Jump to content

திருமலை மூதூர் அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்


Recommended Posts

 
DSC00652(1).JPG

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமான பணிகள் அப்பகுதியில் இருக்கும் புத்த பிக்குவின் தலைமையில் வந்த குழுவினரின் தலையீட்டினையடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை(19) கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், முற்றும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் சென்று நிலைமையினை பார்வையிட்டனர்.

தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

DSC00659(1).JPG

DSC00674.JPG

DSC00685.JPG

DSC00704.JPGDSC00709.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/107390-2014-04-19-11-43-48.html

Link to comment
Share on other sites

ஆன்மீகப் பலமல்ல! ஆயுதபலமே மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது!!.

Link to comment
Share on other sites

பிக்குகள் எதிர்ப்பு: இந்து ஆலய புனரமைப்புப் பணிகள் நிறுத்தம்

 

திருகோணமலை மாவட்டத்தில் இந்து ஆலயமொன்றின் புனரமைப்புக்கு அரசாங்க அதிபரால் அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கடும் போக்குடைய பௌத்த பிக்குகளினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

140420153233_trinco_temple_512x288_bbc_n

ஆலயப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

 


அகத்தியர் வழிபாட்டு மையம் எனப்படும் இந்த ஆலயத்தில் அகத்திய முனிவர் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி அகத்தியர் வழிபாட்டு தலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடை காரணமாக ஆலய புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உடமைகளுக்கு காவல் துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் இன வன்முறைகளையடுத்து கடந்த காலங்களில் இந்த ஆலயம் கைவிடப்பட்டு வழிபாடுகளும் தடைப்பட்டிருந்தன.

போருக்கு பின்னர் ஆலய நிர்வாகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் தயாரான போது அண்மித்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகள் தடைபட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அரசாங்கம் அனுமதி

140420153644_trinco_temple_puja_224x280_

அரச அனுமதியுடன் பணிகள் தொடங்கின

 

சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ஆர். டி. சில்வா நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு நாட்களால் அந்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகளை தாம் நிறுத்திக் கொண்டதாக ஆலய பரிபாலன சபை தலைவரான வேலுப்பிள்ளை தவராசா கூறுகின்றார்.

ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த மத வழிபாட்டு தடயங்களை கொண்ட தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட இடமென பௌத்த பிக்குகளினால் கூறப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

காணி அபகரிப்புடன் தொடர்புடைய நபர்களே ஆலய புனரமைப்புக்கும் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அரசாங்க அதிமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இதை விவாதிப்பதற்கான முன்னறிவித்தலை எதிர்கட்சித் தலைவர் சி தண்டாயுதபாணி விடுத்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140420_trincotempleissue.shtml

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ஆதவன் .

பிக்குகளின் எதிர்ப்பின் காரணமாக மூலஸ்தானத்தையும் ,அதனுடன் சேர்ந்த மண்டபத்தையும் கொங்கிரீட் மூலம் கட்டுவதற்கு முடிவெடுத்து ,அதற்கு 25லட்சம் தேவைப்பட்டது .இதில் கணிசமான நிதியை சேர்த்தும் கொடுத்திருந்தோம் .இதை அரசியலாக்காமல் அடக்கமாக முன்னெடுப்பதால் முன்னைய பதிவுக்கும் கருத்திடவில்லை .வழக்கமாக கோவில்களுக்கு ஆதரவளிப்பதில்லை ,
இது நிலத்தோடு சம்பந்தபடியால் ஆதரவு கொடுக்கின்றோம் .

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு நேரடித்தொடர்பை பரிபாலன சபைத் தலைவருடன் ஏற்படுத்தித் தரமுடியும்.

 

.http://www.yarl.com/forum3/index.php?showtopic=137616

Link to comment
Share on other sites

  • 2 months later...

நிறுத்திவைக்கப்பட்ட கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன .

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம். செய்வார்களா புலத்து கோவில் காளைகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து காளைகள் கோவிலை கட்டி தமது வருமானத்தை என்றாலும் பார்கிறார்கள்.
சும்மா இருந்து சொறிவதை சோம்பேறிகள்தான் செய்வார்கள்.
பஞ்சாயத்து தலைவர்கள் தாம் ஒரு கோவிலை கட்டி வருமானம் சேர்த்து கொஞ்சத்தை அங்கே அனுப்பி காட்டினால்.
மக்கள் அவர் செய்கிறார் ஏன் நீங்கள் செய்யவில்லை? அப்படி என்று கேட்க உதவியாய் இருக்கும்.

