Jump to content

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று...
 
------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
நாசித்துவாரங்களை நனைத்த 
மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை...
 
காவுகொடுத்த குட்டித்தீவு 
காய்ந்து கிடக்கிறது 
குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு...
 
வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு 
நட்பின் வாசத்தை தம் வேரிலும்
துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் 
சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்..
 
நண்பர்கள்
 
கேள்விகள் அற்று 
பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்...
 
31/10/2013
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
உன் காதலோடு இருந்த கணமொன்றில் உதிர்ந்த 
கண்ணீர்த் துளியின் ஸ்பரிசங்கள் உறைந்த கன்னங்கள்....
 
உன் நினைவுகளால் நிறைந்த இதயம்... 
 
உதடுகளை அழுத்தும் என்றோ ஒருநாள் நீ கொடுத்த முத்தங்களின் 
ஈரம் ....
 
என்று 
 
வாழ்தல் முழுதும் நிறைந்து கிடக்கின்றன உதிர்ந்து போன நம் காதல் கணங்கள்...
 
காயங்கள் தாங்கிய பிறை நிலாவுடன் 
கடந்து செல்கிறது உன் அருகற்ற இன்னுமொரு நீள இரவு....
 
31/10/2013
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
 
இரவில் தொடங்கி இரவில் முடிந்த நாட்களைப்பற்றிப்பேச...
 
இழப்பையும் துயரத்தையும் எங்கு குவிப்பது என்று தெரியாமல்
விக்கித்திருக்கும் சனங்களைப்பற்றிப்பேச...
 
முகத்திலும் மார்பிலும் வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு 
வெட்டரிவாளுடன் சூழ்ந்த மானுடத்தின் சிறுமைபற்றிப்பேச...
 
ஆட்காட்டிகள் தொலைந்த வயலோரங்களைப்பற்றிப்பேச..
 
தலைமுறைகள் தொலைந்த வீடுகளைப்பற்றிப்பேச...
 
கடவுளர்களும் பிசாசுகளும் இணைந்து செய்த 
இனப்படுகொலையைப்பற்றிப்பேச...
 
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
 
கவிதைகளாய்...
 
02/11/2013
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி அக்கா யாயினி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1452280_10151797772029891_714711805_n.jp

 

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

 

02/11/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1453421_10151805001519891_1551760862_n.j

 

நள்ளிரவு தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன
நாலைந்து பேருந்துகளும் நம் காதல் நினைவுகளும்...

வெளியே...
மெல்லிய இந்த இரவை அணைத்தபடி 
புல்லின் நுனியில் பூத்த பனிமலர்கள் சிலிர்க்கின்றன...

தாகத்துடன்
குளிர்காலத்தின் கடைசி இலையையும் உதிர்ப்பதற்க்காய் 

காத்திருக்கின்றன ஓர்க் மரங்கள்...

கோடை இன்னும் துலங்கவில்லை...

ஆயினும்..

உள்ளே..
பின்னிரவில் சாளரங்களை ஈரமாக்கும் பனிக்காற்றை 
ஆவியாக்குகிறது நம் மூச்சின் வெம்மை...

நள்ளிரவிலும்
நமைக்கண்டு நாணிப்போலும்
மேகங்களைப் போர்க்கத்தொடங்குகின்றன 
வெட்கத்துடன நட்ச்சத்திரங்கள்.....

இனியென்ன..
தூங்கிக்கிடக்கும் என் வாலிபங்கள் மீது 
துப்பட்டாவாய் உன் வதனங்கள் படரட்டும்...

உன்னையும் என்னையும் சேர்த்த
காதல் வெளியில் பூக்களாய் நம் முத்தங்கள் சொரியட்டும்...

வா..

இந்த இரவின் ஒவ்வொரு நாழிகையிலும் 
உன் பெயரையும் என் பெயரையும் எழுதிவைப்போம்...

 

05/11/2013

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1460129_10151817838499891_1596988061_n.j

 

முன்பெல்லாம் அவர்களுக்கு ஓவியங்களாய் வனையப்பட்டிருந்தது காலம்....

பின் ஒரு பெருங்கோடையில் எல்லாமே வற்றிப்போனபோது 
மரங்களற்ற வெயில்க்காட்டில் தனித்தார்கள் அவர்கள்.. 

பறக்கத் துடிக்கும் சிறகற்ற பறவை ஒன்றின் இயலாமையுடன் முடங்கிப்போனது வாழ்வு... 

