Jump to content


Tamil Star News
Photo

கீரை மசியல் / கீரை கடையல்


  • Please log in to reply
22 replies to this topic

#1 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 12 March 2012 - 07:54 AM

பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பின்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்துடன் ஆரம்பிக்கலாமே என நினைத்து கீரையுடன் ஆரம்பிக்கின்றேன்.

Posted Image

தேவையானவை:

1 பிடி கீரை
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
2-3 நறுக்கிய பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி பெரும்சீரகம்
4-5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால்
தேவைக்கேற்ப உப்பு


செய்முறை:

1. கீரையை நன்றாக நீரில் அலசி, மண் இல்லாது எடுத்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். ( சோம்பல் காரணமாக சரியாக நீரில் அலசாமல் விட்டால், அன்று "மண் கீரை கடையல்" தான் கிடைக்கும். )

2. ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி வேகை வையுங்கள்.

3. அதில் பெரும்சீரகம், வெங்காயம், மிளகாய், சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்றாக வேக வையுங்கள்.

4. கீரை நன்றாக வெந்து வந்ததும், மத்தால் அல்லது ஒரு மசிக்க கூடிய அகப்பையால் நன்றாக கடையுங்கள். (அடுப்பில் இருந்து இறக்கி செய்யுங்கள்)

5. பின்னர் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, தேங்காய்ப்பாலை சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்குங்கள். இறக்கியதும் சிறிது தேசிக்காய்/எலுமிச்சைப் புளி சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.எங்க வீட்ல உள்ளவங்க போல, தேசிக்காய்க்கு எதிர்ப்பு காட்டினால்..அது வேணாங்கிறேன்...வேலை குறைவு..கிகிகிகி

பி.கு: இதெல்லாம் ஒரு பெரிய செய்முறையா என கேட்பவர்களுக்கு: நான் கற்றுக்குடுத்து வெந்நீர் போல கற்றுக் கொண்டவர்களும் இங்குண்டு, என்னைய சுத்தி அம்புட்டு அப்பாவிங்க...வரட்டுமா ;)

www.thooyaskitchen.blogspot.com
  • கலைஞன், suvy, நிழலி and 2 others like this

Advert

#2 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,250 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 12 March 2012 - 08:47 AM

நன்றி பகிர்வுக்கு, அரை அவியலில் எடுத்து கிரைட்டரில் போட்டு அடித்துவிட்டு அவித்த உருளைகிழங்கு or பன்னீர் கட்டிகள் போட்டு திரும்பவும் அடுப்பில் வைத்து தாளித்து சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#3 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 12 March 2012 - 09:15 AM

நன்றி பகிர்வுக்கு, அரை அவியலில் எடுத்து கிரைட்டரில் போட்டு அடித்துவிட்டு அவித்த உருளைகிழங்கு or பன்னீர் கட்டிகள் போட்டு திரும்பவும் அடுப்பில் வைத்து தாளித்து சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்


பலக் பன்னீர் போலவா?

#4 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 12 March 2012 - 09:19 AM

வாங்கோ தூயா பபா.. எங்க போயிருந்தீங்க. ஆளையே காணோம்..! கீரை மசியலோட திரும்பி வந்தது சந்தோசம்..! :) :icon_idea:

Edited by nedukkalapoovan, 12 March 2012 - 09:20 AM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#5 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 12 March 2012 - 09:22 AM

வாங்கோ தூயா பபா.. எங்க போயிருந்தீங்க. ஆளையே காணோம்..! கீரை மசியலோட திரும்பி வந்தது சந்தோசம்..! :) :icon_idea:


ஆகா எங்கட நெடுக்ஸ்!! :) நலமா?
தலைப்புக்கு எதிரா கதைச்சால் பிரச்சனை என்றதால... "கீரை செய்து பார்த்திட்டு சொல்லுங்க"..கிகிகி

#6 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,235 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 12 March 2012 - 12:25 PM

வணக்கம் தூயா. கீரை மசியலுக்கு நன்றி.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#7 அலைஅரசி

அலைஅரசி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 830 posts
  • Gender:Female
  • Location:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.
  • Interests:எதிலும் தமிழனாக இருப்பது

Posted 12 March 2012 - 01:33 PM

நன்றி தூயா,
கிரைக்குள் மைசூர் பருப்பு போட்டு கடைந்தால் அதொரு சுவை, எனக்கு முளைக்கிரை மிகவும் பிடிக்கும் :wub:
உங்களில் ஒருத்தி அலைஅரசி.

#8 கலைஞன்

கலைஞன்

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,300 posts
  • Gender:Male

Posted 12 March 2012 - 02:30 PM

அதே கீரை, அதே அடுப்பு, அதே சட்டி. எவ்வளவு காலத்துக்கு கீரையையே கடைஞ்சுகொண்டே இருக்கப்போறீங்கள்?

#9 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 12 March 2012 - 03:30 PM

கீரை மசியலுக்கு நன்றி....மீண்டும் கண்டதில் சந்தோசம் :)

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#10 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,670 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 12 March 2012 - 08:43 PM

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#11 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 13 March 2012 - 02:41 AM

வணக்கம் தூயா. கீரை மசியலுக்கு நன்றி.


:) மறுமொழி கண்டு மிக்க மகிழ்ச்சி

நன்றி தூயா,
கிரைக்குள் மைசூர் பருப்பு போட்டு கடைந்தால் அதொரு சுவை, எனக்கு முளைக்கிரை மிகவும் பிடிக்கும்


முளைக்கீரை இங்கு எப்போதும் கிடைப்பதில்லை...அதற்கு பதில் ஸ்பினச் கீரையைத் தான் சமைப்பதுண்டு.