நல்லது செய்யும் எண்ணம் மக்களுக்கு இருந்தால்? ஏன் கோவிலில் கொண்டுபோய் காசை போடுகிறார்கள்? அங்கே என்னா கடவுளா காசை கைநீட்டி வாங்குகிறார்?
கோவிலை நிர்வகிப்பவர் வயிறு வளர்க்கத்தான் என்பது யாவரும் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் கட்டும் அளவுக்கு மகிந்த எங்களுக்கு எலும்புத்துண்டு போடுவதில்லை. அளவுச்சாப்பாடுதான்.

கோவில்கள் எல்லாம் charity யாகவே பதியப்படுள்ளன. புலத்தில் கொடி பிடிக்க ஆள் அம்பு சேனையை திரட்டும் கூட்டம் அப்படியே போய் ஆளுக்கு ஒரு ஆயுள் சந்தா எடுத்தா அடுத்த வருடமே கோவிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

கொண்டுவந்தா -வயிறு வளக்காமல் ஊரை வளக்கலாம். ஆனா கொடி பிடிக்கும் கூட்டத்துக்கு இதில் ஏது அக்கறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிப்பவர்கள் ஜெனநாயகம் குறைந்த அளவிலாவது மதிக்கப்டும் நாட்டுகளில். கொடி பிடித்து தாம் தனித்துவமானவர்கள் எமக்கு நிலம் கொடி என்று எல்லாம் இருக்கிறது என்ற கருத்தை என்றாலும் வெளி உலகிற்கு சொல்லிவருகிறார்கள். வெளி உலகும் அதை தமிழர் கொடி என்று செய்திகளில் சொல்லிவருகிறது.

கொடி பிடிப்பவன் (கொடி பிடித்த குற்றத்திற்கு) .... கோவில் கட்டி காசு அனுப்ப வேண்டும்............. அவனே நாடில் போய் சண்டை செய்ய வேண்டும்....... குண்டு சுமந்து கரும்புலியாக வேண்டும்.
அவனது மனைவி பிள்ளைகளும் நிம்மதியாய் இருக்க கூடாது....
ஊரார் பிள்ளைகளை சண்டைக்கு சேர்கிறவர் தனது பிள்ளைகளை அனுப்பல்லமே? பஞ்சாயத்து மேதாவிகள் கேள்வி கேட்பார்கள்.

இத்தனையும் முள்ளி வாய்க்கால் வரை நடந்துள்ளது. குடுமபத்துடன் இறந்தும் போனார்கள்.

பஞ்சாயத்து தலைவர்கள்..... இன்னமும் பழைய பஞ்சாங்கத்துடனே வாழ்வை நடத்துகிறார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன்? அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்குதான் இரத்தமா??

நான் ரோட்டு ரோட்டாக கொடி பிடிப்பேன்..... புலிக்கொடி எனது தேசிய கொடி.
காசு அனுப்புவது அனுப்பாதது எனது இஸ்டம்.

அடுத்தவனுக்கு பஞ்சாயத்து வேலை பார்ப்பவர்கள் ஏதும் உருப்படியாக செய்துகொண்டு அடுத்தவனுக்கு பஞ்சாயத்து பண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்துக்காரர்கள் செய்வார்கள் சொல்லமாட்டார்கள். ஒண்டுக்கும் உதவாமல் கொடிபிடித்து திரியும் கூட்டம் - கொடிபிடிப்பதையே ஒரு சாதனையாக்கி பெருமை பேசும் ஆனால் ஓரணியில் திரண்டு கோவில்களை வசப்படுத்துவது போன்ற நல்ல வேலைகளை செய்யாது.

இதற்க்கு நல்ல உதாரணம் Gari மேலே செய்துள்ள நற்செயலும். இங்கே வக்கணையாக சசைபாடுபவர்களின் சோம்பேறித்தனமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் செய்வதற்கு கொடி பிடிப்பவர்கள் ஒண்டும் கள்ள காதல் செய்யவில்லை.
சரியானதை செய்பவன் ஒழித்து செய்ய தேவை இல்லை.
நாங்கள் பிடிப்பது புலிக்கொடி ...... கொஞ்சம் என்றாலும் புலிக்குணம் வந்துவிடுகிறது.
30 வருடமாக சொல்லிவிட்டு செய்து பழகி விட்டது.

