Jump to content

விழிப்புணர்வில் நாம். . .


Recommended Posts

புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே  எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன்.
 
நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/    நுட்பங்கள்
(பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத    வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல்
 
வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அதை  நாம் இலகுவாக கையாண்ட அனுபவங்கள்
 
சிறந்த சேமிப்பு வழிமுறைகள்
 
அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளை இலகுவாக/குறைந்த  கட்டணத்தில் கற்ககூடிய  வழிமுறைகள்
 
பிள்ளைகளின் கல்வி
 
பிள்ளைகள் செய்த தவறுகள் , பிள்ளைகள் செய்யும்  தவறுகளைக் (அறிகுறி) கண்டுபிடித்தல் , அதை நாம் திறமையாக கையாண்ட விதம்
 
நாம் வாழும்  நாடுகளில் உள்ள சென்று பார்பதற்குரிய  அழகிய , ரம்மியமான இடங்கள்.
 
எமது நாடுகளில் வாழும் மற்றய நாட்டு மக்களிடம் இருந்து  நாம் கற்ற நல்ல விடயங்கள்.
 
வைத்தியர்களிடமிருந்து பெற்ற சிறந்த ஆலோசணைகள்
 
நாம் வாழும் நாடுகளில் உள்ள சிறப்பான/ சத்தான/  விரைவக சமைக்கக்கூடிய உணவுகள்.
குழந்தைகள் விரும்பிசாப்பிடக்கூடிய உணவுகள்
 
இப்படி இன்னும் பல விடயங்களில்........
 
நாம் எமது சொந்த அனுபவங்களை அல்லது கேள்விப்பட்ட விடயங்களை , ஆலோசனைகளை  இங்கு எழுதுவோம், இவை நிச்சயம் இன்னொருவருக்கு நல்ல பயனைக் கொடுக்கும்.
சில ஆலோசனைகள் எல்லாருக்கும் பயண்படும், சில குறிப்பிட்ட நாட்டில் உள்ளவருக்கு மட்டும் பயண்படும். எதுவாக இருந்தாலும் எமது அனுபவங்களை எழுதுவோம், அது சின்ன விடயமாக இருந்தாலும் பரவாயில்லலை.
 
நாம் எமக்குள் ஒற்றுமையாக ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து எமது சமூக, பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவோம்.
 
 
(நான் இன்னும் எழுத வேண்டி இருப்பதால் , எனக்கு இந்த திரிக்கு பெயரிட நேரமில்லை (பெயரிடுவத்ற்குரிய கற்பனை வளமும் இல்லை) தயவு செய்து யாராவது இத்திரிக்கு பெயரிடுங்களேன்.
நான் எனது பதிவொன்றை நாளை பதிய முயற்சிக்கின்றேன்.)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அம்சங்களை அடக்கியுள்ள திரியாக தெரிகின்றது.
"புதிய பாதை" எனும் பெயர்  என் அறிவுக்கெட்டியது. இனி நம் ஜாம்பவான்கள் நவநாகரீக பெயர்களுடன் வந்தால் சந்தோசம். :D
 
உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ஆதவன். :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்.நல்லதொரு முயற்சி.நம்மைப் போன்றவர்களுக்கு பல விசயங்கள் அறியக் கூடியதாய் இருக்கும்

Link to comment
Share on other sites

புதிய பாதை என்று ஒரு இயக்கப் பத்திரிகை வந்த மாதிரி நினைவில் இருக்கிறது, தவறாயும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்.நல்லதொரு முயற்சி..........

 

 

1. மனம்  திறந்து பேசலாம்..

.

 

2. வாழ ஒரு வழி ...காண்போம் ..

 

 

3..வாழ்க்கை வழமாக .

 

.4... வாழும் வகை  எப்படி  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்ததும், அறியாததும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்வில் ஏற்படும் பலவற்றை தொட்டுச் சென்று இருக்கிறீர்கள்.

தொடருங்கள்.

 

விழிப்புணர்வில் நாம். . .