நிறைவின் வசீகரமும் குதூகலமுமாய் துலங்கிய நாட்கள் தொலைந்தன.. 

வாழ்வு வெளியை மூடிக்கவிழ்ந்த இலையுதிர்காலம் முழுவதையும்
நிறைத்தன வலிகள்..

இலைகள் உதிர்த்த சூனியத்தின் தனிமையுடன் 
பொழுது புலர்வதும் சாய்வதுமாயானது நாட்களுக்கு..

கனவுகளற்ற நெடுந்தூக்கத்தில் உறைந்துபோனது வாழ்வு...

பின்...

சுய நலம் மிகுந்த கோடை ஒன்றில்
அட்டூழியம் செய்த பெரும் இடியில் 
எஞ்சிய வாழ்வும் சிலுவையில் அறையப்பட்டது..

யாரும் கண்டுணராதபடிக்கு
புன்னகையால் வலிந்து இழைக்கப்பட்ட திரைகளின் பின்
புதைக்கப்பட்டது நீதி....

காலமோ விரட்டும்...

எனினும் நீதிக்காய்..

அச்சிறு இதயங்களின் கண்ணீரை உறிஞ்சி..
அவர்களின் இருள்விலகாத விழிகள் வாங்கி..
பெருமரங்களின் ஆழ ஓடிய வேர்கள் ஊடாக
மலைமுகடுகளின் பொறுமையுடன் காத்திருக்கிறது.... 

ஒரு இன அழிப்பின் துயர்க்கதை...

 

09/09/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாக் கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் அருமையாக உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு ஒவ்வொரு கவிதையாக பச்சை போட வசதி கிடையாது அதனால போடல.... ஆமா இன்னாம்மா கண்ணு இப்பிடி அசத்துறே....பாராட்டுகள்... அடேய் தம்பி எழுதிட்டே இரு நான் வாசிச்சிட்டே இருக்கேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1453421_10151805001519891_1551760862_n.j

கவிதைகள் எல்லாம் அருமை!

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள், குமுறல்கள், அங்கலாய்ப்புகள் என்ற வரிசையில் கவிதை வரிகள் நகர்கின்றன!

 

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள், என்பதற்கிணங்கவே  நிகழ்வுகள் அரங்கேறுகின்றன!

 

பேய்கள் உறங்குகின்ற பொழுதொன்றில்,

பொய்கள் மரணிக்கின்ற பொழுதொன்றில்,

நீதியும் ஒரு நாள் விழித்தெழும்!

 

தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தம்பி!

Link to comment
Share on other sites

உணர்வுகளை அழகாக தொகுப்பதில் நன்கு வளர்ந்துவிட்டீர்கள். என்னும் வளர வாழ்த்துக்கள். இவ்வாறான படைப்புக்கள் மின்நூலாகவேனும் தொகுத்திருப்பது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கவிதைகளுமே அருமை. வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா :)

நன்றி ஜீவா..

அருமை சுபேஸ் அண்ணா 

 

நன்றி கரன் அண்ணா..

கவிதைகள் அருமையாக உள்ளன.

 

நன்றி சுமே அக்கா..

சுபேசு ஒவ்வொரு கவிதையாக பச்சை போட வசதி கிடையாது அதனால போடல.... ஆமா இன்னாம்மா கண்ணு இப்பிடி அசத்துறே....பாராட்டுகள்... அடேய் தம்பி எழுதிட்டே இரு நான் வாசிச்சிட்டே இருக்கேன். :rolleyes:

சரி அக்கா :D .. நன்றி அக்கா...

Link to comment
Share on other sites

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

உங்கள் கவிதை வாசிக்கும் கணங்களில்.....

 

வார்த்தைகளின் ஆளுமை மனதை லயிக்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1452280_10151797772029891_714711805_n.jp

 

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

 

02/11/2013

 

 

 

முதல் மூன்று வரிகளிலேயே ‘வாழ்தலை புலப்படுத்தி விட்டீர்கள்.!! கவிதைகள் நிறைந்த தேனீர் இருந்தால்!! வேறெதுவும் தேவையே இல்லை... உங்கள் நினைவுகள் இனிப்பூற்றிப்போகின்றன....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் எல்லாம் அருமை!

 

 

 

நன்றி அண்ணா...

 

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு!  :wub:

 

 

லொள்ளு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள், குமுறல்கள், அங்கலாய்ப்புகள் என்ற வரிசையில் கவிதை வரிகள் நகர்கின்றன!