நல்லவேலை செய்ய போனவர்கள் சுமந்துபோன பழிகளை கொடி பிடிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
இனி என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு  தெரியும்.

கூட தெரிந்தால்..... முதலில் போய் செய்யவும். இதைதான் எழுதுகிறேன்.
இல்லை இதை மட்டுமே எழுதுகிறேன்.

வெள்ளி சனி இரவுகளில் இப்போ நாங்களும் சொல்லாமல் செய்ய பழக தொடங்கிவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதை சொல்லிக்காட்டுவது அதுவும் பலபேர் உயிர்தியாகம் செய்த ஒரு விடயத்துக்கு நாங்கள் கொடிபிடிப்பதை போன்ற ஒரு ஜுஜுபி விடயத்தை ஏதோ உலக சாதனை மாதிரி கதைப்பதை நான் ஒரு கீழதரமான இழிசெயலாகவே கருதுகிறேன், கருதுவேன்.

நீங்களும் இப்போ சனி ஞாயிறு நாளில் செய்வதை சொல்லுவதில்லை எண்டு சொல்கிறீர்கள். வெல்டன் கீப் டி அப்.

இந்த மேன்மையான குணத்தை வார நாட்களுக்கும் விஸ்தரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்பவன் .... செய்ய முயற்சிப்பவன் தான்

எது இழிவு? எது நெளிவு என்று?
முடிவு செய்ய முடியும். சும்மா இருந்து பஞ்சாயத்து பண்ணுகிறவர்களுக்கு....... அதை தொடர்வதுதான் நல்லம்.

எதை எப்போது எங்கே விஸ்தரிப்பது என்பது. உலக போக்கு சார்ந்தது.
உரிய நேரத்தில் பூமிக்கு வருவதும்.... இல்லமால் போவதும். கடவுளுக்கு உரியது.
அதை கடவுள்கள் செய்துவிட்டு போனார்.

Link to comment
Share on other sites

கோஷான் அண்ணா, இந்த திரிக்குள் எதற்கு கொடி பிடிப்போரை இழுக்கிறீர்கள்?

Gari அண்ணா முன்பிலிருந்தே பலவற்றை செய்து வருபவர்.

நீங்கள் ஏதாவது கோயிலை கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறீர்களா? அது ஏன் கொடி பிடிப்பவர்கள் தான் செய்ய வேண்டும்? நீங்கள் செய்பவற்றை வெளியில் சொல்வதில்லை என்றால் நல்ல விஷயம். ஆனால் கொடிபிடிப்பவர்கள் மட்டும் சொல்லி விட்டு செய்ய வேண்டுமோ. சொல்லாதவர்கள் எதுவுமே செய்யாதவர்கள் என்று எப்படி எழுந்தமானமாக கூறுவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

Link to comment
Share on other sites

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம்.

இந்த கருத்து ஏற்புடையது. இதற்கு புலம்பெயர் தேசங்களிலுள்ள கோவில் நிர்வாகங்களுடன் தான் கதைக்க வேண்டும். அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா இல்லையா என்று தெரியாது.

ஆனால் என்னதான் கோவிலை கட்டி முடித்தாலும் அதை அரசாங்கம் தரைமட்டமாக்கவோ புத்தரை அவ்விடத்தில் வைப்பதற்கோ கூட வாய்ப்புள்ளது. எனவே கோவிலை கட்டுவதால் நில உரிமை காக்கப்படும் என சொல்ல முடியாது. தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தாலே இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆனாலும் ஒரேதாக அழிய விடுவதை விட தற்காலிகமாக என்றாலும் தக்கவைக்க இந்த முயற்சி உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

Link to comment
Share on other sites

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. கொடி பிடிப்பவர்கள் பலரும் கூட இதே போன்ற மனநிலையில் இருக்கலாம். எனவே எதற்கு அவர்கள் மட்டும் இவ்வாறு செய்ய வேண்டும்?

கொடி பிடிப்பவர்களும் தனிமனிதர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமே ஒன்று சேர்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பலர் மக்களுக்கு உதவியும் செய்கிறார்கள்.

கொடி பிடிப்பவர்கள் கொஞ்ச பேரிட்டை காசு சேர்த்து அதை முறையாக கையாண்டு கொண்டு தனது சொந்த உழைப்பில் கார் வாங்கினாலே சேர்த்த காசை சுருட்டி கார் வாங்கி விட்டார்கள் என்று கூறுவதற்கும் ஆட்கள் வருவார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் இப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது.

கொடி பிடிப்பதிலும் நோக்கம் உள்ளது. தமிழீழம் பற்றி ஏனைய இனத்தவர் புரிந்து கொள்ளவும் தமிழர்களின் கொடி புலிக்கொடி என்பதை சர்வதேசமயப்படுத்தவும் புலிகள் மக்களுக்காகவே போராடியவர்கள் என்பதை அனைத்தும் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேசத்தின் முன் எம் மக்களின் விருப்பை ஆதாரபூர்வமாக தெரிவிக்கவும் எம்மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதை எடுத்துரைப்பதற்கும் பயன்படுகிறது.

புலம்பெயர் போராட்டங்களின் போது கொடி பிடித்தாலும் இறுதியில் மனு கொடுத்தே போராட்டத்தை நிறைவு செய்கிறார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் அரசியல் ரீதியாக தொழிற்படுகிறார்கள். புலம்பெயர் தேசத்தில் அரசியல் ரீதியாக தொழிற்படுபவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

நீங்களும் ஆட்களை சேர்த்து பலவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

அப்படியானால் எதற்கு வருட வருமானத்தில் 5% ஐ கொடுக்கிற கதை எழுதினீர்கள்?

புலிப்பினாமிகள் என்று இங்கும் நீங்கள் எழுந்தமானமாக தான் கூறுகிறீர்கள். சும்மா கண்டபடி கருத்து வைக்கிறதை நிறுத்துங்கள்.

கோவில் இடிக்கப்பட்டால் மோடி கூட்டத்திற்கு சொல்லி என்ன பயன்? அப்படியே மதப்பற்றில் சிங்களவனுடன் சண்டை போட்டு கோவிலை மீட்டுத்தருவார்களாக்கும்.

ஏற்கனவே இடிக்கப்பட்ட பல கோவில்கள் தான் உள்ளனவே. அதுபற்றி வாய்திறக்காத மோடி இந்த கோவிலை இடித்தால் மட்டும் ஏதும் செய்து விடுவாராக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்கிறதை விட்டிவிட்டு இந்தியாவில் இருக்கும் பஜ்ரங்தள், சிவசேன, ஆர்எஸ் எஸ் இப்படி அமைபுகளை இந்துதுவா ரீதியில் அணுகினால் எவ்வளவோ சாதிக்கலாம். இதுவரை எம்தரப்பில் இடிக்கப்படும் கோவில்களை, கிழக்கின் நிலப்பறிப்பை பற்றி யாராவது இந்த அமைப்புகளுக்கு முறையாக சொல்லி லாபி பண்ணியிருக்கோமா? அப்படி ஏதும் செய்யாமல் அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்பதில் நியாயம் இல்லை.

லண்டனில் எனக்குத்தெரிய எல்லா கோவில்களும் முள்ளாள் புலிப்பினாமிகளினுடயதே.

Link to comment
Share on other sites

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு நானும் புலம்பெயர் போராட்டத்தில் கொடி பிடித்தால் என்னிடமும் ஆள் பலம் இருக்கு என்று சொல்வீர்களோ? அமைப்புடன் சேர்ந்து இயங்குவோர் சிலர். அமைப்பு சாராமல் இயங்குவோர் பலர்.

அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் நிதி ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது.

கொடி பிடிச்சாப்போலை காசு கேட்டவுடன் தூக்கிக்கொடுக்கிற ஆட்கள் அல்ல தமிழர்கள். புலிகள் ஆட்சி காலத்தில் புலம்பெயர் மக்கள் பணம் கொடுத்ததற்காக இப்பொழுதும் கொடுக்கிறார்கள் என்றோ கொடுப்பார்கள் என்றோ நீங்கள் நினைக்க கூடாது.