அதே கீரை, அதே அடுப்பு, அதே சட்டி. எவ்வளவு காலத்துக்கு கீரையையே கடைஞ்சுகொண்டே இருக்கப்போறீங்கள்?


அவ்வ்வ்வ் ஏன் இப்படி அலுத்துக்கிறிங்க? என்னமோ சமைச்சு உங்கள சாப்பிட சொன்ன போல ;) கிகிகி

கீரை மசியலுக்கு நன்றி....மீண்டும் கண்டதில் சந்தோசம் :)


மிக்க நன்றி :)

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.


இப்படி எல்லாம் சொல்ல முடியாது..யாரை கண்டதில அதிக சந்தோசம் என்று சொல்லித்தான் ஆகணும் ;) கிகிகி

#12 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,171 posts

Posted 13 March 2012 - 03:16 AM

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#13 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 13 March 2012 - 03:47 AM

Posted Image
எனக்குப் பிடித்த உணவு வகையில் இந்த கீரை மசியலும் ஒன்று.
இதுக்கு தேசிக்காய் புளி விட்டு, சாப்பிட்டால் தான்... உண்மையான சுவையை அனுபவிக்க முடியும்.
இணைப்பிற்கு நன்றி தூயா.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#14 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 13 March 2012 - 05:16 AM

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி


:) நன்றி கந்தப்பு :)

எனக்குப் பிடித்த உணவு வகையில் இந்த கீரை மசியலும் ஒன்று.
இதுக்கு தேசிக்காய் புளி விட்டு, சாப்பிட்டால் தான்... உண்மையான சுவையை அனுபவிக்க முடியும்.
இணைப்பிற்கு நன்றி தூயா.


உண்மை..
சிலர் துருவிய தேங்காயையும் சேர்ப்பதுண்டு..

#15 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,402 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 13 March 2012 - 05:46 AM

கீரை மசியலுக்கு நன்றி தூயா
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#16 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 13 March 2012 - 11:41 AM

Posted Image

சுவையான முளைக்கீரை சமைச்சு சாப்பிட்டால் அஹா ....... மிகவும் சுவையாக இருக்கும் :wub:

நன்றி சகோதரி தூயா
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#17 கலைஞன்

கலைஞன்

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,300 posts
  • Gender:Male

Posted 13 March 2012 - 06:47 PM

துயாவை கண்டதில் உள்ள அதே அளவு சந்தோசம் கலைஞனை கண்டதிலும் மகிழ்ச்சி.


நன்றி சஜீவன்.

அவ்வ்வ்வ் ஏன் இப்படி அலுத்துக்கிறிங்க? என்னமோ சமைச்சு உங்கள சாப்பிட சொன்ன போல ;) கிகிகி


சும்மா பகிடிக்குத்தான். உங்கள் சாப்பாட்டை குறை சொன்னால் பிறகு அகப்பை காம்பால் அல்லோ வாங்கவேண்டிவரும். நான் சுமார் பதினைந்துவயதுவரை பசளிக்கீரையும், பருப்புக்கறியும் விருப்பமாக மத்தியானசாப்பாட்டில் சோற்றுடன் உண்டுவளர்ந்தேன். பள்ளிக்கூடம் முடிந்ததும் ஓடியோடிவந்து முதலாவதாக‌ பார்ப்பது சோற்றுக்கு கீரையும், பருப்புக்கறியும் உள்ளதோ என்றுதான். இல்லை என்றால் வீட்டில் அமளிதுமளிதான். அப்போது வழமையில் அக்கா சமைப்பார், சுவை சொல்லி வேலை இல்லை. பின்னர் நாட்டு பிரச்சனைகள் காரணமாக அந்த சுவை மறந்து போயிற்று. உருளைக்கிழங்கிற்கு உரமாக மனிதகழிவு பயன்படுத்துவார்கள் என்று பாடசாலையில் யாரோ சொல்லி கேள்விப்பட்டதால் உருளைக்கிழங்கு கறிக்கு கிட்டப்போவது இல்லை. ஆனால், அக்கா உருளைக்கிழங்கில் சுடுகின்றபட்டீஸ் எதுவித முறைப்பாடும் இன்றி அமுக்குவது.

தூயா, மாப்பிள்ளை/கலைஞன்/முரளி ஆகியோரைக் கண்டது மிக்க மகிழ்ச்சி


நன்றி கந்தப்பு.

#18 suvy

suvy

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,926 posts
  • Location:France

Posted 13 March 2012 - 09:24 PM

சகோதரி தூயாவையும், குருஜியையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி! :D

எனது சின்னம்மா கீரையை அரை மசியலிலும், கூனி இறாலும் போட்டுசமைப்பார்கள் , நல்ல சுவையாய் இருக்கும்! :D

Edited by suvy, 13 March 2012 - 09:25 PM.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#19 கலைஞன்

கலைஞன்

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,300 posts
  • Gender:Male

Posted 16 March 2012 - 03:42 AM

குருஜி உங்களைக்காண்பதுவும் மகிழ்ச்சி. கீரையினுள் மச்சத்தை கலந்து சமைப்பார்களா? அபச்சாரமாக உள்ளதே!

#20 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 18 March 2012 - 10:20 AM

குருஜி உங்களைக்காண்பதுவும் மகிழ்ச்சி. கீரையினுள் மச்சத்தை கலந்து சமைப்பார்களா? அபச்சாரமாக உள்ளதே!


ஆம்..கீரையில் இறால். தேங்காய்பூ போட்டு சுண்டுவார்கள்




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]