின் புத்தகத்தை வாசிக்கும் ஆவல் உருவானது.

மேற்குலகில் பயண எழுத்தாளர்கள் புத்தகம் எழுதுவதற்காகவே பயணம் செய்கிறார்கள். தமிழில் ஏ.கே.செட்டியார் தான் முன்னோடிப் பயண எழுத்தாளர். அது போலவே தி.ஜானகிராமனின் ‘ஜப்பானியப் பயணம்’, சாமிநாத சர்மாவின் ‘பர்மா நடைப் பயணம்’, பிலோ இருதயநாத்தின் ‘காட்டில் என் பிரயாணம்’ போன்றவை தமிழில் முக்கியமானப் பயண நூல்கள்.

இதில் பிலோ இருதயநாத் என் விருப்பத்துக்குரியவர். ஆதிவாசிகளைத் தேடியே இந்தியக் காடுகளுக்குள் நிறையப் பயணம் செய்திருக்கிறார். சைக்கிள், தலையில் தொப்பி, கறுப்பு கண்ணாடி, பாக்ஸ் டைப் கேமராவை அணிந்த பிலோ இருதயநாத்தின் தோற்றமே தனித்துவமானது.

 

இது போலவே பயண எழுத்தாளரான பால்தெரோ, பிகோ ஐயர் இருவரும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர்கள். இதில் பாதெரோ 1973-ல் லண்டன் முதல் பெய்ஜிங் வரை ரயிலில் போய்ப் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது ‘தி கிரேட் ரயில்வே பஜார்’ எனும் பயண நூல் ஒரு கிளாசிக்.

ஜுல்ஸ் வெர்ன் எழுதிய ‘அரவுண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேஸ்’ புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பில், ஒரு புகைப்படக் கலைஞரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார் மோனிஷா. இவரது பூர்வீகம் சென்னை. ஆனால், லண்டனில் படித்து வளர்ந்தவர்.

 

‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ இந்திய ரயில்களைப் பற்றிய பயண நூல் மட்டுமில்லை. வெளிநாட்டு பயணிகளை நாம் எப்படி நடத்துகிறோம், எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம், எப்படி ஏமாற்றுகிறோம் என்பதையும் சொல்லும் புத்தகம். இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 மில்லியன் மக்கள் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் நான்கு திசைகளிலும் 64 ஆயிரம் கிலோ மீட்டர் பின்னிப் படர்ந்துள்ள ரயில் பாதைகளில் பயணிக்கின்றன இந்திய ரயில்கள்.

இப்படி ஓர் இந்தியப் பயணம் தொடங்க வேண்டும் என நினைத்தவுடனே, இந்திய ரயில்வேயின் பிரிட்டிஷ் பிரதிநிதியாகப் பணியாற்றும் சங்கர் தண்டபாணியோடு கலந்து ஆலோசனை செய்து, 80 ரயில்களில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுகிறார் மோனிஷா.

இந்தப் பயணத்துக்காக 300 பவுண்ட் செலுத்தி, ‘இந்தியாவுக்குள் எந்த ரயிலிலும் 2-ம் வகுப்புக் கட்டணத்தில் பயணம் செய்துகொள்ளலாம்’ என்ற ரயில் பாஸை வாங்கிக்கொள்கிறார் மோனிஷா. இந்த வசதி வெளிநாட்டுக்காரர்களுக்கு மட்டுமேயானது.

 

இந்திய ரயிலில் ஓர் இளம் பெண் குடும்பத்தோடு பயணம் செய்வது ஒரு போராட்டம். இதில் தனியாகப் பயணம் செய்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? ஒவ்வோர் இடத்திலும் விசாரிக்கப்படுகிறார். ‘எப்படி உனது பெற்றோர் உன்னை ஊர்ச் சுற்ற அனுமதிக்கிறார்கள்’ எனக் கேள்வி கேட்கிறார்கள். உடன் பயணிக்கும் புகைப்படக் கலைஞனுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படி ஆயிரம் கேள்விகள்.

 

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணிப்பதற்காக அனந்தபுரி ரயிலில் ஏறுவதே மோனிஷாவின் முதல் பயணம். அங்கிருந்து பாசஞ்சர் ரயிலில் கன்னியாகுமரிக்குப் பயணம். அங்கே முக்கடல் சங்கமத்தையும் சூர்ய அஸ்தமனத்தையும் காண்கிறார். பிறகு, கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம். அங்கிருந்து மங்களுருக்கு இன்னொரு ரயில். இப்படி பல ரயில்களில் மாறி மாறி டெல்லி வரை போகிறார்.

பின்பு, டெல்லியில் இருந்து ரயில் பிடித்து கோட்டயம் வந்து சேர்கிறார். அங்கிருந்து கோவை, பின்பு மதுரை.இன்னொரு லோக்கல் ரயில் ஏறி திருச்சி, பின்பு பாசஞ்சர் ரயிலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை வந்து சேர்கிறார்.

சென்னையில் இருந்து அடுத்தப் பயணம் ஹைதராபாத் நோக்கியது. அங்கிருந்து மும்பை, புனே என நீண்டு மறுபடி டெல்லிக்குப் போய்ச் சேர்கிறார். பின்பு ஜோத்பூர், ஜெய்சால்மர் பிகானீர், சண்டிகர் என நீண்டு, அங்கிருந்து சிம்லா நோக்கிப் பயணம். இப்படியாக 80 ரயில்களில் அவர் மேற்கொண்ட பயணங்களும், அதில் சந்தித்த மாறுபட்ட மனிதர்களும், அவர்களுடன் நடைபெற்ற உரையாடலும், நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன இந்தப் புத்தகத்தில்.

ஒருமுறை ரயில் பெர்த்தில் படுத்து உறங்கும் அவரின் காலை யாரோ இருட்டில் தடவுகிறார்கள். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தவுடன் பாத்ரூம் போவது போல நழுவிவிடுகிறார்கள். இந்தியப் பெண்கள் இதை எல்லாம் சகித்துக் கொண்டுதான் பயணம் செய்கிறார்கள் என்பதை மோனிஷா சுட்டிக் காட்டுகிறார். இது போலவே, கொங்கன் ரயில்வே யின் 92 குகை வழிகளையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களையும், இயற்கை கொஞ்சும் நில வெளியினையும் பிடித்தமான வழித்தடமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

 

இந்தியன் மகாராஜா எனப்படும் ஆடம்பர ரயிலில் பயணம் செய்தது, சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணம், வழியில் ரயிலில் கண்ட திருநங்கைகளைப் பற்றிய குறிப்பு, ரயில்வே முன்பதிவு அதிகாரிகள் நடந்துகொள்வது, மதுரை லாட்ஜில் உள்ள இருட்டு அறை போன்ற பார், ஸ்ரீரங்கத்தில் 6 மொழிகள் பேசும் ஹோட்டல் சர்வர் எனப் பயணத்தின் ஊடாகத் தன் அனுபவங்களைச் சரளமாக எழுதியுள்ளார்.

 

புத்தகத்தின் முக்கியக் குறை எந்த அனுபவமும் மோனிஷாவைப் பாதிக்காததும், எதையும் தேடி அறிந்து கொள்ளும் நாட்டமும் அவருக்கு இல்லாமல் இருந்ததுதான்.

இதை வாசிக்கும்போது, ஒரு கிராமத்தை ரயிலில் ஏற்றிக்கொண்டு இந்தியாவைச் சுற்றி வந்த அனுபவத்தை ஹீதர் வுட் எழுதியிருந்த விதத்தில் ‘தேர்ட் கிளாஸ் டிக்கெட்’ சிறந்த புத்தகம் என்றே தோன்றியது. ஆனாலும், ரயில்களின் வழியாகவே இந்தியாவைச் சுற்றிவந்த உணர்வு ஏற்படுகிறது என்பதற்காகவே ‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ புத்தகத்தை ஒரு முறை வாசிக்கலாம்.

வாசிப்பதோடு நின்றுவிடாமல் நாமும் விருப்பமான பல்வேறு ரயில்களில் ஏறி இந்தியாவைச் சுற்றி வரலாம். அப்போதுதான் இந்தியா எப்படிபட்டது என்பதை நாம் நேரடியாக உணரமுடியும்.

- இன்னும் வாசிப்போம்...

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-80-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6484417.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 5 - வண்ணம் தீட்டப்பட்ட சொற்கள்

 

pablo_2156458f.jpg

 

வண்ணம் தீட்டப்பட்ட சொற்கள்

மழை நாளில் சூடாகத் தேநீரும் பஜ்ஜியும் சாப்பிடுவதற்காகப் பலரும் டீக்கடையைத் தேடிப் போவார்கள். நானோ, பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன். மழைதான் சாலையோரப் புத்தக வியாபாரிகளின் முதல் பிரச்சினை. ‘நனையாமல் எங்கே புத்தகங்களைப் பாதுகாத்து வைப்பது’ என அவர்கள் திண்டாடுவார்கள். கண் முன்னே புத்தகங்கள் ஈரத்தில் நனைந்து ஊறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது கையறு நிலை.

 

‘கையில் ஊமன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய்’

- எனக் குறுந்தொகை பாடல் காமத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது, ‘சூரியன் தகிக்கும் வெப்பமான பாறையில் கையில்லாத வாய் பேச முடியாதவர், கண்ணினால் காக்கும் வெண்ணெய் உருகிப் பரவுவதைப் போல, மனசுக்குள் நோய் பரவியுள்ளது’ என்கிறது குறுந்தொகை,

 

மழை நாளில் சாலையோரப் புத்தக வியாபாரியின் துயரநிலையும் இது போன்றதே. மழை எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொண்டுவருவது இல்லை. மழைநாளில் ஒன்றிரண்டு புத்தகங்கள் கூட விற்பனையாகாது. மழையில் யார் தேடி வந்து புத்தகம் வாங்கப் போகிறார்கள்? மழை பெய்யும் நாளில் நிச்சயம் ஏதாவது ஒரு பழைய புத்தகக் கடையைத் தேடிப் போவேன். ஒன்றிரண்டு புத்தகங்களையாவது வாங்குவேன்.

 

மழை பெய்து வெறித்த இரவில் அதை சூடாகப் படித்தும் முடிப்பேன். அப்படியொரு அடைமழைக் காலத்தில் வெளியே போகவே முடியவில்லை. மழை கொட்டி முழங்கியது. இரவு 9 மணியிருக்கும். வீட்டின் காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு, கதவைத் திறந்தேன். கே.கே.நகரில் பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒருவர் பாதி நனைந்தபடி வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் ஒரு மஞ்சள் பை நிறையப் புத்தகங்கள்!

“சார், இன்னைக்கு வியாபாரமே இல்லை. முழு பட்டினி. இதை வைத்துக் கொண்டு 200 ரூபா இருந்தா கொடுங்க. வீட்டுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டுப் போகணும்’’ என்றார்.

 

அவர் நின்ற கோலத்தைப் பார்த்ததும் புத்தகமே கொண்டு வராவிட்டாலும் பணம் தந்திருப்பேன். என்ன புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார் எனப் பார்க்காமல், உடனடியாகப் பணம் எடுத்துத் தந்தேன். மழைக்குள்ளாகவே கிளம்பிவிட்டார். அன்றைய இரவில் அவரது வாழ்க்கை அவலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை என்ன புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார் என, பையில் இருந்து எடுத்துப் பார்த்தேன். விக்டர்பிராங்கில், எமர்சன், நட் ஹாம்சன், ஜோனதன் ஸ்விப்ட், ஜே.கிருஷ்ணமூர்த்தி என 10 புத்தகங்கள் இருக்கக்கூடும். என் ரசனையை நினைவில் வைத்துக்கொண்டு எப்படிச் சரியாகத் தேடிக் கொண்டுவந்திருக்கிறார்? இந்த உறவுக்கு என்ன பெயர்?

 

எனக்குள் குற்றவுணர்ச்சி உருவானது.

அவருக்குக் கொடுத்த பணம் போதுமானதில்லை. ‘நாளை அவரது கடைக்குச் சென்று கூடுதல் பணம் தந்துவிட வேண்டும்’ என முடிவு செய்துகொண்டேன். மறுநாள் போனபோது கடையிலிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கிப் போயிருந்தது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. பக்கத்தில் இருந்தவர்கள், அவர் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தக் கடை செயல்படவே இல்லை. பிறகு ஒருநாள் அவரைத் தற்செயலாக வடபழனியில் பார்த்தேன். மூன்று சக்கர சைக்கிளில் பழைய பேப்பர் வாங்குவதற்காகப் போய்க் கொண்டிருந்தார்.

“என்ன ஆயிற்று?’’ எனக் கேட்டேன்.

“போதும் தம்பி, புத்தகம் விற்றுக் கட்டுபடியாகலை. மழையில் புத்தகங்களை நனையவிடுறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இப்போ வீடு வீடா போய்ப் பழைய பேப்பர் வாங்கி விக்கிறேன். அது போதும். ஏதாவது நல்ல பொஸ்தகம் கிடைச்சா… வீட்டுக்குக் கொண்டாந்துத் தர்றேன்’’ என்றார்.

 

அப்படிச் சொல்லும்போது, அவரதுமுகம் மலர்ந்திருந்தது. “எனக்குக் கொடுத்த புத்தகத்துக்கு, நான்தான் உங்களுக்கு மிச்சப் பணம் தர வேண்டும்’’ என்றேன்.

“அதெல்லாம் கணக்குப் பாக்கவேணாம். அன்னிக்கு மழைக்குள்ளே நீங்க பணம் தராமப் போயிருந்தா… நாலு வயிறு பட்டினி கிடந்திருக்கும். புத்தகம் விக்கிறவன் கணக்குப் பாத்து விக்க முடியாது. கூடக் குறையத்தான் கிடைக்கும். படிக்கிறவங்க சந்தோஷப்படுறாங்கள்ல… அது போதும்’’ என்றார்.

 

‘இந்த மனம் எத்தனைப் பேருக்கு வரும்…’ அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களை வாசிப்பவர்கள் மட்டும் அதன் நேசர்கள் இல்லை. பழைய புத்தகங்களை விற்பவர்களும், அதன் நேசர்கள்தான் என்பது புரிந்தது.

மழையோடு அவர் கொண்டுவந்த புத்தகங்களில் ஒன்றாகக் கிடைத்த புத்தகம்தான்… ஓவியர் பிகாஸோவின் கவிதைத் தொகுப்பான ‘தி பரியல் ஆஃப் தி கவுன்ட் ஆஃப் ஓர்கஸ் அண்ட் அதர் பொயம்ஸ் (The Burial of the Count of Orgaz & Other Poems) என்கிற புத்தகம்.

book_2156459a.jpg

 

எல் கிரிகோவின் புகழ்பெற்ற ஓவியமான, ‘தி பரியல் ஆஃப் தி கவுன்ட் ஆஃப் ஓர்கஸ் தந்த உந்துதலில் உருவான கவிதை அது. உலகப் புகழ்பெற்ற ஓவியராகத்தான் பிகாஸோவைப் பலருக்கும் தெரியும். ஆனால், அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகளை சர்ரியலிசக் கவிஞர் ஆந்த்ரே பிரெடன் மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறார்.

பிகாஸோ நம் காலத்தின் மகத்தான ஓவியர். இன்று அவரது ஓர் ஓவியத்தின் விலை 157 மில்லியன் டாலர். 1935-ம் ஆண்டு தனது 54-வது வயதில் ஓவியம் வரைவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கவிதைகள் படிப்பதிலும் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

 

பிகாஸோ பாரிஸுக்கு வந்த நாட்களில் தனக்குத் துணையாக மாக்ஸ் ஜேக்கப் என்ற கவிஞரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். அவரது நட்பின் காரணமாக பிரெஞ்சு இலக்கியவாதிகள் பலருடன் பிகாஸோவுக்கு நட்பு உருவானது. அந்த நாட்களில் பாரிஸில் உள்ள கபேயில் ழான்காக்தூ, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஜெரால்ட் எனத் துடிப்பான இளம்படைப்பாளிகள் தினசரி ஒன்றுகூடுவார்கள். அந்தச் சந்திப்பில் பிகாஸோவும் கலந்துகொண்டு, இலக்கியம் குறித்து நிறைய விவாதித்திருக்கிறார்.

 

காளை சண்டை குறித்த பிகாஸோவின் கவிதையில் ஓவியம் போலவே காட்சிகள் துண்டிக்கபட்டு, சொற்களின் வழியே தாவித் தாவிச் செல்கின்றன.

இவரது கவிதைகளில் வண்ணங்களும், நிழல்களும், உருவங்களின் நெகிழ்வுத் தன்மையும் உணர்ச்சிகளைச் சிதறடிக்கும் விதமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. கனவுத்தன்மை கொண்ட இந்தக் கவிதைகளைச் சர்ரியலிசக் கவிதையென வகைப் படுத்துகிறார்கள்.

 

ஓவியர்கள் கவிஞர்களாவது இயல்பானதுதான். பிகாஸோவுக்கு முன்னோடியாகப் பிரபல ஓவியரும் சிற்பியுமான மைக்கேல் ஆஞ்சலோவும் கவிதைகள் எழுதியிருக்கிறார். வில்லியம் பிளே சிறந்த ஓவியரும் கவிஞருமாவார். இது போலவே ஓவியரான வான்காஃப், தனது சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் அற்புதமானவை!

‘ஓவியம் என்பதைச் சொற்கள் இல்லாத கவிதை’ என்பார்கள். அப்படியெனில், ஓவியர்கள் எழுதிய கவிதைகளை ‘வண்ணம் தீட்டப்பட்ட சொற்கள்’ என்றழைக்கலாமா?

- இன்னும் வாசிக்கலாம்…

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6505222.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமை ................ மிகவும் சுவாரிஸ்யமாக இருக்கிறது.
கார்ல்மார்க்சின் 16 தொகுப்பும்  லெனின் 9 இல்லாத 12 தொகுப்பும் எனக்கு இப்படிதான் கிடைத்தது.
இந்த குப்பையை ஒருமாதிரி தொலைத்துவிட்டேன் என்பதுபோல விற்றவர் ஒரு பெரு  மூச்சு விட்டார்....
எனக்கோ இவளவு குறைந்த பணத்தில் இத்தனையுமா ? என்ற பெருமிதத்தில் விண்ணில் பறப்பதுபோல் ஒரு மகிழ்ச்சி. 
பணம் கொடுத்து புத்தகம் வாங்கும் வசதி எனக்கு அப்போது இருந்ததில்லை. 
 
............நிறைய எழுத்தாளர்களை அறிய கூடியதாக இருக்கிறது தொடருங்கள். 
கதை புத்தகங்களை நான் வாசிப்பது இல்லை அதில் எனக்கு ஒருபோதும் ஈடுபாடு வந்ததில்லை. சிலருக்கு கதை புத்தகத்தில் மூழ்குவதே ஒரு கலை. இது எல்லோருக்கும் உகந்தாக தொடர்கிறது. 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வீடில்லா புத்தகங்கள் 6 - நாக்கின் வரைபடம்

 

veedilla_2178395f.jpg

 

நாக்கின் வரைபடம்

பெங்களூருக்குப் போகும் நாட்களில் அவசியம் அவென்யூ ரோடு அல்லது பிரிகேடியர் சாலையில் உள்ள நடைபாதைப் புத்தகக் கடைகளுக் குப் போய்விடுவேன். நிச்சயம் நாலைந்து நல்லப் புத்தகங்கள் கிடைத்துவிடும். பழைய புத்தகங்களும் இசைத் தட்டு களும் வாங்க விரும்புகிறவர்களுக்கு பெங்களூர்தான் புகலிடம்.

இங்கு உள்ள சாலையோரப் புத்தகக் கடைக்காரர்கள் சரளமாக நாலைந்து மொழிகள் பேசக் கூடியவர்கள். அத்தோடு தான் என்ன புத்தகம் விற்கிறோம்? இதை யார் வாங்குவார்கள் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள். அதிகம் பேரம் பேசவும் முடியாது.

 

பழைய புத்தகக் கடைகளில் இன்று அதிகம் விற்பனையாவது கள்ளப் பிரதி களே. அதாவது, புகழ்பெற்ற ஆங்கில நாவல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங் களின் மலிவுப் பதிப்புகள். இவை எந்த உரிமையும் பெறாமல் கள்ளத் தனமாக நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்டு விற்பனையாகின்றன. இந்தச் சந்தை மிகப் பெரியது. ‘கள்ளப் பிரதிகள் ஹாங்காங்கில் அச்சிடப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன’ என்றார் ஒரு பழைய புத்தக வியாபாரி. ‘இல்லை… இல்லை… மும்பையில்தான் அச்சிடுகிறார்கள்’ என்றார் இன்னொருவர்.