பணம் சேர்ப்பதே பெரும் கஷ்டம் என்ற நிலை தான் இன்று. அப்படியும் பணம் சேர்க்க வந்தால் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார்கள் என்று பழிச்சொல் கேட்க வேண்டி வரும். அப்படியிருக்க எதற்கு கொடிபிடிப்பவர்களுக்கு இந்த வேலை? சில விஷயங்களுக்கு மட்டும் உங்களுக்கு கொடி பிடிப்பவன் தேவைப்படுது. மற்றப்படி அவர்களை பற்றி ஒரே நக்கலடி.

நீங்கள் பலரை சேர்த்து செய்ய வேண்டுமென்றில்லை. உங்களால் முடிந்த நபர்களை சேர்க்கலாம். அதே போல் கொடி பிடிப்பவர்களும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது சிறு சிறு நண்பர்கள் குழாமாக சேர்ந்தோ அமைப்புகளுடன் சேர்ந்தோ ஏதோ செய்யட்டும். நான் எதுவும் செய்ய மாட்டன், எனக்கு ஆட்பலம் இல்லை என்று சொல்லிக்கொண்டு கொடிபிடிக்கிற கூட்டம் ஏன் செய்யேல்லை என்று கேள்வி கேட்கிறதை இனியாவது நிறுத்துங்கோ.

தமிழர்களின் கொடி புலிக்கொடி தான். புலிகள் மக்களுக்காகவே போராடினார்கள். உயிர் துறந்த போராளிகள் மற்றும் மக்களால் தான் இன்று சர்வதேசம் வரை எமது பிரச்சினை சென்றுள்ளது. நாங்கள் புலிக்கொடியை தான் சர்வதேசத்தின் முன் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வேறு கொடியை அல்ல. சோழர்களின் கொடியும் புலிக்கொடி தான். புலிகளின் கொடியும் புலிக்கொடி தான். மக்களின் கொடியும் புலிக்கொடி தான்.

புலம்பெயர் தமிழர்கள் பிடிக்கும் புலிக்கொடி "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற வாசகத்தை கொண்டிராத கொடி. அதை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொடி பிடிப்பதை நிறுத்தினால் மட்டும் சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் என்பது தவறு. சர்வதேசம் தனது நலனை வைத்தே அனைத்தையும் முடிவெடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னால் செய்யமுடியாது கொடிபிடிக்கும் கூட்டம் செய்யாட்டும் எண்டு சொல்லவில்லை. என்னால் என்ன முடியும் என்பதில் எனக்கு தெளிவு இருக்கு நான் அதை செய்கிறேன். என்னால் என்ன முடியாது என்ற தெளிவும் இருக்கு அது கொடிக்கூட்டத்தால் முடியும் எண்டு நினைக்கிறேன். அதுதான் செய்யுங்கோ எண்டு சொல்லுறேன். குதிரையை குளத்துக்கு கூட்டிப்போகதான் முடியும் தண்ணி குதிரையா பாத்து குடிச்சாதான் உண்டு.

கொடியை பொறுத்தவரை நீங்களும் "புலி அழிந்தால் தமிழரும் அழிவோம்" நிலைப்பாட்டில் உள்ள ஒருவர்தான் சகோதரி. உங்களாலும் புலிகளை ஒதுக்கி விட்டு முன்னேற முடியவில்லை. கடந்த காலத்தின் கைதிகளாக, உணர்சிவசப்பட்டு நீங்கள் கொடியை விட மறுக்கிறீர்கள். சபேசன் சொல்வது போல் "மீசை வச்சா சந்த்ஹிரன், மீசை எடுத்தா இந்திரன்" எனும் உங்கள் கொடி வியாக்கியானத்தை புலிசர்ர்பிலாத தமிழரே ஏற்கதயாரில்லை, உலக நாடுகள் என்ன முட்டாள்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்போ சோழனின் பக்கவாட்டில் பாயும் புலிக் கொடியை, பாண்டியனின் மீன்கொடியை அல்லது ஒரு தனிக்கொடியை செய்து பிடியுங்கோவன். ஒரு இயக்கத்தின் கொடியில் பெயரையும் சன்னத்தையும் நீக்கிவிட்டு நான் அவனில்லை எண்டா யார்தான் நம்புவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.