Jump to content

மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை 
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று  
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
 
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் 
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள்  கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
 
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப்  போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று  சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...     
 
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் 
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே  அவள் வேலை
அடுத்த வாரம்  அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
  
பாதிரியார் வந்தவரைய்  பார்த்து முறுவலித்தார்,
கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 
26 அநாதை சிறுவர்கள்,  யார் யார்க்கு என்ன தேசமோ  
கவலையானார், இது பெரும் பொறுப்பு தான்   
நல்லபடியாக எல்லாம் அமைய வேணும்
யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்...
 
சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான்,
அன்னை சலித்துக்கொண்டாள் 
அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்,
பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள்
அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார்,
முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ...
 
உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ...
 
யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த
பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் 
அதை இங்கு தான் வைத்தேனா,
இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா,
தலையை சொரிந்தாள்,
போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி,
கொஞ்சம் கவலையானாள்,
எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்...
 
கைக் குழந்தை சிணுங்கிற்று,
அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் 
குழந்தை அமிர்தம் கண்டது,
அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது,
பால் வெளியே வழிந்தது
அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் ,
கனவுகளோடு சஞ்சரித்து  தூங்கிப் போனார்கள்.. 
 
அழகிய அந்த பெண்
கள்ளம்  கபடம் இல்லாமல் சிரித்தாள்,  
ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் 
குழந்தைகளுக்கு பரிசு தந்தாள்,
முதியவருக்கு போர்வை தந்தாள்,
விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள்,
இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள்,
அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் ..
 
ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி,
ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி...
ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி,
ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ...
அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் 
கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ...
 
எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம்,  
தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் 
சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ,
பரபரப்பானான், செய்தி அனுப்பினான்
அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான்,
உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான்
 
உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று,
மனதுக்குள் கருவிக்கொண்டான், 
எழுந்து சென்று கட்டளை இட்டான்,
இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 
300 கனவுகளை  சுமந்து வந்த மலேசிய பட்சி நான் ..
சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன்     
 
உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய
மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது,          
அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது
அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் ....
எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம்,
நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன்
மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்..
"Missile downed Malaysia Airlines"  CNN, BBC அலறுகிறது!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்துவிட்டது நாளை இடப்படும்....வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் அடுத்த நிமிடத்ததை நினைத்துகொண்டே வாழ்கின்றான்....

Link to comment
Share on other sites

சசி அண்ணா நன்றாக எழுதியுள்ளீர்கள்.   நாளை நம் கையில் இல்லை மீண்டும் நினைவுறுத்துகின்றது இந்த கோர விபத்து.  அந்த விமானத்தில் இருந்த ஒவ்வொருவரது எண்ணங்கள், ஆசைகள், கற்பனைகள் இப்படி பல விடயங்கள் ஒரு நிமிடத்தில் .............? :(

தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பாக்கின்றோம்.

Link to comment
Share on other sites

சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் .

 

 

"உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ..." ------அர்ஜுன் . :icon_mrgreen: 
 
Link to comment
Share on other sites

அடடா...சசிக்கு கவிதை எழுதவும் வருமா? இது உங்கள் முதல் முயற்சியா?

 

கவிதையின் மொழி சர சர வென்று பல இடங்களில் மாறி மாறி வந்து சுவை தருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்க்குமிழிபோல் நிலையற்ற வாழ்க்கை ஆனாலும் அதற்குள் எத்தனை ஆதங்கங்கள். அதிகாலையில் சசியின் கவிதை மனதைக்கனக்க வைத்தது. மரணத்தின் வாசைன மண்ணைத் தொட்ட வேளை எத்தனை எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாகவே அஸ்தமித்துவிட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி உங்கள் ஆதங்கம் புரிகின்றது. மலேசிய விமானத்தின் பரிதாபம் மட்டுமல்ல
இன்னும் எத்தனையோ இழப்புக்கள் உங்களை வாட்டியிருக்கும் எங்களையும் மனம் நோக வைத்திருக்கும்
இருந்தாலும் உங்கள் கவிதை இந்த கொலைக்களத்தை எதிர்னோக்கியவர்களின் பார்வையில் இருந்து வந்தது
மிகவும் வேதனை தருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடச்சுட எழுதின கவிதை போலை இருக்கு :D ...நல்லதொரு ஆதங்க கவிதை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜ வாழ்வின் சம்பவங்களைச் சுமந்து மிகவும் அழகாக நகர்கின்றது, கவிதை....!

 

பச்சை பின்னேரம்...!

 

நன்றிகளும் வாழ்த்துக்களும், சசி....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ... நடந்த ஒரு விமானத் தாக்குதல் என்று அதனை செய்தியாக வாசித்து விட்டுப் போகாமல்,
அதில்... பயணம் செய்தவர்களின்... கனவுகளையும், எண்ண ஓட்டங்களையும்... கவிதையில் கொண்டு வந்து,
எம்மையும்... அந்தச் சோகத்தில், பங்கெடுக்க வைத்தது....

சசிவர்ணத்தின் காலத்துக்கு ஏற்ற... கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மனம் நெகிழ்வோடு அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
செய்தியை அர்ஜுன் தான் முதலில் திண்ணையில் எழுதியிருந்தார், 
பார்த்தபின்னர் மிகவும் ஆதங்கம் அடைந்திருந்தேன்.
மனதில் தோன்றிய உணர்வுகளை கோர்வையாக எழுதினேன் .
கவிதை என்று நினைத்து எழுதவில்லை. 
இந்த எழுத்து உங்களை தொட்டது எனில்; அதை நான் 
பாதிப் பயணத்திலேயே  சடுதியாக பறிக்கப்பட்டவர்களின் 
ஆன்மாவுக்கு அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்.
 
வரிகளை தொட்டுச்சென்ற மற்றும்  கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300.. பேர்.. உடனடியாக நடுநிலையான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு. எந்த விசாரணையும் இன்றி.. இது சர்வதேச குற்றவியல் என்று பட்டமும் சூட்டி விட்டார்கள்.

 

300 அப்பாவிகளின் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது. உலகின் இந்த வருத்தம் புரிகிறது. அதே 40,000 உயிர்களை வன்னியில்.. இந்த உலகம் பலியிட்ட போது..???????! இந்த 300 உயிர்களும் அதனை வேடிக்கை தானே பார்த்தன...பல மில்லியன் உயிர்களோடு சேர்ந்து நின்று..???! என்ற கேள்வியும் சோகத்தின் மத்தியிலும் முளைக்காமல் இல்லை.


ஏக்கம் கலந்த ஆக்கம் சரியான நேரத்தில். நன்றி சசி வர்ணம் அண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சசி ....உங்களது இந்த கவிதை தமிழ்முரசு அவுஸ்ரேலியாவில் பிரசுரமாகியுள்ளது.....http://www.tamilmurasuaustralia.com/2014/07/blog-post_5.html#more

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணிவான நன்றிகள் புத்தன் ...
நான் எழுதிய ஒரு கிறுக்கல்
யார் தயவாலோ எங்கோ ஒரு நாட்டில்
பத்திரிகையில் இடம் பிடித்து இருக்கிறது...
மனசெல்லாம் மத்தாப்பூ போல
சந்தோசம் நிரவி இருக்கிறது..

மிக்க நன்றிகள்...... 

Link to comment
Share on other sites

  • 4 months later...

 

சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் .

 

 

"உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ..." ------அர்ஜுன் . :icon_mrgreen: 

 

ஜேஏஏஏஏஏஏஏ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Link to comment
Share on other sites

மனிதம் பேசிய வரிகள் எனை வருத்துகிறது ...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.