Jump to content

பொன்சேகாவின் விடுதலை: யாருக்கு அச்சுறுத்தல்? (பூராயப் பார்வை)


Recommended Posts

பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்டபோதிலும், கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விடயத்தில் திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா இவ்வருட முற்பகுதியில் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை கொழும்பிடம் வலியுறுத்தியிருந்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் றோபெர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சருக்கு கையளித்த கடிதம் ஒன்றில், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது.

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம் என்பவற்றுடன் பொன்சேகாவின் விடுதலையையும் அமெரிக்கா முக்கியமானதாக நோக்கியது. இவை தொடர்பாகப் பேசுவதற்கு வாஷிங்டன் வருமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அழைத்திருந்தார். மார்ச் நடுப்பகுதியில் அவரது வருகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காமையால் அமெரிக்கா செல்வதை பீரிஸ் தவிர்த்துக்கொண்டார். இந்தப் பின்னணியிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இருந்தபோதிலும், ஒத்திவைக்கப்பட்ட பீரிஸின் அமெரிக்க விஜயம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி ஹிலாரி கிளின்டனை அமைச்சர் பீரிஸ் சந்தித்ததார். அந்தச் சந்திப்பு இடம்பெற்ற போது பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கொழும்பு வெளியிட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்னையிலிருந்து வெளிவரும் 'இந்து' பத்திரிகையாளரிடம்தான் இது தொடர்பில் முதலில் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்சேகாவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இது நீதிமன்றத் தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக இருப்பதாதால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுக்க 3-4 நாட்கள் சென்றுள்ளது.

இருந்த போதிலும், இதற்கு முன்னரே பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ரிரான் அலஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்திவந்த போதிலும், ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனை ஒன்றுதான் அவரது விடுதலைக்குத் தடையாக இருந்தது. அதாவது, பொன்சேகா மன்னிப்பக் கோர வேண்டும், இல்லையெனில் பொன்சேகாவின் குடும்பத்தினர் யாராவது அவரது சார்பில் மன்னிப்பக் கோர வேண்டும் என ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொன்சேகா குடும்பத்தினர் கூறிவிட்டனர். இது ஜனாதிபதிக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலிருந்து ஜனாதிபதி இப்போது இறங்கிவந்திருப்பது இவ்விடயத்தில் அவர் மீது அதிகளவு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்விடயம் தொடர்பான பேச்சுக்களுக்காக ரிரான் அலஸின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருப்பது மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை காலை ரிரான் அலஸ் ஜனாதிபதியின் வாஸஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பொன்சோவின் விடுதலை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார். லண்டனில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டிரான் அலஸ் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் அவசரமாக அங்கிருந்து அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அனோமா பொன்சேகாவடனும் பேச வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருந்திருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு செல்வதற்கு அனோமா மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. இந்த நிலையிலேயே ரிரான் அலஸ் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி அங்கு சென்றிருக்கின்றார். ஜனாதிபதி ஒருவர் அரசியல் விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு மற்றொருவருடை வீடு தேடிச் செல்வது என்பது இராஜதந்திர மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதிக்குக் காணப்பட்ட நிர்ப்பந்தம் அந்தளவுக்கு இறங்கிச் செல்ல வேண்டிய ஒரு தேவையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் நிபந்தனைகளின் அடிப்படையில் பொன்சேகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதேவேளையில், ஜனாதிபதியால் அவர் மன்னிப்பு வழங்கப்பட்டவராக இருந்தாலும், இரண்டு வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதால் அடுத்துவரும் ஏழு வருட காலத்துக்கு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிலோ அல்லது மாகாண சபைக்கோ அவர் போட்டியிட முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது. உடனடியாக அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு இவை பொன்சேகாவுக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பது உண்மை!

இதனால், பொன்சோகாவின் விடுதலை உடனடியாக அரசுக்கு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரச எதிர்ப்பப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், அதன் மூலமாக தன்னுடைய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் அவர் முற்படுவார் என எதிர்பார்க்கலாம். அத்துடன், பொன்சேகாவின் அனைத்து அரசியல் உரிமைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தலாம். இவை அனைத்தும் அரசுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அரச எதிர்த் தரப்பு அவருக்குப் பின்பாக அணிதிரள்வதற்கு வழிவகுக்கலாம்.

அதாவது, அவரது தீவிர அரசியல் பிரவேசம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் முதலில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும். ஐ.தே.க. ஏற்கனவே பிளவுபட்ட ஒரு நிலையில்தான் உள்ளது. பொன்சேகா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஜித் அணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர உடபட அனைவரையும் அங்கு காண முடிந்தது. இந்த நிலையில் பொன்சேகாவுடன் இணைந்து தமது தீவிர அரசியலை முன்னெடுப்பதற்கு சஜித் குழுவினர் முற்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

பொன்சேகா விடுதலையானபோது அவர் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ரணில் விடுத்த கோரிக்கையை பொன்சேகா நிராகரித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரணிலின் தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் ஐ.தே.க.வினர் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செய்ய முன்வரலாம். அதனைவிட ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினரும் பொன்சேகாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த நிலையில் பொன்சேகாவின் வருகை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பலமான எதிரணி ஒன்று உருவாக இது வழிவகுப்பதாக அமையலாம்! ஆனால், தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான நலன்களையும் பெற்றுத்தருவதாக இருக்கப்போவதில்லை.

- பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.pooraayam...2-13-20-49.html

Link to comment
Share on other sites

ஐ.தே.க. வுடன் சேரமாட்டேன் என கூறியுள்ளார். சேர்ந்தால் அது. ஐ.தே. க.வை மேலும் பிளவுக்கு உள்ளாக்கலாம். வேறு எந்த கட்சியிலும் சேரும் சாத்தியம் இல்லை.