நிஜங்களின் வழிகாட்டல்கள்

 

 

 

Link to comment
Share on other sites

அறிந்ததும், அறியாததும்.

 

அறிந்ததும் அறியாததும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.  நானும் இத்திரியில் தொடர்ந்து எழுதுகிறேன்.   வேலைப்பளு காரணமாக இப்போதைக்கு என்னால் விரிவாக எழுத முடியாது.  ஆனால், சின்னச் சின்னதாக எழுத முடியும்.  

 

இத்திரி சமூகச்சாளரம் பகுதிக்குள் வந்தால் பொருத்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தூளி' என்று வைக்கலாம்!

 

தொட்டில் என்றும் பொருள் தரும் இந்த வார்த்தை, சிறுவர்களுக்கான 'வளர்ப்பு முறை' ஆலோசனைகள் பக்கத்திற்குப் பொருத்தமானது!

 

அத்துடன் மற்றும் பிறந்த நாட்டின் சிறப்புக்களையும் 'சுமந்து வர இருப்பதால்', தூளி என்பது பிறந்து வளர்ந்த இடம் என்றும் பொருள் படலாம்! :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

*வைத்தியர்களிடமிருந்து பெற்ற சிறந்த ஆலோசணைகள்
-----

 

ஆதவன் நல்லதொரு முயற்சி.

முடியுமானால்.... பலரும் தமக்கு தெரியாமல்,

மன அழுத்தம் (டிபிரேஷன்) பற்றி பாதிக்கப் பட்டவர்கள் எடுக்கும் மருத்துவ முறைகள்,

அது ஒருவரை ஆட்கொள்ளும் போது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை,

எந்த வைத்தியரிடம் சிறந்த ஆலோசனை பெறலாம்,

இதனை கவனிக்காமல் விட்டால்.... ஏற்படும் விளைவுகள்,

இது ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதை.... எப்படி கண்டு பிடிப்பது போன்ற.....‌

விடயங்கள் பற்றிய தகவல்களை... பகிரும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வளமான வாழ்வுக்கு வழிகாட்டி" எனற பொருள்பட "வளவாழ்வு" என்பது பொருத்தமாக அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி திரிகளிக் அலச வேண்டியதாயிற்றே ஆதவன். முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 " அறிவோம் ஆயிரம்"

Link to comment
Share on other sites

நிலாப் பாட்டி என்று வைக்கலாம்.

நாங்கள் சின்ன வயசிலே இருந்தே நிலவை காட்டி, அங்கெ இருக்கும் பாட்டியை காட்டி தான் எத்தனையோ விடயங்களை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார்கள். அதனாலே நிலாப்பாட்டி என்ற தலைப்பு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

அல்லது அட்சயபாத்திரம் என்றும் வைக்கலாம். அள்ள அள்ள குறையாத கேட்பதை எல்லாம் தரும் பாத்திரம்.



சரி சட்டு புட்டு என்று ஒரு தலைப்பை வைத்து விடயத்தை தொடங்குங்கோ..

Link to comment
Share on other sites

SterilisationsassistentIn (Sterilization assistant)

 

 

நான் எனது மனைவிக்கு வேலை தேடும் போது (சுவிஸ் நாட்டில்) "SterilisationsassistentIn - Fachkunde" (zsva )எனும்  ஒரு துறை சம்மந்தமாக அறிந்தேன். இத்துறை என்னை மிகவும் கவர்ந்திருந்தமையினால் இது சம்மந்தமாக நான் அறிந்தவற்றை , உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

„SterilisationsassistentIn“  அவர்களின் வேலை என்ன?

 

வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும்  கருவிகளை  கிருமிநீக்கம் செய்து, மீண்டும் அவற்றை பயண்படுத்துவதற்கு தயார் செய்தல்.

 

இத்துறையில் உள்ள அனுகூலங்கள்.

 

·         உடல் ரீதியாக மிகவும் இலகுவான வேலை

·         மிகவும் கேள்வி உள்ள ஒரு துறை.