 

எங்கு அச்சிடப்பட்டாலும் எழுத்தாளன் தானே ஏமாற்றப்படுகிறான். அவனுக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? நம் காலத்தின் மிகப் பெரிய மோசடி அறிவைத் திருடுவதுதான். அதிலும் குறிப்பாக, இணையத்தில் ஏராளமாக புதிய புத்தகங்கள் இலவசமாக, எந்த அனுமதியுமின்றி விநியோகம் செய்யப்படுகின்றன. திருட்டு சிடி அளவுக்கு திருட்டுப் புத்தகங்களுக்கு ஒருவரும் குரல் கொடுப்பதே இல்லை.

 

கடந்த 20 ஆண்டுகளில் குடிக்கிற தேநீரில் இருந்து, பேருந்து கட்டணம், மின்கட்டணம், பெட்ரோல், வீட்டு வாடகை, சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் என எல்லாமும் 10 மடங்கு உயர்ந்து விட்டன. ஆனால், எழுத்தாளர்களுக்குத் தரப்படும் ராயல்டி உயர்த்தப்படவே இல்லை. 1950-களில் வழங்கப்பட்ட 8 முதல் 10 சதவீத ராயல்டிதான் இன்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படுவது இல்லை. பெரும்பான்மை பதிப்பகங்கள் எழுத்தாளருக்கு ஒரு ராயல் டீ கொடுத்துக் கணக்கை சரிசெய்துவிடுகின்றன.

 

இது போலத்தான் இதழ்களில் வெளியாகிற கதை, கட்டுரைகளுக்கான சன்மானமும். அந்தப் பணம் எழுதுகிற பேப்பர், பேனா வாங்கக் கூட பற்றாது என்பதே உண்மை. இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தாளர் நாவல் எழுதுவதற்கு மூன்று கோடி ரூபாய் முன்பணம் அளிக்கப்படுகிறது. விற்பனை 10 லட்சம் பிரதிகள். கழிப்பறைக்குக் கூட கட்டணம் இருக்கிறது. ஆனால், இணையத்தில் காசு தரப்படாமல் திருடப்படும் பொருளாக புத்தகங்கள் இருப்பது அநியாயம்.

இரண்டாயிரம் வருட இலக்கியப் பாரம்பரியம் பேசும் தமிழகத்தில், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், ‘எழுதி மட்டுமே வாழ முடியாது’ என்கிற சூழல் இருப்பது வருத்தமளிக்கவே செய்கிறது.

 

சமீபமாக பெங்களூர் சென்றபோது பிரிகேடியர் சாலையில் உள்ள புத்தகக் கடையொன்றில் கிடைத்த புத்தகமே ‘வாட் ஐன்ஸ்டீன் டோல்டு ஹிஸ் குக்’ (What Einstein Told His Cook). தலைப்பி லேயே… இந்தப் புத்தகம் வித்தியாச மானது என்று தெரிந்துவிட்டது. இது போலவே முன்பு ‘ரிடில்ஸ் இன் யுவர் டீ கப்’ (Riddles in Your Tea Cup) என்ற அறிவியல் கேள்வி - பதில் புத்தகத்தை வாசித்திருக்கிறேன். ஆகவே, இதுவும் அன்றாட அறிவியல் பற்றியதாக இருக்கக்கூடும் என நினைத்து உடனே வாங்கிவிட்டேன்.

 

அறிவியல் புத்தகங்களின் மீது எனக்கு ஈர்ப்பு உருவாக முக்கிய காரணம், ‘மஞ்சரி’ இதழ்களே. அதில் பெ.நா.அப்புசாமி எழுதிய கட்டுரைகளே அறிவியலை அறிந்து கொள்வதற்கான முதல் தூண்டுதலாக இருந்தன.

கல்லூரி நாட்களில் ரிச்சர்ட் பெயின்மென் அறிமுகம் ஆனார். இவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர். இவரது எழுத்தின் வழியாகவே அறிவியலை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை அறிந்துகொண்டேன். பெயின்மேன் தன் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை விவரித்து எழுதிய, ‘யூ ஆர் ஜோக்கிங் மிஸ்டர் பெயின்மேன்’ என்ற புத்தகம் என்றும் என் விருப்பத்துக்குரியது.

 

பொதுவாக தமிழில் அறிவியல் சார்ந்தப் புத்தகங்கள் மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைப்பது போல வகை வகையாக தமிழில் கிடைப்பது இல்லை. இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங், காலத்தின் வரலாற்றை பள்ளி மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும்படியாக, ‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என எளிமையாக எழுதியிருக்கிறார். லட்சக்கணக்கில் அது விற்பனையாகியுள்ளது. ஆனால், அதன் தமிழ் மொழியாக்கம் வாசிக்க மிக கஷ்டமாக உள்ளது.

 

தமிழக விஞ்ஞானிகளில், தொழில் நுட்ப விற்பன்னர்களில், பேராசிரியர் களில் வெகுசிலரே தமிழில் எழுதக் கூடி யவர்கள். இணையத்திலும் இதழ் களிலும் சிறந்த அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்களாக சி.ஜெயபாரதன், சுந்தர் வேதாந்தம், என்.ராமதுரை, கிரிதரன், ராஜ்சிவா, அருண் நரசிம்மன், ஆயிஷா நடராஜன், பாஸ்கர் லக்ஷ்மன் ஆர்.எஸ்.நாராயணன் ஆகியோரைச் சொல்வேன். இவர்கள் எழுத்தில் எளிமையும், நுட்பமும், விரிவான அணுகுமுறையும் இருக்கும். அறிவியலை சுவாரஸ்யமாக எழுதிக் காட்டியதில் சுஜாதாவே முன் னோடி. அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்றே தோன்றுகிறது

 

ராபர்ட் எல் வோல்கி (Robert L.Wolke) ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதியதன் தொகுப்பே ‘வாட் ஐன்ஸ்டீன் டோல்டு ஹிஸ் குக்’ புத்தகம். சமையலின் பின்னுள்ள அறிவியல் விஷயங்களைச் சுவைபட விளக்குகிறார் ராபர்ட்.

ஐன்ஸ்டீனுக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அறிவியலின் குறியீடாகவே இதில் அவர் முன்வைக்கப்படுகிறார். கலோரி என்பதை எப்படி கணக்கிடுகிறார்கள்? உப்பு ஏன் வெள்ளையாக உள்ளது? வாயில் போட்டவுடன் சாக்லெட் ஏன் கரைய தொடங்கிவிடுகிறது? பொரித்த உணவின் மீது ஏன் எலுமிச்சைப் பிழிகிறோம்… என்பது போன்ற எளிய கேள்விகளுக்கு, அறிவியல்பூர்வமாக விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.

 

சமையல் புத்தகங்களை மட்டுமே அறிந்துள்ள நமக்கு, சமைப்பதன் பின்னே இவ்வளவு அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளனவா என்பது வியப்பளிக்கிறது. இனிப்பு ஏன் நமக்கு பிடிக்கிறது? துவர்ப்பு ஏன் பிடிப்பது இல்லை? இசையை ஏன் ரசிக்கிறோம்? கூச்சலைக் கேட்டு காதைப் பொத்திக் கொள்கிறோம் அல்லவா, இதற்கான காரணம்… நமது ஐம்புலன்களில் சுவைப்பதும் நுகர்வதும் வேதியியல் காரணிகளால் உருவாக்கப்படுகிறது என்பதே. இந்த மாற்றங்கள் எப்படி, எதனால், எவ்வாறு உருவாகின்றன… என்பதை அறிவியல் துல்லியமாக விவரிக்கிறது.

 

நமது நாக்கின் வரைபடத்தை எடுத்துக் கொண்டால் அதில், இனிப்புச் சுவை அரும்புகள் நாக்கின் நுனியிலும், அதன் மேற்புறம் உப்புச் சுவையும், இரண்டு ஓரங்களிலும் புளிப்புச் சுவையும், நாக்கின் பின் பகுதியில் கசப்புச் சுவை யும் இருக்கின்றன. ஆகவே, நாக்கு உணவை சுவைக்கும்போது பிரதான சுவை நரம்புகளானது தூண்டப்பட்டு… என்ன ருசி என்பது உணரப்படுகிறது. இன்று உணவில் கலக்கபடும் ரசாயனப் பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் நமது சுவை அரும்புகளைப் பாதிக்கின்றன. இது போலவே உப்பு, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றின் பக்கவிளைவுகள் எவை? எதனால் பக்கவிளைவு ஏற்படுகிறது என்பதையும் ராபர்ட் தெளிவாக விளக்குகிறார்.

 

உணவு குறித்து புதிய விழிப்புணர்வு உருவாகி வரும் இன்றையச் சூழலில் சமைப்பதன் பின்னுள்ள அறிவியலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற புத்தகங்களின் தேவை அவசியமாகும்.

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6545700.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான விடயங்கள் ஆதவன்.  நானும் எங்கு போனாலும் புதிய பழைய புத்தகங்கள் தவறாமல் வாங்கி விடுவேன்.

 

சமீபத்தில் வில்லுக் குளத்துப் பறவை எனும் புத்தகம் புலிகளின் வெளியீட்டுப் பிரிவால் 1975ல் வன்னியிலிருந்து வெளியிடப் பட்டது.நிறைய உண்மைக் கதைகள். இந்திய அநாகரீகப் படையால் எம்மீது நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களையும் கூறுகின்றது. 2 ஈரோவுக்கு வாங்கினேன்.

Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 7 - நினைவின் வெளிச்சம்

 

vannanilavan_2188986h.jpg

 

பழைய புத்தகக் கடைகளில் சிதறிக் கிடக்கும் புத்தகங்களுக்குள் முகமறியாத சிலரது நினைவுகளும் கலந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் புத்தக முகப்பில் அச்சு பதித்தது போல அத்தனை அழகாக கையெழுத்திட்டுள்ள கே.நல்லசிவம் என்பவர் யாராக இருக்கக் கூடும்? பிரேம்சந்த் சிறுகதைத் தொகுப்பின் முன்னால் ‘எனதருமை வித்யாவுக்கு...’ என எழுதிக் கையெழுத்திட்டுள்ள காந்திமதி டீச்சர்… எதற்காக, எந்த நாளில், இந்தப் பரிசைக் கொடுத்தார்? இப்போது அந்த வித்யாவுக்கு என்ன வயது இருக்கும்? அவர், இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?
 
தி.ஜானகிராமன் எழுதிய ‘மரப்பசு’ நாவலில் அடிக்கோடிட்டு, ‘நானும் ஒரு அம்மணிதான்’ என்று எழுதிய பெண், யாராக இருக்கக் கூடும்? இப்படிப் பழைய புத்தகங்களைப் புரட்டும்போது தென்படும் பெயர்கள், குறிப்புகள் என்னை மிகவும் யோசிக்க வைக்கின்றன!
 
புத்தகங்களோடு மனிதர்களுக்கு உள்ள உறவு ரகசியமானது. ‘எதற்காக புத்தகம் படிக்கிறாய்?’ எனக் கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். என்னதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அதனடியில் சொல்லாத காரணம் ஒன்று இருக்கவே செய்கிறது. அதுவே, ஒருவரைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகிறது.
 
வாசகர் என்ற சொல் அரூபமானது. ஒரு வாசகர் எப்படி இருப்பார் என வரையறுக்கவே முடியாது. வாசகர் என்ற சொல் வயதற்றது. கால, தேச, மத, இனங்களைக் கடந்தது. எழுத்தாளனும் தேர்ந்த வாசகனே!
 
ஒரு புத்தகத்தின் வாசகன் என்ற முறையில் அதே புத்தகத்தை வாசித்த இன்னொரு வாசகனைத் தேடிச் சந்தித்து, புத்தகத்தை, எழுத்தாளரைப் பாராட்டியும், கேள்வி கேட்டும், கோபித்துக் கொண்டும் பேசி மகிழ்வதற்கு இணையாக வேறு என்ன சுகம் இருக்கிறது? அந்தச் சந்தோஷத்தை ஏன் இந்தத் தலைமுறை தேவையற்றதாகக் கருதுகிறது?
 
புத்தகக் கடையொன்றில் சில காலம் பணியாற்றிய நண்பர் அமீன்... ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார். அபு இப்ராகிம் என்ற அந்த மனிதர், வாரம்தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு வருவாராம். ஒவ்வொரு முறையும் முப்பது, நாற்பது புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவாராம்.
 
‘எதற்காக, இத்தனை புத்தகங்கள் வாங்குகிறீர்கள்’ எனக் கேட்டதற்கு, தன்னைத் தேடி வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும்... அவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு கொடுப்பது வழக்கம். இந்தப் பழக்கத்தை 25 வருஷங் களுக்கும் மேலாகக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
 
ஒருமுறை அவர் வருவதற்கு பதிலாக, அவரது மகன் கடைக்கு வந்து நூறு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். ‘அப்பா வரவில்லையா...’ எனக் கேட்டதற்கு, ‘‘அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அப்பாவைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகங்களை வாங்குகிறேன். இதன் முகப்பில் ‘என்னால் உங்களுடன் பேச முடியவில்லை; ஆனால் இந்தப் புத்தகங் கள்... என் சார்பாக உங்களுடன் பேசும்’ என அச்சிட்டு தரப் போகிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார்
 
‘இப்படியும் புத்தகங்களைக் காதலிக்கும் ஒரு மனிதர் இருக்கிறாரே...’ என அமீன் வியந்திருக்கிறார்.
 
இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்ராகிமின் மகன் புத்தகக் கடைக்குத் தேடி வந்து 500 புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். ‘அப்பா எப்படி இருக்கிறார்?’ எனக் கேட்டபோது, ‘‘அவர் இறந்துவிட்டார். அவரது இறுதி நிகழ்வுக்கு வருபவர்களுக்குத் தருவதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள். இதில், ‘இனி நான் உங்களுடன் இருக்க மாட்டேன்; என் நினைவாக இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கட்டும்’ என அச்சிட்டு தரப் போகிறோம். இதுவும் அப்பாவின் ஆசையே’’ என்று சொல்லியிருக்கிறார்.
 
அதன்படியே இப்ராகிமின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனைப் பேருக்கும் புத்தகங்களைத் தந்திருக்கிறார்கள். இதை அமீன் சொல்லியபோது, எனக்குச் சிலிர்த்துப்போனது. ‘தன் வாழ்நாளிலும், அதற்குப் பின்னும் புத்தகங்களைப் பரிமாறிக் கொண்ட அற்புதமான மனிதராக அவர் இருந்திருக்கிறாரே...’ என வியந்து போனேன். புத்தகங்கள் மட்டுமில்லை; அதை நேசிப்பவர்களும் அழிவற்றவர்களே!
 
கறுப்பு வெள்ளை புகைப்படங்களைக் காணுவதைப் போல பழைய புத்தகக் கடையில் அரிதாக கிடைக்கும் புத்தகங்கள் நினைவை மீட்டத் தொடங்கிவிடுகின்றன. அப்படித்தான் திருவல்லிக்கேணி சாலையோரப் புத்தகக் கடையில் ‘வண்ணநிலவன்’ எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு எனக்குக் கிடைத்தது.
 
அமுதோன் ஓவியத்துடன் ஆறு ரூபாய் விலையில் 1979-ல் வெளியான அந்தச் சிறுகதைத் தொகுப்பு, நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. இதில் 18 சிறு கதைகள் உள்ளன. இவை, அத்தனையும் வண்ண நிலவனின் மிகச் சிறந்த சிறு கதைகள். உள் அட்டையில் ஓவியர் அமுதோன் ‘எஸ்தர்’ கதைக்காக அற்புதமான கோட்டோவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்.
 
தமிழ்ச் சிறுகதை உலகில் வண்ணநிலவனின் சாதனை என்பது தொட முடியாத உச்சம். மொழியை அவர் கையாளும் லாகவம், நுட்பமாக மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், குறைவான உரையாடல்கள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், கச்சிதமான கதையின் வடிவம்... எனச் ‘சிறந்த சிறுகதை எப்படி இருக்க வேண்டும்’ என்பதற்கு வண்ணநிலவனின் பல கதைகள் உதாரணங்களாக இருக்கின்றன.
 
இந்தத் தொகுப்பின் இன்னொரு விஷேசம், இதற்கு எழுதப்பட்ட முன்னுரை. ஒரு பேச்சிலர் அறையில் லயோனல் ராஜ், நம்பிராஜன் எனும் கவிஞர் விக்ரமாதித்யன், சுப்பு அரங்கநாதன், தா.மணி, அம்பை, பாலன், ஐயப்பன், நாகராஜன் என இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடி, வண்ணநிலவன் எழுதிய சிறுகதைககளைப் பற்றி பேசியது, அப்படியே முன்னுரையாக இடம்பெற்றிருக்கிறது.
 
சிறுகதைகள் குறித்த திறந்த உரையாடலும், இடைவெட்டாக வந்து போகும் ‘இதயக்கனி’, ‘சிவகங்கை சீமை’ திரைப்படங்களைப் பற்றிய பேச்சும். ‘சிகரெட் பாக்கெட்டை இப்படி எடுத்துப் போடு’ எனப் பேசியபடியே புகைப்பதும் வித்தியாசமானதொரு அனுபவப் பதிவாக உள்ளது.
 
இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ள தா.மணி எனும் மணி அண்ணாச்சியை நான் அறிவேன். தீவிர இலக்கிய வாசிப்பில் தன்னைக் கரைத்துக் கொண்ட மகத்தான மனிதர். அவர் இன்றில்லை. ஆனால், இந்த முன்னுரையை வாசிக்கும்போது அவரது குரல் என் காதில் விழுகிறது. கண்கள் தானே கலங்குகின்றன.
 
முன்னுரையின் இறுதி யில், ‘சமீபத்தில் வந்த தொகுப்புகள்ல எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய வட்டாரத்தில் திருப்தி தரக் கூடியதாக இருக்கும். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கணும். பார்ப்போம்...’ என நம்பிராஜன் சொல்கிறார். அவரது கணிப்பு நிஜமாகியது. அன்று தொடங்கி இன்றுவரை ‘எஸ்தர்’ சிறுகதைக்கான வாசகர் வட்டம் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது.
 
தமிழ்ச் சிறுகதையில் வண்ணநிலவன் செய்துள்ள சாதனைகள் உலக அளவில் ஆன்டன் செகாவ், ரேமண்ட் கார்வர், ஹெமிங்வே போன்றோர் சிறுகதை இலக்கியத்தில் செய்த சாதனைகளுக்கு நிகரானது. அதை நாம் உணர்ந்து கொண்டது போல உலகம் இன்னமும் அறியவில்லை.
 
அதற்கு, வண்ணநிலவனின் சிறு கதைகள் முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே தமிழ் இலக்கியம் குறித்து உலகின் கவனத்தைப் பெறுவதற்கான முதல் தேவை!
 

esra_2113525a.jpg

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் ......
சுவாரஸ்யமாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வுகள் தொடருங்கள் ஆதவன்.நான் விரும்பி படிக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 8 - ‘400 போட்டோகிராப்ஸ்’

 

PHOTO_2200842f.jpg

 

 

புத்தகங்களை விற்று நிறையப் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அது போதும் எனக்கு’’ என, ஒரு சாலையோரப் புத்தக வணிகர் என்னிடம் சொன்னார். அனுபவம் பேசுகிறது என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
 
‘‘ஆசைப்பட்ட புத்தகங்களை எல்லோராலும் வாங்க முடிவதில்லை. அந்த ஏமாற்றத்தில் சிலர், அடிக்கடி கடைக்கு வந்து புத்தகங்களைத் தொட்டுப் பார்த்து விலையைக் கேட்டுவிட்டுப் போய்விடுவதும் உண்டு.
 
எனக்குத் தெரிந்த ஒரு போட்டோ கிராபர், வெளிநாட்டுப் புகைப்படப் புத்தகங்களை விலை கேட்டுவிட்டு நீண்ட நேரம் புரட்டிக் கொண்டே இருப்பார். ஆயிரம், ரெண்டாயிரம் விலை கொடுத்து அவரால் வாங்க முடியாது எனத் தெரியும் என்பதால், நானும் கண்டுகொள்வது இல்லை.
 