அதேவேளை புதிய கட்சி ஆரம்பிக்கும் சாத்தியங்களே அதிகம். ஆனால் இவரால் பத்து வருடங்களுக்கு போட்டியிடமுடியாது, பிரச்சாரம் மட்டுமே செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவின் விடுதலைக்குச் சாதகமாக அழுத்தங்களை வழங்கிய

அமெரிக்க அரசு தமிழ்க்கைதிகளின் விடயத்தில் அமைதி காப்பது

கண்டனத்திற்குரியது.

இவரின் விடுதலை சிங்களம் தமக்கிடையில் அடிபட்டுக்கொள்ள

வழிசமைப்பதுடன் இனப்பிரச்சனைக்குரிய தீர்வை இன்னும்

சிக்கலாக்கும்

Link to comment
Share on other sites

மொத்தத்தில் பல்லு பிடுங்கிய பாம்பாக சரத் இருக்க வேண்டிய நிலை.அமெரிக்காவின் சொல் கேட்பது போல் மகிந்த கூட்டம் நடித்து தமக்கு உள்ள உலக அரசியல் அழுத்தத்தை குறைக்க முயல்கிறது.அத்தோடு ஐ.தே.கவின் பலத்தை மேலும் குறைக்க சரத்தின் வெளியேற்றம் உதவும்.ஒரு காலத்தில் எஸ்.பி.திசநாயக்காவுக்கு ஏற்பட்ட நிலை சரத்துக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளோ அல்லது தமிழ்/சிங்கள அமைப்புக்களோ இவரை அணுகி போர்குற்ற சாட்சியாக சாட்சியமளிக்க ஊக்கமளிக்க வேண்டும்.இவரின் வாயால் பல உண்மைகள் வரவழைக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

- ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்டது “பொதுமன்னிப்பு” அல்ல

- ஃபொன்சேகா குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு அப்படியே உள்ளது

- வெள்ளைக் கொடி வழக்கில், உயர்நீதிமன்றத்தால் சரத் ஃபொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி முற்றாக ரத்து செய்துள்ளார்

- இராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட ஹைகார்ப் வழக்கு விவகாரத்தில் ஒரு பகுதியைத்தான் ஜனாதிபதி ரத்து செய்துள்ளார் என்றும், எனவே இரு வழக்குகளில் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார்

- ஃபொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட சிவில் உரிமைகள் அப்படியே நிலுவையில் இருக்கும்

- தேர்தல்களில் போட்டியிட முடியாத ஒரு நிலை தொடரவே செய்யும்

- சரத் ஃபொன்சேகாவுக்கு இதர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமைகள் உட்பட இதர உரிமை கிடைக்கும்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/05/120522_saratsilva_fonsekarelease.shtml

Link to comment
Share on other sites

மன்னிப்பை ஏற்குமாறு பொன்சேகாவின் வீடுதேடிச் சென்று மன்றாடியது அரசு!

'சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச்சென்று மன்னிப்பை பெற்றுக்கொள்ளுமாறு மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் அன்று கோரிக்கை விடுத்தும்கூட அவரை விடுதலை செய்யாத அரசு, இன்று ஹிலாரி கிளிண்டன் சொன்னதும் விடுதலை செய்துள்ளது.'

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற இறக்குமதிகள், ஏற்றுமதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் என சொல்லித் திரிந்த அரசு இன்று வீட்டுக்கே ஓடிச் சென்று தயவு செய்து மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்றாடி மன்னிப்பை வழங்கியுள்ளது. சரத் பொன்சேகா தவறிழைத்திருந்தால் அரசு ஏன் ஓடித்திரிய வேண்டும்? எது எப்படியிருப்பினும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டதையிட்டு நாம் சந்தோஷமடைகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=aadec015-897d-484e-bc8c-56064b1a0c84

Link to comment
Share on other sites

பொன்சேகா புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளாராம்

Jayantha Ketagoda, a member of the Sri Lankan parliament told PTI today that the former Army Commander and presidential candidate will form his own political party, an application for which has already been submitted.

"We have submitted the registration application to the elections commissioner under the name Democratic Party (DP)," Ketagoda said. Adding "this was done when the General (Fonseka) was in prison".

http://news.outlookindia.com/items.aspx?artid=763501

Link to comment
Share on other sites

நான் நினைப்பது என்னவென்றால் :D

சரத் பொன்சேகா மகிந்தவுக்கு ஆதரவாக இருப்பதாக ஒப்புக்கொண்ட பின் அல்லது ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட பின் தான் அவரை விடுதலை செய்திருப்பார்கள். :unsure:

இனிமேல் வெளியில் அரசாங்கத்தை பகைப்பது போல் காட்டிக்கொண்டு உட்பக்கமாக அரசாங்கத்திற்கு ஆதரவாக தான் நடப்பார். (விரும்பி அல்லது வேறு வழியில்லாமல்)

அமெரிக்காவையும் ஏமாற்றி தமிழரையும் ஏமாற்றும் முயற்சி தான் நடக்கப்போகிறது. ஏமாறாமல் இருப்பது எம் கடமை. அதே போல் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவரை ஏற்றிவிட்டு அரசாங்கத்தின் போர்குற்றங்களை அவர் வாயால் வெளியில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

என்ன தான் இருந்தாலும் சரத் பொன்சேகாவும் ஒரு சிங்கள அரசியல்வாதி. அவர்கள் மோதிக்கொண்டாலும் அவர்கள் குணங்களோ கொள்கையோ மாறாது. எம்மவர்கள் போல் மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள். :wub:

எனவே சரத் பொன்சேகா விடுதலையானாரோ இல்லையோ தமிழர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்கப்போவது இல்லை. :( :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.