·         ஆர‌ம்ப மாதப் சம்பளமே 4500 - 5000 CHF

·         வைத்தியசாலைகளில் வேலை என்பதனால் பயமற்ற எதிகாலம், சிற‌ப்பான சலுகைகள்

·         மேலும் படித்து அடுத்தடுத்த பணிநிலைகளுக்கு உயரலாம்

·         மிக குறுகிய காலத்தில் இத்துறை சார் கல்வியைக் கற்றுக்கொள்ளலாம்    (2வாரம் பாடசாலை + 150 மணித்தியாலம் செய்முறை)

 

·   கற்பது இலகு, கற்றலின் முடிவுப்பரீட்சை இலகுவானது [கேள்விகளின் கீழ்    தரப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் சரியானதின் கீழ் கோடிடல்(MCQ)]

 

· வைத்தியசாலைகளில் வேலை என்ற படியால்  20% - 100% வரை செய்யலாம். பிள்ளைகள் உள்ள குடும்ப்ப் பெண்களுக்கு ஏற்றது.

 

இந்த வேலையை கற்பதற்கு நீங்கள் இரண்டு வாரம்  அதற்குரிய பாடசாலைக்கு செல்ல  வேண்டும், 150 (4வாரங்கள் )மணித்துயாலங்கள் வைத்தியசாலை ஒன்றில் செய்முறை செய்யவேண்டும்.

 

இத் துறையில் படிப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

 

ஏதாவது மருத்துவத்துறை  சம்மந்தமான வேலைகள் அல்லது, மருத்துவத்துறை தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்க வேண்டும். இந்த தகுதி இல்லாதவர்கள்.  zsva உள்ள ஒரு வைத்தியசாலையில்  ஒரு Schnupperzeit (tag)க்கு விண்ணப்பித்து , ஒரு நாள் அவர்கள் செய்யும் வேலையை பார்த்து அறிய வேண்டும், அதன் பின்னர் அவர்களிடம் praktikum க்கு விண்னப்பிக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பாடசாலைக்கு விண்ணப்பிக்கவேண்டும்

 

இங்கே சுவிசில் இத்துறை சார்ந்த கல்வியை  Aarau இல் மட்டுமே படிக்கலாம், ஒரு மாததிற்கு 2 அல்லது 3 நாட்கள் படி 4 அல்லது 5 மாதங்களில் படித்து விடலாம்.

 

Deutschland இல் இரண்டு வாரத்தில் ஒரே தடவையில் படித்து விடலாம், வசதி உள்ளவர்கள்  deutschland  சென்று படித்து விட்டு இங்கே (சுவிசில்) வந்து praktikum  செய்து விட்டு பணியில் சேரலாம்

 

பின் வருவோர் இத்தொழில் துறைக்கு முயற்சிக்கலாம். என்பது எனது அபிப்பிராயம்

 

·         உடல் ரீதியாக கஸ்ட்டம் இல்லாமல் இலகுவான வேலை செய்ய விரும்புவோர்

·         புதிதாக திருமணம் முடித்து புலம் பெயர் நாடுகளில் வந்து மொழி கல்வியை          கற்றுக்கொண்டிருக்கும் பெண்கள்,

·         இங்கே பிறந்து வளர்ந்து இடையில் படிப்பை குழப்பிவிட்டு கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டிருக்கும் பிள்ளைகள்.

·         Deutschland இருந்து சுவிசில் வேலை தேடுபவர்கள்.

 

இத் துறைசார் கல்வியை கற்கக்கூடிய இடங்கள்

 

(மேலதிக விபரம் தேவைப்படின் இவர்களுடன் மெயிலில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்)

சுவிசில்

http://www.hplus-bildung.ch/bildung/categorieview/medizintechnik

 

deutschland இல்

http://www.dgsv-ev.de/conpresso/karte/index.php?rubric=Ausbildungsorte

https://germany.aesculap-academy.com/go/?action=AkadSearchResultList

 

SterilisationsassistentIn  வேலைத்தளமொன்றின் காணொளி இணைப்பு

https://www.youtube.com/watch?v=H9od3Se7Fk8$

 

 

 

இது சம்மந்தமாக google இல்தேட விரும்புவர்கள்  கீழ்வரும்  சொல்லைப் பாவிக்கலாம்.