தனக்கு விருப்பமான புகைப்படங்களை ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் வைத்து விட்டுப் போய்விடுவார். ஒருமுறை பெரிய போட்டோகிராபி புத்தகம் ஒன்றை என்னிடம் எடுத்துக் கொடுத்து, ‘இதை யாருக்கும் வித்துறாதீங்க. காசு ரெடி பண்ணிட்டு வந்து ஐந்து தேதிக்குப் பிறகு வாங்கிக் கொள்கிறேன்’ என்றார்.
 
அந்தப் புத்தகத்தை அவருக்காகத் தனியே எடுத்து வைத்திருந்தேன். சொன்னபடி ஐந்தாம் தேதி அந்தப் போட்டோகிராபர் வரவில்லை. ஒருநாள் ஓவியர் ஒருவர் வந்து கேட்கவே, அந்தப் புத்தகத்தை விற்றுவிட்டேன். இரண்டு மாசங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலை அந்தப் போட்டோகிராபர் பரபரப்புடன் வந்து, ‘நான் எடுத்து வெச்ச புத்தகத்தை வாங்கிக்கிறேன்’ எனப் பணத்தை நீட்டினார்.
 
‘அதை எப்பவோ விற்றுவிட்டேனே…’ என்று சொன்னதும், அவருக்கு முகம் வெளிறிப் போய்விட்டது.
 
‘வித்துட்டீங்களா… என்னங்க இப்படிப் பண்ணீட்டீங்க? அதான் நான் வாங்கிக்கிறேன்னு சொன்னேன்ல…’ எனக் கோபப்பட்டுக் கத்தினார்.
 
‘நீங்க ஆளே வரலை. அதான் வேற ஆளுக்குக் கொடுத்திட்டேன்’ என்றேன்.
 
‘நீங்க என்ன செய்வீங்களோ, தெரியாது. எனக்கு அந்தப் புத்தகம் இப்போ வேணும். ரொம்ப ரேர் புக்குங்க அது’ எனப் பிடிவாதமான குரலில் சொன்னார்.
 
‘அது போல போட்டோகிராபி புத்தகம் வந்தால் எடுத்து வைக்கிறேன்’ எனச் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
 
‘யார் வாங்கினாங்கன்னு சொல்லுங்க. அவர் வீட்டுக்குப் போய் நான் கேட்டுப் பாக்குறேன்…’ என்றார்.
 
‘அடிக்கடி வர்ற ஓவியர்தான். ஆனால், அவர் அட்ரஸ்லாம் தெரியாதே…’ என்றதும் அவரது முகம் இன்னும் வாடிவிட்டது.
 
‘இந்தப் பணத்தை நான் ரெடி பண்றதுக்குப் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பணம் உங்கக்கிட்டயே இருக்கட்டும். எனக்குப் புத்தகம்தான் வேணும்’ எனப் பிடிவாதமாக பணத்தைத் திணித்தார்.
 
இத்தனை வருஷ புத்தக விற்பனையில் அன்று மட்டும்தான் ‘நான் தப்புப் பண்ணிவிட்டதைப் போல’ மனதில் ஒரு உணர்ச்சி உருவானது. எப்படியாவது அந்தப் புத்தகத்தைத் திரும்ப வாங்கித் தந்துவிட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தேன்.
 
நாலைந்து நாட்களுக்குப் பிறகு அந்த ஓவியர் வந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி… ‘அந்தப் புத்தகத்தை ரிட்டர்ன் பண்ணிருங்க. கூட வேணும்னாலும் ஐநூறு ரூபாய் தர்றேன்’ என்றேன். அவர் மனம் இரங்கி மறுநாளே அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து தந்ததோடு, பணமே வேண்டாம் என்று சொல்லி போய்விட்டார்.
 
போட்டோகிராபரிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தபோது, கையில் வாங்கிக் கொண்டு… சிரித்த முகத்தோடு, ‘ரொம்ப நன்றிங்க. என்னால நம்பவே முடியலை…’ என்று சொல்லி, என் இரு கைகளையும் பற்றிக் கொண்டார்.
 
‘நீங்க நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்லை. இந்தப் புத்தகத்தை இலவசமாகவே திருப்பிக்கொண்டு வந்து கொடுத்த ஓவியருக்குத்தான்…’ என்று சொல்லி, வாங்கியிருந்த பணத்தை போட்டோகிராபரிடம் திருப்பிக் கொடுத்தபோது… இரட்டை சந்தோஷத் தில் அவர் ‘நிஜமாவா… நிஜமாவா…’ எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
 
பிறகு சந்தோஷத்தில் தனது கேமராவால் என்னை கடையோடு சேர்த்து, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
‘இத்தனை வருஷ அனுபவத்தில் அதுதான் முதன்முறையாக நான் கடையோட சேர்த்து போட்டோ எடுத்துக்கிட்டது. இதைவிட வேற என்ன சந்தோஷம் தம்பி இருக்கு! அதான் சொன்னேன் நிறைய மனுசங்களைச் சம்பாதிச்சிருக்கேன்னு’’ என்றார் பழைய புத்தகக் கடைக்காரர்.
 
எவ்வளவு பெரிய மனசு! எத்தனை அன்பு… என அந்த ஓவியரையும் புத்தகக் கடைக்காரரையும் வியந்தபடியே சொன்னேன்.
 
இந்த நேசத்தைதான் புத்தகங்கள் உலகுக்குக் கற்றுத் தருகிறது. புத்தகங்களை நேசிக்கிறவருக்குத் தன்னைப் போலப் புத்தகம் படிக்க ஆசைப்படுகிற மற்றவருடைய மனசு நிச்சயம் புரியும் என்றேன். அவர் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.
 
அவ்வளவு ஆசைப்பட்டுப் போட்டோ கிராபர் தேடி வாங்கிய புத்தகம் எது தெரியுமா? உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் அன்சல் ஆடம்ஸின் ‘400 போட்டோகிராப்ஸ்’.
 
அந்தப் புத்தகத்தை நான் அமெரிக்காவின் சாலையோர கடையில் 15 டாலருக்கு வாங்கினேன். அமெரிக்காவின் எல்லா முக்கிய நகரங்களிலும் தரமான பழைய புத்தகக் கடைகள் உள்ளன. உண்மையில் ஒரு சுரங்கம் போல, நாள் முழுக்கத் தேட வேண்டிய அளவு புத்தகங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.
 
ANSELK_2200843a.jpg
 
அது போலவே அங்குள்ள நூலகங் களிலே பயன்படுத்திய புத்தகங்களை… ஒரு டாலர், இரண்டு டாலர் விலைக்கு வாரம் ஒருநாள் விற்பனை செய்கிறார்கள். அதில் நிறைய நல்ல புத்தகங்களை வாங்க முடியும். நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் எந்த நூலகத்திலும் அப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை.
 
அன்சல் ஆடம்ஸ் கறுப்பு - வெள்ளையில் எடுத்தப் புகைப்படங்கள் அபாரமான அழகுடையவை. தன் வாழ்நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். குறிப்பாக, யோசெமிட் பள்ளத்தாக்கில் நிலா ஒளிர்வதை அவர் விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இன்று அந்த ஒரு புகைப்படத்தின் விலை 80 லட்சம் ரூபாய்.
 
அமெரிக்காவில் உள்ள 40 தேசியப் பூங்காக்களை, அதன் இயற்கை வனப்பை, கானுயிர்க் காட்சிகளைச் சிறந்த புகைப்படங்களாக எடுத்துச் சாதனை செய்தவர் அன்சல் ஆடம்ஸ். புகைப்படக் கலை குறித்த நிறையப் பயிலரங்குகள் நடத்தியவர். அவர் எடுத்த முக்கிய புகைப்படங்களும் சிறிய தொழில்நுட்பக் குறிப்புகளும் அடங்கிய தொகுப்பு நூல்தான் இது.
 
புகைப்படங்கள் சார்ந்த புத்தகங்கள் அவ்வளவாக தமிழில் வெளியாவது இல்லை. கேமரா தொழில் நுட்பம் சார்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. சமீபமாக ‘சென்னை கிளிக்கர்ஸ்’ என்ற அமைப்பு, இளம் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அது பாராட்டுக்குரிய முயற்சியாகும். யாராவது புதிய பதிப்பகங்கள் இது போல முயற்சி செய்து வெளியிடலாம்.
 
இது போலவே தமிழ் வாழ்வின் பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை, ஆளுமைகளை, வரலாற்றை, இயற்கைச் சூழலை, வாழ்வியலைக் கூறும் புகைப் படங்களுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றும் அவசியம் தேவை. அதை ஆர்வலர்கள் ஒன்றுகூடி குறைந்தபட்சம் இணையத்திலாவது ஆரம்பிக்கலாமே!
 

 

Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 9 - திரைப்படம் உருவாகிறது!

 

  • sivaji_2213054g.jpg
    ’ராஜராஜசோழன்’ படப்பிடிப்பில் லட்சுமி, சிவாஜிகணேசன், தயாரிப்பாளர் ஜி. உமாபதி படம் உதவி: ஞானம்
esraa_2213055g.jpg

திரைப்படம் உருவாகிறது!

 
பள்ளி வயதில் ‘பேசும்படம்’ பத்திரிகையை வாங்குவதற் காக அடிக்கடி பழைய புத்தகக் கடைகளுக்குப் போவேன். ஒரு இதழ் நாலணா. அதில் சினிமா பற்றிய தகவல்கள், நடிகர் நடிகைகளின் நேர்காணல்கள், கையெழுத்துப் போட்ட புகைப்படங்கள், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவங்கள், திரைக்கதை சுருக்கம் என சுவாரஸ்யமான செய்திகள் நிறைந்திருக்கும்.
 
சினிமா எப்படி எடுக்கிறார்கள்? படப்பிடிப்புத் தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய செய்திகள் எப்போதும் படிக்க ஆவலைத் தூண்டவே செய்கின்றன. பள்ளி நாட்களில் அதைத் தேடிப் படித்துப் பேசிக் கொண்டிருப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.
 
‘பென்ஹர்’ படத்தை எப்படி எடுத்தார்கள்? டைரக்டர் ஹிட்ச் காக் எப்படி சைக்கோ படத்தை உருவாக்கினார் என்பது போன்று, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால், தமிழில் இதுபோன்று வெற்றிகரமான திரைப்படங்கள் எதைக் குறித்தும் புத்தகங்கள் எழுதப்படவில்லை. சில நேரங்களில் இயக்குநர் அல் லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் வழியாக தெரிவிக்கப்பட்ட செய்தி கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
 
தமிழ் சினிமாவுக்கு என ஓர் ஆவணக் காப்பகம் இன்று வரை கிடையாது. இதனால், பல படங்களின் மூலப் பிரதிகள் அழிந்துபோய்விட்டன.
 
பிரெஞ்சு சினிமா இயக்குநரான லூயிமால், இந்தியாவைப் பற்றி ஆறு மணி நேரம் ஒடக் கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 1969-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பதிவு செய்திருக்கிறார் லூயிமால்
 
1968-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள லூயிமால், ‘தில்லானா மோக னாம்பாள்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று சிவாஜி, பத்மினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றுதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகுறித்து பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணம்.
 
படப்பிடிப்பில் சிவாஜி, பத்மினி இருவரும் நடிப்புக்குத் தயார் ஆகும் விதம், நடிப்பில் சிவாஜி காட்டும் ஈடுபாடு, இயக்குநரான ஏ.பி.நாகராஜன் தாளகதியுடன் கைதட்டிப் பாடி, நடிகர் வெளிப்படுத்த வேண்டிய பாவத்தைக் காட்டும் தனித்துவம் என்று லூயிமால் காலத்தின் அழியாத நினைவுகளை ஆவணப் படுத்தியிருக்கிறார். இன்று இக்காட்சியை யூ-டியூப்பில் நாம் காண முடிகிறது.
 
மதுரை ‘ரீகல்’ தியேட்டர் முன்பாக உள்ள பழைய புத்தகக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக அரிய நூல் ஒன்றை வாங்கினேன். அது ‘திரைப்படம் உருவாகிறது’ என்ற கலைஅன்பன் எழுதிய புத்தகம். 1973-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.
 
நடிகர் திலகம் சிவாஜிகணே சன் நடித்த ‘ராஜராஜசோழன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரை என்னவெல்லாம் நடந் தது என்பதைப் பற்றி ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்ப்பது போல நேரடியாக விவரிக்கிறது இப்புத்தகம்.
 
சுப.ராமன் என்ற பத்திரிகை யாளர் படப்பிடிப்புத் தளத்தில் கூடவே இருந்து, இதை ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ‘தமிழ்நாடு’ இதழில் பணியாற்றியவர்.
 
‘ராஜராஜசோழன்’ தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம். அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜசோழன்’ நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் 1955-ல் திருநெல்வேலியில் அரங்கேற்றி உள்ளனர்.
 
அதன்பிறகு, இந்த நாடகத்தைப் படமாக்க பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து, எதிர்பாராத காரணங்களால் நடைபெறாமல் போயுள்ளது.
 
இந்நிலையில் 1972-ம் ஆண்டு ஜி.உமாபதி அவர்கள் இதனைப் படம் எடுக்க முன் வந்துள்ளார். புராணப் படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக அப்போது பேசப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு டபிள்யூ.ஆர். சுப்பா ராவ். ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.
 
சினிமாஸ்கோப்பில் படம் எடுப்பதற்காக இவரை பம்பாய்க்கு அழைத்துப் போய், அமெரிக்க கம்பெனியில் பயிற்சி கொடுத்து அவர்களிடமிருந்த சினிமாஸ்கோப் லென்ஸ்களை வாடகைக்கு வாங்கி வந்திருக் கிறார்கள்.
 
சோதனை முயற்சியாக, ‘அகஸ்தியர்’ படத்தின் உச்சகட்டக் காட்சியினை 500 அடிகள் சினிமாஸ்கோப்பில் படமாக்கிப் பார்த்திருக்கிறார்கள். அது சிறப்பாக அமையவே, ‘ராஜராஜசோழன்’ முழுப் படமும் சினிமாஸ்கோப்பில் எடுக்க முடிவு செய்தார்களாம். இப்படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, கலை இயக்குநராக கங்கா வும், எடிட்டிங் வேலையை டி.விஜயரங்கமும் கவனித்துள் ளனர்.
 
1972 பிப்ரவரி 2-ம் நாள் வாசு ஸ்டுடியோவில் ‘ராஜராஜ சோழன்’ படப்பிடிப்பு ஆரம்பம். ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம் மாண்டமான முறையில் தஞ்சை பெரிய கோயிலை செட் போட்டுள்ளார்கள். 25 அடியில் ஒரு நந்தியை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் தான் நடிக்கிறோம் என்ப தையே மறந்துவிட்டு, ராஜராஜசோழனாகவே வாழ்ந்துள்ளார் நடிகர் திலகம்.
 
ஒருநாள் படப்பிடிப்பைக் காண்பதற்காக பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சீவ்குமார் வந்திருக்கிறார். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியதோடு, கோயில் போல அமைக்கபட்ட செட் அமைப்புகளைக் கண்டு பிரமித்துப் போனாராம்.
 
படப்பிடிப்பின்போது ஒருநாள் கடும் மழையால் படத்துக்காக போடப்பட்ட செட் சரிந்து விழுந்துள்ளது. மேட்டி தொழில்நுட்பத்துக்காக கேமரா முன்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து போனதாம்.
 
அன்றைக்கு படப்பிடிப்பு நின்று போனதுடன், 2 லட்ச ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் அந்தப் படத்தின் ஜி.உமாபதி கலங்கவில்லை. படத்தைத் திட்டமிட்டபடியே இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மீண்டும் அதே போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்புத் தொடர்ந்துள்ளது.
 
இப்படி ‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன், அன்றைய தமிழ் சினிமாவின் நிலை, ஹாலிவுட் சினிமா எப்படி இயங்குகிறது என்றெல்லாம் இந்தப் புத்தகத்தில் நுட்ப மாக எழுதியிருக்கிறார் கலை அன்பன். இந்நூலில் அரிய புகைப்படங்களும் திரைக்கதையின் மாதிரி பக்கமும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
 
தமிழ் சினிமாகுறித்து இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங் களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெறு கின்றன. அங்கிருந்து வரும் ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் கேட்கும் கேள்வி என்னவெனில்... ‘தமிழ் சினிமாவின் அரிய திரைப்படங்கள் ஏன் முறையாக பாதுகாத்து வைக்கப்படவில்லை?’ ‘ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யும் தமிழ் சினிமா உலகம்… பழைய புகைப்படங்கள், இசைத் தட்டுகள், நடிகர் - நடிகையர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய விவரங் கள், விளம்பரங்கள், சினிமா பத்திரிகைகள், பிரிண்ட்... என நீளும் ஆவணப்படுத்துதலில் ஏன் அக்கறை காட்ட மறுக்கிறது?’ என்பதே.
 
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய நாளில் எதையும் ‘ஆவணப்படுத்துதல்’ என்பது சாத்தியமானதே. அதற்குத் தேவை கூட்டு உழைப்பும் பொருளாதார உதவியுமே. அரசும், திரை உலகமும் இணைந்து இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
 
சினிமாவை ஆவணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அதை கல்விபுலங்களுக்குக் கொண்டுச் செல்ல முடியும். இல்லாவிட்டால் இதுவெறும் பொழுதுபோக்காக காலவெள்ளத்தில் கரைந்து போய்விடும்.
 
 
- இன்னும் வாசிப்போம்…
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 10 - திப்புவின் கனவுகள்!

 

veedillaa_2223252f.jpg

 

திப்புவின் கனவுகள்!
 
கொல்கத்தா செல்லும்போது எல்லாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள காலேஜ் ரோடில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குப் போகாமல் திரும்பியதே இல்லை. ‘போய் பஜார்’ என அழைக்கப்படும் அந்தச் சாலையோர புத்தகக் கடைகளில் அரிய புத்தகங்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
 
காலேஜ் ரோடில் உள்ள காபி ஹவுஸ்கள் பிரபலமானவை. இலக்கிய வாதிகள், சினிமா இயக்குநர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் எனப் பலதுறையைச் சார்ந்தவர்கள் கூடிப் பேசி, விவாதிக்கும் மையங்களாக இந்த காபி ஹவுஸ்கள் விளங்கின. தற்போது அவை நிறைய மாற்றம் கொண்டுள்ளன என்றபோதும், இன்னும் இந்தியன் காபி ஹவுஸில் இலக்கியம் பேசுகிறவர்கள் கூடத்தான் செய்கிறார்கள்.
 
கொல்கத்தாவில்தான் இந்திய தேசிய நூலகம் (National Library of India) உள்ளது. இந்திய அரசால் பராமரிக்கப்படும் மிகப் பெரிய நூலகம் இது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 22 லட்சம் புத்தகங்ககள் உள்ளன.
 
இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்கு ஒருங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 1963-ல் இந்த நூலகத்தில் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் அரிய சுவடிகளும் தமிழ்ப் புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 57 ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடி களும் அங்கு உள்ளன. கொல்கத்தா போகிறவர்கள் அவசியம் ஒருமுறை இந்த நூலகத்துக்குப் போய் வர வேண்டும்.
 
பெயருக்கு ஏற்றாற்போலவே கொல் கத்தாவின் காலேஜ் ரோடில் நிறைய கல்வி நிலையங்கள் உள்ளன. ஆகவே இங்குள்ள பழைய புத்தகக் கடைகளில் சகல துறையைச் சார்ந்த புத்தகங்களும் கிடைக்கின்றன.
 
இங்கு உள்ள புத்தகக் கடையில் ‘திப்பு சுல்தானின் கனவுகள்’ என்ற பழைய புத்தகம் ஒன்றை வாங்கினேன். கையில் எடுத்தபோது ஏதோ ஒரு நாவல் என்றுதான் அதை நினைத்தேன். ஆனால், புரட்டியபோது திப்பு சுல்தான் தனது கனவுகளைத் தானே பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது படிக்க ஆர்வமானது.
 
‘மைசூரின் புலி’ என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனி யின் அதிகாரத்தை எதிர்த்து உறுதி யுடன் போராடியவர். திப்பு தன் இளம் வயதிலேயே தனது தந்தை ஹைத ருடன் பல்வேறு போர்க் களங்களைக் கண்டவர். கி.பி. 1767-ம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் வந்த பிரிட்டிஷ் படையை எதிர்த்து சண்டையிட்டு வெற்றிபெற்றபோது, திப்பு சுல்தானின் வயது 17.
 
1782-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் தன்னுடைய 32-வது வயதில் சுல்தானாக அரியனை ஏறினார் திப்பு. மைசூர் போரில் திப்பு சுல்தானை வீழ்த்த முடியாது என உணர்ந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் லஞ்சத்தால் தங்கள் வசமாக்கி, திப்புவைக் காட்டிக் கொடுக்கும்படி செய்து வீழ்த்தினார்கள்.
 
திப்பு சுல்தானை வீழ்த்திய ராணுவத் தினர் அவரது அரண்மனைக்குள் புகுந்து ‘ஓரியண்டல் லைப்ரரி’ என்கிற பெயருடைய அவரது நூலகத்தில் இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புத்தகங்கள், பதிவேடுகள், போர்க் கருவிகள் சார்ந்த குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றார்கள்.
 
 
 
அந்தக் கொள்ளையில்தான் திப்பு வின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கனவுக் கையேடு கைப்பற்றப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் இந்தக் கனவுப் புத்தகம் 1785 முதல் 1798 வரையான 13 ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட முக்கியமான கனவுகளை மட்டும் பதிவு செய்துள்ளது.
 
இதில் 37 கனவுகளும் அவற்றுக்கான திப்புவின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பெரும் பான்மையான கனவுகள் கண் விழித்து எழுந்தவுடனே பதிவு செய்யப்பட்டதாக திப்புக் குறிப்பிட்டுள்ளார்.
 
பெர்ஷிய மொழியில் எழுதப்பட்ட இக்கனவுகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் பெர்ஷிய மொழியில் விற்பன்னர் என அவரது ராஜசபைக் குறிப்புகள் கூறுகின்றன.
 
‘தனது கனவுகளை ஏன் பதிவு செய்ய வேண்டும் என திப்பு சுல்தான் ஆசைப்பட்டார்’ என்பது இன்றைக்கும் புதிராக இருக்கிறது. ஒவ்வொரு கனவும் நடக்கப் போகும் நிகழ்வு ஒன்றின் முன்னறிவிப்பு என அவர் நினைத்திருக்கக் கூடும். கனவைப் புரிந்து கொள்வதன் வழியே எதிர்காலத்தைக் கணித்துவிட முடியும் என்பது போலவே, அவரது கனவுப் பதிவுகள் காணப்படுகின்றன.
 
ஒரு கனவில் பெண் உடை அணிந்த ஒருவரை பற்றிக் குறிப்பிடும் திப்பு, அது எதிரியின் அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்கிறார். இன்னொரு கனவில் மூன்று வெள்ளித் தட்டுகளில் பேரீச்சம் பழங்கள் இருப் பதை, தனது எதிரிகளான நிஜாம், மராத்தா, கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றின் உருவகமாக விளக்கம் தருகிறார்.
 
யுத்தக் களத்தில் எதிரிகளைக் கொன்று குவிப்பதைப் பற்றி அவருக்குத் தொடர்ந்து கனவுகள் வந்துள்ளன. அதில் ஒரு கனவில், அவர் எதிரியை ஒரே குத்தில் கொன்று சாய்க்கிறார். பிறகு, வெற்றி விருந்துக்கு செல்லும்போது அங்கே வெண்தாடியில் இருந்த ஒரு முதியவர் திப்புவை வரவேற்று இனிப்புகளை உண்ணத் தருகிறார். அது போல சுவையான இனிப்பை தான் அதுவரையில் உண்டதே இல்லை எனச் சந்தோஷப்படும் திப்பு, உடைவாளை இடுப்பில் சொருகிக் கொள்வதுடன் கனவு கலைந்துவிடுகிறது.
 
இன்னொரு கனவில், அவருக்கு ஓர் ஆள் அப்போதுதான் கறந்த பாலை அப்படியே நுரைக்க நுரைக்க இரண்டு சிறிய குடுவைகளில் குடிக்கத் தருகிறான். பாலை குடிக்க முயற்சிக்கும்போது கனவு கலைந்து விழிப்பு வந்துவிடுகிறது.
 
பிறகொரு கனவில், திப்பு யானை களைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குள் போகிறார். அங்கே பெரும் யானைக் கூட்டத்தைச் சுற்றி வளைக்கிறார். அதில் தேர்வு செய்யப்பட்ட சில ஆண் யானைகளைப் பிடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்புகிறார். அப் போது அரண்மனை வாசலில் இரண்டு வெள்ளை யானைகள் நிற்கின்றன. அதன் அருகில் இரண்டு குதிரைகளும் நிற்கின்றன.
 
சீனாவில் இருந்து தூதுவர் வந்துள்ளார் என திப்புவிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர் களை வரவேற்று, வருகையின் நோக்கம் பற்றி விசாரிக்கிறார். நட்புறவின் நிமித்தமான வருகை என்றதோடு சீன அரசனின் அன்புப் பரிசாக வெள்ளை யானையைக் கொண்டு வந்துள்ளதாகத் தூதுவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
அலெக்சாண்டருக்குப் பிறகு, தான் ஒருவனுக்கே சீன அரசன் இப்படியான அரிய பரிசை அனுப்பியிருக்கிறார் என மகிழ்ந்த திப்பு, அதை ஏற்றுக் கொண்டதுடன் தான் அன்று காட்டில் பிடித்து வந்த யானைகளைத் தூதுவர் களுக்குக் காட்டுகிறார். அதற்குள் விழிப்பு வந்து கனவு கலைந்துவிடுகிறது.
 
இப்படி திப்புவின் கனவுகளுக்குள் அவரது ஆசைகள், யுத்த முஸ்தீபுகள், எதிரிகள் குறித்த யோசனைகள், சூபிகளின் நல்லாசி தனக்கு இருக்கிறது என்கிற நம்பிக்கை போன்றவை பதிவாகியுள்ளன.
 
இந்தப் புத்தகத்தை மையப் படுத்தி ‘திப்புவின் கனவுகள்’ என்ற ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றி யிருக்கிறார் பிரபல நாடக ஆசிரியர் கிரீஷ் கர்னாட்.
 
எல்லா மனிதர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால், ஒன்றுபோலக் காண்பதில்லை. கனவுகள் என்பது நாளைய கேள்விகளுக்கான இன்றைய பதில் என்பார் எட்கர் கேசி. திப்புவின் நம்பிக்கையும் இது போலவே இருந்திருக்கிறது.
 
- இன்னும் வாசிப்போம்… 
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 11 - சந்தோஷத்தின் திறவுகோல்!
 
book_2232406h.jpg
 
சந்தோஷத்தின் திறவுகோல்!
 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடை யாரில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் புத்தகம் தேடிக் கொண்டிருந்தேன். சாலையோரப் புத்தகக் கடை அது. ஒருவர் பிளாட் பாரத்தையொட்டி பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றைப் போட்டு உட்கார்ந்தபடியே புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.
 
தாடியோடு உள்ள மெலிந்த தோற்றம். நூலகத்தில் அமர்ந்து படிப்பது போலவே சாலையோரப் புத்தகக் கடையில் சேரில் சாய்ந்து கொண்டுப் படிக்கிறாரே… என வியப் பாக இருந்தது. அவரை பல நாட்கள் அதே புத்தகக் கடையின் முன்பாகப் பார்த்திருக்கிறேன்.
 
யாராவது ஏதாவது ஆங்கிலப் புத்தகம் விலைக்கு வேண்டும் எனக் கேட்டால், கடைக்காரர் சேரில் உட்கார்ந்திருப்பவரிடம் புத்தகத்தைக் கொடுத்து, அதன் விலையை மதிப்பிடச் சொல்வார்.
 
தாடிக்காரர் புத்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டிவிட்டு… 200, 300 என விலை சொல்வார். ஒருவேளை இப்படிப் பேரம் பேசுவதற்கு உதவி செய்யத்தான் அந்த நபர் பழைய புத்தகக் கடையிலே உட்கார்ந்திருக்கிறாரோ என்று கூடத் தோன்றும்.
 
அன்று நான் எடுத்த எமர்சன் எழுதிய புத்தகத்தைப் பார்த்தபடியே, ‘நீ காலேஜ்ல வேலை பாக்குறியா?’ என்று என்னைப் பார்த்து கேட்டார். ‘இல்லை’ என்றேன், அப்புறமாக, ‘ஆராய்ச்சி பண்றியா?’ எனக் கேட்டார். ‘அதுவுமில்லை’ என்றேன். பிறகு சிரித்தபடியே, ‘எழுத்தாளரா..?’ என்றார். ‘ஆமாம்’ என்றதும் ‘ஏ.எஸ்.பயட் படி… நல்லாயிருக்கும்’ எனக் கிழே கிடந்த, ‘பேபல் டவர்’ என்ற புத்தகத்தைக் காட்டினார்.
 
அவர் வழியாகவே நான் ஏ.எஸ்.பயட்டை வாசிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு, நாலைந்து முறை அவர் சிபாரிசு செய்த புத்தகங்களை வாங்கி வாசித்திருக்கிறேன்.
 
ஒருமுறை அவரிடம், ‘நீங்கள் ஏன் இப்படிப் பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன்.
 
அதற்கு அவர், ‘‘10 வருஷம் பிரைவேட் கம்பெனியில் வேலை செய்தேன். திடீர்னு ஒருநாள் வேலை போயிட்டு. அப்புறமா லைப்ரரி போறது, படிக்கிறதுன்னு மட்டும் சுத்திட்டு இருந்தேன். ஒருநாள் ரோடை கிராஸ் பண்றப்போ தற்செயலா இந்தக் கடையைப் பார்த்தேன். கொட்டிக் கிடக்கிற புத்தகத்துக்குள்ளே ‘ஆல்பர்டோ மொராவியா’ நாவல் ஒண்ணு கண்ணில்பட்டது. படிக் கணும்னு ஆசையா இருந்தது. ஆனா, கையில் காசு இல்லை. நைசா திருடி சட்டைக்குள்ளே போட்டுக்கிட்டு கிளம் பும்போது, கடைக்காரர் கூப்பிட்டு… ‘என்ன சார் அந்தப் புக் வேணுமா’னு கேட்டார்.
 
இப்படிக் கையும் களவுமாப் பிடிபட்டுட்டோமேன்னு திகைச்சுப் போய் நின்னுட்டு இருந்தேன். புத்தகக் கடைக்காரர் சிரிச்சபடியே, ‘படிச்சுட்டு நாளைக்குக் கொண்டு வந்து கொடுத்துடுங்க’ன்னு சொன்னார்.
 
அந்தப் புத்தகத்தை அறைக்குக் கொண்டுட்டுப் போய் இரவோடு இரவாப் படிச்சுட்டு, மறுநாள் திரும்பிக் கொடுத்துட்டேன். அப்படித் தொடங்குன பழக்கம் ஃபிரெண்ட்ஷிப்பா மாறிடுச்சு. எனக்காக ஒரு பிளாஸ்டிக் சேர் வாங்கிப் போட்டு இங்கேயே உட்கார்ந்து படிக்கச் சொல்லிட்டார். அவருக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தபடி நாள் முழுவதும் படிச்சிட்டே இருப்பேன். சாப்பாடு, டீ செலவு எல்லாம் அவருதான்’’ என்றார்,
 
என்ன ஒரு விநோதமான உறவு என்று தோன்றியது. புத்தகம் திருடியவரை தண்டிப்பதற்கு, நாற்காலி போட்டு உட்கார்ந்து படிக்கச் சொல்வதுதான் சிறந்த வழி என நினைத்த அந்தப் புத்தகக் கடைக்காரரும், படிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட அந்த மனிதரும் வியப்பளித்தார்கள்.
 
அவர்தான் ஒருநாள் என்னிடம் ‘சீன, ஜப்பானிய யாளியின் ஓவியக் கலைத் தத்துவம்’ என்ற புத்தகத்தைக் காட்டி, ‘இது ஒரு முக்கியமான புத்தகம். படி…’ என்றார். அதைப் புரட்டி பார்த்தபோது அழகான ஒவியங்கள் இணைக்கபட்டிருந்தன. லாரன்ஸ் பின்யன் எழுதிய ‘சீன ஓவியங்கள்’ குறித்த புத்தகம் அது. தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் சாந்தி நிகேதனில் ஓவியம் கற்ற பேராசிரியர் அ.பெருமாள். இவர் பிரபல ஒவியர் நந்தலால் போஸின் மாணவர். ஆகவே, உடனடியாகப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டேன்.
 
அன்று முதல் இன்று வரை இந்தப் புத்தகத்தை 20 தடவைகளுக்கும் மேலாக வாசித்திருப்பேன். சீன ஓவிய மரபை தெளிவாகவும் துல்லியமாகவும் வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். பெருமாளின் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பாக உள்ளது. கதிர் பதிப்பகம் 1996-ல் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
 
1935-ல் லண்டன் அருங்காட்சியகத் தில் சீனக் கலைப் பொருட்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், மூவாயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த பல்வேறு கலைப் பொருட்கள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்வையிட்ட கலாரசிகர்கள் உலகின் தலைசிறந்த கலை மரபும் படைப்புகளும் கிரேக்கத்திலோ, நவீன ஐரோப்பாவிலோ உருவாகவில்லை. மாறாக சீனாவில்தான் அது தோன்றி வளர்ந்துள்ளது எனப் புகழ்ந்து கொண்டாடினார்கள். இந்த மாற்றத்துக்கு முக்கியத் தூண்டு
 
கோலாக இருந்தவை லாரன்ஸ் பின்யன் எழுதிய ‘சீனக் கலைகள்’ பற்றிய புத்தகங்களே.
 
இந்தியக் கலைகளின் மையம் மனித உடல்கள். அதை மையமாகக் கொண்டே பல்வேறு சிற்பங்களும் ஓவியங்களும் மாறுபட்ட பாணிகளில் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்க பட்டுள்ளன. ஆனால் சீன, ஜப்பானிய கலைகளின் மையம் இயற்கையும் அதன் இயல்பு நிலையும் ஆகும்.
 
ஆகவே அந்நாட்டுக் கலைஞர்கள் செடிகொடிகள், மலர்கள், பறவை கள், மிருகங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை வரைவதையே முக்கியக் கருப்பொருளாகக் கருதினார்கள். அவர்களது கோடுகளின் நெகிழ்வுத் தன்மையும் உக்கிரமும் இயற்கையின் வெளிப்பாடு போலவே இருந்தன. ஆகவே, மேற்கத்திய ஓவிய மரபில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை சீன, ஜப்பானிய ஓவியங்கள்.
 
‘தோற்ற உலகை’ வரைவது மட்டும் சீன ஓவியனின் வேலையில்லை. தோற்றத்தை ஊடுருவி அகக் கண்ணால் பார்ப்பதும் அரூப நிலைகளை உணரச் செய்வதும் கலையின் முக்கியச் செயல்பாடாகும்.
 
சீன நிலக்காட்சி ஓவியத்தில் மலர்கள்... மகிழ்ச்சியின் திறவுகோல் போலவும், காற்று... கலைஞனின் விருப்பமாகவும், மலைச் சிகரங்கள்... அவனது தனித்த ஆசைகளாகவும், அருவிகள்... அவனது விடுதலையடைந்த சக்தியாகவும், காட்சியளிக்கின்றன. சதுரம் அல்லது நீண்ட சதுர வடிவிலேதான் ஐரோப்பிய பாணி ஓவியங்கள் பெரிதும் வரையப்படுகின்றன. ஆனால் சீன, ஜப்பானிய சுருள் ஓவியத்தில் ஒரு நிகழ்வின் பல்வேறு அடுக்குகளைத் தொடர்ச்சியாக வரைய முடிகிறது என்பது அதன் தனித்துவமாகும்.
 
‘ஓவியங்களை மக்கள் தங்கள் கண்களைக் கொண்டு பார்ப்பதில்லை. தங்கள் காதுகளைக் கொண்டுதான் பார்க்கிறார்கள்’ என்ற சீன ஓவியக் கலைஞர் கூ காய் ஓவிய விமர்சனங்களைப் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறார்,
 
இதன் பொருள் ஓவியத்தைப் பற்றி யாரோ, எவரோ சொல்லிய, எழுதிய விஷயங்களைக் கொண்டே மக்கள் அதனை மதிப்பிடுகிறார்கள். திறந்த ரசனையோடு கண்முன்னே உள்ள ஓவியத்தை அணுகுவதே இல்லை என்பதாகும். இது சீன ஓவியங்களுக்கு மட்டுமில்லை; இந்திய நவீன ஓவியங்களுக்கும் பொருந்தக்கூடியதே.
 
சீன, ஜப்பானிய ஓவியங்களைப் புரிந்து கொள்வதற்கும், ஓவியம் சார்ந்த ரசனையை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டியாகும்.
 
- இன்னும் வாசிக்கலாம்…
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 12 - கலிவரின் பயணங்கள்

 

guillever_2240191f.jpg

 

புத்தகக் கடைகளில் சிறுவர்களைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறது. சென்னையின் பல்வேறு புத்தகக் கடைகளுக்கும் வாடிக்கையாகப் போய் வருபவன் என்ற முறையில் புத்தகக் கடை என்பதே நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஆனது போலக் காட்சியளிக்கிறது.
 
விடுமுறை நாட்களில் முன்பு கல்லூரி மாணவர்கள் நிறையப் புத்தகக் கடைகளுக்குள் தென்படுவார்கள். அவர்களும் இப்போது கண்ணில் இருந்து மறைந்து வருகிறார்கள். ஒருவேளை சிறுவர்கள் பெற்றோருடன் வந்தாலும் நேரடியாக ஆங்கிலக் கதைப் புத்தக வரிசைக்குப் போய் விடுகிறார்கள். இவர்கள் பேச மட்டுமே தமிழ் தெரிந்த சிறுவர்கள். எழுதுவதோ, வாசிப்பதோ இயலாது. தமிழ் பாடத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதி வைத்து வாசிக்கக் கூடியவர்கள்.
 
ஏன் இவர்கள் புத்தகங்களை இப்படி வேண்டாதப் பொருளாக நினைக்கிறார்கள்?
 
நாவல், கட்டுரை, கவிதை என எவ்வளவு முக்கியமான புத்தகம் தமிழில் வெளியானாலும் அதைப் பற்றி ஒரு வரி கூடத் தொலைக்காட்சிகள் கண்டுகொள்ள ஏன் மறுக்கின்றன? இதே தமிழ் தொலைக்காட்சிகள்தான் ஆங்கிலத்தில் ‘சேத்தன் பகத்’ புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு இருந்து இன்றுவரை அவரது நாவல் குறித்துத் தொடர்ந்து தகவல்களைத் தந்து கொண்டே இருக்கிறார்கள். இதிலும் தமிழ் எழுத்தாளன் தீண்டத் தகாதவன்தானா?
 
புத்தகக் கடைகளுக்குப் பெற்றோர்களே போவதில்லை. பிறகு எப்படிப் பிள்ளைகளை அழைத்துப் போவார்கள் எனக் கேட்டார் எனது நண்பர் ஒருவர். தனியாகப் பிள்ளைகள் சினிமா தியேட்டருக்கும், ஷாப்பிங் மாலுக்கும் போகிறார்களே, அந்த வளாகத்தில் புத்தகக் கடைகளும் இருக்கத்தானே செய்கின்றன. அங்கே ஏன் போக விரும்புவதில்லை எனக் கேட்டேன்.
 
ஆன்லைனில் வாங்கிவிடுவார்கள் எனச் சமாதானம் சொன்னார் நண்பர். அது பொய். 10 சதவீதம் பேர் கூடப் புத்தகக் கடைகளுக்குப் போவது இல்லை என்பதே உண்மை. காரணம், மாணவனுக்குப் பாடப் புத்தகங்களுக்கு வெளியே எந்தப் புத்தகத்தையும் கல்வி நிலையங்கள் அறிமுகப்படுத்துவது இல்லை. குறைந்தபட்சம் வாரம் ஒரு வகுப்பறையை ஆசிரியரே அழைத்துச் சென்று சாலையோரப் புத்தகக் கடைகளில் கிடைக்கும் மலிவு விலைப் புத்தகங்களையாவது வாங்கலாம்தானே.
 
பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் அளிப்பது பொதுவழக்கம். ஆனால், அப்படித் தரப்படும் புத்தகங் கள் தரமானதாகவோ, மாணவனுக்குப் பயனுள்ளதாகவே இருப்பதே இல்லை. ஒரு பள்ளியில் மாணவர்கள் அத்தனை பேருக்கும் பள்ளி முதல்வர் எழுதிய கட்டுரைப் புத்தகத்தைப் பரிசாகத் தந்திருந்தார்கள். அந்த மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது, பள்ளி பேருந்தில் இருந்தபடியே தங்களின் பரிசுப் புத்தகத்தைச் சாலையில் வீசி எறிந்து போவதைக் கண்டேன்.
 
