Jump to content


Tamil Star News
Photo

ஆஸி. ஓபன் பெண்கள் இரட்டையர் அரை இறுதியில் நுழைந்தது சானியா ஜோடி!


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,316 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 24 January 2012 - 01:24 PM

Posted Image

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது.



இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது.



மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது.



ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளையாடினார் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் அந்த அரை இறுதிப் போட்டியில் சானியா-எலினா ஜோடி தோல்வியடைந்தது.



அரை இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா மற்றும் வெரா ஸ்வோனீராவா ஜோடியுடன் மோதவுள்ளது.


http://tamil.oneindi...is-aid0091.html
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]