Techn. SterilisationsassistentIn - Fachkunde I

 

 „SterilisationsassistentIn“  எனக் கொடுத்து  google translate இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது பின்வருமாறு வந்தது  Sterilization assistant.

 

ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் உங்களது மொழியில் மொழி பெயர்த்து google  இல் தேடிப்பார்க்கலாம்

 

உங்களின் முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த ஒரு தலைப்பு " கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை" ..

எதையும் அறிந்து கொள்வதில் தவறில்லை தானே... :rolleyes: 

Link to comment
Share on other sites

சிக்கனமாக வாகனம் ஓட்டல் 

 

சுவிசில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தன் பின்பு , இரண்டு வகுப்புகளுக்கு(தலா ஒரு நாள்) செல்ல வேண்டும் (wab kurse)  அங்கே முதல் வகுப்பில்  பாதுகாப்பாக வாகனம் ஒடுதல், விபத்துக்களை தவிர்ப்பது சம்மந்தமாக சொல்லித்தருவார்கள்

 

இர‌ண்டாவது வகுப்பில் சிக்கன‌மாக வாகன ஒடுதல் (எரிபொருள் சேமிப்பு) சம்மந்தமாக சொல்லித்தருவார்கள். இர‌ண்டாவது வகுப்பின் போது நாம் அவர்களது காரில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒட வேண்டும், பின்னர் அதே தூரத்தினை நாம் expert சொல்லும் முறைப்படி ஒட வேண்டும். இறுதியில் காரில்  பொருத்தப்ட்டிருக்கும் கணணி expert இன் முறைப்படி ஓடிய போது எத்தனை வீதம் எரிபொருளை நாம் சேமித்தோம் என கணித்துக் காண்பிக்கும். (நான் 22% சேமித்தேன்).

அதன் பின்னர் வகுப்பில்  எவ்வாறு எரிபொருளை சேமிக்கலாம் , அதன் நுட்பங்களை கற்பிப்பார்கள் , அங்கே கற்றவற்றை நான் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் பின்பற்றி பணத்தைச் சேமியுங்கள்.

 

உங்கள் வாகன ரயரின் காற்றழுத்தத்தினை கவனியுங்கள்.

 

ரயரின் அங்கிகரிக்கப்பட்ட காற்றழுத்தத்தினை (ரயரில் எழுதப்பட்டிருக்கும் அல்லது கராஜ்ஜில் கேளுங்கள்)விட 0.2 Bar அதிகமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு 0.2 Bar காற்றழுத்தம் குறையும் போதும் 10%வரையிலான எரிபொருள் இழப்பு எற்படும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் check பண்ணுங்கள், நீண்ட தூர பயணத்திற்கு முன், அதிக சுமை ஏற்றும் சமயங்களில் கட்டாயமாக காற்றழுத்தத்தினை கவனியுங்கள்.

 

Accelerator இலிருந்து காலை எடுங்கள் எரிபொருளை சேமியுங்கள்

 

நீங்கள் பயணிக்கும் வீதியில் சிக்னலில் சிகப்பு ஒளிர்வதனை தொலைவிலேயே கண்டுவிட்டீர்கள், உடனே Accelerator  இலிருந்து காலை எடுங்கள் , சிக்னலின் அருகே செல்லும் வரை  accelerator  அமத்திவிட்டு பின்னர் பிரேக் பிடிப்பதனால் அதிகளவு எரிபொருளை நுகர்கின்றீர்கள்.

 

நீங்கள் 80 km/h வேகத்தில் செல்கிறீர்கள் தொலைவில் 50 km/hக்கு வேகம் குறைக்கப்படுவதைக் காண்கிறீர்கள், உடணடியாக accelerator இலிருந்து காலை எடுங்கள். 50 km/h சைகைக்கு அருகில் சென்று பிரேக் பிடித்து , வேகத்தினைக் குறைக்காமல், ஆரம்பத்திலேயே accelerator இலிருந்து காலை எடுப்பதன் மூலம் வேகத்தினைக் குறையுங்கள்.

இதே போல் தான் roundabout இலும் - roundaboutஇனைக் கண்டவுடன் காலை எடுங்கள்

இதே போல் தான் வீதிகளிலிருந்து திரும்பும் போதும், திரும்ப வேண்டிய இடம் வரும் வரை accelerator  இனை மிதித்து விட்டு பின்னர்  பிரேக் பிடித்து திருப்புவதைத் தவிர்த்து, முன்னரே accelerator இலிருந்து காலை எடுத்து படிப் படியாக வேகத்தைக் குறைத்து தேவை ஏற்படின் சிறிது பிரேக் பிடித்து, அளவான வேகம் எனில் ப்ரெஅக் பிடிக்காமலே திருப்புங்கள்.

 

கூடியளவு விரைவாக கியரைக் கூட்டுங்கள்.

 

மிக விரவாக கியரை உயர் எண்ணிக்கக்கு மாற்றச் சொல்கிறார்கள்.

காரை start செய்து உருளத்தொட்ஙியதும் 2 ஆவ்து கியருக்கு மாற்றச் சொல்கிறார்கள், 25 -30  km/h  இல் 3 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள். 40km/h ஐத் தாண்ட 3 இலிருந்து ஒரேயடியாக 5 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள்.சில கார்கள் இழுக்க கஸ்ட்டப் பட்டால் 4 ஆவதுக்கு மாற்றி 50km/h ஐத் தாண்ட 5 ஆவதிற்கு மாற்றச் சொல்கிறார்கள்.

 

கியரை கூட்ட  முன் நன்கு ரேஸ் செய்யும் பழக்கதை கைவிட சொல்கிறார்கள். ரேஸ் செய்யாமலே கியரை கூட்டுங்கள்(மாற்றுங்கள்)

 

தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்

 

உங்கள் வாகனத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்.

நிறை அதிகரிக்க எரிபொருள் நுகர்வும் கூடும்.

 

புகையிர‌த கடவையில் மற்றும் என்றில்லாமல், சிக்னல்கலிலும் மோட்டாரை  நிறுத்துங்கள்.

 

Link to comment
Share on other sites

நல்ல தகவல்கள்..! நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வருடாந்த மருத்துவ பரிசோதனை (Jahres kontrolle/ Annual health exam )

 

இங்கே சுவிசில் பலர் ஒவ்வொரு வருடமும் ம‌ருத்துவ பரிசோதனை செய்து கொள்வார்கள். நானும் இரண்டு தடவை செய்துள்ளேன். இறுதியாக 2 வருடங்களிற்கு முதல் செய்திருந்தேன். இரண்டு முறையும் மருத்துவ அறிக்கை ok யாக இருந்தது. அண்மையில் 40 வயதினை அடைந்திருந்தேன், 40 வயதின் பின்னர் ஒவ்வொரு வருடமும் Jahres kontroll செய்யுங்கள் என மணைவி சொல்லிக்க் கொண்டே இருந்தா,

 

போன வாரம் மருத்துவ பரிசோதணை செய்திருந்தேன்.

 

இதற்கு 2 நாட்கள் termin/ appointment  தருவார்கள் முதலாவது Termin இல் காலையில் (ஒன்றும் சாப்பிடாமல் வரச் சொல்லுவார்கள் ) சென்று குருதி (ஐந்தாறு tubeகளில் எடுப்பார்கள்) , சிறுநீர் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களதணை lab இற்கு அனுப்புவார்கள், அத்துடன் வைத்தியர்  உடற்பரிசோதனை செய்வார் , இரண்டாவது Termin 4, 5 நாட்கள் கழித்து தருவார்கள் , lab இல் இருந்து வந்த report தொடரர்பாக வைத்தியருடன் கதைப்பதாக இரண்டாவது termin அமையும்.

 

இரண்டாவது Terminஇன் போது வைத்தியர் எனது blood report இணைப் பார்த்து விட்டு என்னை ஒரு வினேதப் பார்வை பார்த்தார் பின்னர் , உங்கள் உடலில் vitamin D மிக மிகக் குறைந்தளவில் தான் இருக்கிறது என்றார்.