விழாவில் கலந்து கொண்ட எனக்குப் பரிசாக, ’கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவது எப்படி’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? இப்படி ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுக்கத் தேர்வு செய்த அதிபுத்திசாலி யாராக இருக்கும்? இது போன்ற அபத்தங்கள் பெரும்பான்மையானப் பள்ளிகளில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
 
யோகா வகுப்பு, இசை வகுப்பு, ஓவிய வகுப்பு போல... வாரம் ஒன்றோ, இரண்டோ வகுப்புகள் புத்தக அறிமுகத்துக்காகப் பள்ளி தோறும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாசிப்பு என்பது மாணவர் மத்தியில் பரவலாக அறிமு கமாகும்.
 
என் பள்ளி நாட்களில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் வழியிலுள்ள சாலையோரப் புத்தகக் கடைக்குப் போய் நின்றுகொண்டு ‘அம்புலி மாமா’, ‘கண்ணன்’, ‘காமிக்ஸ்’ புத்தகங்கள் கிடக்கிறதா எனத் தேடிக் கொண்டிருப்பேன். சில சமயம் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்கிப் போய் வாசிப்பேன்.
 
சிறுவயதில் வாசித்து ரசித்த புத்தகங்களில் ஒருசிலதான் இப்போது மறுபடி படிக்கும்போதும் சந்தோஷம் அளிக்கின்றன. அப்படிச் சிறுவயதில் இருந்தே என்னை வசீகரித்த ஒரு புத்தகம் ‘ஜோனதன் ஸ்விப்ட்’ (Jonatan SWift ) எழுதிய ‘கல்லிவர்ஸ் டிராவல்ஸ்’ (Gullivers Travels). 1726-ல் வெளியான நாவல் இது.
 
முதலில் இதன் சுருக்கப்பட்ட பதிப்பை 50 பைசா கொடுத்து, பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்தேன். பின்பு நூலகத்தில் இருந்து இதன் முழுமையான பதிப்பை எடுத்து வந்து படித்தேன். சமீபத்தில் இதன் தமிழாக்கம் ‘கலிவரின் பயணங்கள்’ என்ற பெயரில், யூமா வாசுகியின் மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது. அதையும் வாங்கி வாசித்தேன். கலிவர் என் பதின்வயதிலிருந்து கூடவே வளர்ந்து கொண்டு வருகிறார்.
 
கடற்பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட மருத்துவரான கலிவர், தென் கடலில் ஒரு பயணம் மேற்கொள்கிறார். எதிர்பாராமல் புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்துவிடவே, கடலில் சிக்கித் தவித்துக் கரை ஒதுங்குகிறார். கண் விழித்துப் பார்த்தபோது, தன்னைத் தரையோடு பிணைத்துக் கட்டிப் போட்டிருப்பதை அறிகிறார். அவரைக் கட்டிப் போட்டிருந்தவர்கள் கட்டை விரல் உயரம் உள்ள குள்ள மனிதர்களான ‘லில்லிபுட்டீன்ஸ்’. அவர்கள் கலிவருக்கு உணவு அளிக்கிறார்கள். பாதுகாப்பாக அரண்மனைக்குக் கொண்டு போய், அரசரிடம் ஒப்படைக்கிறார்கள்.
 
‘பிளெபஸ்கியூடியன்ஸ்’ என்ற தீவை ‘லில்லிபுட் தேசம்’ வெற்றி கொள்ளக் கலிவர் உதவுகிறார். ஆனால், அந்தத் தீவை லில்லிபுட்டோடு இணைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இதனால் துரோகியாக அறிவிக்கபட்டுத் தண்டனை பெறுகிறார், அங்கிருந்து தப்பிக்க கலிவர் எப்படி வேறு வேறு தீவுகளை நோக்கிப் பயணங்களை மேற்கொள்கிறார்... என்ற கதையை அங்கதச் சுவையோடு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ஸ்விப்ட்.
 
1700-களில் கடற்பயணங்களைப் பற்றி மிகையான கற்பனையுடன் நிறையப் புத்தகங்கள் வெளியாகி பரவலாக வாசிக்கப்பட்டு வந்தன. அதைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நூலை ஸ்விப்ட் எழுதினார். இன்று உலகெங்கும் நன்கு அறியப்பட்ட இரண்டு சொற்கள் இந்த நாவலில்தான் முதன்முதலில் இடம்பெற்றன. ஒன்று லில்லிபுட் (Lilliput), மற்றொன்று யாகூ (yahoo).
 
நான்கு முறை திரைப்படமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் இந்த நாவல் தயாரிக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள் என்றாலே ‘கலிவரின் யாத்திரை’ என்று கூறுமளவுக்கு இந்த நூல் உலக இலக்கியத்தில் தனி இடம் பிடித்திருக்கிறது.
 
தோற்றத்தில் குழந்தைகள் கதையைப் போலவே தெரியும் இந்த நாவலின் அடித்தளம்... சமூகம் எப்படித் தனிமனிதனை நடத்துகிறது? அதிகாரம் எவ்வாறு ஒடுக்குகிறது? வேறு வேறு சமூகங்களின் பண்பாட்டு வாழ்க்கை எப்படியிருக்கிறது? எது நாகரீகம்... எது அநாகரீகம்? தனிமனிதன் சமூகத்தோடு எந்த நிலையில் முரண்படுகிறான்... என ஆழமான தேடுதலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள அருமையான நாவல் இது. ஆகவே புனைவு பிரதேசத்துக்குள் பயணம் செய்ய விரும்புகிறவர்கள், அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
 
இன்று ‘கலிவரின் பயணம்’ கதையை வாசிக்கும்போது பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்முன்னே வந்து வந்து போகின்றன. இப்படியான வாசிப்பையும் சாத்தியமாக்குவதே கலிவரின் வெற்றி என்பேன்!
 
- இன்னும் வாசிக்கலாம்...
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 13 - ஒரு யுகத்தின் முடிவு!

yuganta_2248034f.jpg

 

ஒரு யுகத்தின் முடிவு!

 
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய எழுத்துப் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்காக, வயதானவர்கள் பழைய புத்தகக் கடைகளுக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன்.
 
அழகிய ஒவியங்களுடன் அச்சிடப் பட்டப் பெரிய எழுத்து மயில்ராவணன் கதை, விக்ரமாதித்யன் கதை, சித்திர புத்திர நாயனார் கதை, நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை போன்ற புத்த கங்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
 
பெரிய எழுத்துப் புத்தகங்கள் சாணித் தாள்களில் கொட்டைக் கொட்டையான எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கும். நாடகக் கலைஞர்கள் மற்றும் வில்லுப் பாட்டுக் கலைஞர்கள் இவற்றை ஆர்வ மாக வாங்கி வாசிப்பது உண்டு.
 
கிராமத்தில் யார் வீட்டிலாவது யாராவது இறந்துவிட்டால் சித்திரபுத்திர நாயனார் கதை படிக்கப்படும். அப்படி கதைப் பட்டிப்பவர்களுக்குக் கடுங் காப்பித் தர வேண்டும். சிலருக்குப் படிப்புக் கூலி தருவதும் வழக்கம். நிறுத்தி நிறுத்திப் பாட்டும் கதையுமாக இதைப் படிப்பார்கள். கேட்பவர்களுக்கும் கதைத் தெரியும் என்பதால் உரையாடல் போல அமைவதும் உண்டு. இப்படி பெரிய எழுத்துப் புத்தகம் படிப்பதற்கு என்றே சில படிப்பாளிகள் இருந்தார்கள். அவர்களைத்தான் சாவு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவார்கள். இப்போது அவர்கள் எவரும் பெரிய எழுத்துப் புத்தகங்களைப் படிக்கிறார் களா எனத் தெரியவில்லை.
 
பெரிய எழுத்து ‘கொக்கோகம்’ என்பது கிராமவாசிகளுக்கான ‘காம சூத்ரா’ புத்தகம். படங்களுடன் உள்ள இந்தப் புத்தகத்தைப் பெரியவர்கள் மட்டுமே படிப்பார்கள். ரகசியமாக சிலவேளைகளில் பள்ளி மாணவர்கள் திருடி வந்து படிப்பதும் உண்டு. ‘கொக்கோகம்’ தமிழில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. இந்தப் புத்தகம் எவ்வாறு எழுதப்பட்டது என்பதற்கே ஒரு கதை சொல்வார்கள்.
 
12-ம் நூற்றாண்டில் வேணுதத்தன் என்ற அரசன் வேண்டுகோளுக்கு இணங்க, கொக்கோகர் என்ற ரிஷி இதை எழுதியதாக சொல்கிறார்கள். ஒரு இளம்பெண் காமத்தால் தூண்டப் பட்டு, தனக்கு ஏற்ற வலுவான ஆண் கிடைக்கும்வரை நிர்வாணமாகவே ஊர் ஊராகச் செல்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். அவளைத் திருப்தி செய்ய எந்த ஆணாலும் முடியவில்லை. ஒருநாள் அவள் வேணுதத்தன் சபைக்கு வந்தாள்.
 
அரச சபையில் இருந்த கொக்கோகர் என்ற ரிஷி, ‘‘நான் அவளை அடக்கிக் காட்டுகிறேன்’’ என உடன் அழைத்துப் போய் தீராக் காமத்தை தீர்த்து வைத்தாராம். ‘அவளை எவ்வாறு அடக்கினீர்கள்?’ என்று வேணுதத்தன் கேட்க, அவருக்குப் பதில் கூறும்விதமாக கொக்கோ ரிஷி ‘ரதி ரகசியம்’ என்ற நூலை இயற்றினார் என்பார்கள். அதிவீரராம பாண்டியர் இந்தப் புத்தகத்தைத் தமிழில் வழங்கினார். இந்தப் புத்தகத்தை அந்தக் காலத்தில் மணமக்களுக்குப் பரிசாக தருவது வழக்கம்.
 
அந்த நாட்களில் பெரிய எழுத்தில் வெளியான மகாபாரதப் பதிப்புகள் புகழ்பெற்றவை. கிராமப்புறங்களில் மழை வேண்டி ‘பாரதம்' படிப்பவர்கள் ‘விராடப் பருவம்’ புத்தகத்தைத்தான் பயன்படுத்துவார்கள்.
 
புகழேந்திப் புலவர் எழுதிய ‘பஞ்ச பாண்டவர் வனவாசம்’ என்ற பெரிய எழுத்துப் புத்தகம் ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக இருந்தது. அதன் முகப்பில் ‘ஐதீக படங்களுடன்’ என அச்சிட்டிருப்பார்கள். பெரிய எழுத்துப் புத்தகங்களுக்கு யார் ஒவியம் வரைந்தது எனத் தெரியவில்லை. ஆனால், முகபாவங்களும் இயற்கைச் சூழலும் அதில் அற்புதமாக வரையப் பட்டிருக்கும்.
 
இன்று ‘மகாபாரதம்’ தொலைக் காட்சித் தொடராக இந்தியா முழுவதும் தொடர்ந்துப் பார்க்கப்படுகிறது. அத்துடன் மகாபாரதம் சார்ந்த நவீன நாவல்கள், நாடகம், மறுவாசிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பிரதிகள் என பல்வேறு நிலைகளில் ‘மகாபாரதம்’ புதுப்பொலிவுப் பெற்று வருகிறது.
 
மகாபாரதத்தின் அறியப்படாத விஷயங்களை முன்வைத்து நான் ‘உபபாண்டவம்’ என்ற நாவலை எழுதியி ருக்கிறேன். அதற்காக மகாபாரதத்தை முழுமையாக வாசித்தேன். ‘மகாபாரதம்’ தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள இடங்களைச் சுற்றி அலைந்து கண்டிருக்கிறேன்.
 
‘மகாபாரதம்’ சார்ந்த தெருக்கூத்து, நாடகங்கள், நிகழ்த்துக் கலைகளைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். ‘மகாபாரதம்’ குறித்த புதினங்கள், ஆய்வு களையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறேன்.
 
‘மகாபாரதம்’ என்பது மாபெரும் நினைவுத் தொகுப்பு. இந்திய சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளும்; சமூக, அரசியல் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களும்; அதன் ஞாபகங்களும் ‘மகாபாரதம்’ வழியாக ஒன்று சேர்க்கப்பட் டிருக்கின்றன. ஆகவே, ‘மகாபாரதம்’ என்பதை மாபெரும் மானுட ஆவண மாகவே கருதுகிறேன்.
 
writer_2248035a.jpg
 - ஐராவதி கார்வே
 
‘மகாபாரதம்’ குறித்து இன்று வரை எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் எனக்கு மிகவும் பிடித்தப் புத்தகம் ‘ஐராவதி கார்வே’ (Irawati Karve)எழுதிய ‘யுகாந்தா’.
 
1989-ம் ஆண்டு இதன் பிரதி ஒன்றை மும்பையின் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன். ‘மகாபாரதம்’ பற்றிய எனது புரிதலை செழுமைப்படுத்தியது இந்தப் புத்தகம். தமிழில் இதனை ‘ஓரியண்ட் லாங்மென்’ வெளியிட்டுள்ளது. ‘அழகியசிங்கர்’ தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் வாங்கியது ஆங்கிலப் பதிப்பு.
 
‘ஐராவதி கார்வே’ பெர்லின் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களை மானுடவியல் மற்றும் வரலாறு சார்ந்து விரிவாகவும் நுட்பமாகவும் ‘கார்வே’ மேற்கொண்ட ஆய்வு, மகாபாரதத்தைப் புரிந்துகொள்ள பெரிதும் வழிகாட்டுகிறது. ‘கார்வே' இந்தக் கட்டுரைகளை முதலில் மராத்தியில் எழுதினார். பின்பு பன்னாட்டு வாசகர்களுக்காக அவரே ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
 
‘மகாபாரதம்’ ஆரம்பத்தில் ‘ஜெயா’ என்ற பெயரில்தான் அழைக்கபட்டிருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் புத்துருவாக்கம் பெற்று, முடிவில் ‘மகாபாரதம்’ என்ற இதிகாசமாக மாறியது என்கிறார் ‘ஐராவதி கார்வே’.
 
காந்தாரி, திரவுபதி, மாத்ரி, குந்தி போன்ற கதாபாத்திரங்களை ஆராயும்போது மகாபாரதக் காலத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? அதன் பின்னுள்ள சமூகக் காரணிகள் எவை என்பதைக் குறித்து விரிவாக ஆராய்கிறார். பாண்டுவின் மனைவி என்ற முறையில் குந்தி உடன்கட்டை ஏறாமல், ஏன் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள் என்று ‘கார்வே’ முன்வைக்கும் கேள்வி மிக முக்கியமானது!
 
விதுரனுக்கும் யுதிஷ்ட்ரனுக்குமான உறவானது தந்தை மகன் உறவு போன்றது என ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறார். அதற்குச் சான்றாக விதுரன் இறப்பதற்கு முன்பு, அவரைத் தேடி வரும் யுதிஷ்ட்ரனுடன் நடைபெற்ற உரையாடலின் வழியே இந்த உறவை உறுதி செய்கிறார்.
 
இதுபோலவே கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமான நட்பையும் இருவரது தோழமை உணர்வையும், காண்டவபிரஸ்தத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒன்றுசேர்ந்து எப்படி தீக்கிரையாக்கினார்கள் என்பதையும் ஆராயும் ‘கார்வே’, பக்தி இயக்கம் தீவிரமாக வளரத் தொடங்கியபோது... இதிகாச பாத்திரங்கள் தெய்வாம்சம் பெற்ற கடவுளாக மாறினார்கள். அப்படித்தான் மகாபாரதப் பிரதியில் கிருஷ்ணரும் உருவாக்கப்பட்டார் என்று கூறுகிறார்.
 
இன்று ‘மகாபாரதம்’ குறித்த ஆர்வம் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், ‘மகாபாரத’க் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள ‘ஐராவதி கார்வே’ எழுதியுள்ள ‘யுகாந்தா’ ஒரு திறவு கோலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீடில்லா புத்தகங்கள் 14 - டால்ஸ்டாயின் கடைசி நாட்கள்

h_2256232f.jpg

 

டால்ஸ்டாயின் கடைசி நாட்கள்

 
திருவல்லிகேணியில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் புத்தகம் தேடிக் கொண்டிருந்த போது, ‘கொரலென்கோ’ எழுதிய ‘கண் தெரியாத இசைஞன்’ இருக்கிறதா என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
 
20 வயது இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றதும். ‘அன்னை வயல்’ இருக்கிறதா என அவன் திரும்பவும் கேட்டான். அதுவுமில்லை என்றதும், ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டான்
 
இப்படிப் பழைய புத்தகக் கடைகளில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களைத் தேடுகிறவர்கள் என்று ஒரு தனிப் பிரிவினர் இருக்கிறார்கள். எந்தப் பழைய புத்தகக் கடைக்காரரைக் கேட்டாலும் ரஷ்ய பதிப்புகளுக்கு என்றே தனி வாசகர்கள் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
 
சோவியத் ரஷ்யாவின் ’ராதுகா பதிப்பகம்’ ரஷ்யப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட அளவு, வேறு எந்தப் பதிப்பகமும் செயல்பட்டதில்லை.
 
உலகெங்கும் ரஷ்ய இலக்கியங்கள் தீவிர கவனம் பெற்றது போலவே, 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இலக்கியச் சூழலிலும் தனி கவனம் பெற்றன.
 
டி.எஸ்.சொக்கலிங்கம் மொழி பெயர்த்த ‘டால்ஸ்டாய்’ எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் தமிழில் தீவிரமாக வாசிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ரஷ்ய சிறுகதைகளின் தொகுப்பை பாஸ்கரன் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இது போலவே ‘துர்கனே’ எழுதிய ‘ரூடின்’, ‘குப்ரினின் யாமா’, ‘கார்க்கி’ படைத்த ‘தாய்’ போன் றவை ‘ராதுகா பதிப்பகம்’ வருவதற்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறந்த ரஷ்ய நூல்கள்.
 
நான் ரஷ்ய இலக்கியங்களை ‘ராதுகா பதிப்பகம்’ வழியாகவே வாசித்து அறிந்து கொண்டேன். அழகிய பதிப்பும், அச்சு நேர்த்தியும், சிறப்பான ஓவியங்களும் தேர்ந்த கட்டமைப்பும் கொண்ட ‘ராதுகா பதிப்பக’ வெளியீடு கள் இணையற்றவை. ‘ராதுகா’ என்றால் ‘வானவில்’ என்று அர்த்தம். குழந்தைகளுக்காக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் அத்தனை அழகானவை.
 
லியோ டால்ஸ்டாய், தஸ்தா யெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், ஆன்டன் செகாவ், புஷ்கின், குப்ரின், கோகல், மாக்சிம் கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாதவ், மிகைல் ஷோலகவ், விளாதிமிர் கொரலென்கோ என நீளும் ரஷ்ய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. ரா.கிருஷ்ணையா, நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் ஆகியோர் இந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
 
சோவியத் யூனியன் உடைந்தபோது ‘ராதுகா பதிப்பகம்’ மூடப்படுகிறதே என நான் மிகவும் வருந்தியிருக்கிறேன். இலக்கியம் மட்டுமின்றி அரசியல், பொருளாதாரம், தத்துவம், அறிவியல், வரலாறு, மருத்துவம், பொறியியல், குழந்தைகள் கதைகள் என ராதுகா, மீர், மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவை வெளியிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் தமிழ் வாசகனுக்குப் புதியதொரு வாசலைத் திறந்துவிடுபவையாக அமைந்தன.
 
‘டால்ஸ்டாய்’ குறித்து ஆங்கிலத் தில் ஆண்டுதோறும் புதிது புதி தாகப் புத்தகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. புத்தம் புதிய மொழிபெயர்ப்புகளும் வெளியாகின் றன. அவரது புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளியாகின்றன.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மைக்கேல் ஹாஃப்மான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி லாஸ்ட் ஸ்டேஷன்’ என்ற திரைப்படம் டால்ஸ்டாயின் இறுதி நாட்களைப் பற்றியது. இதில் பிரபல நடிகர் கிறிஸ்டோஃபர் பிளம்மர் டால்ஸ்டாயாகச் சிறப்பாக நடித்திருந்தார்
 
தமிழிலும் முப்பதுக்கு மேற்பட்ட டால்ஸ்டாயின் புத்தங்கள் வெளியாகி இருக்கின்றன. அவரது வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைத் தொகுத்து ‘விக்டர் ஸ்கெலோவ்ஸ்கி’ எழுதிய ‘லெவ் டால்ஸ்டாய்’ என்ற நூல் தான் டால்ஸ்டாயின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம். ‘ராதுகா பதிப்பகம்’ இதனை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது.
 
மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் டால்ஸ்டாய் பற்றி ஒரு முழுநீள நாடகம் எழுதியிருக்கிறார். அதை பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். டால்ஸ்டாயின் 150-வது ஆண்டு விழாவையொட்டி எழுதப்பட்ட இந்த நாடகத்தைக் கங்கை புத்தக நிலையம் 1987-ல் வெளியிட்டுள்ளது.
 
கலைமாமணி பி.ஏ.கிருஷ்ணன் குழுவினரால் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் பின்பு வானொலியிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் இந்நாடகப் பிரதியை எடிட் செய்து உதவியதோடு, நாடக ஒத்திகைகளிலும் உடனிருந்து மேம்படுத்தியிருக்கிறார்.
 
சமுத்திரம் எழுதிய நாடகமும் ‘தி லாஸ்ட் ஸ்டேஷன்’ திரைப்படம் போலவே டால்ஸ்டாயின் இறுதி நாட்களை விவரிக்கிறது. ஒரு பக்கம் டால்ஸ்டாயைத் தனது ஞானகுருவாகக் கருதும் செர்க்கோவ், மறுபக்கம் தன்னையும் குடும்பத்தையும் கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் டால்ஸ்டாய் நடந்து கொள்கிறார் எனக் குற்றம் சாட்டும் மனைவி சோபியா, இந்த இருமுனைகளுக்கு இடையில் ஊசலாடும் டால்ஸ்டாயின் நிகழ்வுகளே நாடகமாக விரிகின்றன.
 
மேடை நாடகங்களுக்கே உரிய உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் கதாபாத்திரங்களின் மோதல்களை முதன்மைபடுத்தி சு.சமுத்திரம் நாடகத்தை எழுதியிருக்கிறார். வாசிப்பில் இந்நூல் தரும் அனுபவத்தை விட நிகழ்த்திக் காணும்போது வலிமையாக அமையக்கூடும்
 
டால்ஸ்டாயின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார் என செர்க்கோவ் அரசிடமிருந்தும் ரஷ்ய திருச்சபையிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளை அந்நாளில் சந்தித்தார். ஆனாலும் அவர் டால்ஸ்டாயின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டார்
 
மறுபக்கம் டால்ஸ்டாயின் மனைவி சோபியா, தனது கணவர் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஆகவே வருமானத்துக்கான முக்கிய வழியாக உள்ள அவரது எழுத்துகளின் பதிப்புரிமையை எதற்காகவும் விட்டுத் தர முடியாது எனச் சண்டையிட்டார்.
 
இந்த நாடகத்தில் மாக்சிம் கார்க்கி டால்ஸ்டாயை சந்திக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடலில் எழுத்தாளன் என்பவன் எப்படியிருக்க வேண்டும்? எதை எழுத வேண்டும் என்பது குறித்த டால்ஸ்டாயின் வாதங்களை சமுத்திரம் அப்படியே கையாண்டிருக்கிறார்.
 
டால்ஸ்டாயின் வாரிசுகளில் அவரது இளைய மகள் சாஷா மட்டுமே தந்தை யின் மகத்துவத்தை அறிந்திருந்தாள். மற்றவர்கள் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கவில்லை. அவரது மூத்த மகன் செர்ஜி சூதாடுவதிலும் குடிப்பதிலும் வீணாகிப் போயிருந்தான். அடுத்தவன் டால்ஸ்டாயைக் கடுமையாக வெறுத்தான்,. இப்படி பிள்ளைகளுடன் அவருக்கு இருந்த உறவானது கசப்பானதாகவே மிஞ்சியது.
 
தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் தீராத மனத் துயரில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் உருவானது, இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைச் சு.சமுத்திரம் விவரித்துக் கூறுகிறார்
 
டால்ஸ்டாய் தனது உயில் மூலம் தனது ஒட்டுமொத்த எழுத்துக்களையும் ரஷ்ய மக்களுக்காக எழுதி வைக்க வேண்டும் என விரும்பினார். இதை அவரது மனைவி சோபியா அனுமதிக்கவில்லை. இந்த முயற் சிக்குத் துணை செய்யும் ஏமாற்று காரன் எனச் செர்க்கோவைக் குற்றம் சாட்டினாள். வீட்டைவிட்டு வெளியேறிய டால்ஸ்டாய் நோயுற்று அஸ்தபோவ் ரயில் நிலையத்துக்கு வருவதும், அவருக் குச் சிகிச்சை அளிக்கப்படுவதும், மரணத் தறுவாயில் அவர் பேசும் தனிமொழியு மாக நாடகம் நிறைவு பெறுகிறது.
 
நவீன நாடகங்களை நிகழ்த்தும் ஆர்வமுடைய குழுவினர் யாராவது இதை நிகழ்த்தினால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
 
- இன்னும் வாசிப்போம்... 
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramiki@gmail.com
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 15 - சார்லியும் சாக்லேட்டும்

 

charlie_2264125h.jpg

 

சென்னை, அண்ணா நகரில் உள்ள சாலையோர புத்தகக் கடையில் ஒரு வயதானவரைச் சந்தித்தேன். குழந்தைகள் புத்தகமாகத் தேடி வாங்கிக் கொண்டிருந்தார். யாருக்காக அவற்றை வாங்குகிறார் என அறிந்துகொள்ள அவருடன் உரையாடத் தொடங்கினேன்.

 
‘‘என்னுடைய பேரனுக்குத் தினமும் புத்தகம் படித்துக் காட்டுகிறேன். அதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள்’’ என்றார்.
 
‘‘பேரனுக்கு எத்தனை வயது?’’
 
‘‘எட்டு வயது நடந்து கொண்டிருக் கிறது. அவனுக்குத் தமிழில் வாசிக்க வரவில்லை. நான்தான் படித்துக் காட்டுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் படித்துக் கதைகள் சொல்கிறேன். இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்க நானே குழந்தையாகிப் போனது போல சந்தோஷமாக இருக்கிறது.’’
 
‘‘உங்கள் மகன் என்ன செய்கிறார்’’ என்று கேட்டேன்
 
‘‘அமெரிக்காவில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கிறான். பேரனும் அங்கேதான் இருக்கிறான்’’ என்றார்.
 
‘‘அமெரிக்காவில் உள்ள பேரனுக்கா கச் சென்னையில் இருந்து கதைகளைப் படித்துக் காட்டுகிறீர்களா…’’ என வியப் போடு கேட்டபோது அவர் சொன்னார்:
 
‘‘அதுதான் டெக்னாலஜி வளர்ந்துவிட் டதே, இதில் என்ன சிரமம்? என்னுடைய லேப்டாப்பில் ஸ்கைப் இருக்கிறது. கேமரா முன் அமர்ந்து கதை சொல் கிறேன், பேரன் அமெரிக்காவில் இருந்து தினமும் இரவு 8 மணிக்கு அழைப்பான். நமக்கு அது காலை நேரம். இருவரும் கதைகள் பேசுவோம், இதனால் அவன் நன்றாகத் தமிழ் பேசுகிறான், ஒய்வு பெற்ற எனக்கும் மனது சந்தோஷமாக உள்ளது.
 
சில நாள் கதை படிக்க வேண்டாம் என்று சொல்வான், அன்றைக்குப் பாடல்கள் படித்துக் காட்டுவேன், சில சமயம் விடுகதை, பழமொழிகள் கூடச் சொல்வதுண்டு. எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் தமிழ் பேசுவது நின்று போகக்கூடாது. அதை ஒவ்வொருவரும் கடமையாகச் செய்ய வேண்டும். என்னாலான சிறிய முயற்சி இது. விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
 
எத்தனையோ பேரின் பிள்ளைகள், பேரன்கள் அயல்நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேருக்கு இப்படிக் கதை படிக்கும் தாத்தா கிடைத்திருக்கிறார்? எத்தனை பேரன், பேத்திகள் தமிழில் கதை கேட்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கு எவ்வளவு எளிய, அருமையான முயற்சி இது. அவரைப் பார்க்கும்போது பெருமிதமாக இருந்தது!
 
அவருக்காக அந்தப் புத்தகக் குவியலுக்குள் நானும் சிறுவர் புத்தகங்களைத் தேடினேன். விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரோல் தால் (Roald Dahl) எழுதிய ‘சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி’ என்ற சிறார்களுக்கான நாவல் கிடைத்தது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இதனைச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
அந்தப் புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். ‘சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி’ நாவல் குழந்தை களுக்கான திரைப்படமாகவும் வெளி யாகியிருக்கிறது. சிறார்கள் அவசியம் வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான புத்தகம் இது.
 
பிரபலமான சாக்லேட் நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களின் தொழிற் சாலைக்குள் உளவாளிகளை அனுப்பி, தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு வர முயற்சிப்பது இன்றும் தொடரும் வழக்கம். இந்தக் களத்தை அடிப்படையாக வைத்தே ‘ரோல் தால்’ இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
 
வில்லி வோங்காவின் சாக்லேட் பேக்டரி ஒரு விந்தையான மாய உலகம். அதனுள் எப்படி சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரும் அந்தப் பேக்டரிக்குள் சென்றதே இல்லை.
 
வில்லி வோங்கா ஒருமுறை பரிசுப் போட்டி ஒன்றினை அறிவிக்கிறார். அதன்படி ஐந்து சாக்லேட் பாக்கெட்டு களில் தலா ஒரு தங்க டிக்கெட்டுகள் வைக்கப்படுகின்றன. அந்தத் தங்க டிக்கெட்டுகள் கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் வோங்காவின் சாக்லேட் தொழிற்சாலையினைச் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
 
இதில் நான்கு தங்க டிக்கெட்டுகள் நான்கு பணக்கார சிறுவர்களுக்குக் கிடைக்கின்றன. பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சார்லி என்ற ஏழைச் சிறுவன் தங்க டிக்கெட்டை அடைய ஆசைப்படுகிறான். ஆனால், சாக்லேட் வாங்க அவனிடம் காசு இல்லை.
 
நான்கு பணக்காரப் பையன்கள் தங்க டிக்கெட்டுகளை வென்றுவிட்டார்கள் என்று தெரிந்தவுடன், ஐந்தாவது யாருக்குக் கிடைக்கப் போகிறது என்று ஆதங்கத்துடன் சார்லி காத்திருக்கிறான்.
 
ஐந்தாவது தங்க டிக்கெட்டும் ஒரு பணக்காரப் பையனுக்கே கிடைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகிறது. சார்லி மனம் உடைந்து போகிறான். ஆனால், அது வெறும் வதந்தி. உண்மையில் யாருக்கும் கிடைக்கவில்லை என்று அறிந்ததும், ஓடிப் போய் ஒரு சாக்லேட் வாங்குகிறான். அதன் உறையைப் பிரித்தால் உள்ளே தங்க டிக்கெட் பரிசாகக் கிடைக்கிறது.
 
சார்லி மிகவும் ஏழை. வீடு வீடாகப் போய் நியூஸ் பேப்பர் போடுபவன். மிகவும் சிறிய வீட்டில் வசிக்கிறான். ஆனால், மிகமிக நல்லவன்.
 
பரிசுப் பெற்ற ஐந்து பேரும் குறித்த நாளில் சாக்லேட் பேக்டரியைச் சுற்றிப் பார்க்கத் தயார் ஆகிறார்கள். தொழிற்சாலைக்குள் நுழையும் முன்பாக அவர்களுக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றத் தவறினால் உடனே வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கையுடன் உள்ளே அனுப் பப்பட்டார்கள்.
 
சாக்லேட் பேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள் தங்களுக்குள் சச்சரவு செய்து வோங்காவின் விதிமுறைகளை மீறிவிடுகிறார்கள். ஆனால், சார்லி மட்டும் நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிக்கிறான்.
 
முடிவில் அந்த சாக்லேட் பேக்டரியின் உரிமையாளர் வில்லி வோங்கா, நேர்மையும் எளிமையும், பொறாமையற்ற மனதும் கொண்ட சார்லியைப் போன்ற ஒருவனைத் தேடியே… இந்தப் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டதாகச் சொல்லி, அவனையே தனது பேக்டரியின் அடுத்த வாரிசாக அறிவிக்கிறார்.
 
சாக்லேட் பேக்டரி என்பது இங்கே வாழ்க்கையின் குறியீடு போல சுட்டிக் காட்டப்படுகிறது. நேர்மையும், உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒருவன் முடிவில் வெற்றிப் பெறுவான்… என்பதைச் சுவாரஸ்யமான கதை மூலம் ‘ரோல் தால்’ விவரிக்கிறார்.
 
‘ரோல் தால்’ ராணுவத்தில் பணியாற்றி யவர். இவரது கதைகள் உலகெங்கும் சிறுவர்களால் கொண்டாடப்படுகின்றன. நகைச்சுவையே அவரது முக்கிய பலம். உலகெங்கும் சிறுவர்களைச் சந்தோஷப்படுத்திய ரோல் டாலின் சொந்த வாழ்க்கைத் துயரங்களால் நிரம்பியது.
 
அவரது மகள் ஒலிவியா ஏழு வயதில் இறந்து போனாள். மகன், விபத்தில் மரணம் அடைந்தான். மனைவியோ ரத்தக் கசிவு நோயால் அவதிப்பட்டார். டாலுக்கும் எட்டுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும் அவர் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தத் தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டேயிருந்தார்.
 
‘ரோல் தால்’ எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். கதைகளை விரும்பும் சிறுவர்களுக்கு ‘ரோல் தால்’ புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் பிடிக்கும்.
 
நேரம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான கதைகளைப் படித்தோ, தெரிந்த கதைகளைச் சொல்லியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யலாம். 10 பேர் தினமும் ஒரு கதை வீதம் பதிவேற்றம் செய்தால்போதும். ஒரு வருஷத்துக்குள் 3,650 கதைகள் இணையத்தில் பதிவேற்றமாகிவிடும். அதன் பிறகு உலகின் எந்த மூலையில் தமிழில் கதைகள் கேட்க விரும்புகிற குழந்தை இருந்தாலும் யூ டியூப் வழியாக இந்தக் கதைகளைக் கேட்க லாம்தானே.
 
இந்தப் புத்தாண்டில் இந்த எளிய
 
முயற்சியையாவது நாம் தொடங்க லாமே!
 
- இன்னும் வாசிப்போம்…
 
Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 16 - புகழ் எனும் பிச்சை

 

stray_birds_2272117h.jpg

 

 

 

 

புகழ் எனும் பிச்சை

 

அரசியல்வாதிகளில் சிலர் தேர்ந்த படிப்பாளிகளாக இருப்பதை நான் அறிவேன். அவர்கள் தேடித் தேடி வாசிக்க கூடியவர்கள். தான் படித்த சிறந்த புத்தகங்களை நண்பர்களுக்கு வாசிக்கத் தருபவர்கள். தனது பயணத்தில் எப்போதும் கூடவே சில புத்தகங்களை வைத்திருப்பவர்கள். அப்படியான ஓர் அரிய மனிதர், தமிழக அமைச்சராகவும் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும் இருந்த, மறைந்த கா.காளிமுத்து.

 

பயணத்தில் அவர் எடுத்துச் செல்லும் சூட்கேஸில் ஒரேயொரு மாற்றுஉடையும் நாலைந்து புத்தகங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ந்தப் புலமை கொண்டவர். சிறந்த பேச்சாளர். புத்தகங்களை தேடித் தேடி படித்தவர். எனக்கு நிறையப் புத்தகங்களைப் படிக்க தந்திருக்கிறார்.

 

அவர் ஒருமுறை, ’டெல்லி விமான நிலையத்தில் வாங்கிப் படித்தேன். நீங்கள் அவசியம் படியுங்கள். ஓய்வான நேரத்தில் இதுகுறித்துப் பேசுவோம்’ என ஒரு புத்தகத்தை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு வாரத்துக்கு முன்புதான் வெளியாகியிருந்த ஓர் ஆங்கில நாவல் அது. பல்ப் பிக்ஷன் எனப்படும் ஜனரஞ்சக நாவல் போலிருந்தது. அந்தப் புத்தகத்தை இரண்டு நாளில் படித்து முடித்தபோது வியப்பாக இருந்தது. இப்படி ஒரு நாவலை எழுதுவதற்கு அந்த எழுத்தாளர் எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார்… என நினைத்துக் கொண்டிருந்தேன்.

வார இறுதியில், ’இரவு உணவு சேர்ந்து சாப்பிடலாம்…’ என அழைத்தார் காளிமுத்து. அன்றிரவு அந்த நாவலில் இடம்பெற்றுள்ள ஓவியம் பற்றியும் இயேசுவின் ’கடைசி விருந்து’ பற்றியும் பைபிள் சார்ந்து எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் குறித்தும் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்.

 

அந்த நாவலின் பாதிப்பில் கூடுதலாக நிறைய தேடிப் படித்திருக்கிறார் என்பது புரிந்தது. சட்டமன்றப் பணிகள், கட்சி சார்ந்த வேலைகள், இடைவிடாத பயணம் இத்தனைக்கும் நடுவில் எப்படி, இவ்வளவு படிக்கிறார்… என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

அன்றிரவு சொன்னார், ’இந்த நாவல் மிகவும் பேசப்படும் என நினைக்கிறேன். இந்த வருஷம் நான் படித்த முக்கிய நாவல் இதுவே’. ஆருடம் போல அவர் சொன்ன புத்தகம் எது தெரியுமா? ’டாம் பிரவுன்’ எழுதிய ’டாவின்சி கோட்’. அந்த நாவல் வெளியான சில தினங்களிலேயே அதை வாசித்துவிட்டு, ’இது பெரும்புகழ் பெறும்’ என அவரால் கணிக்கமுடிந்தது என்றால்… அவரது வாசிப்பின் தரம் எப்படியானது என்று பாருங்கள்.

 

kalimuuthu_2272118a.jpg

 

பின்னாளில் உலகமே ’டாவின்சி கோட்’ நாவலைக் கொண்டாடியது. சர்ச்சைகளும் வாதங்களும் உருவாயின. தேர்ந்த வாசிப்பு உள்ளவர்களின் தனித்திறன் நல்லப் புத்தகங்களை உடனே அடையாளம் கண்டுவிடுவதுதான்!

காளிமுத்து ஒருமுறை தாகூரின் ’வழி மாறிய பறவைகள்’ (Stray Birds) என்ற கவிதை தொகுப்பினைக் கொடுத்து, ‘இது உனக்குப் பிடிக்கும். வாசித்துப் பார்…’ என்று சொன்னார்.

புத்தகத்தின் முகப்பில் 1926-ம் வருஷம் வெளியான பதிப்பு என அச்சிடப்பட்டிருந்தது. ஏதாவது சாலையோர கடையில்தான் அவரும் இதை வாங்கியிருக்கக் கூடும். அந்தப் புத்தகம் தாகூர் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாகும்.

புரட்டிப் படிக்கத் தொடங்கியதும் வியந்துபோனேன். அத்தனையும் அபாரமான கவிதைகள்! தாகூரின் நோபல் பரிசுப் பெற்ற கவிதைகளான ’கீதாஞ்சலி’யைப் படித்தபோதுகூட… இவ்வளவு நெருக்கம் உருவாகவில்லை. இவையே தாகூரின் மகத்தான கவிதைகள் எனத் தோன்றியது.

 

’புகழ்

என்னை அவமானப்படுத்துகிறது

ஏனென்றால் அது ரகசியமாய்…

நான் எடுத்த பிச்சை’

 

என்ற கவிதை வரியை அந்தப் புத்தகத்தில் படித்தபோது… ’அட, இது தாகூரின் கவிதையா’ என ஆச்சர்யமாக இருந்தது. காரணம், இதை எனது கல்லூரி நாட்களில் ஒரு மேடைப்பேச்சின்போது கேட்டிருக்கிறேன். அப்போது இந்த வரியை எழுதியவர் ’மகாகவி தாகூர்’ என்று தெரியாது. பேச்சாளர் அதை தன்னுடைய சொந்தக் கவிதையைப் போல சொல்லி கைதட்டு வாங்கினார்.

