
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுடன் இதுவரை காலமும் பேணி வந்த நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னரான சகல அரசாங்கங்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் கைக்கூலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அறிந்து கொள்ளாமலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் நட்பு நாடுகளின் ஆதரவு இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தூர நோக்கற்ற திட்டங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx















