Jump to content

நாங்கள் மனிதர்கள் இல்லையா?- ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய தீபிகா படுகோன் பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மனிதர்கள் இல்லையா?- ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய தீபிகா படுகோன் பதிவு

 

hi_2116396f.jpg

 

டிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே:

 

என்னுடைய பார்வை...

 

ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே.

 

 

இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம் சமூகத்தை சமத்துவமின்மை, வன்புணர்வு, பயம், வலி அற்ற உலகை நோக்கி நடை போடவே நாம் விரும்புகிறோம்.

 

என்னுடைய தொழிலைப் பற்றி நான் எதுவும் தெரியாத அப்பாவியாக இல்லை. அது வெவ்வேறு விஷயங்களை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறது. சில வேடங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு நடிக்க வேண்டியிருக்கலாம், இன்னொன்று முழுமையாக நிர்வாணமாக நடிக்க வேண்டிய பாத்திரமாக இருக்கலாம். இதில் எதை நான் ஏற்று நடிக்க வேண்டும் என்பது என்னுடைய தேர்வு மட்டுமே. அது ஒரு வேடம் மட்டுமே, அதுவே உண்மை கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டியது என்னுடைய வேலை.

 

நான் இதைத் தெளிவாக சொல்கிறேனா என்பதே என்னுடைய கவலை. அதை ஷாருக்கானின் 8 பேக் அல்லது வேறொரு ஆண் அல்லது பெண்ணின் உடலமைப்போடு குழப்பிக்கொள்ளக்கூடாது. பெண் சமத்துவம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக நாம் உழைத்துக்கொண்டிருக்கிற பொழுது இப்படிப்பட்ட கீழ்மையான தந்திரங்களின் மூலம் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதையே நான் எதிர்க்கிறேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் பெண்கள் முன்னேறுவதை கொண்டாடும் அதே சமயம் நிழல் மற்றும் நிஜ வாழ்க்கையை நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பழைய கட்டுரையைத் தோண்டி எடுத்து “OMG: Deepika’s Cleavage Show!” என்று தலைப்பிட்டு வாசகர்களை ஈர்ப்பது பின்னோக்கி செலுத்தும் சிந்தனையை பெருக்கவே நம்முடைய தாக்கத்தை பயன்படுத்திக்கொள்வது ஆகும்.

ஒரு நடிகையின் உள்ளாடை உள்ளே எட்டிப்பார்க்க தூண்டுகிறது என்றால், அவள் அதை திட்டமிட்டு செய்யவில்லை. அதை ஜூம் செய்தோ, வட்டமிட்டு, அம்புக்குறியிட்டோ, புள்ளி வைத்தோ காட்டுவதைவிட அவளுக்கு ஏன் நீங்கள் கொஞ்சம் மரியாதை தரக்கூடாது. அதை அப்படியே விட்டுவிட்டு நகர்வதை விட்டு ஏன் அதை தலைப்புச்செய்தியாக ஆக்குகிறீர்கள்? நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஆம் நாங்கள் சினிமாவில் கதாநாயகர்களின் 8 பேக்ஸை ரசிக்கிறோம், விரும்புகிறோம், ஜொள்ளு வடிக்கிறோம். ஆனால், நாங்கள் ஆண்களின் கவட்டையை அவர் பொதுமக்கள் முன்னர் தோன்றும் பொழுது பெரிதுபடுத்திக்காட்டி அதை மலிவான தலைப்புச்செய்தி ஆக்குகிறோமா?

 

என் உடலைக் கொண்டாடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆன் ஸ்க்ரீனில் எந்த வேடத்திலும் நடிக்க நான் வெட்கப்பட்டதில்லை. என் அடுத்த படத்தில் நான் உண்மையில் பார் டான்சராக நடிக்கிறேன். அந்த வேடத்தில் ஆண்களின் காம உணர்வுகளை தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக தூண்டிவிட்டு சம்பாதிக்கிற பெண் வேடத்தில் தான் நடிக்கிறேன். ஓர் உண்மையான நபரை போகப்பொருளாக மாற்றுவதற்கும், அவர் நடிக்கிற வேடத்தை அப்படி அணுகுவதற்கும் வேறுபாடு இருப்பதாகவே பார்க்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரங்களை அவை சுவராசியமாக இருக்குமென்றால் கூராய்வு செய்யுங்கள். அந்தப் பாத்திரத்தின் மார்பக அளவு, கால் நீளம் ஆகியவற்றை அந்த வேடத்தை அது ஏற்றுக்கொள்ளுமாறு ஆக்குமென்றால் நிச்சயமாக விவாதியுங்கள். ஒரு பெண்ணை திரைக்கு வெளியே மதியுங்கள் என்று தான் கேட்கிறேன்.

 

இது மார்பகம், ஆணுறுப்பு, மற்ற பாகங்கள் பற்றிய ரிப்போர்டிங் பற்றியது அல்ல. எந்தச் சூழலில் இந்த ரிப்போர்டிங் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. ஒரு தலைப்பு விற்க வேண்டுமென்பதற்காகவே இப்படி செயல்பட்டுள்ளார்கள். அதுவும் பெண்கள் மீதான பார்வை மாற வேண்டிய அவசரத்தேவை இருக்கும் இந்த காலத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள்.

 

இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன். எல்லாருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. இதை மேலும் கொண்டு சேர்த்தால் அது பெற வேண்டிய கவனத்தைவிட அதிகம் பெற்று, இன்னமும் என் வாதங்கள் திரிக்கப்பட்டும், தவறாக புரிந்துகொள்ளப்பட்டும் தேவையில்லாத தலைப்பு இன்னமும் அதிகமாக விற்பனையாகவே உதவும் என்று எண்ணுகிறேன்.

இவையெல்லாவற்றையும் சொல்லிய பின்னர் நமக்குள் அன்பு, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வோம்.

நன்றாக வாழ்வோம், அடிக்கடி சிரிப்போம், எல்லையில்லாமல் அன்பு செய்வோம் - தீபிகா படுகோன்

தமிழில்: பூ.கொ.சரவணன்

 

thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.