Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம்!

புலம்பெயர் தமிழனாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இப்பொழுது நடக்கும் இந்த திரைப்படங்கள் சார்ந்த பிரச்சனையில் ஒரு தமிழன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.  இதைப்பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக இங்கே இணைந்துள்ளேன்.
தமிழகத்தமிழரிடமும் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளேன்.  இவை எங்கள் பிரச்சனை என்பதால் இங்கு கேட்கிறேன்.  முடிந்தவரை என்னைத் தெளிவுபடுத்துங்கள்.  
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22732-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/
http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22733-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95/

நாங்கள் எதற்காக வெளிநாடுகளில் போராடுகிறோம்?  பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும், இலங்கைக்கு கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்கிறோம்.   முதலில் நாம் அதைச் செய்தோமா?  நான் வசிக்கும் நாட்டு அரசியல்வாதிகளிடம் பொருளாதாரத் தடை விதிக்க  அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னால் அவர்கள் எங்களைத் திருப்பிக் கேட்பது என்ன தெரியுமா?  நீங்கள் தானே இறக்குமதி செய்து பாவிக்கிறீகள்.  முதலில் அதைச் நிறுத்துங்களேன் என்கிறார்கள்.  தாங்கள் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.  அதற்கு காலம் எடுக்கும் என்கிறார்கள்.  

சரி என்று எம்மவர்களது விற்பனை நிறுவனங்களிடம் சென்று கேட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்?  வாங்குபவர்களை நிறுத்தச்சொல்லுங்கள். அவர்கள் நிறுத்தினால் நாங்கள் விற்பதை நிறுத்துவோம் தானே என்கிறார்கள்.  

நாம் வாழும் நாடுகளிடம் எமக்கில்லாத அக்கறையை அவர்கள் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.  இப்படித்தான் எமது வெளிநாட்டுப் போராட்டங்கள் முரண்பாடுகளைக்கொண்டது.

இவற்றைவிட ஐரோப்பா வாழ் தமிழர்கள் பொருளாதாரத்தடையை விரும்பவில்லையோ என்று சந்கேகிக்க வேண்டியுள்ளது.  வெளிநாடுகளே மறைமுகமாக தங்கள் நாட்டு மக்களுக்கு இலங்கை செல்வது ஆபத்தானது என்று அறிவுறுத்துகிறார்கள்.  ஆனால் ஐரோப்பாத் தமிழர்கள் இலங்கைக்கு ஒரு தமிழ் நிறுவனமே இப்படி வருமானங்களைக் கொட்டிக் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  

எனது(நான் வசிக்கும்) நாட்டில் விலை குறைவாக இருந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் இலங்கை விமானசேவையைப் பயன்படுத்துவது இல்லை.  ஆனால் நீங்கள் இலங்கை சுற்றுலாவிற்கு சிறந்த இடம் எனக்கூவிக் கூவி இலங்கை விமானத்தில் அழைத்துச் செல்வதை ஏற்கிறீர்கள்.

இதில் வேறு தமிழக உறவுகளையும் முடக்க நினைப்பது சரியா?  தமிழ்நாட்டில் அனைவரும் நமக்கு ஆதரவானவர்கள் அல்ல.  ஆதரவானவர்களிலும் சிலரே எமக்காகப் போராடுகின்றார்கள்.  அவர்கள் அங்குள்ளவர்களைச் சமாளிப்பதா, தமிழீழத்தில் எமக்கில்லாத அக்கறை உங்களுக்கு ஏன் என்று கேட்கும் ஈழத்தமிழர்களை சமாளிப்பதா?  அவர்களும் நம்க்குப் பிடித்தமாதிரி / நாம் நினைக்கும் விடயத்திற்கு மட்டுமே போராட வேண்டும் என்று எப்படி எதிர்பாக்கலாம்?  தமிழ்நாட்டில் நாம் சொல்லித்தான் போராடி இலங்கைப்பொருட்களைப் புறக்கணித்தார்களா?  ஈழத்தமிழர் சிலர் இப்படத்தை எதிர்ப்ப்பதற்குப் பதிலாக வேறு விடயங்களைச் செய்யலாம் என பட்டியலிடுகிறார்கள்.  தமிழகத்தில் நமக்கு ஆதரவில்லாதவர்கள் தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அதைவிட்டு இதுக்கேன் போராடவேண்டும் என்று முக்கியத்துவம் தெரியாமல் கேட்கிறார்கள் என்றால் நாமும் அப்படிச் சொல்லலாமா?  

கனடாவிலோ, பிரித்தானியாவிலையோ ஏன் யாரும் லைக்காவை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை?  யாருமே அவர்களை எதிர்க்கவில்லையா அல்லது என்ன பயன் என்று விட்டுவிட்டார்களா?  முக்கியமாக இதில் பிரித்தானியா வாழ் தமிழர்களின் நிலை என்ன?  

நீங்கள் யாராவது கத்தி திரைப்படத்தை புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால் http://www.facebook.com/boycottKaththi பக்கத்தில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரேக்கை... பெரிய பிரச்சினையோடை தான் வாறீங்கள்....
வணக்கம் வாங்கோ.... சயந்தன்.
உங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது. :)

Link to comment
Share on other sites

வணக்கம் சயந்தன்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்! :) 

Link to comment
Share on other sites

வரவேற்பிற்கு நன்றி. 

 

தயவுசெய்து என் குழப்பத்தை தீர்த்துவையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சயந்தன்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.... சயந்தன்.

உங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சயந்தன்.நீங்கள் பழைய சயந்தன் இல்லைத்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.... சயந்தன்.
உங்களை யாழ்களம், அன்புடன் வரவேற்கின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.