Jump to content

அகதியின் நிலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4.png?fit=1024%2C1024

 

 

முற்றத்தில் நின்ற,
முருங்கை மரத்தில்,
அணிலொன்று ஓசையெழுப்பியது!
கறையான் மிச்சம் விட்ட,
கூரைகளும் தட்டிகளும்,

சிதைந்து போய் விட்ட,
சிலந்தி வலையொன்றை,
நினைவு படுத்தின!
முள்ளுக்கம்பிகளைத்
தொலைத்துவிட்ட வேலி,
நிர்வாணமாக நின்றிருந்தது!

கச்சான் வேர்களையுருவிக்,
கன்னக் கதுப்புக்களை  நிரப்பும்,
கருங்குரங்குகள் கூடக்,
காட்டுக்குள் போய்விட்டன!
பங்குனிக் கோடையிலும்,
ஈரம் காயாத அந்த வாய்க்கால்,
காய்ந்து கிடந்தது!
விரால் மீன்கள் உறங்கும்,

ஈரம் தோய்ந்த மரக்குத்தி,
இரண்டாகிப் பிளந்து கிடந்தது!

வேளாண்மைக் காலத்து,
வெள்ளைச் சாராயத்துக்கும்,
வேள்விக் கிடாய்களுக்கும்,,
பழகிப்போய் விட்ட,
விளாத்தி மரத்தடி வைரவர்,
வெறுமனே குந்தியிருந்தார்!
விசாகக் கொடிகள் கட்டிய,
வெள்ளைக் கயிறொண்டு,,,
விளாத்தி மரத்தின் தொங்கும்,
கிளைகளில் கட்டியிருந்தது!
களத்து மேடு முழுவதும்,
காவிளாய் மேவியிருந்தது!

மாரி காலத்தின் ஈரத்தில்,
இராணுவச் சிப்பாய்கள்,
எட்டிப் பார்த்த சான்றுகளாய்,!
அந்தச் சப்பாத்துச் சுவடுகள்,
ஆழமாய்ப் புதைந்திருக்கின்றன!
இரவு நேரத்திலும்,
செருப்போடு இறங்காத,
அந்த வீட்டின் சொந்தக்காரன்,
நினைவில் வந்து போகிறான்!
காடு மெல்ல மெல்லக்,
கிட்ட வந்து கொண்டிருக்கின்றது!
வெட்டிச் சரித்த மரங்களின்,
வேர்களிலிருந்தும்,
காடு துளிர்க்கின்றது!

வீட்டுக்காரரின் அடையாளமாய்,
அம்மிக்கலலொன்று,
மல்லாந்து கிடக்கின்றது!
சிவப்பு நிறத் தகரமொன்றின்,
ஊன்றுகோலுக்கு அது,
மிண்டு கொடுக்கின்றது!
‘கண்ணி வெடிகள் கவனம்’
என்றொரு எச்சரிக்கை,
ஒரு சோடி எலும்புகளுக்கு,
நடுவிலும் சிரிக்கின்ற,
மண்டையோட்டின் கீழே,
எழுதப்பட்டிருக்கின்றது!

Link to comment
Share on other sites

விளாத்தி மரத்தடி வைரவர்,
வெறுமனே குந்தியிருந்தார்!

 

நான் பாத்தளவிலை சும்மா கிடந்த வைரவர் நாச்சிமார் எல்லாருக்கும் 3 நேர பூசை வைச்சு கோயில் கட்டி கும்பாபிசேகமும் நடந்திருக்கு . இவையெல்லாம் உக்கிரமூர்த்தியள் . முந்தி நாங்கள் ஒரு கற்பூரத்தோடை இவைக்கு அலுவலை முடிப்பம் . இதை ஏன் இங்கை போட்டியள் ??? கவிதை பகுதியிலை போட்டிருக்கலாமே ???  பாராட்டுக்கள் நண்பா :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கவிதை புங்கை. காவிளாய் என்பது என்ன?எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது கவிதை புங்கை. காவிளாய் என்பது என்ன?எனக்கு விளங்கவில்லை.

ஒரு வகைப் புல். பெரும்பாலும் வரண்ட மணல் தரைகளில் வளரும்

 

images.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4.png?fit=1024%2C1024

 

 

முற்றத்தில் நின்ற,

முருங்கை மரத்தில்,

அணிலொன்று ஓசையெழுப்பியது!

கறையான் மிச்சம் விட்ட,

கூரைகளும் தட்டிகளும்,

சிதைந்து போய் விட்ட,

சிலந்தி வலையொன்றை,

நினைவு படுத்தின!

முள்ளுக்கம்பிகளைத்

தொலைத்துவிட்ட வேலி,

நிர்வாணமாக நின்றிருந்தது!

கச்சான் வேர்களையுருவிக்,

கன்னக் கதுப்புக்களை  நிரப்பும்,

கருங்குரங்குகள் கூடக்,

காட்டுக்குள் போய்விட்டன!

பங்குனிக் கோடையிலும்,

ஈரம் காயாத அந்த வாய்க்கால்,

காய்ந்து கிடந்தது!

விரால் மீன்கள் உறங்கும்,

ஈரம் தோய்ந்த மரக்குத்தி,

இரண்டாகிப் பிளந்து கிடந்தது!

வேளாண்மைக் காலத்து,

வெள்ளைச் சாராயத்துக்கும்,

வேள்விக் கிடாய்களுக்கும்,,

பழகிப்போய் விட்ட,

விளாத்தி மரத்தடி வைரவர்,

வெறுமனே குந்தியிருந்தார்!

விசாகக் கொடிகள் கட்டிய,

வெள்ளைக் கயிறொண்டு,,,

விளாத்தி மரத்தின் தொங்கும்,

கிளைகளில் கட்டியிருந்தது!

களத்து மேடு முழுவதும்,

காவிளாய் மேவியிருந்தது!

மாரி காலத்தின் ஈரத்தில்,

இராணுவச் சிப்பாய்கள்,

எட்டிப் பார்த்த சான்றுகளாய்,!

அந்தச் சப்பாத்துச் சுவடுகள்,

ஆழமாய்ப் புதைந்திருக்கின்றன!

இரவு நேரத்திலும்,

செருப்போடு இறங்காத,

அந்த வீட்டின் சொந்தக்காரன்,

நினைவில் வந்து போகிறான்!

காடு மெல்ல மெல்லக்,

கிட்ட வந்து கொண்டிருக்கின்றது!

வெட்டிச் சரித்த மரங்களின்,

வேர்களிலிருந்தும்,

காடு துளிர்க்கின்றது!

வீட்டுக்காரரின் அடையாளமாய்,

அம்மிக்கலலொன்று,

மல்லாந்து கிடக்கின்றது!

சிவப்பு நிறத் தகரமொன்றின்,

ஊன்றுகோலுக்கு அது,

மிண்டு கொடுக்கின்றது!

‘கண்ணி வெடிகள் கவனம்’

என்றொரு எச்சரிக்கை,

ஒரு சோடி எலும்புகளுக்கு,

நடுவிலும் சிரிக்கின்ற,

மண்டையோட்டின் கீழே,

எழுதப்பட்டிருக்கின்றது!

 

அருமையான உணர்வு கவிதை . பாராட்டுக்கள் புங்கையூரான் . கண்ணிவெடி அகத்த என்னம் பத்து பதினைஞ்சு வரிசம் நாங்கள் பொறுக்க வேணுமாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளாத்தி மரத்தடி வைரவர்,

வெறுமனே குந்தியிருந்தார்!

 

நான் பாத்தளவிலை சும்மா கிடந்த வைரவர் நாச்சிமார் எல்லாருக்கும் 3 நேர பூசை வைச்சு கோயில் கட்டி கும்பாபிசேகமும் நடந்திருக்கு . இவையெல்லாம் உக்கிரமூர்த்தியள் . முந்தி நாங்கள் ஒரு கற்பூரத்தோடை இவைக்கு அலுவலை முடிப்பம் . இதை ஏன் இங்கை போட்டியள் ??? கவிதை பகுதியிலை போட்டிருக்கலாமே ???  பாராட்டுக்கள் நண்பா :) :) :) .

 

நன்றிகள், கோமகன்!

 

கவிதைப்பகுதியிலும் பார்க்க, எங்கள் மண் பகுதி பொருத்தம் போலக்கிடந்துது! அது தான் அதுக்குள்ளே செருகி விட்டிட்டன்!

 

'வைரவர் ஒரு இந்துத் தெய்வமல்ல! அதை வழிபடுபவர்கள், இந்துக்களுமல்ல!'

 

இந்த விளக்கம், இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் என்று கூறி, அவர்களைக் கொலை செய்யத் தயங்கிய இந்தியன் ஆமிக்கு ராஜீவ் காந்தியால் வழங்கப்பட்டது!

நன்றாக இருக்கிறது கவிதை புங்கை. காவிளாய் என்பது என்ன?எனக்கு விளங்கவில்லை.

நன்றிகள், சுமோ!

 

காவிளாய் என்பது தோட்டம் செய்யும் நிலங்களில் வளரும்,ஒருவகைத் தாவரம்.  இது அவரை இனத்தைச் சேர்ந்ததால், இதன் வேரில் நைதரசன் கனிமப்பொருள், திரட்சிகளாக இருக்கும், இதனை மண்ணைத் திரும்பக் கொத்தும்போது திரும்பவும் மண்ணுக்குள் தாட்டு விடுவார்கள். புதிய பயிர்களுக்கு இது பசலையாகப் பயன்படும்!

ஒரு வகைப் புல். பெரும்பாலும் வரண்ட மணல் தரைகளில் வளரும்

 

images.jpg

வருகைக்கும், விளக்கத்துக்கும் நன்றிகள், உதயம்!

Link to comment
Share on other sites

உணர்வுபூர்வமாக காட்சிகளைக் கண் முன்னே நிறுத்தும் கவிதை. அருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் புங்கையூரனின் அகதி நிலம் ....கவிதை ... நன்றிகள் புங்கை

Link to comment
Share on other sites

நல்லதொரு உண்ர்வான கவிதை. வலியின் வீச்சு!!

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வலி சுமந்த மனதின் ஏக்கங்கள் கவிதை வரிகளில்... எத்தனை காலம் போனாலும் எம் மனதின் வலிகளுடன்தான் நாம். நல்லதொரு கவிதை பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.