Jump to content


Tamil Star News
Photo

அமெரிக்காவின் தந்திரத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் பிரபாகரன் – புகழாரம் சூட்டுகிறார் சம்பிக்க


  • Please log in to reply
2 replies to this topic

#1 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,083 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 08 April 2012 - 10:08 PM

[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012, 08:52 GMT ] [ தா.அருணாசலம் ]
Posted Imageதிருகோணமலையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைப்பதற்காக சிறிலங்காவில் போரை நீடிக்கவும், அதைத் தீவிரப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அமெரிக்காவின் தந்திரத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்றும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கொச்சினைத் தளமாகக் கொண்டு வெளிவந்த ‘த வீக்‘ ஆங்கில வாரஇதழில், 1986ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் வெளியான செவ்வி ஒன்றில் வே.பிரபாகரன் விரிவாக விளக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச் செவ்வியின் ஒருபகுதியை அப்படியே வாசித்தும் காட்டினார்.

"இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும், தீவிரப்படுத்தவும் செய்வதே
அமெரிக்காவின் நோக்கம்.



இதன்மூலம் அது இந்தத் தீவில் கால் பதிக்கவும், திருகோணமலையில் தனது தளம் ஒன்றை நிறுவவும் முடியும்.

அமெரிக்க நிர்வாகம் இந்தப் பிராந்தியத்தில் தந்திரோபாய மற்றும் பூகோள நலன்களைக் கொண்டுள்ளது.

திருகோணமலையில் இயற்கைத் துறைமுகத்தை கொண்டுள்ள சிறிலங்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

படிப்படியாக இந்த நாட்டில் ஊடுருவி, அதை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம்" இவ்வாறு பிரபாகரன் அந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


http://www.puthinapp...?20120406105941
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

Advert

#2 Gajen

Gajen

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 142 posts
  • Gender:Male
  • Location:UK

Posted 08 April 2012 - 10:30 PM

சிங்கள அரசியல்வாதி எடுத்து விடும் குறிப்பிட்ட இந்த செய்தியை விட, இந்த நேரத்தில் இந்த மாதிரி செய்திகள் ஏன் வரவேண்டும் என சிந்திப்போம்.

சிங்களம் நன்றாகவே வேலைசெய்கிறது.
'There are three sides to every story; your side, my side and the truth'

'Either write something worth reading or do something worth writing'

#3 தூயவன்

தூயவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,857 posts
  • Gender:Male
  • Location:யாழ்களம்

Posted 08 April 2012 - 10:38 PM

தமிழர்களோடு அமெரிக்கா நெருங்குகின்றதோ எனச் சந்தேகப்படும் சிங்கள தேசம், அதை உடைக்கும் வகையில் இப்படியான செய்திகளை வெளியிடுகின்றதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. புலிகள் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள், தமிழர்களும் எதிரானவர்கள் என்ற வகையில் சிந்தனையை உருவாக்குவதினூடாக இடைவெளியைத் தேடுகின்றது. யோசித்துக் கருத்துப் பகிருங்கள்~~




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]