உடனடியாக எனக்கு vitamin D ஊசி போட்டார்,  2 மாதத்திற்கு தேவையான vitamin D Tropfen (Drops) தந்தார். கொலஸ்ரோலும் சற்றுக் கூடியிருந்தது. vitamin D குறைந்தால் எலும்புகள் பலவீனம் அடையும், தசைகளிலும் மாற்றம் ஏற்படும். மிக மிக மிக அரிதாக புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் கூட உண்டு என்றார்.

 

இந்த 2 வருடங்களில் எனது வாழ்க்கை முறையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை(ஒரெயொரு மாற்றம் 2 வயதுகள் கூடியிருந்தது) இருந்தும் vitamin D மிகக் குறைந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

இலங்கையர்கள் பொதுவாக உடல் நலத்தில் அக்கறை குறைவு , sports செய்வது குறைவு, அவர்களது உணவு முறையும் சிறப்பானதாக இல்லை என்றார். சுவிசில் மாரடைப்பு ஏற்படும் வீதம், மற்றய இனத்தவருடன் ஒப்பிடும் போது   இலங்கையர் மற்றும் இந்தியர்களுக்கு மிக அதிகம் என்றார். ஒவ்வொரு வருடமும் மருத்துவ பரிசோதனை (Jahres kontrolle) செய்து கொள்ளச் சொன்னார்.

 

உண்மயில் எனது வைத்தியர் கூறியதணைத்தும் உண்மையே, நாம் எமது உடல் நலத்தில் அக்கறை குறைவு .

நாம் ஒவ்வொரு வருடமும் எமது குடும்ப வைத்தியரிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும். இதே போல் பெண்களும் ஒவ்வொரு வருடமும் குடும்ப வைத்தியரிடமும்,  குழந்தை மகப்பேறு/பெண்கள்  வைத்திய நிபுணர் ( Frauenarzt/ Gynecologist)  இடமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும்.

(இங்கே சுவிஸ்காரர் பொதுவாக‌ இப்படி தான் செய்கிறார்கள்)

(நாம் சீராக sports செய்து, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடாக இருந்தால் 2,3 வருடங்களிற்கு ஒரு முறை செய்யலாம் அல்லது வைத்தியரின் ஆலோசணைப்படி செய்யலாம்)

 

நான் இப்போது எனது மற்றும் மனைவியின் குடும்ப வைத்தியரிடமும், மனைவியின் குழந்தை மகப்பேறு / பெண்கள் வைத்திய நிபுணர் (Frauenarzt / Gynecologist) இடமும் எமது பெயரினை வருடாந்த மருத்துவ பரிசோதனைக்காக பதிந்து வைத்துள்ளேன். அவர்கள் ஒவ்வொரு வருடமும் எமக்கு தொலைபேசி செய்து ஞாபகப் படுத்துவார்கள் (Termin (appointment) வைப்பார்கள்.)

 

 

நாம் எமது காரை ஒவ்வொரு வருடமும் service க்கு விடுவோம் ஒவ்வொரு10000 km க்கும் service க்கு விடுவோம். ஆணால் எமக்காக ஒவ்வொரு செக்கணும் இயங்கும் உடலைக் கவனிக்க‌ மாட்டோம்.

 

"நான் என்ர உடம்பில அக்கறை இல்லை"எனும் கூற்றை விட முட்டாள் தனமான கூற்று ஒன்று உலகில் உண்டா?

 

எதையும் வருமுன் காப்போம்!

 

நாம் எமது உடலை நேசிப்போம் , எமக்காக இல்லாவிடினும் எம்மைச் சார்ந்து உள்ள எமது குடும்பத்தினருக்காகவாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

நல்லதொரு திரி ஆதவன்மூலம் பிரகாசிக்கிறது. தொடருங்கள்.
 
இத்திரியிலிருந்து ' இன்பத்தின் இரகசியங்கள் ' வெளிப்படுகின்றன. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள திரி.தொடருங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.