தாகூரின், ’வழி மாறிய பறவைகள்’ ஜப்பானிய ஹைக்கூ மரபில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. 1916-ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. இதில் உள்ள சில கவிதைகள் தாகூரால் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

1916-ம் ஆண்டு தாகூர் ஜப்பானுக்குச் சென்று உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். தனது ஜப்பானிய பயண அனுபவங்கள் குறித்து தாகூர் விரிவான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

 

’ஹைக்கூ’ ஜப்பானின் மிகப் புகழ் பெற்ற கவிதை வடிவம். மூன்று வரிகளில் 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் மரபான கவிதை வடிவம் அது. இதனை சொற்களால் வரையப்படும் ஓவியம் என்றும் கூறுகிறார்கள், மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு பல்வேறு அர்த்த நிலைகளை உருவாக்கிக் காட்டுவதே இந்தக் கவிதைகளின் சிறப்பு.

தமிழில் இன்று சிறப்பாக ’ஹைக்கூ’ கவிதைகள் பலராலும் எழுதப்படுகின்றன. ’ஹைக்கூ’ கவிதைகள் குறித்து மகாகவி பாரதி வியந்து எழுதியிருக்கிறார். 1916-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான ’சுதேசிமித்ரன்’ நாளேட்டில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் பாரதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

 

1914-ல் நோபல் பரிசுப் பெற்ற தாகூர் 1916-ம் ஆண்டு தனது அமெரிக்கப் பயணத்தின் இடையில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஜப்பான் சென்றார். ’பவுத்த ஞானத்தையும் கலைகளையும் உள்வாங்கிக் கொண்ட ஜப்பானிய மரபு, இந்திய கலைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது’ என தனது உரையில் தாகூர் குறிப்பிடுகிறார்.

 

thahoor_2272119a.jpg

 

’ஜென்’ கவிதைகளின் முன்னோடியான பாஷோவின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தாகூர், முக்கியமான கவிதைகளை தானே வங்காளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இயற்கையின் பேரமைதியை, அழகை வியந்து பாடும் ஜப்பானிய ஹைக்கூவின் பாதிப்பில் தாகூர் எழுதிய குறுங்கவிதைகள் அற்புதமான அனுபவத்தை தருகின்றன.

 

’குளத்தைப் பார்த்து சொன்னது

பனித் துளி

நான் இலைமீதிருக்கும் சிறுதுளி.

நீ தாமரை இலையின் அடியில் இருக்கும்

பெரிய துளி’

••

’கனியே…

இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்

என்றது பூ.

உன் இதயத்தில்தான் ஒளிந்திருக்கிறேன்… பூவே

என்றது கனி’

••

 

மரபையும் நவீனத்தையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வரும் ஜப்பானே, இந்தியா செல்லவேண்டிய திசையாகும் என்பதை தாகூர் முழுமையாக உணர்ந்திருக்கிறார். அந்தப் பாதிப்பில் உருவானவையே இக்கவிதைகள் என புகழாரம் சூட்டுகிறார் நோபல் பரிசுப் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்.

 

தாகூரின் ’ஹைக்கூ’ கவிதைகள் சீன மொழியில் 1920-களிலே மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்றும் சீனாவின் இளம்கவிஞர்களுக்கு தாகூரின் கவிதைகளே வழிகாட்டுபவையாக இருக்கின்றன என்கிறார்கள். தாகூரின் ’ஹைக்கூ’ கவிதைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை ’செம்மலர்’ ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

மீதமிருக்கும் கவிதைகளையும் அவர் மொழிபெயர்த்து தனிநூலாக வெளியிட்டால் தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும்.

 

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article6767228.ece?ref=sliderNews

 

 
Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 17 - வியத்தகு இந்தியா!

 

india_2279442f.jpg

(வலது) ஏ.எல். பசாம்

 

‘உங்களிடம் ஏ.எல்.பசாம் (A.L.Basham) எழுதிய ‘வியத்தகு இந்தியா’ புத்தகம் இருக்கிறதா?’’ என ஓர் இளைஞர் தொலைபேசியில் கேட்டார்.

 
‘‘இருக்கிறது. ஆனால், சிவில் சர்வீஸ் படிக்கும் ஒரு நண்பர் அதை வாங்கிப் போயிருக்கிறார்’’ என்றேன்.
 
‘‘தற்போது அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? நானும் ஐ.ஏ.எஸ்., பரீட்சை எழுதுவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தமிழில் ஏ.எல்.பசாமின் புத்தகம் வேண்டும்? ஆனால், கிடைக்கவே இல்லை. நீங்கள் எங்கே வாங்கினீர்கள்?’’ எனக் கேட்டார்.
 
‘‘ ‘வியத்தகு இந்தியா’ புத்தகத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை காயித்தே மில்லத் கல்லூரியின் வெளியே உள்ள சாலையோர புத்தகக் கடையில் வாங்கினேன். அது, 1963-ம் ஆண்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்ட புத் தகம். இன்று வரை அதனை யாரும் மீள் பதிப்புச் செய்ததாகத் தெரியவில்லை.
 
மொழிபெயர்ப்பில் திருத்தங்கள் மேற்கொண்டு, புதிய பதிப்பாக கொண்டு வந்தால் நிச்சயம் பலருக்கும் உதவி யாக இருக்கும். இதன் இ புக் ‘நூலகம்.ஒஆர்ஜி’ (www.noolaham.org ) என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்றேன்
 
இந்த இளைஞரைப் போலச் சிவில் சர்வீஸ் தேர்வினை தமிழில் எழுதுபவர் கள் இன்று அதிகமாகி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கான பெரிய குறை தமிழில் துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் கிடைப்பதில்லை என்பதுதான். முக்கியமான பல புத்தகங்கள் இன்று மறுபதிப்பு காணவில்லை. இதனாலேயே ஆங்கிலத்தில் பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 
போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கப் பழைய புத்தகக் கடைகளையும், நூலகங்களையும் நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிலும் கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் வசித்தபடி போட்டித் தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்பதே நிஜம்.
 
யாராவது ஒரு பதிப்பாளர் சிவில் சர்வீஸுக்கான முக்கியப் புத்தகங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து, சிறப்பு விலையில் வெளியிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதே பலருடைய எண்ணம்.
 
இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை வெகு நுட்பமாகவும், ஆய்வுபூர்வமாக வும் அறிமுகப்படுத்தும் புத்தகமே ‘வியத்தகு இந்தியா’.
 
ஆர்தர் லுவலைன் பசாம் எனப்படும் ஏ.எல். பசாம் சிறந்த வரலாற்று அறிஞர். லண்டனில் பேராசிரியராகப் பணி யாற்றியவர். விவேகானந்தரின் பெருமை களை உலகுக்கு எடுத்துச் சொல்லிய வர். இவரது தந்தை இந்தியாவில் ராணுவ செய்தியாளராகப் பணியாற்றியிருக் கிறார். ஆகவே, இந்தியாவில் தான் கண்டு உணர்ந்த அனுபவங்களைக் கதைகளாகச் சொல்லி, இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்புகளைப் பசாமுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
 
பசாமின் அம்மாவும் ஓர் எழுத்தாளர். ஆகவே, எழுத்திலும் இலக்கியத்திலும் சிறுவயதிலே பசாமுக்கு ஆர்வம் உண்டா னது. பியானோ இசைக் கலைஞராக வர வேண்டும் என்ற ஆசையில் இசை கற்கத் தொடங்கிய பசாம், கல்லூரி நாட்களில் வரலாற்றின் மீதும், சமயங் களின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
 
குறிப்பாக, இந்தியாவின் ‘ஆசீவக’ நெறிகுறித்து இவர் தனது டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுகளை மேற் கொண்டார். ‘ஆசீவகம்’ என்பது கி.மு. 500 - 250 காலப் பகுதியில் நிலவிய மெய்யியல் கொள்கையாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் ‘ஆசீவகர்கள்’ என அழைக்கபட்டனர். ‘ஆசீவக’ நெறி பவுத்தம், சமணம் போலத் தனித்தன்மை கொண்ட துறவு இயக்கமாகும்.
 
முறையாகச் சமஸ்கிருதம் கற்றுக் கொண்ட பசாம் இந்தியாவின் பண் பாட்டு வரலாறுகுறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் விளைவாக 1954-ம் ஆண்டில் எழுதப்பட்டதே ‘வியத்தகு இந்தியா’ (The wonder that was India).
 
இந்திய வரலாறுகுறித்து எழுதப்பட்ட முக்கிய நூல்களில் ஒன்றாகக் கடந்த 50 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது பசாமின் புத்தகம். வரலாற்று மாணவர்கள், ஆய்வாளர்கள், எழுத் தாளர்கள், வாசகர்களுக்கான உறு துணை புத்தகமாக இன்றும் இருந்து வருகிறது.
 
இலங்கை அரசின் சார்பில் ‘கல்வி வெளியீட்டுத் திணைக்களம்’ சிறந்த புத்தகங்களைத் தமிழில் வெளியிட்டுள் ளது. பசாமின் புத்தகமும் அப்படித் தான் மொழியாக்கம் செய்யப்பட்டிருக் கிறது. 1963-ம் ஆண்டு செ.வேலாயுத பிள்ளை, மகேசுவரி பால கிருட்டினன் ஆகியோர் இணைந்து இந்தப் புத்த கத்தை மொழிபெயர்த் துள்ளார்கள்.
 
பண்டைய இந்திய நாகரிகம் பற்றி இந்தியர் களும் மேல்நாட்டு மாண வர்களும் அறிந்து கொள்ளும் படியாக பசாம் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். கட்டிடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம், இலக்கியம், நுண்கலைகள், மொழி, அறிவியற்கலைகள் என விரிந்த தளத் தில் பசாம் இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்புகளை அடையாளம் காட்டுகிறார்.
 
கிரேக்க உழவன் தனது மூதாதையர் களின் பண்பாட்டுச் சிறப்புகள் பற்றித் தெளிவற்ற தகவல்களையே அறிந்திருக் கிறான். எகிப்திய விவசாயியும் அப் படித்தான், ஆனால், இந்தியாவில் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பின்பற்றப்பட்ட விவசாய நடைமுறை கள், கலை மரபுகள் அப்படியே இன்றும் தொடர்கின்றன. அறுந்து போகாத பண்பாட்டு தொடர்ச்சியே இந்தியாவின் தனிச்சிறப்பு என்கிறார் பசாம். இப்படியான நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட நாடுகளாக இந்தியா வும், சீனாவும் மட்டுமே இருக்கின்றன என்றும் பசாம் குறிப்பிடுகிறார்.
 
இந்திய சிற்பங்கள் பெண்களைச் சித்தரிக்கிற விதமும், கிரேக்க சிற்பங் கள் பெண்களைச் சித்தரிக்கும் விதமும் ஏன் வேறுபடுகிறது… என்பதற்கு ‘இந்தியா வில் பெண்ணின் அழகே பிரதானமாகக் கருதப்படுகிறது. ஆகவே, பெண்மையின் எழிலைப் பிரதிபலிப்பதாகவே சிற்பங் கள் உருவாக்கபட்டன. கிரேக்க சிற்பங் கள் தாய்மை நிலையின் பல்வேறு பிரதிபலிப்புகளாகும். அங்கே, உடல் அழகுக்கு முக்கிய இடம் இல்லை’ என்கிறார் பசாம்.
 
இந்தியப் பண்பாட்டினை தொடர்ந்து ஆய்வு செய்கிற பசாம், ‘நகர் வாழ்வோர் பண்பாட்டின் அடையாளமாகவே ‘காம சூத்ரா’ எழுதப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கம் உயர்குடியைச் சேர்ந்த ஆண் கள் எப்படிக் காமவேட்கையைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதே’ என் கிறார். மேலும் ‘பாலுறவு பற்றிய செய்திகளோ, பெண் களின் காமநாட்டங்களோ அதில் கவனம் பெறவே இல்லை. காமத்தை ஒரு கலையாகக் கொண்டாடும் இந்தியா ஒருபோதும் நேரடியான கலவிச் செயல்பாட்டினை விவரித்து எழுத்திலோ, நுண்கலைகளிலோ வெளிப்படுத்துவதே இல்லை. இந்தியா வில் காமம் ஒரு மறைபொருளே’ என்றும் பசாம் குறிப்பிடுகிறார்.
 
‘இந்தியாவில் போதுமான அகழ் வாய்வுப் பணிகள் இன்னமும் நடைபெறவில்லை. குறைவான நிதி ஒதுக்கீடும், வரலாற்றைப் பேண வேண்டும் என்ற அக்கறையின்மையுமே இதற்கான முக்கியக் காரணங்கள்’ என்கிறார் பசாம்.
 
வரலாற்றைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல மாற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டும் அதிகாரவர்க்கம் ஒரு பக்கம். இந்தியாவின் தொன்மைகுறித்து வீண்பெருமைப் பேசி கழிக்கும் கல்விப்புலங்களும் ஊடகங்களும் மறுபுறம். இவர்களுக்கு இடையில் வரலாற்று உண்மைகள் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன என்பதே நிஜம்!
 
- இன்னும் வாசிக்கலாம்...
 
Link to comment
Share on other sites

வீடில்லாப் புத்தகங்கள் 18 - நாடகமே உலகம்!

avvai_2285555f.jpg

கறுப்பு வெள்ளைப் புகைப்படங் களைப் போன்றவை பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் புத்தகங்கள். அதை கையில் எடுத்தவுடனே கடந்த கால நினைவுகள் கொப்பளிக்கத் தொடங்கிவிடுகின்றன.

 
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரீகல் தியேட்டர் அருகில் உள்ள சாலையோர புத்தகக் கடையில், அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலை வாங்கினேன். வானதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் அது. தமிழக நாடகக் கலையின் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பு கிறவர்கள், இந்த ஒரு புத்தகத்தை வாசித்தால் போதும்.
 
‘பாய்ஸ்’ கம்பெனியில் தொடங்கி சினிமா நடிகரானது வரையான அவருடைய 55 ஆண்டு கால நாடக வாழ்க்கை அனுபவத்தை சுவைபட விவரிக்கிறார் டி.கே.சண்முகம்.
 
இந்தப் புத்தகத்துக்கும் நான் எழுத்தாளன் ஆனதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். 9-ம் வகுப்பு படிக்கும்போது கிராம நூலகத்துக்குப் போய் எனது ஊரைப் பற்றி ஏதாவது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா… எனத் தேடிக் கொண்டிருப்பேன். நியூஸ் பேப்பரில் வெளியாகும் செய்தியில் ஊரின் பெயரை சிலவேளை குறிப்பிட்டிருப்பார்கள். அதைத் தவிர எந்தப் புத்தகத்திலும் யாரும் ஒரு வரியும் எழுதியிருக்கவில்லை.
 
‘ஏதாவது வரலாற்று சிறப்புகள், ஆளுமைகள் இருந்தால்தான் புத்தகத் தில் எழுதுவார்கள். அப்படி நம் ஊரில் என்ன இருக்கிறது’ என நூலகர் கேலி செய்வார்.ஆனால், நிச்சயம் யாராவது, ஏதாவது எழுதியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கையில் கிடைக்கிற புத்தகங்களில் தேடிக் கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள் ‘எனது நாடக வாழ்க்கை’ புத்தகத்தைப் புரட்டி படித்துக் கொண்டிருந்தபோது, மல்லாங்கிணரைப் பற்றி இரண்டு பக்கம் எழுதப்பட்டிருந்தது.
 
என் ஊரின் பெயரை ஒரு புத்தகத்தில் அன்றுதான் முதன்முறையாக பார்த்தேன். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதை நூலகரிடம் கொண்டு போய் காட்டினேன். அவரும் சந்தோஷம் அடைந்தார்.
 
எங்கள் ஊரில் நாடகம் அல்லது பொது நிகழ்ச்சி ஏதாவது நடைபெறுகிறது என்றால் அதை தெரியப்படுத்த மூன்று முறை பலத்த சத்தம் எழுப்பும் வேட்டு போடுவார்கள். அந்தச் சத்தம் கேட்ட மறுநிமிஷம் ஒட்டுமொத்த ஊர் மக்க ளும் கோயில் தேரடி முன்பாக கூடிவிடுவார்கள். அதுதான் விளம்பரம் செய்யும் வழி. ‘இப்படியொரு விளம்பர உத்தியை வேறு எந்த ஊரிலும் நான் கண்டதில்லை’ என வியந்து டி.கே.எஸ் எழுதியிருக்கிறார்.
 
அதை வாசித்தபோதுதான் என் ஊரை, ஊர் மனிதர்களை, அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குள் முளைவிடத் தொடங்கியது.
 
ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது. அது உள்ளுர்வாசிகளுக்குத் தெரிவதே இல்லை. வெளியில் இருந்து வருபவர் களே அந்தப் பெருமையை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்கள், கொண் டாடுகிறார்கள்.
 
அவ்வை சண்முகத்தின் இந்நூல் நாடக உலகின் வரலாற்றை மட்டும் விவரிக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களையும் நுட்பமாக விவரிக்கிறது.
 
பேருந்து வசதியில்லாத மாட்டு வண்டியில் பயணம் செய்த நாட்கள், மின்சார வசதியில்லாத நாடகக் கொட்டகை, கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம், அந்த நாள் மதுரை வீதிகள், பாடசாலைகள், வைகை ஆறு ஆகியவை குறித்து அவ்வை சண்முகம் நமக்கு காட்டும் காட்சிகள்… ஓர் ஆவணப்படம் பார்ப்பதைப் போலவே இருக்கிறது.
 
சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய ‘மதுரை தத்துவ மீனலோசினி’ பால சபாவில் சிறுவனாகச் சேர்ந்த தனது முதல் அனுபவத்தைப் பிரமாதமாக விவரிக்கிறார் அவ்வை சண்முகம்.
 
‘மேலமாசி வீதியில் இருந்த தகர கொட்டகைதான் நாடக அரங்கம். புட்டுதோப்பில்தான் நாடக கம்பெனி இயங்கியது. மின்சார வசதி கிடையாது. நான்கு காஸ் லைட் வெளிச்சத்தில்தான் நாடகம் போட வேண்டும். நாடகம் பார்க்க மக்கள் திரளாக வருவார்கள். கடைசி நாளில் நடிகர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்குவார்கள்…’ என நாடக வாழ்க்கையின் பொற்காலம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
 
சங்கரதாஸ் சுவாமிகள் ‘அபிமன்யு’ நாடகத்தை ஒரே நாள் இரவில் எழுதி முடித்திருக்கிறார். நான்கு மணி நேரம் நடைபெறக்கூடிய ஒரு நாடகத்தை பாடல்கள், வசனம் உள்ளிட்ட அனைத் தையும் ஒரு வரி அடித்தல் திருத்தல் இல்லாமல், ஒரே இரவில் எழுத முடிந்த மேதமை சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவருக்கே உண்டு என டி.கே.எஸ் வியந்து பாராட்டுகிறார்.
 
நாடக உலகை பாராட்டும் அதே வேளையில் அந்தக் காலத்தில் நிலவிய வறுமையே ‘பாய்ஸ்’ கம்பெனியில் சிறுவர்கள் அதிகம் பங்குபெற முக்கிய காரணமாக இருந்தது. மூன்றுவேளை வயிறார சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே சிறுவர்கள் பலர் நடிக்க வந்தார்கள் என்ற உண்மையையும் சுட்டிக் காட்டுகிறார்.
 
1921-ம் வருஷம் நாடகம் போடுவதற்காக முதன்முறையாக சென்னைக்கு வந்தபோது, சாலைகளில் டிராம் வண்டிகளையும், மனிதனை மனிதன் இழுக்கும் ரிக் ஷாவையும் பார்த்த ஆச்சர்யத்தைச் சொல்கிறார் டி.கே.எஸ். அதைவிடவும் ‘காலை டிபனாக பூரி மசால் பரிமாறப்பட்டது. முதன்முறையாக அன்றுதான் அப்படி ஒரு பலகாரத்தின் பெயரை கேள்விப்படுகிறோம். வட இந்தியர்கள் சாப்பிடும் உணவு என்று சாப்பிட வைத்தார்கள். அதை வாயில் வைக்க முடியவில்லை. பிறகு இட்லி வரவழைத்து சாப்பிட்டோம்’ என்று எழுதுகிறார்.
 
சென்னையில் முதன்முதலாக மின்சார வெளிச்சத்தில் நாடகம் போட்டதையும், கொசுத் தொல்லையால் மலேரியா காய்ச்சல் வந்த நிகழ்வையும் விவரிக்கும் அவர், அன்று சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் நாடகக் கொட்டகைகள் இருந்தன. நாடக நடிகர்கள் மிக பிரபலமாக விளங்கினார்கள்… என்பதை பெருமையாக விவரிக்கிறார்.
 
