Jump to content


Tamil Star News
Photo

”EXPO 2012” மகிந்தவின் இன்னுமொரு வெள்ளை யானை!


  • Please log in to reply
2 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,309 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 06 April 2012 - 10:43 AM

Posted Image
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மார்ச் 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட ‘EXPO 2012′ கண்காட்சி எவ்விதத்தில் பயனற்றுப் போனதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவிக்கின்றது.
ஊடகங்களில் பிரமாண்டமாக காண்பிக்கப்பட்ட போதிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதன் ஊடாக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கோ, ஏற்றுமதிக்கோ எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.
இந்தக் காண்காட்சியைப் பார்வையிடுவதற்காக உலகின் பல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வருகைதந்ததாக அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக கூவி வந்தன.
எனினும், குறித்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள், வழங்கிய இலவச விமானப் பயணச் சீட்டு, இலவச தங்குமிட வசதிகள் ஆகியன காரணமாகவே குறித்த முதலீட்டாளர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் உரையை தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக குறித்த மண்டபத்திலிருந்த குளிரூட்டி இயந்திரயங்களையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இலங்கையில் தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுவதால் இதனைப் பொருத்துக் கொள்ள முடியாத வெளிநாட்டுப் பிரமுகர்களில் அநேகமானோர் இடைநடுவிலேயே தமது விடுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
இதன்பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்களுடன் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், தாம் இலங்கைக்கு வந்தது, தமது உற்பத்திகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்கே அன்றி இலங்கைப் பொருட்களை தருத்துவித்துக் கொள்வதற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி முடிவில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்த வெளிநாட்டு பிரமுகர்கள், இலங்கையில் தமக்கு விடுமுறையைக் கழிப்பதற்கு வசதிகளை செய்துகொடுத்தற்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தேசத்திற்கு மகுடம் போன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மதிப்பை அரசியல் ரீதியாக மட்டும் உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே இந்த எக்ஸ்ஃபோ 2012 கண்காட்சி பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
http://www.saritham.com/?p=56308
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,309 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 06 April 2012 - 12:32 PM

Posted Image
ஒன்றுமே இல்லாத ஒன்றை காட்ட முயல் கின்றார் மகிந்தர்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#3 KuLavi

KuLavi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,510 posts
  • Gender:Male
  • Location:உலகெனும் கல்.
  • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
    கட்டியெழுப்புதல்!

Posted 06 April 2012 - 02:29 PM

இது சும்மா அர்ஜுன் ரணதுங்காக்களை ஏமாற்ற போட்ட நாடகம். மற்றும்,  காசும் சுருட்டலாம். 

அரபு உலகத்தில் ரெண்டு மில்லியன் ஸ்ரீ லங்கா பொம்பிளையல் கக்கூஸ் கழுவி தான் இவைண்ட பொருளாதாரம் ஓடுது. 

அடுத்த முறை ஓமானில கக்கூஸ் கான்பரன்ஸ் வைத்தால் பிரயோசனம்.🚽
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]