 

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள், என்பதற்கிணங்கவே  நிகழ்வுகள் அரங்கேறுகின்றன!

 

பேய்கள் உறங்குகின்ற பொழுதொன்றில்,

பொய்கள் மரணிக்கின்ற பொழுதொன்றில்,

நீதியும் ஒரு நாள் விழித்தெழும்!

 

தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தம்பி!

 

நிச்சயமாக.. நன்றி அண்ணா..

உணர்வுகளை அழகாக தொகுப்பதில் நன்கு வளர்ந்துவிட்டீர்கள். என்னும் வளர வாழ்த்துக்கள். இவ்வாறான படைப்புக்கள் மின்நூலாகவேனும் தொகுத்திருப்பது நல்லது. 

 

நன்றி அண்ணா.. எல்லாப்பதிவுகளையும் எனது புளொக்கில் பதிந்திருக்கிறேன் அண்ணா..

Link to comment
Share on other sites

கவிதைகள் எல்லாம் அருமை!

இந்தப்படமும் ரொம்பவும் நன்னாத்தான் இருக்கு! :wub:

எனக்கும் கண்ணைக் குத்திவிட்டது.. :rolleyes: அதாவது படத்தின் அந்த டல் கலர் கண்ணைக் குத்திவிட்டது எண்டு சொல்ல வந்தன்.. :D

Link to comment
Share on other sites

உங்க எழுத்துக்கள்தான் என்னையும் எழுத தூண்டியது அண்ணே அருமை கவிதை அனைத்தும் தொடர்த்து எழுதுங்கோ இடையில காணமல் போறியள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

உங்கள் கவிதை வாசிக்கும் கணங்களில்.....

 

வார்த்தைகளின் ஆளுமை மனதை லயிக்க வைக்கிறது.

நன்றி அண்ணா.. 

முதல் மூன்று வரிகளிலேயே ‘வாழ்தலை புலப்படுத்தி விட்டீர்கள்.!! கவிதைகள் நிறைந்த தேனீர் இருந்தால்!! வேறெதுவும் தேவையே இல்லை... உங்கள் நினைவுகள் இனிப்பூற்றிப்போகின்றன....

 

நன்றி அக்காள்.. 

உங்க எழுத்துக்கள்தான் என்னையும் எழுத தூண்டியது அண்ணே அருமை கவிதை அனைத்தும் தொடர்த்து எழுதுங்கோ இடையில காணமல் போறியள் :)

 

சரிங்கண்ணா..  :D

எனக்கும் கண்ணைக் குத்திவிட்டது.. :rolleyes: அதாவது படத்தின் அந்த டல் கலர் கண்ணைக் குத்திவிட்டது எண்டு சொல்ல வந்தன்.. :D

 

நம்பீட்டம்..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1424461_10151823820824891_1120948777_n.j

 

விழித்துக்கிடக்கும் இரவுப்பொழுதுகளில் நினைவுகளின் சாளரங்களூடு புகுந்துவிடுகின்றன நம்காதல் ஞாபகங்கள்...

உயிர் உயிர் உயிர்க்க எத்தனை தடவைகள் காதல் செய்திருப்போம்....

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் சுமந்திருக்கின்றன நீயும் நானும் பேசிய நூறாயிரம் கதைகளை....

ஏந்த யாருமற்று கன்னங்களை தாண்டி உதிர்ந்து விழும் கண்ணீரை எடுத்துசெல்கிறது காற்று....

மழைபொழியாமலே நீர்கசியும் இரவுகளில் கன்னங்களில் பிசுபிசுக்கின்றன முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் ஈரங்கள்...

அறைமுழுவதும் பெருமூச்சையும் விசும்பல்களையும் உண்டு பசியாறிக்கிடக்கிறது தனிமை....

கண்ணீரும் கவிதைகளும் அடிக்கடி ஒன்று கலக்கும் மை கரைந்த காகிதத்தாள்களில் சிந்தி இருக்கின்றன உன் பிரிவின் வலிகள்...

எல்லாமே கடந்து சென்ற பின்னாலும் மனதை நிறைக்கின்றது எனக்காய் நீ தந்த இறுதிப்புன்னகையின் ஓலம்...

மழைவிட்டும் காற்றுடன் எஞ்சியிருக்கும் ஈரலிப்பாய் வாழ்க்கை முழுதும் ஓட்டிக்கிடக்கின்றன கடந்துபோன காதலின் வாசனைகள்...

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன் 
கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்...

 

12/11/2013

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.