13 மனைவிகளைக் கொண்ட கருப்பண்ணன், தனது மனைவிகள் சகித மாக நாடகம் காண வந்தது; பி.யூ.சின்னப்பா நடிகராக வந்து கம்பெனியில் சேர்ந்தது; எடிபோலோ, எல்மோ நடித்த மவுனப் படம் பார்த்த அனுபவம்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மேடை அனுபவங்கள்; தனுஷகோடிக்குப் போய் இலங்கைக்கு கப்பல் ஏறியது; கொழும்பு ‘ஜிந்தும்பட்டி’ ஹாலில் நாடகம் போட்டது… என சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதியிருக்கிறார்.
 
‘இப்படியான ஒரு புத்தகம் தமிழில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்து உலகம் முழுவதும் அறிய செய்ய வேண்டும்’ என இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ம.பொ.சி குறிப்பிட்டுள்ளார்.
 
ம.பொ.சி குறிப்பிட்டு 50 ஆண்டு களுக்கு மேலாகிவிட்டது. இன்றும் ஆங்கில மொழியாக்கம் நடைபெறவே இல்லை. மராத்தி நாடக உலகைப் பற்றி உலகமே கொண்டாடுகிறது. வங்கத்தில் நடைபெற்ற நாடகங்கள் பற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தமிழின் பெருமைகளை உலகம் அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை?
 
- இன்னும் வாசிக்கலாம்…
 
 
Link to comment
Share on other sites

வீடில்லா புத்தகங்கள் 19 - மரம் போல வாழ்வு!

 

book_2293245f.jpg

நாகராஜன்

சென்னையில் உள்ள பிரபல மான பள்ளி ஒன்றுக்குச் சென் றிருந்தபோது, ‘வேப்பம்பூ எப்படியிருக்கும் ’ என மாணவர்களிடம் கேட்டேன். எல்லோரும், ‘வேப்பம் பூவைக் கண்டதே இல்லை’ என்றார்கள். ‘உங்கள் பள்ளி வளாகத்தின் முன் பாகவே வேம்பு இருக்கிறதே’ எனக் கேட்டேன்.

 
‘அந்த மரங்கள் புழுதி படிந்து அழுக்காக இருப்பதால் அதைத் தொடக்கூடாது என ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே, அருகிலே போக மாட்டோம்’ என மாணவர்கள் பதில் அளித்தார்கள். அதைவிட வும், ‘ஏன் இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்’ என்று வேறு கேள்வி கேட்டார்கள்.
 
நான் பள்ளியில் படித்த நாட்களில் ‘இயற்கைச் சுற்றுலா’ என அழைத்துப் போய் காட்டில் உள்ள மரங்கள், பூக்கள், செடிகள் பற்றி மாணவர்களுக்கு நேரடி அறிமுகம் செய்துவைப்பார்கள். அத்துடன் மாணவர்களே குழுவாக ஒன்றுசேர்ந்து விதவிதமான பூக்களையும் விதைகளையும் சேகரம் செய்து ஒப்படைக்க வேண்டும். நகரங்களில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இது போன்று வனஉலா போயிருப்பார்கள் என்று தெரியவில்லை.
 
வேப்பம்பூ அறியாத, புளியம்பழம் அறியாத, ஆலும் அரசும், கடம்பும் அறியாத இந்தப் பிள்ளைகளுக்கு ‘மரம்’ என்பது வெறும்பெயர் மட்டுமே. கல்விப்புலம் இப்படி பிள்ளைகளை உருவாக்கி வருவது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கமோ மரம் நடுவதையும் வளர்ப்பதையும் தனது வாழ் வாகக் கொண்டிருக்கும் மனிதர்களும் நம்மோடுதான் இருக்கிறார்கள்.
 
ஈரோடு அருகே உள்ள காஞ்சிக் கோவிலில் நெசவுத் தொழில் செய்துவருபவர் நாகராஜன். இவர் தனது 17-வது வயதில் இருந்து கடந்த 40 வருடங் களுக்கும் மேலாக, மரம் நடுவதையும், அதைப் பேணி வளர்ப்பதையுமே தனது அன்றாடப் பணியாக செய்துவருகிறார். அவரைக் காண்பதற்காக ஒருமுறை நண்பர்களுடன் சென்றிருந்தேன். எளிய ஓட்டு வீடு. இன்முகத்துடன் வரவேற்று தான் நட்டு வைத்த செடிகள் எல்லாம் இன்று எவ்வளவு பெரிய மரங்களாக வளர்ந்து நிற்கின்றன என்பதைச் சுற்றிக் காட்டினார்.
 
நாகராஜனின் சிறப்பு, தானே விதைகளைத் தேர்வுசெய்து முளைக்க வைத்து, அந்தச் சிறு செடிகளைப் பள்ளி மாணவர்களின் துணையோடு இடம் தேடி நட்டு வைத்து, செடிகள் கிளைத்து வளரும்வரை தானே நீர் ஊற்றி, அதைச் சுற்றிலும் வேலி அமைத்து சீர்பட வளர்த்தெடுப்பதுதான். இப்படி அவர் வைத்து, வளர்த்துள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் இன்று மலைக்கோவிலைச் சுற்றி தோப்பாக வளர்ந்து நிற்கின்றன.
 
ஆல், அரசு, புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். ஏழ்மையான நிலையிலும் எவரது உதவியையும் எதிர்பாராமல் இவர் தொடர்ந்து மரங்களை நட்டு பராமரித்து வருவதோடு, இது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இவரைப் போலவே சத்தியமங்கலம் அருகில் உள்ள வேட்டுவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் அய்யா சாமி, தனி ஆளாக 3 ஆயிரம் மரங் களுக்கும் மேல் நட்டு, பராமரித்து வளர்த்திருக்கிறார்.
 
இப்படி மரங்களை நேசிக்கும் மனிதர்கள் சத்தமின்றிச் செயலாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர், காற்று, நிலம் என எல்லாவற்றையும் சுய லாபங்களுக்காக மாசுபடுத்தி வருகிற நம் காலத்தில், மரங்களைக் காக்கவும் வளர்க்கவும், அதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டி யது நம் அனைவரின் கடமையாகும்.
 
இயற்கை ஆர்வலரான மேனகா காந்தி மரங்களின் சிறப்புகள் பற்றி எழுதிய ‘பிரம்மாஸ் ஹேர்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை, புதுச்சேரியின் ‘சண்டே பஜார்’ பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதுவை - நேரு வீதியில் இந்தச் சாலையோரப் புத்தகக் கடைகள் போடப்படு கின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு என பல்வேறு மொழிகளின் புத்தகங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. மலிவு விலையில் அரிய புத்தகங்களை இங்கே வாங்க முடியும். இதற்காகவே சில ஞாயிற்றுக்கிழமை களில் புதுச்சேரி போயிருக்கிறேன்.
 
‘பிரம்மாவின் தலைமுடிக் கற்றை கள்தான் பூமியில் மரங்களாக உருக் கொண்டுள்ளன’ என்றொரு ஐதீகம் உண்டு. அதையே மேனகா காந்தி தனது புத்தகத்துக்குத் தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். பாரிஜாதம்… இரவில் பூக்கும் மலர். இதன் பூக்களைக் கொண்டு சாயம் தயாரித்து, புத்தத் துறவிகள் ஆரஞ்சு வண்ண உடைகளைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். பாரிஜாதம் ஏன் இரவில் மலர்கிறது என்பதற்கு ஒரு கதையே இருக்கிறது. இது விஷ்ணு புராணத்தில் சொல் லப்பட்ட கதை.
 
பாரிஜாதா என்றோர் அழகான இளவரசி இருந்தாள். அவள் சூரியன் மீது காதல் கொண்டாள். ‘பூமியை விட்டு என்னோடு வந்து விடு’ என சூரியன் அழைத்த காரணத்தால், அவள் சூரியனைப் பின்தொடர்ந்து போக ஆரம்பித்தாள். ஆனால், சூரியனைப் பின்தொடர முடியவில்லை. சூரியன் அவளைக் கைவிட்டு வானில் மறைந்துவிட்டது. பாரிஜாதா இந்த வேதனையைத் தாங்க முடியாமல் இறந்து போனாள். அவளது சாம்பலில் இருந்து உருவா னதே பாரிஜாதம். ஆகவே, அது சூரியனைக் காண விரும்பாமல் இரவில் பூக்கிறது. சூரியனின் முதல் கிரணம் வந்தவுடன் பூ உதிர்ந்துவிடுகிறதாம்.
 
இப்படி மரங்களைப் பற்றிய புராண, தொன்ம கதைகளை எளிய மொழியில் இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்கிறார் மேனகா காந்தி. இவை அறிவியல்பூர்வமானவை இல்லை என்றபோதும், கற்பனையைத் தூண்டும் கதைகள் என்பதில் சந்தேகமில்லை.
 
புளிய மரத்தைப் பற்றி விவரிக்கும் போது, அதன் அடியில் யாரும் படுத்து உறங்கக் கூடாது எனக் கூறுவதோடு, அக்பரின் சபையில் இருந்த பிரபல இசைக் கலைஞர் தான்சேனுடைய கல்லறை அருகில் உள்ள புளியமரத்தின் இலைகளைப் பறித்துத் தின்றால், நல்ல குரல்வளம் கிடைக்கும் என சங்கீதம் படிப்பவர்கள் நம்புகிறார்கள் என்ற சுவாரஸ்யமான விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.
 
புளிய மரத்தின் இலைகள் ஏன் இவ்வளவு சிறியதாக உள்ளன என்பதற்கு ஒரு கதை சொல்கிறார். முன்னொரு காலத்தில் சிவனுக்கும் பதுமாசூரனுக் கும் சண்டை நடந்தது. அப்போது அசுரன் புளிய மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டு விட்டான். அடர்ந்த இலைகளுக்குள் எங்கே ஒளிந்திருக்கிறான் என சிவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவர் தனது முக்கண்ணைத் திறந்து காட்டி, மரத்தின் இலைகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். பதுமாசூரன் பிடிப்பட்டு இறந்துபோனான். அதன் பிறகே புளிய மரத்தின் இலைகள் சிறியதாக மாறின எனக் கூறுகிறார் மேனகா காந்தி.
 
இப்படி ஆலமரம், வில்வம், தேக்கு, வாழை, அரசு, நாவல் என 30 வகையான மரங்கள் குறித்தும், பல்வகை மலர்ச் செடிகள் பற்றியுமான செய்திகள், கதைகள், சித்திரங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் மரங்களின் அறிவியல் பெயருடன், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கும் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
மரங்கள் குறித்து மாணவர்களும் இளைய தலைமுறையினரும் அக்கறை செலுத்த இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. ‘மரம் வைப்பவனுக்குக் கூலி கிடையாது. அதை வெட்டுபவனுக்கும் விற்பவனுக்கும் மட்டுமே பணம் கிடைக்கிறது’ என்றொரு வாசகத்தை இணையத்தில் படித்தேன். இதுதான் சமூகநிலை என்பது வருத்தமாகவே இருக்கிறது.
 
- இன்னும் வாசிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீடில்லா புத்தகங்கள் 20: கற்றவை கற்றபின்...!

 

sra_2300791h.jpg

 

உலகெங்கும் பொது நூலகங்கள் பண்பாட்டு மையங்களைப் போலச் செயல்படுகின்றன. அங்கே புத்தக வெளியீடுகள், கதை சொல்லும் முகாம். விமர்சனக் கூட்டம், ஆவணப்படங்கள் திரையிடுவது, விருது பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டாடுதல், புகைப்படக் கண்காட்சி எனப் பல்வேறுவகையான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

 
ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்தப் பொது நூலகத்திலும் இப்படியான கலை இலக்கிய நடவடிக்கைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.
 
சில நூலகங்களில் ‘வாசகர் வட்டம்’ சார்பில் புத்தக அறிமுகக் கூட்டம், அல்லது வார விழா அரிதாக நடைபெறுகின்றன. அதைத் தவிர நூலகம் என்பது புத்தகம் படிக்கவும், இரவல் பெறவும் செய்யும் இடம் மட்டுமே.
 
‘அண்ணா நூலகம்’ போன்ற மிகப்பெரிய நூலகமும் இப்படித்தான் செயல்படுகிறது. குறிப்பாக, அண்ணா நூலகத்தில் குளிர்ச் சாதன வசதி செய்யப்பட்ட, மிக அழகான அரங்கம் ஒன்றிருக்கிறது. அதில், இதுவரை புத்தக வெளியீட்டு விழாவோ, இலக்கியக் கூட்டங்களோ நடந்ததே இல்லை.
 
பல மாதங்களாக அது மூடப்பட்டே இருக்கிறது. முன்பு தனியார்கள் நடத் தும் நிகழ்ச்சிக்கு வாடகைக்குக் கொடுத்து வந்தார்கள். அதுவும் தற்போது அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்ற தடை உள்ளது என்கிறார்கள்.
 
‘தேவநேயப் பாவாணர்’ நூலக மாடியில் இயங்கிய அரங்கில் பல ஆண்டுகளாகப் புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் மூடப்பட்டுவிட்டது.
 
சென்னை போன்ற பெருநகரத்தில் கூடப் புத்தகம் படிப்பவர்கள் ஒன்று கூடுவதற்கு என இடமே இல்லை. பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்குகளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தருகிறார்கள். புத்தக வெளியீடு கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
 
சிங்கப்பூரில் உள்ள ‘தேசிய நூலகம்’ ஆசிய அளவில் மிகப் பெரியது. தமிழ்நாட் டில் கிடைக்காத தமிழ்ப் புத்தகங் கள் கூட அங்கே வாசிக்கக் கிடைக் கின்றன. புத்தக வாசிப்பை மேம்படுத்து வதிலும், எழுத்தையும் எழுத்தாளர்களை யும் கவுரவித்துக் கொண்டாடுவதிலும் சிங்கப்பூர் ‘தேசிய நூலகம்’ முன்னோடி யாகச் செயல்படுகிறது.
 
ஆண்டு முழுவதும் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சிகள், முகாம்கள், வெளியீட்டு அரங்குகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எழுத் தாளர்களின் கையெழுத்துப் பிரதிகள், அவர்களின் குரல் பதிவு, ஆவணப்படம் எனச் சகலமும் அங்கே பாதுகாக்கப் படுகின்றன.
 
தமிழ்நாட்டிலோ இன்னமும் நூலகங் கள் இணையவழி ஒன்றிணைக்கப்பட வில்லை. பொது நூலகங்களில் வாசகர் பயன்படுத்தும்படியான இணைய வசதி யும் கிடையாது. எங்கிருந்தும் ஆன்லைனில் புத்தகங்கள் தேடவோ, படிக்கவோ வசதியில்லை.
 
நூலகங்களை நவீனப்படுத்த போது மான நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஆள் பற்றாக்குறை, இடம் போதவில்லை, நிர்வாகச் சிக்கல்கள் எனப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
 
இந்தியா முழுவதும் உள்ள நூலகங் களுக்குக் கொல்கத்தாவில் உள்ள ‘ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை’ நிதியுதவி செய்கிறது. அதில்தான் கணிச மான ஆங்கில நூல்கள் வாங்கப்படுகின் றன. அத்தோடு ‘குழந்தைகள் நூலகம்’ அமைக்கவும் அவர்கள் நிதி வழங்கு கிறார்கள். அதைப் பயன்படுத்தி நிதி பெற்ற சில நூலகங்களில் குழந்தைகள் பிரிவு என்பது வெறும் பெயர் பலகையாக மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறது.
 
தமிழகத்தில் 4,042 பொது நூலகங்கள் இயங்குகின்றன. இரண்டு மாநில மைய நூலகங்கள், மாவட்டத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராமப்புற நூலகங்கள், 539 பகுதி நேர நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்கள் இதில் அடங்கும்.
 
நூலகங்களுக்குப் போய்ப் படிக்கிற பழக்கம் இளம் தலைமுறையிடம் வெகு வாகக் குறைந்துவிட்டிருக்கிறது. மத்திய, மாநிலப் பணிகளுக்கான போட்டித் தேர்வு களுக்காகப் படிப்பவர்களே அதிகம் நூலகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
 
இன்று பொது நூலகத்தைப் பெண் கள் மிகக்குறைவாகவே பயன்படுத்து கின்றனர். மாவட்டந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனத் தனி நூலகம் அல்லது தனிப் பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும். அது போலவே மாற்றுத்திறனாளிகள் நூலகங்களைப் பயன்படுத்த சிறப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்
 
நூலகத்தைப் பண்பாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை. குறிப்பாக நூலகம் சார்பாக வாரம் ஒருமுறை எழுத்தாளர் சந்திப்பு, நூல் அறிமுகக் கூட்டம், ஆவ ணப்படங்கள், குறும்படங்கள் திரை யிடல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு போன்றவற்றைச் செய்யலாம். மாணவர்களுக்கான சிறப்பு வாசிப்பு முகாம்கள், கதை, கவிதை பயிலரங்கு கள் எனப் பன்முகமான நடவடிக்கை களை மேற்கொள்ளலாம்.
 
இதற்குத் தேவையான நிதி உதவி களைத் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வகைக் கல்வி நிறுவனங்கள், புரவலர் வழியாகக் கோரலாம். இப்படியான பண் பாட்டு நிகழ்வுகள் நடைபெறாமல் போனால் நூலக இயக்கம் தேக்கம் அடைந்து முடங்கிவிடும் என்பதே உண்மை.
 
தமிழக நூலக இயக்கத் துக்கு முன்னோடியாக இருந்த வர் டாக்டர் எஸ்.ஆர். ரங்க நாதன். அவர் உருவாக்கிய ஐந்து விதிகளே நூலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. 1948-ல் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் கொண்டுவந்த பொது நூலகச் சட்டம்தான் இந்தியாவில் இயற்றப்பட்ட முதல் பொது நூலகச் சட்டமாகும்.
 
நூலகம் குறித்து ஆதங்கப்படும் போதெல்லாம் நான் எடுத்துப் படிக்கும் புத்தகம் டாக்டர். நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய ‘நினைவு அலைகள்’ புத்தகம் தான்.
 
மூன்று தொகுதிகளாக வெளி வந்துள்ள இந்தத் தொகுதிகளைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கோடம்பாக்கம் சாலையோர புத்தகக் கடையில் வாங்கினேன், அற்புதமான வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் இது.
 
‘கல்வி வள்ளல்’ காமராஜர் அவர்களு டன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் தந்ததில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
 
நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு 1951-ம் ஆண்டுப் பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தபட்டவைகளே இலவசக் கல்வி, மதியஉணவு, சீருடைத் திட்டங் களாகும். அவற்றைச் செயல்படுத்த வேண்டிய நிதி ஒதுக்கீடு, நிர்வாகச் சிக்கல் போன்றவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? எவ்வளவு சிக்கலான சவாலாக இருந்தது என்பதைச் சுந்தர வடிவேலு துல்லியமாக இந்தப்புத்தகத் தில் விவரிக்கிறார்.
 
கல்வித்துறையோடுச் சேர்த்து பொது நூலக இயக்குநராகவும் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு பதவி வகித்தார். அந்தக் காலத்தில் மாவட்ட அளவில் மட்டுமே நூலகங்கள் செயல்பட்டுவந்தன. கிராமப்புறத்தில் கல்வி வளர்ச்சி பெற நூலகம் அமைக்கப் பட வேண்டும் என்று முடிவு செய்த இவர், தமிழகம் முழு வதும் 400-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை ஏற்படுத் தினார்.
 
பொதுமக்கள் செலுத் தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாகப் பெறப்படுகிற திட்டம் இவரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
‘நினைவு அலைகள்’ நூலில் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு ஐ.ஐ.டி-க்காகக் கேட்டபோது காமராஜர் அனுமதிக்க மறுத்தது, கிராமப்புறங் களில் அரசுப் பள்ளி உருவாக எவ்வாறு போராடினார்கள்?
 
இலவச மதிய உணவு திட்டத்துக்கு எப்படி எல்லாம் எதிர்ப்பு உருவானது? காமராஜரின் நிர்வாகத் திறன் எப்படியானது எனப் பல்வேறு உண்மைகளை நேரடி சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார். நாட்டுடமையாக்கபட்ட இவரது நூல்கள் இணையத்திலும் தரவிறக்கம் செய்ய எளிதாகக் கிடைக்கின்றன.
 
கல்வி முற்றிலும் வணிக மயமாகி விட்ட இன்றையச் சூழலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருமுறையாவது இந்த மூன்று தொகுதிகளையும் வாசிக்க வேண் டும். அப்போதுதான் இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தையும் முன்னோடிகளின் அர்ப்பணிப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
 
- இன்னும் வாசிப்போம்…
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.